Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது.

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் பணிக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

இந்த பரமேஸ்வரன் யார்? இணைத்த ஆதிரை இதை எங்கிருந்து பெற்றார்? (மூலங்கள் குறிப்பிடப்படவில்லை)

நா.க.த.அ. இன் ஒரு சிறுகுழு பரமேஸ்வரன் போன்றவர்களை நேரில் அழைத்து பேசினால் என்ன? (நட்சத்திர விடுதியில் அல்ல, சிறுகுழு விரும்புமிடத்தில், அதற்கான செலவுகளை பரமேஸ்வரன் போன்றவர்கள் ஏற்கவேண்டும்)

பரமேஸ்வரன் இங்கிலாந்து பாராளுமண்றத்தின் முன்பு கடந்த வருடம் உண்ணாவிரதம் இருந்தவர்.

வல்வைக்கடல் வெப்பமான கடல்தான்.இந்தியபேயரசுக்கும்,சிங்களஇனவாதத்துக்கும் இடையில் அலையாடுவதால் அது கொதித்துதான் போயிருக்கும்.

எதையும் வெட்டிப்புடுங்காமல் தேர்தல்வேலை செய்யவில்லை நான்.முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களை கொன்றழித்த இந்திய-சிங்கள கூட்டுத்திட்டமான நாடுகடந்த அரசை பகிரங்கப்படுத்துவதுதான் தேசியகடமை!

18ம் திகதி மே மாதம் இனஅழிப்பு முடிந்தபிறகு ஓரிரு மாதங்களில் உருத்திரகுமாரின் செய்தியை தாங்கி பிரித்தானிய தமிழர் பேரவை செந் கந்தையாவும் இங்கிலாந்து இந்தியஅரசியல்வாதி ஒருவரும் போய் டெல்லியில் ராகுல்காந்தி,சிதம்பரம் போன்றோரை சந்தித்தது ஏன்?

இதெல்லாம் எப்பவவில இருந்து தேசிய கடமையாச்சு?

சரியா மாட்டுக்காரன் இரத்தின சிறி விக்கிரம நாயக்க மாதிரி இருக்கிங்கள்.

புலத்து முன்னாள், இன்னாள் அதிகார மையங்கள் ஒரு வருடம் மௌனித்து இருந்திருந்தால். புலத்தில், ஒரு குழப்பமும் ஏற்பட்டிருக்காது, புலத்து அதிகார மையங்கள் ஒரு வாரம் கூட மௌனித்திருக்காது, புலத்து அமைப்புகளை தமது அதிகாரத்திற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதலை ஆரம்பித்து, தாக்குதலும், தற்காப்பு யுத்தமும் தான் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றது. இந்த அதிகார மையங்களுக்கிடையில் புலத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இடம்பெற்று வரும் தாக்குதலும், தற்காப்பு யுத்தமும், புலத்தில் இயங்கு நிலையில் இருந்த அனைத்து கட்டுமானங்களையும் செயல் இழக்கவைத்துள்ளது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதனூடாக, மாவீரர்களின் ஈகத்தின் பெயரால், தலைவனின் பெயரால், தமிழ்த்தேசியத்தின் பெயரால் தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக மேய்கலாம் என்ற கனவுலகில் வாழும் தலைமைகளின் கனவு இனிப் பலிக்குமா? கடந்த கால அனுபவம் நிகழ்காலத்திற்குப் பொருந்துமா?

எப்படி இந்த இரண்டு அதிகார மையங்களும் உருவாகியது.?

புலம் பெயர் தேசத்தில் இரண்டு அதிகார மையங்களின் கடந்த கால செயற்பாட்டின் தாக்கம் எத்தகையது? என்ன காரணத்தால் அணி பிரிந்து நிற்கின்றார்கள் என்பதை அறியாது, இந்தக் குழு நிலைவாதிகளுக்காக கோசம் போடுவதை நிறுத்தி. தமிழ்த்தேசிய எழுச்சிக்கு என்ன செய்வது என்பதை சிந்தித்துச் செயற்படுவது. தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் கடமை.

