Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார் தராததால் திருமணம் பாதியில் நிறுத்தம்-இன்னொரு பெண்ணுடன் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ணமகள் வீட்டில் வரதட்சணையாக மாருதி கார் தராததால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணமகன் குடும்பம், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைத்த கொடுமை குடியாத்ததில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் லாவண்யா (21). பி.சி.ஏ. பட்டதாரியான இவருக்கும் குடியாத்தத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரி்ன் மகன் வில்வநாதன் (29) என்ற சாப்ட்வேர் என்ஜீனியருக்கும் கடந்த 11ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களது திருமணம் இன்று குடியாத்தம் காமாட்சி பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

மணமகன் வீட்டார் திருமணத்தின்போது ஒரு காரும், கூடுதலாக 15 சவரன் நகையும் கேட்டுள்ளனர். திருமணம் முடிந்த பின் இது குறித்துப் பேசி கொள்ளலாம் என்று மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடக்கவிருந்த திருமணத்துக்காக பெண் வீட்டார் ஆம்பூரில் இருந்து நேற்று மாலை குடியாத்தம் திருமண மண்டபத்துக்கு வந்தனர். ஆனால், மணமகன் வீட்டார் யாரும் வரவில்லை.

மேலும், மண்டபத்தை பதிவு செய்ததை மணமகன் வீட்டார் ரத்து செய்துவிட்டதாகவும் திருமண மண்டப மேனேஜர் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் தவித்தனர். மணமகன் வீட்டாரை தொடர்பு கொள்ள தொலைபேசயி்ல் முயன்றபோது தொடர்பை அவர்கள் துண்டித்தனர். மணமகன் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டிக் கிடந்தது.

இதையடுத்து மணப்பெண் லாவண்யா குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில்,

மணமகன் வில்வநாதன், அவரது தாய் சுமதி, பாட்டி கஸ்தூரி, தம்பி தியாகராஜன், தாய் மாமன்கள் தாமோதரன், சண்முகம் ஆகியோர் வரதட்சணையாக மாருதி காரும், கூடுதலாக நகையும் கேட்டு இன்று நடக்க இருந்த எனது திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து மணமகன் உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், மாப்பிள்ளை வீட்டாரும் முக்கிய உறவினர்களும் வீடுகளைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதால் கைது செய்ய முடியவி்ல்லை.

இந் நிலையில் மணமகன் வில்வநாதனுக்கும் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழனி கோவிலில் நேற்று திருமணம் நடந்துவிட்டதாக மணமகன் வீட்டாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

thatstamil.com

மணமகன் வீட்டார் சீதனம் கேட்டிச்சீனம் கார் காசு என்று கேட்டு இருந்தால் அது பெண்வீட்டாருக்கு விருப்பம் இல்லை என்றால் அப்போதே ஆரம்பத்திலையே அந்த சம்மந்தத்தை வெட்டி இருக்கலாமே. வியாபாரம் என்று வந்துவிட்டு, வியாபாரம் என்று முடிவெடுத்துவிட்டு பிறகு பொருள் வில்படவில்லை என்று கோபித்துக்கொண்டால்... வியாபாரத்தில எப்பவும் எல்லாரும் லாபத்தைதானே பார்ப்பீனம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மணமகன் வீட்டார் சீதனம் கேட்டிச்சீனம் கார் காசு என்று கேட்டு இருந்தால் அது பெண்வீட்டாருக்கு விருப்பம் இல்லை என்றால் அப்போதே ஆரம்பத்திலையே அந்த சம்மந்தத்தை வெட்டி இருக்கலாமே. வியாபாரம் என்று வந்துவிட்டு, வியாபாரம் என்று முடிவெடுத்துவிட்டு பிறகு பொருள் வில்படவில்லை என்று கோபித்துக்கொண்டால்... வியாபாரத்தில எப்பவும் எல்லாரும் லாபத்தைதானே பார்ப்பீனம். :rolleyes:

மணமகள் வீட்டார் கார் தரமாட்டம் எண்டு சொல்லவில்லையேauto10.gif....... தாலியை கட்டினாப் பிறகு யோசிப்பம் எண்டு தானே.... சொன்னவை. அதுக்காக, திருமண மண்டபத்தை இரத்துச் செய்து விட்டு, வீட்டையும் பூட்டிப் போட்டு, ரெலிபோனையும் கட் பண்ணிப் போட்டுப் போவது எந்த ஊர் நியாயம்.

