Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் பிரித்தானிய வேட்பாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களில் யாருக்கு வோட்டு போடுவீர்கள்...என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் எனக்கு என்டால் ஒருதரிலும் நம்பிக்கை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகவிடுதலையில் பற்றுறுதியும் பல்வேறுநாட்டுத் தலைவர்களுடன் ஆணித்தரமாக அவர்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் விளக்கங்களைக் கொடுக்கக் கூடியவர்களையும் தெரிவுசெய்யுங்கள். குறிப்பாக இளையோர்களைத் தெரிவு செய்யுங்கள்.தளராத உறுதியும் தகமையும் உடைய முதியோர்களையும் தெரிவு செய்யலாம். கூடிய அளவில் இளையோர்களைத் தெரிவு செய்வது நலம்.முதியோர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் அதற்கு மத்தியில் வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட குடும்பச் சூழு;நிலைகள் இடங் கொடுக்காது போகலாம்.கட்டாயம் வாக்களிப்பில் கலந்து கொள்ளுங்கள்.எமது வாக்களிப்பு வீதம் அதிகமாக இங்குள்ள அரசியல் கட்சிகள் எங்கள் மீதான பார்வையைக் (தங்கள் நலன் சார்ந்து)கூர்மைப்படுத்தும்.அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாம் எமது விடயங்களைச் செயற்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலிலும் அதைத் தொடர்ந்;து நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் தமிழ்மக்கள் காட்டிய ஆர்வமே பிரித்தானியத் தொழிற்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறிலங்காவிற்கெதிரான போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக அக்கறை கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.(ததேகூ உடபட தமிழ்கட்சிகள் எவையும் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது பற்றிக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை) சிறிலங்காவைப் போர்க் குற்ற விசாரணைகளில் மாட்டி விடுவது எமது இலடசியத்தை நிறைவேற்றும் பணியில் மிக முக்கியமானது ஆகும்.) அது மட்டுமன்றி உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டிலும் பிரித்தானியாவின் பிரதமர் வெளிநாட்டமைச்சர் உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் பங்கு பெறக் காரணமாக இருந்தது.ஆகவே எல்லோரும் வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.அது மட்டுமன்றி அந்த அந்த நாடுகளில் (குறிப்பாகப் பிரித்தானியாவில்)உள்ளவர்கள் தங்களை வாக்களாராகப் பதிவு செய்து கொள்ளுவதும் முக்கியமானது.எங்கள் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளுக்கு இந்த உலகம் எந்தச் சாட்டுப் போக்கும் சொல்லி தட்டிக் கழிக்க முடியாது.போராட்ட வழிமுறைகள் மாறலாம் போரட்ட இலட்சியம் மாறாது.இறுதி இலக்கு வரை அது தொடர வேண்டும்.இதுவே எமக்குத் தலைவர் சொன்னது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு வேட்பாளரை சமீபத்தில் சந்தித்திருந்தேன்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரையும் தெரிவுசெய்ய ஏலாதோ......

வட்டுக்கோட்டைக்கு 99.9வீதம் எண்டு அறிவிச்சமாதிரி எல்லாரையும் வெண்டது எண்டுதானாம் அறிவிக்கப்போகினம்

அண்ணோய் .... ஈஸ்ரேன் யுனிவேஸ்ரிக்கு கிட்ட பிரபாகரன்ர கொடும்பாவிய எரிச்ச ஜெயானந்தமூர்த்தியும் லண்டனில எலக்சன் கேட்கிறாராம்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் நீங்கள் சொல்வது சரி யாருக்காவது வாக்களிக்கத் தான் வேண்டும் ஆனால் நாங்கள் வாக்களித்து தேர்வு செய்த பின் வாக்களித்த மக்களுக்கு அவர்களும் உண்மையாக நடக்க வேண்டும்...தேர்வு செய்த பின் வருந்துவதைக் காட்டிலும் தேர்வு செய்ய முதல் திறமையானவர்களை பார்த்து தெரிவு செய்ய வேண்டும்...இளையோர் பற்றி எழுதியிருந்தீர்கள் இங்கு தேர்தலில் நிற்கும் இளையோர் யாராவது பாராளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யும் போது வந்தார்களா...முன்னுக்கு நின்று செயற்பட்டார்களா...அப்படி யாராவது இருந்தால் தயவு செய்து எழுதுங்கள்...எதிலும் குறை பிடிக்கிறேன் என நினைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் நீங்கள் சொல்வது சரி யாருக்காவது வாக்களிக்கத் தான் வேண்டும் ஆனால் நாங்கள் வாக்களித்து தேர்வு செய்த பின் வாக்களித்த மக்களுக்கு அவர்களும் உண்மையாக நடக்க வேண்டும்...தேர்வு செய்த பின் வருந்துவதைக் காட்டிலும் தேர்வு செய்ய முதல் திறமையானவர்களை பார்த்து தெரிவு செய்ய வேண்டும்...இளையோர் பற்றி எழுதியிருந்தீர்கள் இங்கு தேர்தலில் நிற்கும் இளையோர் யாராவது பாராளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யும் போது வந்தார்களா...முன்னுக்கு நின்று செயற்பட்டார்களா...அப்படி யாராவது இருந்தால் தயவு செய்து எழுதுங்கள்...எதிலும் குறை பிடிக்கிறேன் என நினைக்க வேண்டாம்.

என்னை மன்னிக்கவும் நான் மேலே எழுதினேன் மேலே தேர்தலில் நிற்கும் இளையோர் யாராவது பாராளுமன்றத்திற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்களா எனக் கேட்டிருந்தேன்...உண்மையில் ஆர்த்தி என்பவர் கடைசி வரைக்கும் பாராளுமன்றத்திற்கு முன்னால் எம்மோடு நின்றார்...படத்தில் பார்க்கும் போது முதலில் தெரியவில்லை பிறகு என் நண்பி சொன்ன போது தான் எனக்கு விளங்கியது அது அந்தப் பெண் தான் என...மீண்டும் மன்னியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்துக் கொள்ளும் கொள்கைக்காக உழைக்கக் கூடிய இளைய தலைமுறைக்கு வாக்களிப்பதே சிறந்தது.

பிரச்சனை என்னவென்றால் இதில் போட்டியிடுபவர்களின் பின்புலம் தெரியாது. எடுத்துக் கொள்ளும் கொள்கைக்காக எந்தளவு உறுதியாக நின்று உழைப்பார்கள் என்றும் தெரியவில்லை. இருந்தாலும் தெரிவு செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்று மக்களைச் சார்ந்திருக்கிறது. தெரிவு இளைய தலைமுறையாயின் சிறப்பாக இருக்கும். எதிர்காலமும் இருக்கும்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.