Edited by kalaivani

புலிகள் இல்லை என்றது பூனைகள் வெளிக்கிட்டு விட்டார்கள்.

யார் சொன்னது புலிகள் இல்லை என்று...பொறுத்திருங்கோ எல்லாவற்றுக்கும் பதில் வரும்

பரமேஸ்வரன் இங்கிலாந்து பாராளுமண்றத்தின் முன்பு கடந்த வருடம் உண்ணாவிரதம் இருந்தவர்.

பொய்கை உங்கள் தகவலுக்கு நன்றி.

அப்படியாயின் அவரது கேள்விகள் கேட்கும் உரிமையை மதிக்கவேண்டும் என்பது எனது கருத்து.

பரமேஸ்வரன் கேட்டிருக்கும், கேள்விகள் தனிப்பட்ட கேள்விகளாகத் தெரியவில்லை...

கடந்த ஆண்டு இதே நேரம், இளையோர்கள், மாணவர்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்து இருந்த போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்ககள் ஒன்று கூடி தமது ஏக்கத்தை, ஆதங்கத்தை, கோபத்தை மேற்குலகத்தின் பாராமுகத்தை வெளிபடுத்துவதட்கு ஒரு சூழ்நிலையை அமைத்துத் தந்தது என்றால் அதில் பெரும் பங்கு திரு.பரமேஸ்வரன், மற்றும் மாணவர், இளையோர் அமைப்புக்களையே போய்ச் சேரும்.

அதிலும், அன்றைய தினங்களில் புலிக் கொடிபிடிப்பதில் பல சிக்கல்கள் இருந்தது. புலிச் சின்னம் போட்ட கோடியே பிடிக்கக் கூடாது என்று காவல் அதிகாரிகள் உட்பட பலர் தடை வித்திதார்கள்... அப்படி தடை விதித்தபோதேல்லாம் புலிக் கொடியை மேலே தூக்கிப் பிடித்த போதெல்லாம், மக்களின் எழுச்சிக் கரகொஷங்களும், இளையோரின் வீரமும் அதில் தெரியவில்லையா?

நாளடைவில், எமக்காக ஒரு வெள்ளை இனத்துப் பெண் காவல் அதிகாரிகளின் வாசச்தலத்திகு முன்னால் நாள் முழுதும் நின்று புலிச் சின்னம் போட்ட கொடி பிடிப்பதில் பிரச்னை இல்லை என்று அனுமதி வாங்கித் தந்தார் என்பதும் யார்வரும் அறிந்ததே...

இங்கே பரமேஸ்வரன் குறிப்பிட்டது போல் 'எமது மக்களும் மாவீரர்களும் நேசித்து நெஞ்சை நிமிர்த்தி வணங்கிய கொடியினை, எமது மக்கள் பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சுவிட்டு கண்கள் தளும்ப இந்தக்கெடியினை ஏற்றி மீண்டும் எப்போது எமது விடுதலை வீரர்கள் வணங்கப்போகிறார்களே என ஏங்கும் கொடியினை, இளையோர் கை சேர்ந்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் எழுட்சியும் வீரமும் தந்திட்ட கொடியினை, பாரில் நாம் தமிழரென எம்மை அடையாளப்படுத்திய கொடியினை, நீங்கள் மட்டும் ஏற்ற மறுத்ததன் மர்மம்தான் என்ன?' உரிமைக்காகப் உடலை வருத்திப் போராடினவர்களுக்குத் தான் அந்த உரிமைகள் பறிபோகும் போது தான் வலிகள் தெரியும்.

