Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது மகளைக் கண்டடையும் வரை எனக்கு எந்த வருடமும் புதுவருடமில்லை – உதயகுமாரி

Featured Replies

விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் தனது கணவனையும் மகனையும் பறிகொடுத்த 39 வயதேயான உதயகுமாரி அந்த ஆண்டின் ஆரம்பத்தில் காணாமல் போன தனது மகளை இன்னமும்; தேடிக் கொண்டிருக்கிறார்.

2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட போது அச்சிறுமிக்கு 16 வயதே ஆகியிருந்தது. மகளை எவ்வாறாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காகவே உதயகுமாரியின் குடும்பத்தினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்தனர்.

அவர்கள் (விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள்) தமது பதவி நிலைகளை உயர்த்திக் கொள்வதற்காக சிறுவர்களை கட்டாயமாக படையணியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். எனது மகள் ஒரு போதும் விடுதலைப் புலிகளில் இணைய எண்ணியிருக்கவில்லை. 2007ஆம் ஆண்டு டிசம்பரில் கிளிநொச்சி நகரில் வைத்து எனது மகளைப் பிடித்துச் சென்ற அவர்கள் போர் முனையிலிருந்த அவர்களது முகாம்களில் வைத்திருந்தனர்.

அவள் ஒரு அழகான சிறுமி. அவள் ஒரு போதும் வன்முறையை விரும்பியதில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் அவளைப் பிடித்துச் சென்று விட்டனர். நாங்கள் உதவியேதும் அற்றவர்காயிருந்தோம். அந்நாட்களில் விடுதலைப் புலிகள் கிளிநொச்சி நகரம் உட்பட இப்பிரதேசங்கள் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள். எனது மகளை அவர்கள் பிடித்துச் சென்றதற்கு எதிராக எங்களால் எதுவுமே செய்ய முடியாhதிருந்தது.

எமது மகளை விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருந்ததால் நாங்கள் போர்ப் பிரதேசத்திலிருந்து வெளியேற விரும்பியிருக்கவில்லை. எமது மகளை அங்கு விட்டு விட்டு அங்கிருந்து வெளியேறுவது சரியானதாகப்படவில்லை. போரின் போது புலிகள் கிளிநொச்சியைக் கைவிட்டு முல்லைத்தீவுக்குப் பெயர்ந்த போது எமது குடும்பமும் முல்லைத் தீவுக்குச் சென்றது.

இறுதியாக 2009 ஏப்ரலில் தாங்கவொணா செல் தாக்குதல் காரணமாக அங்கிருந்து வெளியேறுவது என நாம் முடிவு செய்தோம். ஏராளமான செல் தாக்குதல் அப்போது நடந்து கொண்டிருந்தது.

நாங்கள் முல்லைத் தீவை விட்டு அரசாங்கக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பிச் சென்று கொண்டிருந்த போது ஒரு செல் எனது மகனுக்கும் கணவனுக்கும் இடையே வந்து விழுந்தது. அந்த இடத்திலேயே அவர்கள் இருவரும் மரணமானார்கள். எனது கணவரின் சடலத்தை துண்டு துண்டாகவே நான் கண்டேன். அவற்றுக்கு மிக அருகாமையில் நான் நின்றேன். அன்றே எனது ஆன்மா இறந்து விட்டது. இப்போது நான் வெறும் நடைப்பிணமாகவே வாழ்கிறேன்.

கடந்த வருடத்தின் புத்தாண்டிற்கு அண்மையான நாட்களிலேயே எனது அன்புக்குரிய கணவனையும் மகனையும் நான் இழந்தேன். எப்படி என்னால் இன்னொரு புது வருடத்தினைக் கொண்;டாடுதல் இயலும்? எனக்குப் புதிதாகவோ அல்லது புத்துணர்வு அளிக்கக் கூடியதாகவோ எவையுமே இல்லை இங்கு. எனது மகளைக்கண்டு பிடித்துத் தருமாறு நான் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறேன். அவள் எங்கிருக்கிறாள் என இன்னமும் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட பல சிறுவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டும் விடுவிக்கப்பட்டும் இருக்கிறர்கள். ஆனால் எனது மகளின் பெயர் எந்தப்பட்டியலிலும் இல்லை.

