Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தரப்பின் சாணக்கியமான காய் நகர்த்தல் மீண்டும் ஓர் கரும்புள்ளி நோக்கி செல்கின்றது?

Featured Replies

வணக்கம், நேற்று இரவு கனேடிய தமிழ் வானொலி ஒன்றில் தற்செயலாக நாடு கடந்த அரசு சம்மந்தமாக ஓர் நிகழ்ச்சியை சிறிது நேரம் கேட்டேன். அதில் கலந்துகொண்டு நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓர் ஆய்வாளரது கருத்தே மேற்கண்ட கேள்விக்கான காரணம்: "தமிழர் தரப்பின் சாணக்கியமான காய் நகர்த்தல் மீண்டும் ஓர் கரும்புள்ளி நோக்கி செல்கின்றது?"

ஆய்வாளரின் குறிப்பிட்ட ஓர் கருத்தின் சாரம்சம் என்ன என்றால், கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் கைப்பற்றப்பட்டு முழு இலங்கை நிலப்பரப்பும் சிறீ லங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினுள் வருவதற்கு முன்னதாக ஓர் அரசு (தமிழீழம்) இருந்துள்ளது. போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அந்த அரசு பின்னர் அங்கு இயங்கமுடியவில்லை. அந்த அரசை "நாடு கடந்த தமிழீழ அரசு" என மீண்டும் இயங்கவைக்கும் முயற்சிகளே தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன - பல்வேறு நாடுகளில் நம்மவர்கள் கலந்துகொள்கின்ற ஜனநாயகரீதியான தேர்தல்கள்வரை.

நோர்வே தொடக்கம் தென் ஆபிரிக்கா வரை தமிழீழத்தை விரைவில் அங்கீகாரம் செய்யப்போகின்றன என்று முன்பு கூறிவந்தார்கள். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட அழிவு ஏற்பட்டு நமது ஆய்வாளர்கள் இது உலக நாடுகளின் கூட்டுச்சதி என்று கண்டறிதல் செய்யும்வரை பலரும் நிலப்பரப்பை தக்கவைத்து, அதில் நிருவாகம் செய்யப்பட்ட தமிழீழ நிழல் அரசாங்கம் உலக நாடுகளின் அங்கீகாரம் பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், உலகநாடுகளோ ஒருமித்த குரலில் பயங்கரவாதம், பயங்கரவாதிகள் எனும் முத்திரையிடலின் கீழ் நம்மவர் நிழல் அரசாங்கத்தை அணுகி இருக்கின்றன.

எனவே, உலகநாடுகளின் பார்வையில் பயங்கரவாதிகளின் நிழல் அரசாங்கத்தின் மீள்வருகையாகிய "நாடு கடந்த தமிழீழ அரசு" ஏதாவது வகையில் அங்கீகாரம் பெறுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றனவா? அல்லது, பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் பட்டியலில் நாடு கடந்த தமிழீழ அரசும் ஓர் அம்சமாக உள்ளடக்கப்பட்டு விரைவில் தடை உத்தரவுக்கான அறிவித்தல் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா? இவற்றில் எதற்கான சாத்தியம் அதிகம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் விளங்கிய நிழல் அரசின் மீள்வருகையே நாடு கடந்த தமிழீழ அரசு என்பதை உலகநாடுகள் உணர்ந்துகொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தி கொடுப்பது மீண்டும் ஓர் தடை அறிவித்தல் கொடுக்கப்படுவதற்கே ஏதுவாக அமையும்.

குறிப்பிட்ட வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் வினாக்களுக்கு பதில் கூறிய ஆய்வாளரின் கருத்தே நாடு கடந்த தமிழீழ அரசு சம்மந்தமாக இயங்குகின்ற தமிழர் தரப்பின் நோக்கமாகவும் இருந்தால் மீண்டும் நம்மவர் செயற்பாடுகள் கனடா தொடக்கம் அவுஸ்திரேலியா வரை பயங்கரவாத பட்டியலின் கீழ் அமைந்த ஓர் தடை உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு அதிக காலம் எடுக்கப்போவது இல்லை.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பல நாடுகள் ஆயுதப் போராட்டம் மூலமும் அதனோடு இணைந்த அரசியல் - இராஜதந்திர நகர்வுகள் ரீதியாகவும் மக்களின் விடுதலையை சாத்தியமாக்கியுள்ளன.

