Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது சமுதாயம் மாற வேண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்படி கேட்டுப்பார்ப்போம்

ஒரு பிள்ளை வெளியில் போய் கொஞ்சம் தாமதமாக வீட்டுக்கு வருகிறது

ஆண் பிள்ளையாயின் எத்தனை கேள்விகள்

பெண் பிள்ளையாயின் எத்தனை கேள்விகள்

எழுதுங்கள் பார்க்கலாம்

நேற்று எனது மூத்தவன் காலை 9 மணிக்கு Parc Astérix (disney land மாதிரி ) போய் இரவு 1 மணிக்கு வந்தான்

அனுமதி கேட்டுத்தான் போனான்

ஆனால் கொடுத்த கால நேரத்துக்குள் வரவில்லை.

இதையே என் பெண் பிள்ளை செய்யமுடியுமா?

அவள் என்னிடம் இது பற்றி கதைக்கவில்லை என்றாலும்

தன்னுக்குள் நினைத்திருப்பாள் வேதனைப்பட்டிருப்பாள் என்பது எனக்கு தெரியும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி ரதி.

நீங்கள் முன்னர் சொன்ன அத்தனை விசயமும் உண்மை.

ஊரோடு நடக்கிற பிரச்சனை

உலகத்தோடை நடக்கிற பிரச்சனை.

விதவை திருமணத்தை தவிர்த்து??????

நீங்கள் சொன்னது விளங்கவில்லை அண்ணா...விதவைத் திருமணம் படித்தவர்களுக்கும்,பணக்காரர்களுக்கிடையேயா அதிகம் இடம் பெறுகிறது என சொல்கிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வீட்டுக்கு தாமதமா போனா என் அம்மா அப்பா என்ன திட்டிறத விட என்ர அக்காமார்தான் கூட திட்டிவினம். இத நான் எங்க சொல்லி அழ ? :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீட்டுக்கு தாமதமா போனா என் அம்மா அப்பா என்ன திட்டிறத விட என்ர அக்காமார்தான் கூட திட்டிவினம். இத நான் எங்க சொல்லி அழ ? :lol: :lol: :D

புரியலையா ?

அவர்களுக்கு தடைபோடப்பட்டுள்ள ஒன்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பெரும்பாலான கருத்துக்கள் எனக்கு உடன்பாடாயினும் சிலவற்றை இந்நாடுகளின் யதார்த்தர்த்திற்கமைய சொல்லவேண்டியுள்ளது.

- இங்கு படிக்கும் பிள்ளைகள் சுமார் பதினாறு பதினேழு வயதில் அருகிலிருக்கும் கல்லூரிகளில் கல்லூரிப் படிப்பை முடிக்கிறார்கள். பின் அவர்கள் யூனிவசிட்டிக்கு / தொழில் கல்விக்கு வேறு இடங்களுக்குத்தான் போகவேண்டியுள்ளது. நிப்பாட்ட முடியுமா?

- எமது பிள்ளைகளும் அப்படியே முன்னூறு கி.மீ தூரத்துக்கு அப்பால்தான் போய் படித்தார்கள்!

ஏரோநாட் படிப்பவர்கள் பாரிஸ், ஐரோப்பில் இருந்து துளுசுக்குதான் வருகினம்! சுமார் 500 கி.மீ.பல பெண்களும் படிக்கினம்.- ஊரிலும் யாழில் இருந்து பெண் பிள்ளைகளும் பேராதனையில் போய் படிக்கிறதுதானே!

- விதவைகளின் மணமும் இங்கு பெரிய குறையாய் இல்லை என நினைக்கிறேன். ஆர்ப்பாட்டமின்றி நண்பர்கள் நாலு பேருடன் தாலி கட்டியோ/ மோதிரம் மாத்தியோ சிம்பிளாக மணமுடித்து வாழத்தான் செய்கிறார்கள்!

- பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சம் அறிவுரை சொல்லி வைப்பதற்கு காரணம் குடும்பத்தில் பெண்கள் தவறிழைத்தால் அதனால் அக் குடும்பமே இடிந்து போய் உக்காந்திடும். வீட்டில் எல்லாப் பொருட்களும் இறைந்து கிடக்கும், ஆனால் நகைகளோ பணமோ பாதுகாப்பாகத்தான் இருக்கும். அதுபோல் தான் பெண்களும். தவறினால் அவர்களே கூட அந்த உளப் பாதிப்பிலிருந்து மீள்வது கடினம்!