எனது மகளைக் கண்டடையும் வரை எனக்கு எந்த வருடமும் புதுவருடமில்லை. ஆனால் அவளை எங்கு கண்டு பிடிப்பது என்று தான் எனக்குத் தெரியவில்லை.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=23154&cat=1

இந்திய - சிங்கள காட்டுமிராண்டிகள் செய்த திட்டமிட்ட தமிழின அழிப்பின் விளைவுதான் இது. சிங்கள காட்டுமிராண்டிகள் இப்பவாவது தாங்கள் கடத்தி அடைத்து வைத்திருக்கும் பிள்ளைகளின் பெயர்களை வெளிவிட முன்வரவில்லை. இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒட்டுண்ணிக் குழுக்கள் இருக்கும் வரை அந்த அம்மா புதுவருடத்தை கொண்டாட முடியாமல் போகலாம்.

இந்திய - சிங்கள காட்டுமிராண்டிகள் செய்த திட்டமிட்ட தமிழின அழிப்பின் விளைவுதான் இது. சிங்கள காட்டுமிராண்டிகள் இப்பவாவது தாங்கள் கடத்தி அடைத்து வைத்திருக்கும் பிள்ளைகளின் பெயர்களை வெளிவிட முன்வரவில்லை. இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒட்டுண்ணிக் குழுக்கள் இருக்கும் வரை அந்த அம்மா புதுவருடத்தை கொண்டாட முடியாமல் போகலாம்.

உண்மைதான் , ஆனால் புலிகள் செய்த ஒரு சில பிளைகளையும் மறைக்க முடியாது......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதயகுமாரி அல்ல ஆயிரமாயிரம் உதயகுமாரிகள்

இந்த நிலையில் இருக்கின்றார்கள்.

உலக இந்திய சிங்களப் பயங்கரவாதிகள் ஒரு நாள் இதற்குப் பதில் அளித்தேயாக வேண்டும்.

வாத்தியார்

.................

அந்த தாய் சொல்லும் செய்தியை கூட விளங்கிக் கொள்ளும் பக்குவம் இங்கு இன்னமும் பலருக்கு இல்லை.இப்படியே வாழ்க்கை முழுக்க நடித்துக்கொண்டிருங்கள்.தமிழனுக்கு கட்டாயம் விடுதலை கிடைக்கும்.

உங்களை நீங்களே ஏமாற்றி திருப்திபட்டு கொள்கின்றீர்கள்.

உண்மைதான் , ஆனால் புலிகள் செய்த ஒரு சில பிளைகளையும் மறைக்க முடியாது......

தெரிந்த உண்மைகள் அனைத்தையும் சந்தர்ப்பம் தெரியாமல் சந்தியில் பேசுபவன் பைத்தியகாரனாக அல்லது போதையில் உளறுபவனாக இருக்க வேண்டும்.

சாதாரண மனிதர்கள் வீட்டுப் பிரச்சனைகளை சந்திக்கு கொண்டுவருவதில்லை. உரியவர்களுடன் பேசி தீர்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் மனைவியுடன் அல்லது சகோதர சகோதரிகளுடன் சண்டை போட்டிருக்கலாம், ஏன் அடித்தும் இருக்கலாம். அதற்காக கண்டவன் நிண்டவனெல்லாம், துஷ்டர்களோடு கூட்டு வைத்தவனெல்லாம் உங்கள் மனைவியை அல்லது சகோதர சகோதரிகளை அடிப்பதை பார்த்துக் கொண்டு இதுவும் உள்வீட்டு பிரச்சினை என்று இரண்டையும் ஒரே தராசில் போட்டு சும்மா இருந்துவிடுவீர்களா? அல்லது கொஞ்சம் சூடு சுரணையுடன் அவர்களை தட்டிக்கேட்க, அவர்களோ உங்களைப் பார்த்து "நீங்கள் அவர்களை அடித்துள்ளீர்கள், அது போல் நாங்களும் அடித்தால் என்ன?", "அது தப்பென்றால், இதுவும் தப்புத் தானே" என்று கேட்பது போல் உள்ளது உங்கள் கருத்துக்கள்.

சில உண்மைகளை பொருத்தமான இடங்களில் கதைக்காவிட்டால் அதை ............, .............., ............. என்றெல்லாம் அழைப்பர்.

துஷ்டர்களின், எதிரிகளின், எதிரிகளது கைக்கூலிகளின் தவறுகளை சந்திக்கு கொண்டுவந்து அவர்களை நார் நாராக கிழிப்பது சமுதாயத்துக்கு நன்மை தரும்.

