Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடைமுறை வாழ்வில் மதங்களும், அவற்றுக்கும் கடவுளுக்குமான இடைவெளிகளும்

Featured Replies

வணக்கம்,

ஒருவரும் கடுப்பு அடையக்கூடாது. நமக்கு எம்மதமும் சம்மதம். நாம் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல விடயங்களை பின்பற்றுவது. குறிப்பிட்ட ஓர் மதத்துக்கு என்று நாம் ஆதரவு இல்லை.

இன்று காலை அரைத்தூக்கத்தில இருந்து சிந்திச்சபோது இந்தவிசயம் எனது எண்ணங்களில வந்திச்சிது: அதாவது.. தற்கால நடைமுறை இந்துமதம், மற்றும் நடைமுறை வாழ்வில் உள்ள கிறிஸ்தவம் ஆகிய மதங்களை பார்க்கும்போது.. இந்துமதம் கடவுளுக்கும் நமக்கும் நாளாந்த வாழ்வில இருக்கக்கூடிய இடைவெளிகளை அதிகரித்துச் செல்கின்றது. கிறிஸ்தவம் இந்து சமயத்துடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில அவ்வாறானதொரு இடைவெளியை ஏற்படுத்துவது குறைவாக இருக்கிது.

உதாரணத்துக்கு சொல்லப்போனால்.. இந்து சமயத்தில கோயிலுக்கு போனால் ஐயர் மாத்திரம் கடவுளோட இரகசியம் கதைச்சுக்கொண்டு இருக்கார். மற்ற ஆக்கள் பிரார்த்தனைகளில அதிக ஈடுபாடு காட்டுறது கிடையாது. ஆனால்.. ஒரு தேவாலயம் என்று போனால் எல்லாரும் பைபிளை தூக்கி வச்சுக்கொண்டோ அல்லது.. மதருகுரு சொல்லிறதை திருப்பிச்சொல்லியோ.. பிரார்த்தனைகளில interactiveஆய் இருக்கிறீனம். இந்து சமயத்தில இருக்கக்கூடிய இந்த இடைவெளி நடைமுறை வாழ்வில் தொடர்ந்து அதிகரிச்சு செல்கின்றது.

எனது அவதானிப்புக்கள் சரியாக இருக்கலாம், பிழையாக இருக்கலாம். இதுபற்றிய உங்க கருத்துக்களை எடுத்துவிடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்.......உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். வழி பாடுகளில் பார்வையாளர்களாக இருப்பதிலும் பங்குபற்றுபவர்களாக இருப்பது புலன்களை அடக்கி கடவுள் பால் மனதை செலுத்த உதவும்....

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்தில் மாத்திரமல்ல கிறிஸ்தவ சமயத்திலும் கூட பாதிரிமார் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் தரகர்களாக இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, "பாவமன்னிப்பு எடுத்தல்" இங்கு பாதிரியிடம் பாவத்தை அறிக்கையிட்டு அவர் மன்னிப்பு அளித்தால் அந்தப் பாவம் மன்னிக்கப்பட்டுவிடும். இங்கு மக்கள் பாவத்தை அறிக்கை செய்யவேண்டியது கடவுளிடம் அல்ல கடவுளின் முகவர்களிடம். இந்து சமயத்தில் எமக்குப் புரியாத மொழி சமஸ்கிருதம் ஆதலால் கடவுளுக்கும் எமக்கும் இடையிலான மொழிபெயர்ப்பு முகவராக அய்யர் இடையில் இருக்கின்றார். கிறிஸ்தவ சமயத்தில் எமக்கு மொழி புரிந்தாலும் கடவுளால் நியமிக்கப்பட்ட(?) பாவமன்னிப்பு முகவர் பாதிரியார் இடையில் இருக்கின்றார். உண்மையான கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் முகவர்கள் தேவைதானா? கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துவது இந்த முகவர்களே. இதில் ஒப்பீட்டு அளவில் சிறு வித்தியாசம் இருக்கலாம், ஆனால் எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் வழிபாடுகளிற்கு சென்றதில்லையோ? அங்கு முழுக்க கூட்டு வழிபாடுதான். அனைவரும் சேர்ந்து தான் மந்திரங்கள் பிரார்த்தனைகள் சொல்வது. விசேடம் என்னவென்றா அனைத்தும் தமிழில்தான். இந்த பார்ப்பனியர்கள் தமது ஆதிக்கத்திற்காக கொண்டுவந்த பல நடைமுறைகள் அங்கு இல்லை. மாத விலக்கு நாட்களில் கூட அங்கு பெண்கள் சென்று பிரார்த்தனை செய்யலாம். அங்காடித்தெரு படத்தில கூட இதுபற்றி காட்டிறாங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுகளை விட இப்ப கிட்டடியில் ஒருத்தர் பிடிபட்டாரே அவரின் ஆச்சிரமத்துக்கு போனால் ஒரு மார்கமாக இருக்கும். :D:D:D மதங்கள் எனபது ஒருவித மார்க்கம்தானே இதுவும் ஒரு மார்க்கம்தான். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவது சரிதான் .அந்த குறையை நிவர்த்தி செய்ய சிலர் கூட்டு வழிபாடு,பஜனைபாடுதல் செய்து இடைவெளியை குறைக்கின்றனர்