தென்னாபிரிக்காவில் இருந்து செச்னியா வரை உலகின் அணுகுமுறைகள் பல வகையில் வேறுபடுகின்றன. இன்றைய உலகில் அமெரிக்காவின் ஆயுத பலமே உலகின் போக்கை தீர்மானிக்கின்றன. அமெரிக்காவின் கண்களுக்கு தனக்கு சாதகமல்லாத அனைத்து வன்முறைகளும் பயங்கரவாதமாகும். அமெரிக்காவின் முத்திரையிடல்களை மற்றவர்கள் அச்சுப் பிசகாது பின்பற்றும் ஒரு மந்தையாட்டு இராஜதந்திரமே இன்று உலகில் நிலவுகிறது.

மனித உரிமைகள் கூட அமெரிக்காவின் ஆயுதப் பிரயோகத்தேவைகளுக்கு ஏற்பவே உச்சரிக்கப்படுகின்றன.

எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும்.. தமிழ் மக்களிற்கு இலங்கையில் பிரச்சனை இருக்கிறது என்பதை உலகம் அங்கீகரிக்கச் செய்திருக்கிறது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் பிற இனங்களுக்கு சமனாக உரிமை பெற்று வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றும் உலகம் சொல்லச் செய்திருக்கிறது. இது எமது ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி என்றே சொல்லலாம். குறிப்பாக இதனை அமெரிக்க சார்பு உலகம் சொல்கிறது. ஆனால் அவர்கள் வலியுறுத்தும் முக்கிய விடயம்.. ஐக்கிய இலங்கை என்பதுதான்.

இந்த ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சம உரிமை பெறப்பட முடியாது என்பதையும் அதனை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் சொல்ல வேண்டும். அதைச் செய்யாமல்.. சம்பந்தனும்.. இதர ஒட்டுக்குழுக்களும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒத்திசைய கருத்துச் சொல்லி வருவது சர்வதேசத்தின் நிலைப்பாடு தமிழ் மக்களின் விருப்புக்கு அப்பால் மையம் கொண்டிருக்கவே வகை செய்யும்.

எமது ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி அதன் கட்டுக்கோப்பு தலைமைத்துவம் கண்டு உலகம் அஞ்சியது. அது தனது கொள்கைகளுக்கு சவாலாகி வருவதை உணர்ந்து கொண்டது. அதனாலேயே அதனை பயங்கரவாதமாக்கி சர்வதேச ஆதரவைத் திரட்டி அடக்கிக் கொண்டது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு ஆயுதப் போராட்டம் முளைவிடுமோ என்ற அச்சமும் இந்த உலகிடம் இன்னும் இருக்கிறது. அப்படி ஒன்று இருந்தே ஆக வேண்டும். இன்றேல் இந்த உலகம் எம்மை அடித்து உதைத்துப் பந்தாடுமே அன்றி எமக்கு உரிமை பெற்றுத்தராது.

நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டதாக இந்த உலகிற்கு காட்டிக் கொள்வதும் ஆபத்தானது. ஆயுதங்களை மெளனிக்க வைத்திருப்பது என்பதற்கும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்பதற்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. நாம் இன்றைய தருணத்தில் இந்த உலகிற்கு சொல்ல வேண்டியது.. நாம் ஆயுதங்களை மெளனிக்க வைத்துவிட்டு.. ஜனநாயக வழியில் எமது உரிமைகள் பெற விரும்பி நிற்கிறோம் என்பதையே. அத்தோடு எமது உரிமைகள் என்னென்ன அதனை அடைய நாம் விரும்பும் தீர்வுகள் என்ன அதற்கான நியாயங்கள் என்னென்ன என்பதைச் சொல்ல வேண்டுமே தவிர.. அதுவும் ஏகோபித்த குரலில் சொல்ல வேண்டுமே தவிர.. உலகம் பயங்கரவாதம் என்று அடையாளம் தந்துவிட்டது என்று அதனை ஏற்றுக் கொண்டு வாழாதிருப்பின் அமெரிக்காவின் மற்றும் பிராந்திய வல்லரசுகளின் எளிமையான அந்த குள்ளநரி இராஜதந்திரத்திற்கு நாம் பலியானதாகவே முடியும்.

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில் பயங்கரவாதியாக முத்திரையிடப்பட்ட நெல்சன் மண்டேலாவிற்குத்தான் நோபல் பரிசும் அளித்து வெள்ளைமாளிகையில் விருந்தும் அளித்து லண்டனில் வெண்கலச் சிலையும் வைத்துள்ளனர்.

வெள்ளையனே வெளியேறு என்று பிரிட்டிசாருக்கு எதிராகப் போராடிய காந்தியை விரட்டி அடித்த பிரிட்டிஷ்காரர்கள் தான் இன்று பல்கலைக்கழகங்கள் தோறும் காந்தி சிலையை நிறுவி அழகு பார்க்கிறார்கள்.