எனக்கென்னவோ சீதனக் கொடுமை சட்டத்தின் கீழை.....jail.gif மாப்பிள்ளை வில்வநாதன், அவரது தாய் சுமதி,jail.gif பாட்டி கஸ்தூரி, தம்பி தியாகராஜன், தாய் மாமன்கள் தாமோதரன், சண்முகம் ஆகியோர் கம்பி எண்ணிக்கொண்டு, கழி சாப்பிடப் போயினம் போலை கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் எங்கட சமூகம் உட்பட பல இந்திய உபகண்டம் சார் சமூகங்களில் இஞ்சுன்னியர் மாரைத்தான் கட்டுவம் என்று பெண்களை பெத்தவங்க அவங்களை வளர்க்கிறது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இஞ்சுன்னியர் மாரும் இப்படி நடக்கத்தான் செய்வாங்க.

பொதுவாக இப்போ திருமணம்.. காதல் எல்லாம் இலாப நட்டக் கணக்கு.. பங்கு வியாபாரம் சார்ந்து தானுங்கோ நடந்து கொண்டிருக்கிறது.

ஏன் எங்கட சமூகத்தில் இப்ப கடந்த 3 தசாப்தங்களா.. வெளிநாட்டு நிரந்தர வதிவிடம் பார்த்துத்தானே பொம்பிளை அனுப்பினம். வெளி நாடுகளில் உள்ளவையும் அதுதானே பார்க்கினம். இப்படி நாடும் வீடும் கேடுகெட்டுக் கிடக்கேக்க.. இஞ்சுன்னியர் மார் மட்டும் சுத்தமா இருக்கனும் என்று நினைக்கிறது தப்புத்தாங்கோ..!

எல்லோரும் ஒருக்கே உங்க உங்க முதுகை சுரண்டிப் பார்க்கிறது நல்லம். இஞ்சுன்னியர், மற்றும் டாக்குத்தர் மார், வெளிநாட்டு மாப்பிள்ளை.. கார்.. கிரடிட் ஸ்கோர் வேண்டும் என்று ஓடித் திரியும் பெண்கள் உட்பட..! :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

மணமகள் வீட்டார் கார் தரமாட்டம் எண்டு சொல்லவில்லையே தாலியை கட்டினாப் பிறகு யோசிப்பம் எண்டு தானே.... சொன்னவை. அதுக்காக, திருமண மண்டபத்தை இரத்துச் செய்து விட்டு, வீட்டையும் பூட்டிப் போட்டு, ரெலிபோனையும் கட் பண்ணிப் போட்டுப் போவது எந்த ஊர் நியாயம்.

யாவாரம் நடக்கிது. யாவாரத்தில ஒருவரும் ரிஸ்க் எடுக்க விரும்பாயினம்தானே. மணமகன் பகுதி கொஞ்சம் உசாரான யாவாரிகள் போல.

இப்பவும் எங்கட சமூகம் உட்பட பல இந்திய உபகண்டம் சார் சமூகங்களில் இஞ்சுன்னியர் மாரைத்தான் கட்டுவம் என்று பெண்களை பெத்தவங்க அவங்களை வளர்க்கிறது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இஞ்சுன்னியர் மாரும் இப்படி நடக்கத்தான் செய்வாங்க.

பொதுவாக இப்போ திருமணம்.. காதல் எல்லாம் இலாப நட்டக் கணக்கு.. பங்கு வியாபாரம் சார்ந்து தானுங்கோ நடந்து கொண்டிருக்கிறது.

ஏன் எங்கட சமூகத்தில் இப்ப கடந்த 3 தசாப்தங்களா.. வெளிநாட்டு நிரந்தர வதிவிடம் பார்த்துத்தானே பொம்பிளை அனுப்பினம். வெளி நாடுகளில் உள்ளவையும் அதுதானே பார்க்கினம். இப்படி நாடும் வீடும் கேடுகெட்டுக் கிடக்கேக்க.. இஞ்சுன்னியர் மார் மட்டும் சுத்தமா இருக்கனும் என்று நினைக்கிறது தப்புத்தாங்கோ..!