உதுகளை விட இப்ப கிட்டடியில் ஒருத்தர் பிடிபட்டாரே அவரின் ஆச்சிரமத்துக்கு போனால் ஒரு மார்கமாக இருக்கும். :D:D:D மதங்கள் எனபது ஒருவித மார்க்கம்தானே இதுவும் ஒரு மார்க்கம்தான். :lol::lol:

அந்த மார்க்கம் தெய்வீக பிறவிகளால் மட்டும் தான் அடைய முடியும் :D

  • தொடங்கியவர்

வழி பாடுகளில் பார்வையாளர்களாக இருப்பதிலும் பங்குபற்றுபவர்களாக இருப்பது புலன்களை அடக்கி கடவுள் பால் மனதை செலுத்த உதவும்.

வழிபாடுகளிலும், அத்தோட வாழ்க்கையிலும் பார்வையாளர்கள் இல்லாமல் பங்குபற்றுவர்களாக இருக்கலாம். அத்தோட பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போது இந்துபூசாரிகள் வீடுகளுக்கு வந்து அல்லது தனிப்பட ஆக்களை comfort பண்ணுறது ஆறுதல்படுத்துறது ஒப்பீட்டளவில மிகவும் குறைவு என்று நினைக்கிறன். அன்பே சிவம் என்று சொல்லிப்போட்டு நடைமுறை வாழ்வில அந்த அன்பை பிரயோகம் செய்யாமல் இருந்தால் எப்படி இடைவெளி இல்லாமல் இருக்கும்.

உண்மையான கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் முகவர்கள் தேவைதானா?

சில விசயங்களை செய்கிறதுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தேவைப்படலாம். ஆனால் பல சந்தர்ப்பங்களில இணைப்பாளர்களாக மட்டும் இல்லாமல் இடையில வேலி போல அவர்கள் நிற்கிறதும் உண்மைதான்.

மச்சான் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் வழிபாடுகளிற்கு சென்றதில்லையோ? அங்கு முழுக்க கூட்டு வழிபாடுதான். அனைவரும் சேர்ந்து தான் மந்திரங்கள் பிரார்த்தனைகள் சொல்வது. விசேடம் என்னவென்றா அனைத்தும் தமிழில்தான். இந்த பார்ப்பனியர்கள் தமது ஆதிக்கத்திற்காக கொண்டுவந்த பல நடைமுறைகள் அங்கு இல்லை. மாத விலக்கு நாட்களில் கூட அங்கு பெண்கள் சென்று பிரார்த்தனை செய்யலாம். அங்காடித்தெரு படத்தில கூட இதுபற்றி காட்டிறாங்க.

நடைமுறை வாழ்வில இந்த இடைவெளிகளை குறைப்பதற்காய் காலத்துக்கு ஏற்றவகையில மதங்களில மாற்றங்கள் செய்யப்படலாம், செய்யப்பட்டு இருக்கலாம். பலர் மதங்களில இருந்து தாவுறதுக்கு குறிப்பாய் இந்து மதத்தில இருந்து கிறிஸ்தவ சமயத்துக்கு மாறுகிறதுக்கு இந்துமத குருக்கள், ஆலயங்கள் தனிப்பட்டவர்களின் வாழ்க்கை பற்றி அக்கறை எடுக்காமல் காரணமாய் இருக்கலாம். உதாரணமாய் ஆக்கள் வீட்டில செத்தால் செத்தவீடு செய்கிறதுக்கு ஐயர் வருவார். ஆனால்.. நோயால துடிக்கும்போது பிரார்த்தனை செய்கிறதுக்கு ஆலயத்தவர்களோ ஐயரோ வீட்டுக்கு வருவது இல்லை. அங்கை நின்று ராசி, பலன் மாத்திரம் சொல்லிப்போட்டு கோயிலில மணியை கிளுக்கிப்போட்டு நிற்பார்கள்.

உதுகளை விட இப்ப கிட்டடியில் ஒருத்தர் பிடிபட்டாரே அவரின் ஆச்சிரமத்துக்கு போனால் ஒரு மார்கமாக இருக்கும். மதங்கள் எனபது ஒருவித மார்க்கம்தானே இதுவும் ஒரு மார்க்கம்தான்.

எனவேதான் உள்ளுக்கை இருந்து அவர் இப்போது உண்மையான சந்நியாசம் எது என்பதை உணர்ந்துகொண்டு இருக்கிறாரோ?

அந்த குறையை நிவர்த்தி செய்ய சிலர் கூட்டு வழிபாடு,பஜனைபாடுதல் செய்து இடைவெளியை குறைக்கின்றனர்.

கூட்டுவழிபாடு நிச்சயம் இடைவெளி குறைக்கப்படுகிறதுக்கு உதவும்தான் புத்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.