தெரிந்த உண்மைகள் அனைத்தையும் சந்தர்ப்பம் தெரியாமல் சந்தியில் பேசுபவன் பைத்தியகாரனாக அல்லது போதையில் உளறுபவனாக இருக்க வேண்டும்.

சாதாரண மனிதர்கள் வீட்டுப் பிரச்சனைகளை சந்திக்கு கொண்டுவருவதில்லை. உரியவர்களுடன் பேசி தீர்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் மனைவியுடன் அல்லது சகோதர சகோதரிகளுடன் சண்டை போட்டிருக்கலாம், ஏன் அடித்தும் இருக்கலாம். அதற்காக கண்டவன் நிண்டவனெல்லாம், துஷ்டர்களோடு கூட்டு வைத்தவனெல்லாம் உங்கள் மனைவியை அல்லது சகோதர சகோதரிகளை அடிப்பதை பார்த்துக் கொண்டு இதுவும் உள்வீட்டு பிரச்சினை என்று இரண்டையும் ஒரே தராசில் போட்டு சும்மா இருந்துவிடுவீர்களா? அல்லது கொஞ்சம் சூடு சுரணையுடன் அவர்களை தட்டிக்கேட்க, அவர்களோ உங்களைப் பார்த்து "நீங்கள் அவர்களை அடித்துள்ளீர்கள், அது போல் நாங்களும் அடித்தால் என்ன?", "அது தப்பென்றால், இதுவும் தப்புத் தானே" என்று கேட்பது போல் உள்ளது உங்கள் கருத்துக்கள்.

சில உண்மைகளை பொருத்தமான இடங்களில் கதைக்காவிட்டால் அதை ............, .............., ............. என்றெல்லாம் அழைப்பர்.

துஷ்டர்களின், எதிரிகளின், எதிரிகளது கைக்கூலிகளின் தவறுகளை சந்திக்கு கொண்டுவந்து அவர்களை நார் நாராக கிழிப்பது சமுதாயத்துக்கு நன்மை தரும்.

கடைசி கட்ட போரில் அதிகளவு அதியுயர் மட்ட உறுப்பினர்கள் சிலர் விலைபோயுள்ளனர்..அந்த அதியுயர் உறுப்பினர் தற்போது , கொழும்பில் அதியுயர் இராணுவப் பாதுகாப்புடன் இருக்கிறாராம்...இவர்கள் இவ்வாறு இருக்கும்போது ஒரு வேகத்தில் / ஒரு இயலாத்தனம் இப்படி எழுத வைத்தது... மன்னிக்கவும்..

அவ் அதியுயர் போராளி இப்படியா எண்டு நினைக்க மனம் கூசுகின்றது......ஒருவருக்கு இடுப்புக்கு கீழ் ஒன்றுமில்லையாம்...

அந்த தாய் சொல்லும் செய்தியை கூட விளங்கிக் கொள்ளும் பக்குவம் இங்கு இன்னமும் பலருக்கு இல்லை.இப்படியே வாழ்க்கை முழுக்க நடித்துக்கொண்டிருங்கள்.தமிழனுக்கு கட்டாயம் விடுதலை கிடைக்கும்.

உங்களை நீங்களே ஏமாற்றி திருப்திபட்டு கொள்கின்றீர்கள்.

அந்தத் தாய் குண்டு போட்டு அழித்தவர்களை விட்டுவிட்டு, குண்டு போட்டு அழித்தவர்களை எதிர்த்து போராடியவர்களை குறை சொல்வதாக காட்ட முனையும் "பக்குவம் பெற்றவர்களை" ஊர், உலகம் நன்கறியும்.

உங்களுக்கேற்ற பக்குவம் பெற்றவர்கள் இந்தியாவிலுள்ள நித்தியானந்த, கல்கி ஆச்சிரமங்களில் இருப்பார்கள். அங்கு போய் உங்கள் பிரசங்கங்களை செய்யுங்கள்.

கடைசி கட்ட போரில் அதிகளவு அதியுயர் மட்ட உறுப்பினர்கள் சிலர் விலைபோயுள்ளனர்..அந்த அதியுயர் உறுப்பினர் தற்போது , கொழும்பில் அதியுயர் இராணுவப் பாதுகாப்புடன் இருக்கிறாராம்...இவர்கள் இவ்வாறு இருக்கும்போது ஒரு வேகத்தில் / ஒரு இயலாத்தனம் இப்படி எழுத வைத்தது... மன்னிக்கவும்..