எல்லோரும் ஒருக்கே உங்க உங்க முதுகை சுரண்டிப் பார்க்கிறது நல்லம். இஞ்சுன்னியர், மற்றும் டாக்குத்தர் மார், வெளிநாட்டு மாப்பிள்ளை.. கார்.. கிரடிட் ஸ்கோர் வேண்டும் என்று ஓடித் திரியும் பெண்கள் உட்பட..!

உண்மைதான் நெடுக்ஸ். நான் இந்த செய்தியையும் நீங்கள் எழுதினதையும் எனது அண்ணி ஒருவவுக்கு வாசிச்சு காட்டினன். அதை கேட்டு அவா நல்லாய் சிரிச்சா. அதிலையும் எல்லாரும் உங்க உங்க முதுகை சுரண்டிப்பார்க்கிறது நல்லம் என்று சொன்னது ஆஹா ஓஹோ என்று இருந்திச்சிது. யாவாரம் என்று செய்ய வெளிக்கிட்டால் யாவாரத்தில எப்பவும் லாப நட்டம் இருக்கத்தானே செய்யும். லாபம் வரும்போது அம்ச அடக்கமாய் இருந்துபோட்டு நட்டம் வந்தவுடனை மாத்திரம் காவல்துறையில போய் முறையிடுறது எந்த ஊர் ஞாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

லாபம் வரும்போது அம்ச அடக்கமாய் இருந்துபோட்டு நட்டம் வந்தவுடனை மாத்திரம் காவல்துறையில போய் முறையிடுறது எந்த ஊர் ஞாயம்

எல்லா ஊர் ஞாயமும் அதுதானே குருஜி! லாபமடைந்தவன் ஏன் கோட்டுக்குப் போகிறான்! நட்டப் பட்டவன் தான் கோட்டுக்குப் போவான்!

முதலில் கலியானம் பிறகு கார் என்பது சந்தேகத்துக்குரியது. பொட்டையின்ட கூட்டம் கைகழுவுர ஜடியா போலத்தான் இருக்கு.

நாளைக்கு பொட்டை, வீட்டுவேலை/உடலுறவில் உதவக்ககரை என்டால் என்ன செய்வது?

யாரிடம் போய் நட்டைஈடு கேப்பது. பெடியின்ட கூட்டம் அருந்தப்பில் தப்பியிருக்கிரார்கள்.

நட்டப் பட்டவன் தான் கோட்டுக்குப் போவான்!

குருஜி, செய்திகளின் தரவின்படி பார்க்கும்போது குறிப்பிட்ட மணமகன் குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்து இருந்தால் மகிழ்ச்சியாக, நிம்மதியாக அந்த குடும்பம் வாழ்வார்கள் என்று நினைக்கிறீங்களா? இதைவிட மோசமான நிகழ்வுகள் நம்மவர்கள் மத்தியில் நடைபெற்று இருக்கிது. யாரையோ கலியாணம் கட்டுறதுக்கு குறிப்பிட்ட எதிர்கால வாழ்க்கைத்துணையின் ஸ்பொன்சரில் வெளிநாடு வந்துவிட்டு பின்னர் வெளிநாட்டில் கால் வைத்ததும், ஸ்பொன்சர் செய்து கூப்பிட்டவருக்கு பாய் பாய் சொல்லிவிட்டு வேறு ஒருத்தரை கலியாணம் கட்டிய சம்பவங்களை எங்கைபோய் முறைப்பாடு செய்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் குருஜி! பெரும்பாலும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் சம்மதம் சொல்லிவிட்டு பின் நேரில் சந்திக்கும்போதுதான் பிரச்சனை வெடிக்கிறது!

இவர் திரிஷா ரேஞ்சுக்கு நினைத்திருக்க அவ பெரீஈசா இருப்பா!

அவ கில்லி விஜய்யை யோசிக்க அவ தலைவாசல் விஜய் கணக்கில இருப்பார்!

பலர் தமது முகத்தை கண்ணாடில பார்த்துவிட்டு டேக் இட ஈசி என்று வாழ்ந்திருப்பார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.