Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சிதாவை நித்தியானந்தா கற்பழிக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவை கற்பழிக்கவில்லை, பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. பலவந்தப்படுத்தவில்லை என்று கர்நாடக சிஐடி போலீஸார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக நித்தியானந்தா இருந்த்து தொடர்பான வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர்.

பின்னற் இந்த வழக்குகள் அனைத்தும் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி நித்தியானந்தா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அரளி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து. அப்போது நித்தியானந்தாவின் வக்கீல் வாதாடினார். மேலும், அரசு வக்கீலும் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் ஏப்ரல் 21ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டது.

முன்னதாக சிஐடி எஸ்.பி. யோகப்பா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற சி.டி. ஆதாரத்தை பார்க்கும் போது நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவை பலாத்காரம் செய்யவில்லை. சி.டி.யில் நடிகையின் முகம் சரியாக தெரியவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

அதேசமயம், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நித்யானந்தா பாலியல் வல்லுறவு, முறையற்ற உறவு, மோசடி ஆகியவற்றுக்கு சி.டி. ஆதாரமே போதுமானது என்றும், மதநம்பிக்கையை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்த்து.

இதை விசாரித்த நீதிபதி, பாலியல் வல்லுறவு புகார் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுத்து இருக்கிறார்களா? என்று கேட்டார். ஆனால் அப்படி எந்தப் புகாரும் வரவில்லை என்று கூறிய அரசுத் தரப்பு வக்கீல் ஆனால் சாமியாருக்கு எதிரான சி.டி.ஆதாரமே போதுமானது என பதிலளித்தார்.

இதற்கிடையே, நித்தியானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் அவரைப் பிடிக்க முடியாமல் இருப்பதாக சிஐடி எஸ்.பி. யோகப்பா கூறியுள்ளார். அதேசமயம், இதுவரை கிடைத்துள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீடியோவிலை பாத்தமே.......

ரஞ்சிதா தான் நித்தியானந்தருக்கு குளுசை எடுத்துக் குடுத்து கற்பழிச்சது எண்டு.....

நாங்க வீடியோவிலை பாத்தமே.......

க க க போ... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை ரஞ்சிதா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதா இல்லையா என்பதல்ல. ரஞ்சிதா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பல காலம் கடந்திருக்கும். அது சினிமா காரங்களைதான் கேட்க வேணும். யார் முதலில் கற்பழிச்சது என்று.

இந்தப் பிரச்சனைக்குரிய கேள்வி.. நித்தியானந்தா பிரம்மச்சாரியா இல்லையா என்பதுதான். அவர் பிரமச்சாரி இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. எனி எதற்கு சாமியார் வேடம். அவரை சம்சாரி ஆக வேண்டாம் என்று எவரும் தடுக்கவில்லையே..!

எதுக்கு எதுக்கெல்லாம் நீதிமன்ற விசாரணை என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வீடியோவிலை பாத்தமே.......

ரஞ்சிதா தான் நித்தியானந்தருக்கு குளுசை எடுத்துக் குடுத்து கற்பழிச்சது எண்டு.....

:lol:

கற்பு எண்டது என்ன கரும்பலகையிலை சுண்ணாம்பாலை எழுதுறது போலயோ...?? தண்ணி போட்டு(ட்டு) அழிக்கிறதுக்கு...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சனை ரஞ்சிதா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதா இல்லையா என்பதல்ல. ரஞ்சிதா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பல காலம் கடந்திருக்கும். அது சினிமா காரங்களைதான் கேட்க வேணும். யார் முதலில் கற்பழிச்சது என்று.

இந்தப் பிரச்சனைக்குரிய கேள்வி.. நித்தியானந்தா பிரம்மச்சாரியா இல்லையா என்பதுதான். அவர் பிரமச்சாரி இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. எனி எதற்கு சாமியார் வேடம். அவரை சம்சாரி ஆக வேண்டாம் என்று எவரும் தடுக்கவில்லையே..!

எதுக்கு எதுக்கெல்லாம் நீதிமன்ற விசாரணை என்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு..! :D:lol:

இஞ்சை பாருங்கோ நெடுக்கு!

எங்களுக்கு ஆராள் ரஞ்சிதாவுக்கு கன்னிகளிச்சததெண்டதெல்லாம் பிரச்சனையே இல்லை

நாங்கள் இப்பிடியான விசயங்களை போடிபோக்காய்த்தான் அப்பப்ப எடுத்து விளாசுவம் சரியோ

இப்ப பிரச்சனையென்னவெண்டால்......

தாங்கள் இன்னும் பிரம்மச்சாரி வேஷம் எதுக்கு????

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாருங்கோ நெடுக்கு!

தாங்கள் இன்னும் பிரம்மச்சாரி வேஷம் எதுக்கு????

நான் எங்கே சொன்னேன்.. பிரம்மச்சாரி என்று. நீங்களா சொல்ல வேண்டியது.. பிறகு நான் சொன்னன் என்று சொல்ல வேண்டியது.. அதை வைச்சே பிறகு ஒரு செய்தியை ஆக்க வேண்டியது. பிழைப்பை ஓட்ட வேண்டியது. இதுதானே காலம் காலமா நடந்துகிட்டு இருக்குது.

நான் பிரம்மசாரியா இருக்கிறது இல்லாதது எனக்கு மட்டுமே தெரிஞ்ச விசயம். இதில மற்றவர்கள் உண்மை அறியவும் முடியாது.. பொய்யை கண்டறியவும் முடியாது. பிறகெதற்கு அநாவசியமான.. கோட்டு கேசு..! முடியல்ல இந்த உலகத்தில நடக்கிற கேலிக்கூத்துக்களை கண்ணுறுற போது.. தாங்க முடியல்ல..!

இப்படிக்கு சுவாமிஜி நெடுக்கானந்தா. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நெடுக்கானந்தா சுவாமிஜீ! :(

பயமாய்க்கிடக்கப்பா? :(

நாளைக்கு எவனவன் என்னென்ன உருவத்திலை வெளிக்கிட்டு வருவான் எண்டதை கற்பனை பண்ணிக்கூட பாக்கேலாமல் கிடக்கு :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.