Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என்பது நகைப்பிற்கு இடமான விடயம் - அத்வானி

Featured Replies

பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என்பது நகைப்பிற்கு இடமான விடயம் - அத்வானி

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் அவர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என டீ.ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்பிற்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக்சபாவில் கண்டித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக 80 வயது மூதாட்டியை திருப்பி அனுப்பியமை மகனிதாபிமானமற்ற செயல் எனவும் அண்ணாதிராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இவரது பெயர் கறுப்பு பட்டடியலில் போடப்பட்டதனால் இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்தகருத்தை அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.pathivu.com/index.php/news/6501/54//d,view/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வதி அம்மாளை வைச்சு?????

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தியாவிலை இருக்கிற கொஞ்ச அரசியல்வாதிகள் , ஊடகங்களெல்லாம் பொழுதை போக்காட்டிவிடுவினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வதி அம்மாளை வைச்சு?????

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தியாவிலை இருக்கிற கொஞ்ச அரசியல்வாதிகள் , ஊடகங்களெல்லாம் பொழுதை போக்காட்டிவிடுவினம்

இங்கயும்தான்..... :lol:

வெறும் உரலை இடிக்க முடியாவிட்டால் அவல் எப்போதும் நாங்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என்பது நகைப்பிற்கு இடமான விடயம் - அத்வானி

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் அவர்களை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்ட விடயம் திமுகவிற்கு தெரியாது என டீ.ஆர்.பாலு தெரிவித்தமையானது நகைப்பிற்கு இடமான செயல் எனவும் இது இந்தியாவிற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் இந்தியாவின் எதிர்கட்சித் தலைவர் அத்வானி லோக்சபாவில் கண்டித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்காக 80 வயது மூதாட்டியை திருப்பி அனுப்பியமை மகனிதாபிமானமற்ற செயல் எனவும் அண்ணாதிராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இவரது பெயர் கறுப்பு பட்டடியலில் போடப்பட்டதனால் இது நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிவித்தகருத்தை அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.pathivu.com/index.php/news/6501/54//d,view/

டீ.ஆர்.பாலுதான் சில மாதங்களுக்கு முன்பு சிறிலங்காவுக்கு கலைஞர் அனுப்பிய தூதுக்குழுத்தலைவராகச் சென்று மகிந்தா செய்வது சரி என்று மகிந்தாவுக்கு நற்சான்றிதழ் வழங்கியவர். யாழ்ப்பாணத்தில் மக்களின் குறை கேட்காமல் அவர்கள் மீது எரிந்து விழுந்தவர்.

பார்வதி அம்மாளை வைச்சு?????

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தியாவிலை இருக்கிற கொஞ்ச அரசியல்வாதிகள் , ஊடகங்களெல்லாம் பொழுதை போக்காட்டிவிடுவினம்

அரசியல்வாதிகள், ஊடகங்களுக்கு பொழுது போக்கு செய்தி என்றாலும் அத்வானி சொல்வது போல திமுகவுக்கு தெரியாது என்பது நகைச்சுவை விடயம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் உரலை இடிக்க முடியாவிட்டால் அவல் எப்போதும் நாங்கள்தான்.

தமிழக அரசியல்வாதிகளுக்கு நிச்சயமாக.........

பார்வதி அம்மாளை வைச்சு?????

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தியாவிலை இருக்கிற கொஞ்ச அரசியல்வாதிகள் , ஊடகங்களெல்லாம் பொழுதை போக்காட்டிவிடுவினம்

:lol:

http://usetamil.forumotion.com

India’s Lack of Compassion to Sick and Infirm Mrs Veluppillai Parwathy

By: Dr C P Thiagarajah

http://www.tamilcanadian.com/page.php?cat=59&id=5878

தமிழ் நாட்டு மக்கள் காதில் இன்னமும் பூ வைத்துக்கொண்டு சுத்துகிறார்கள் என்பது அத்வானிக்கு தெரியாது போல இல்லையென்றால் கருணாவின் உண்ணாவிரத நாடகத்தின்போதே ஒரு பிடி பிடித்திருப்பார்கள்.