அவ் அதியுயர் போராளி இப்படியா எண்டு நினைக்க மனம் கூசுகின்றது......ஒருவருக்கு இடுப்புக்கு கீழ் ஒன்றுமில்லையாம்...

தாராக்கி! பல கசப்பான உள்வீட்டு பிரச்சனைகள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. தமிழ் மக்கள் மேல் பாசமுடையவர்களுக்கு அது மன உளைச்சலை தரும் என்பதை உணராதவனில்லை நான்.

அதற்குரிய நேரத்தில் நாம் அவற்றை நேரடியாக வருங்கால தலைமைகளுடன் கதைத்து, எதிர்காலத்தில் அதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதில் விபரம் அறிந்த அனைத்து தமிழ் உறவுகளின் பங்களிப்பும் அவசியமாகும்.

உறுதியான தலைமைத்துவம் உருவாகும் வரை, சில தீயசக்திகள் தமது தவறை மறைத்து, பழியை இன்னொருவர் மேல் போட்டு மேலாதிக்கம் பெற முனைவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

உள்வீட்டு சமாச்சாரத்தை தெருவுக்கு இழுக்கத்தேவை இல்லை, வாஸ்தவம்தான். அதுக்கு முதலில வாக்குமூலம் குடுத்த அந்த அம்மாவை கோவிச்சுக்கொள்ளுங்கோ, அந்த அம்மாவிண்ட வாக்குமூலத்தை குலோன் எடுத்து பக்றீரியாவிண்ட பெருக்கம் மாதிரி இனப்பெருக்கம் செய்து பிரசுரம் செய்த ஊடகத்தை கோவிச்சுக்கொள்ளுங்கோ. அதை இஞ்ச யாழில கொண்டுவந்து இணைச்ச டாமை கோவிச்சுக்கொள்ளுங்கோ. அதைவிட்டுப்போட்டு இதுகை கருத்து எழுதுற ஆக்களை கோவிச்சு என்ன செய்கிறது...? உந்த கோப தாபம் இருக்கும் வரைக்கும் நாங்கள் ஒருத்தரும் ஒண்டும் இதுக்கை புடுங்க முடியாது. ஒருவிதத்தில இதுகும் உள்வீடுதானே. ஒரு குட்டி வலைத்தளத்துக்கை ஒருத்தரிண்ட கருத்தை இன்னொருத்தரால நாகரீகமாக அணுக முடிய இல்லை எண்டால்... நாடு எங்கை.... நாங்கள் எங்கை.. பல நூறு ஒளியாண்டு தூரத்தில நிக்கறம்.

ஒரு உதயகுமாரி அல்ல ஆயிரமாயிரம் உதயகுமாரிகள்

இந்த நிலையில் இருக்கின்றார்கள்.

உலக இந்திய சிங்களப் பயங்கரவாதிகள் ஒரு நாள் இதற்குப் பதில் அளித்தேயாக வேண்டும்.

வாத்தியார்

.................

வாத்தியார் சரிதான் 1948 இலிருந்து உள்ள உதயகுமாரிகள் அதாவது பிள்ளைகளை இழந்த தாய்மார்கள்

1958,1977 1981,1983,...2009 வரை சிங்களவன் ............

இந்த அம்மாவின் துன்பத்திலும் பங்கு கொள்ளும் அதே நேரம், சில காலங்களுக்கு முன் வன்னி பிரதேசம் தாம் பெண்களுக்கு சுதந்திரமான நடமாட்டத்திற்கு உரிய பிரதேசமாக இருந்தது என்று பெருமை பட்ட பலர் உண்டு. இந்திய சிங்கள அரசுகளின் மூர்க்கத்தனமான இனவழிப்பில் இருந்து பாதுகாக்க எடுக்கபட்ட முயற்சி பலனின்றி போனது யாவரும் அறிந்ததே. அத்துடன் புலிகள் இப்பொது சொகுசாக வாழ்ந்தால் நாம் அவ்ர்களை இன்னமும் திட்ட முடியும் ஆனால் அவர்ட்களும் இல்லையே?

என்ன காட்டி கொடுத்த பலர் ... கருணா.... ர் ஈறாக உள்ளனர்.

Edited by சுனாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.