பயங்கரவாதம் என்ற உலகின் கணிப்பை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதுவும் இன்று எமது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பயம் எம்மவருக்கு அவசியமில்லை. இன்றைய தேவை இந்த உலகை நோக்கி எமது கோரிக்கைகளின் நியாயத்தையும் அதன் பின்னால் அனைத்துத் தமிழர்களும் ஒன்றிதிரண்டுள்ளனர் என்பதைச் சொல்வதுமே ஆகும். அதற்கு நாடு கடந்த அரசு என்ற புதிய அணுகுமுறையை ஒரு பரீட்சார்த்த அம்சமாக கொண்டு செல்ல முயல்வது அவசியமும் கூட. நாம் எமது போராட்டத்தில் ஆயுதங்களை மெளனிக்க வேண்டிய நிலைக்கு உலகின் போக்கு மாறி இருக்கும் நிலையில் பிறிதொரு strategy யின் கீழ் தான் எமது உரிமையை நாம் விரும்பும் வடிவில் வெல்ல நகர்த்திச் செல்ல வேண்டும். உலகம் தனது strategy மாற்றும் போது நாமும் அதற்கு ஏற்ப எமது strategy மாற்றாவிட்டால் எம்மால் எமது நீண்ட கால இலக்கை வெற்றி கொள்ள முடியாது போகும்.

மற்றும்படி இந்தப் பயங்கரவாத பூச்சாண்டிக்கு எனி நாம் பயப்பிட எம்மிடம் எதுவும் இல்லை. இருப்பது எமது உரிமைக்கான தேவை ஒன்றே. அதனை இந்த உலகம் அங்கீகரிக்கும் வடிவில் நின்று முன்வைத்துப் பார்க்கும் அதேவேளை இந்த உலகம் எம்மை ஏமாற்றாமல் இருக்க இந்த உலகிடம் எமக்கு மீண்டும் ஆயுதம் தூக்கவும் வழி தெரியும் என்பதையும் சொல்லியாக வேண்டும். அதனை நிராகரிக்கவே கூடாது. நாம் முற்றாக பலவீனமானவர்களாக ஆக்கப்பட்டால் எமது நியாயமான கோரிக்கைகளையும் இந்த உலகம் புறக்கணித்து தனது கொள்கை வெற்றியையே முதன்மைப்படுத்திப் பார்க்க விளையும்.

அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் கொள்கை அளவில் தோற்று நிற்கிறது. ஆனால் அதற்கு ஒரு ஆறுதலாக இலங்கை மாறி வரும் நிலையில்.. அது அதனை தனது கொள்கை வெற்றியாக்கிக் காட்டவே முனையும். பஞ்சாப்பில் சீக்கியர்களின் போராட்டத்தை அடக்கி கொள்கை வெற்றிகண்ட அதேவகையில் தான் இந்தியா எம்மையும் அடக்கிக் காட்ட முனைகிறது. நாம் இந்தக் கொள்கை வெற்றிகளுக்கு இடமளிப்போமாக இருந்தால் அது எமது அடிப்படை உரிமைகளையே ஆளும் வல்லாதிக்க.. பிராந்திய.. பேரினவாத சக்திகள் நிராகரித்து நிற்கவே வகை செய்யும்.

நாம்.. எந்த வடிவிலும் போராட்டத்தில் இருந்து ஓயக்கூடாது. அதேவேளை உலகின் கொள்கை வெற்றி இறுமாப்பை தகர்க்கக் கூடியதும்.. எமது உரிமைகளை உலகிற்கு சொல்லக் கூடியதுமான strategy யை வகுத்து அதன் படி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழ் மக்களின் புதிய strategy இன் ஆரம்ப செயல்வடிவம் என்று கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். அதற்குள் உலகின் பயங்கரவாத பூச்சாண்டியை காட்டி பயங்காட்டுவதை நிறுத்தி எல்லா தமிழ் மக்களும் ஒருமித்து இயங்கும் குரல்கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும். அதுவே அவசியம்.

ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தோடு இருப்பின்... அது எம்மை இந்த உலகம் பலவீனப்படுத்தி.. பிரித்தாண்டு.. எமது உரிமைக்குரலை வெற்றிகரமாக அடக்கி அதை தமது கொள்கை வெற்றியாகக் காட்டி இறுமாந்து நிற்கவே வகை செய்யும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் நெடுக்கரின் கருத்துக்கு ஒரு பச்சைப் புள்ளி. எமது ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டிருக்கின்றன.(ஆயுதப்போராட்டம் கைவிடப்படவில்லை) தேவையேற்படும் அவை மீண்டும் முழங்கும் என்பதே ஆதன் கருத்து.அதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டாம் என்று சர்வதேசத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோளே அது.தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிடில் நிலமை மோசமாகும்.நாடுகடந்த தமிழீழத்தை அங்கீகரிப்பதன் மூலம் ஆயுத ரீதியான நியாயமான போராட்டத்தைதை அங்கீகரிக்கத் தயங்கும் நாடுகளுக்கு தமிழர்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பமே நாடுகடந்த தமிழீழம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு ஜனநாயக முறையிலான நாடுகடந்த தமிழீழ அரசு , ஆகவே யாரும் எதற்காகவும் பயப்படதேவை இல்லை, ஒட்டு மொத்த மக்களின் விருப்பையும் யாரும் நிராகரித்து விட முடியாது, பேசாது ஓய்ந்து இருப்பதை விட எம்மால் சாத்தியமான அனைத்து வளிகளிலும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும், ஏதாவது ஒரு வளியிலாவது எமது இலக்கு நோக்கி நிச்சயமாக சென்று அடைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

" நாட்டில் பிரிவினைகளைத் தூண்டும் அரசியல் கட்சிகள் இலங்கையில் விரைவில் தடை செய்யப்படும்.அதற்காக அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று சிங்கள் இனவாத அரசின் உறுப்பினர் ஒருவர் கூறியதாகக் கேள்விப்பட்டேன்."

அவ்வாறான நிலமை ஈழத்தில் ஏற்பட்டால் நாளடைவில் அது நாடு கடந்த தமிழீழ அரசையும் பாதிக்கும்.

சிங்கள இனவாத அரசின் இந்த முன்னேற்பாட்டை எப்படி எதிர்கொள்வது?

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறவுகள்

" நாட்டில் பிரிவினைகளைத் தூண்டும் அரசியல் கட்சிகள் இலங்கையில் விரைவில் தடை செய்யப்படும்.அதற்காக அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று சிங்கள் இனவாத அரசின் உறுப்பினர் ஒருவர் கூறியதாகக் கேள்விப்பட்டேன்."

அவ்வாறான நிலமை ஈழத்தில் ஏற்பட்டால் நாளடைவில் அது நாடு கடந்த தமிழீழ அரசையும் பாதிக்கும்.

சிங்கள இனவாத அரசின் இந்த முன்னேற்பாட்டை எப்படி எதிர்கொள்வது?

வாத்தியார்

.............

வாத்தியார் தமிழர்களுக்கு முதல் சிங்களவர்கள் குறிப்பாக ஜே வி பியினர் தான் அரசுக்கு எதிராக கலகங்களில் ஈடுபட்டனர். ஆயுதப் புரட்சியை மேற்கொண்டனர். முதலில் சிங்களம் அவர்களை தடை செய்ய வேண்டும். செய்யுமா..??!

பிரிவினை வாதம் என்பது குற்றச் செயல் அல்ல. அதனை சிங்களம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய உலகில் மக்கள் தாம் தமது அடையாளத்தோடு தேசியத்தோடு பிரிந்து செல்ல உரிமை அளிக்கப்பட்டுள்ளனர். அந்த உரிமை தமிழர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதே வேண்டுகோள்.

பிரிவினைவாதத்தை எதிர்ப்பவர்களானால்.. பலஸ்தீனர்களின் பிரிவினைவாதத்தையும் எதிர்க்க வேண்டும். ஆனால் சிறீலங்கா அதனை ஆதரிப்பதன் மூலம் பிரிவினைக்கு தூபமிடுகிறது என்றால் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்வார்களா. தமிழர்கள் ஒட்டுமொத்தமாக பிரிந்து செல்லும் விருப்பை தேர்தலுக்கு தேர்தல் காட்டியே வருகின்றனர். இந்த நிலையில்.. சூடான் போன்று சிறீலங்காவிலும் தமிழர்கள் பிரிந்து செல்லும் விருப்பை தெரிவிக்க ஜனநாயக வழியில் தேர்தலை நடத்த உலகமும் சிங்களமும் முன் வர வேண்டும்.