கடந்த வருடம் இந்நாட்களில், உலகம் முழுதும் உண்ணா நிலைப் போராட்டமும், சாலைமறியல் போராட்டங்களும் மழை, குளிர் எதையும் பொருட்படுத்தாமல் வாரக் கணக்கில், மாதக்க் கணக்கில் நடைபெற்றது யார்வரும் அறிந்ததே. அதிலும், பிரித்தானிய மாணவர் அமைப்பில் பலர் தங்கள் கடைசி ஆண்டு பரீட்சையைக் கூட ஒத்தி வைத்திருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. படிக்க வந்தமா, படிச்சுப் பட்டம் வாங்கிக் கொண்டு போனமா என்று அவர்களும் இருந்திருக்கலாம் தானே? எங்கட பிள்ளைகள் இப்படியான முடிவுகள் எடுத்து இருந்தால், எம்மில் எத்தனை பெற்றோர் அதற்கு முழு ஆதரவு கொடுத்து இருப்போம்??

மாணவர்கள், இளையோர்கள் தங்களால் மக்களை ஒன்றாக இணைக்க இயலும், அவர்கள் செய்து காட்டி இருக்கிறார்கள். அப்படிப் பட்ட இளையோர் அமைப்பு, மாணவர் அமைப்பின் சார்பாக மக்களின் சார்பாக பரமேஸ்வரன் கேட்டதில் பிழைகள் இருபதாகத் தெரியவில்லை.

பரமேஸ்வரன் இங்கிலாந்து பாராளுமண்றத்தின் முன்பு கடந்த வருடம் உண்ணாவிரதம் இருந்தவர்.

இருந்தது சரி ஏன் விட்டவர்? அவர் இருந்த நோக்கம் நிறைவேறியதா?

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தது சரி ஏன் விட்டவர்? அவர் இருந்த நோக்கம் நிறைவேறியதா?

நீங்கள் கேட்ட கேள்விதான் ரொம்ப சரி!

அவர் மரணிக்காதது பலருடைய ஆசை நிறைவேறாது நிற்பதையே பலரும் அவ்வப்போது சரளமாக காட்டுகிறார்கள்.

உணர்வுடைய எல்லோரும் பூண்டோடு அழிந்துவிடவேண்டும் என்ற ஆசை எதிர்பாhத்த மாதிரி நிறைவேவில்லைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடிதம் எழுதுங்கோ விவாதியுங்கோ

போட்டிபோடுங்கோ சண்டை பிடியுங்கோ

ஆனால் போட்டிக்கு என்னொரு நாடுகடந்த அரசு என்று கிளம்பாதேங்கோ.

நல்லாய் சொன்னீங்கள் சுறாவளி போற போக்கைபார்த்தால் கிளம்பீட்டாங்கள் போல் அல்லவா இருக்கு

யார் சொன்னது புலிகள் இல்லை என்று...பொறுத்திருங்கோ எல்லாவற்றுக்கும் பதில் வரும்

சும்மா அமைத்திக்கொண்டு படுங்கோ புடுங்கினது போதும்

Edited by sam.s

ஆணியே புடுங்க வேண்டாம் ... :lol:

இருந்தது சரி ஏன் விட்டவர்? அவர் இருந்த நோக்கம் நிறைவேறியதா?

எதையுமே செய்யாத கூட்டமைப்பு தமிழரின் தலைமை என்னும் போது எதையாவது செய்ய நினைத்த அந்த பெடி உயர்ந்தது தானே.?

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பையோ அல்லது அதன் கொடியையோ

முன்னிறுத்தி செயற்படுத்தப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பலத்த சந்தேகங்களுடனும் ஒரு வித அச்சத்துடனுமே நோக்கப்படும்.

இல்லை அப்படித்தான் வேண்டும் என்றால் முதலில் அந்தத் தடையை நீக்கப்போராட வேண்டும்.அந்தப் போராட்டம் முதலில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். முடியுமா?

வாத்தியார்

..............

கனடாவில் நா.க.அரசின் வேட்புமனுவுக்கு 3000.00 $ சராசரி வருமானம் பெறும் ஒருவரின் இரண்டு மாதச் சம்பளம் வசதியானவர்கள் மட்டும் போட்டி போடுங்கள் என்று போலும்

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.