(சிலவேளை அத்வானி மனதுக்குள் நினைப்பார் தாம் தமிழ்நாட்டில் அரசியல்வாதியா பிறக்காமல் போய்வி;ட்டோம் என்று)

Edited by Subiththiran

அத்வானி கூட நகைக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் நிலையை.

அத்வானியின் பாசம் போலியானது?

10 வருடங்களின் முன் அத்வானியை நேரடியாக சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினை, அவலங்கள் பற்றி விளக்கியபோது "இவ்வளவு பிரச்சினைகள் உண்டு என்று தனக்கு தெரியாது, யாரும் எதுவும் சொல்வதில்லை, தமிழ் மக்கள் யாருடனும் நேரடித் தொடர்பு இல்லை" என்று எங்களிடம் கூறினார்.

மேலும் "தமிழர் அண்மையில் குடியேறிவிட்டு பிரச்சினைகள் கொடுக்ககூடாது" என்று சொல்லி தனது அறியாமையை வெளிப்படுத்தியவர், "தமிழர் இலங்கையில் அண்மையில் குடியேறினவர்களா?, புலிகளும், தமிழர்களும் கிறிஸ்தவர்களா?, அங்கு இந்து அமைப்புக்கள் இல்லையா?, எவ்வளவுபேர் ஹிந்தி கதைப்பார்கள்" போன்ற தலை சுற்றும் கேள்விகளையும் கேட்டார்.

அச்சந்திப்பின் போது அவரிடம் ஈழத் தமிழர் பற்றிய சிறு ஆவணமும் (வரலாறு, எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அடங்கிய) கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பலவருடங்கள் இங்கு நடக்கும் விடயங்களை ஒருசிலர் அவருக்கு அனுப்பிவந்தனர். எந்த பிரயோசனமும் இல்லை?

4 வருடங்களின் முன்னர் அத்வானி கட்சி சார்ந்த தமிழர் ஒருவரை இங்கு சந்தித்தபோது நீண்ட நேரமாக காரசாரமாக பல கருத்துக்களை முன்வைத்தோம் (ஒலிப்பதிவு உண்டு). தமிழ்நாடு சென்று நடவடிக்கைகள் எடுப்பதாக கூறிச் சென்றார். ஒருசில அறிக்கைகள் வந்தது. எந்த பிரயோசனமும் இல்லை?

சில மாதங்களின் யாழில் சுற்றித்திரிந்த தமிழ்நாட்டு தமிழர் சிலரை அடையாளம் கண்டு, விபரம் அறிய கதை கொடுத்தபோது, மூன்று நாட்களாக யாழில் தங்கியிருப்பதாகவும், கோவில்கள் பார்க்க வந்ததாகவும் கூறினர். எங்களிடம் அதிகம் கதைக்க விரும்பாத அவர்களும், தங்களுக்கு "இவ்வளவு பிரச்சினைகள் இங்கிருப்பது தெரியாது" என்ற பாணியில் நழுவ முயன்றனர். அவர்களும் அத்வானி கட்சியுடன் தொடர்புடையவர்கள் என அறிந்து "உங்கள் அனைவராலும் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளைப் பார்த்து மகிழுங்கள்" எனக் கூறிவிட்டு சென்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா கட்சி வெல்லுது, அத்வானி கட்சி ஆட்சியமைக்கிது, யுத்த நிறுத்தம் வருகிது, கப்பல் போகிது, காப்பாத்திது எண்டு 2009 மே 14/15 கதைச்சதுகள் ...... :lol:

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

பிரச்சினை அத்வானி இல்லை அதைவிட மோசமான கருங்காலி தான் தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழர்களின் கழுத்தை அறுக்குதே அதுதான்

(இன்னும் ஒருத்துரும் செருப்பு மரியாதை செய்யுறாங்கள் இல்லையே உந்த கருங்காலிக்கு.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.