கொசவோவிற்கு ஒரு சட்டம். ஜோட்ஜியாவிற்கு ஒரு சட்டம். சூடானிற்கு ஒரு சட்டம். கிழக்குத் தீமோருக்கு ஒரு சட்டம். ஈழத்தமிழர்களுக்கு மட்டும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்ற நிற்பந்தம் ஏன்..??! இதை நாம் எமது ஒருமித்த குரலால் மாற்ற வேண்டும். எமக்குள் உள்ள பிரிவினைகளைக் காட்டியே சிங்களம் எம்மை தனக்கு அடிமையாக வைத்துக் கொள்ள விளைகிறது. இதற்கு எனியும் நாம் இடமளிக்கக் கூடாது. இன்றைய உலக ஒழுங்கில் தேசிய இனங்கள் பிரிந்து போவது ஒன்றும் அதிசயமான விசயமல்ல. அந்தப் பெரிய சோவியத் யூனியனே பிரிந்து பல தேசிய இனங்களின் நாடுகளாகி நிற்கிறது. சொலவாக்கியாக்கள் அப்படி. அயர்லாந்து அப்படி. இன்று ஸ்கொட்லாண்டே பிரிந்து தனிடாவது குறித்து சிந்தித்து வருகிறது.

அந்த வகையில்.. ஒரு தேசிய இனமாக எமக்கும் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை கோரி நிற்க இந்தத் தடையை நாம் சாதகமாக்கிப் பாவிக்க வேண்டும்.

எமது சுதந்திர செயற்பாட்டை தடுக்கக் கூடிய செயல்களை சிங்களம் செய்வது நாம் அதனிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான நியாயங்களை உலகின் முன் சமர்பிக்க மீண்டும் மீண்டும் உதவுமே அன்றி இது நாடு கடந்த தமிழீழ அரசை பலப்படுத்துமே அன்றி பலவீனப்படுத்தாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் அண்ணா.

இந்தக் கருத்துக்கும் ஒரு பச்சை.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு தொடர்பான கனடாவில் நடந்த குழப்பங்கள் ஓரளவு முடிவுக்கு வந்து, புரிந்துணர்வு ஏற்பட்டது மகிழ்ச்சியே!

அது எவ்வகையில் தமிழ்மக்களுக்கு முழுமையான பலனைத் தருமோ, தரப் போகின்றதோ தெரியவில்லை. ஆனால் வட அமெரிக்கா வாழ் கறுப்பினத்தவர் போலவோ, கரிபியன் தீவுகள், பிஜி, தென்னாபிரிக்காவில் தமிழர்கள் எவ்வாறு அடையாளம் தொலைந்து அழிந்து போனார்களோ, அவ்வாறான நிலைமை எம் புலத்தமிழர்களுக்கும் வரக்கூடாது என்றால் ஏதாவது கட்டுமானங்கள் தொடர்ச்சியாக பேணப்பட்டு வரவேண்டியது அவசியமாகும்.

இப்போது பார்க்கின்ற போது எமக்குத் தெரியாது, ஆனால் தலைமுறைகள் மாறுகின்றபோது, எம் அடையாளங்கள் இழக்கப்பட்டு, வெறும் பெயரளவில் தமிழர் என்ற ஒரு நிர்வாண நிலையையே எம் சமுதாயம் அடையப்போகின்ற ஆபத்தினை எதிர் நோக்கியுள்ளது. அதில் இருந்து நாம் ஓரளவாவது விடுபட்டு, தமிழனாக ஒன்றுபட்டு நிற்பதற்கு நாடு கடந்த அரசு போன்ற ஒரு கட்டுமானம் அவசியம்.

சிலர் தூற்றுவார்கள். கேவலமாக பேசுவார்கள். ஆனால் நாடுகடந்த அரசுக்கு மேலான ஒரு கட்டுமானத்தை அவர்களால் உருவாக்கித் தரமுடிந்தால், அப்போது மட்டுமே அவர் தூற்றுவதற்குத் தகுதியுள்ளவர்.

உண்மையில் சொல்லப் போனால் பலத்த சவால்களின் மத்தியில் தான் இது நடைமுறைக்கு வரப் போகின்றது. இன்றைக்கு கிடைக்கின்ற அர்பணிப்புக்கள், பங்களிப்புக்கள் நாளைக்கும் கிடைக்குமா என்பது ஒவ்வொரு மக்களின் கையில் தான் தங்கியுள்ளது. தேர்தலில் போட்டு போடுகின்றவர்கள், சம்பளமான பெறவோ, அவ்லது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எவ்வளவு தூரம் இடம் கொடுக்கப் போகின்றது என்று தெரியவில்லை.

ஆனால் தமிழர்களைத் தாங்கிப் பிடிக்கின்ற தூண்களில் இவர்களின் தேவையும் அவசியமாகின்றது. என்றோ ஒருநாள் உலகம் எம்மைப் புரிந்து கொள்ளும். அது வரை எப்படியாவது எம்மைத் தாங்கிப் பிடித்தாகவேண்டும் என்ற நப்பாசையில் தான் இந்தப் பயணமும் ஆரம்பிக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.