- சில நாட்கள் முன்னாள் மகன் சோதனைக்கு நண்பர்களுடன் சேர்ந்து படிக்கவேணும் என்று இரண்டு நாள் முன்பே கிளம்பினார். சாப்பாடு எல்லாம் தயார் செய்தபடி தாய் கேட்டாள் ஏண்டா உங்களோட பொம்பிளைப் பிள்ளைகளும் வந்து படிப்பினமோ! ஓம் அம்மா. டேய் காதல் கீதல் ஏதாவது! இல்லையம்மா இங்க இப்படிப் படிப்பது சாதாரணம் அம்மா. நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. அங்கெ வாற பிள்ளைகளும் காதலிக்கத்தான் வருகினம் எண்ட மாதிரியும் நினைக்காதயுங்கோ. நான் உட்பட எனது நண்பர்கள் எல்லோரும் இந்த டிப்புளோம் எடுப்பதில் மிகவும் சிரத்தையுடன் இருக்கிறோம் என்றார்!

இடையில் நான் ( பேசாமல் இருந்திருக்கலாம்) ஏண்டா அக்காவும் யுனில இப்படித்தான் படிச்சவவோ! தெரியாது, ஆனால் படித்திருப்பினம் அதுதான் அவ நல்ல ரிசல்ட்டோட டிப்ளோம் எடுத்தவ!

சில நாட்களுக்கு முன் மகனின் டிப்ளோம் வந்தது நல்ல தகுதியில் பாசாகியிருந்தார்!

- ஆம் ஆணோ / பெண்ணோ அவர்கள் தெளிவாக இருப்பது சந்தோசமாக இருக்கிறது.

எனது வேலையிடத்து அனுபவம் பின்பு எழுதுகிறேன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது சரி சுவி அண்ணா...ஆனால் என்னுடைய கேள்வி என்னவெண்டால் கல்யாணம் முடிக்காத பெண்கள் என்டால் படிப்பதற்காகவோ அல்லது வேலையின் நிமிர்த்தமோ தனிய போய் இருப்பது நம் சமூகத்தில் குற்றம் இல்லை ஆனால் அதே நேரம் கணவரை இழந்த பெண்களோ அல்லது விவாகரத்து ஆன பெண்களோ தனியே இருப்பது இச் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்னது சரி சுவி அண்ணா...ஆனால் என்னுடைய கேள்வி என்னவெண்டால் கல்யாணம் முடிக்காத பெண்கள் என்டால் படிப்பதற்காகவோ அல்லது வேலையின் நிமிர்த்தமோ தனிய போய் இருப்பது நம் சமூகத்தில் குற்றம் இல்லை ஆனால் அதே நேரம் கணவரை இழந்த பெண்களோ அல்லது விவாகரத்து ஆன பெண்களோ தனியே இருப்பது இச் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என சொல்வீர்களா?

கணவரை இழந்த பெண்களோ அல்லது விவாகரத்து ஆன பெண்களோ தனியே இருந்தால் உடனே நம்ப ஆம்பிளைகள் சேட்டை விடப்பார்ப்பினம். இதன் காரணமாக அந்த பெண்களுக்கு மாத்திரமன்றி அவர்களின் பிள்ளைகள் குடும்பத்தினரின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றினை தடுப்பத்ற்காகவே எமது சமூகம் அவர்களை தனியாக இருக்க விடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது சரி சுவி அண்ணா...ஆனால் என்னுடைய கேள்வி என்னவெண்டால் கல்யாணம் முடிக்காத பெண்கள் என்டால் படிப்பதற்காகவோ அல்லது வேலையின் நிமிர்த்தமோ தனிய போய் இருப்பது நம் சமூகத்தில் குற்றம் இல்லை ஆனால் அதே நேரம் கணவரை இழந்த பெண்களோ அல்லது விவாகரத்து ஆன பெண்களோ தனியே இருப்பது இச் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என சொல்வீர்களா?

விதவை என்பதிலும் பார்க்க அவர் தனியாளாக(single) இருக்கிறார் என கொள்ளலாம் தானே. பல ஆண்கள் அவரை விரும்பலாம்.பேச எத்தனிக்கலாம். சிரிக்கலாம்.திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் தன்னை போல கணவரை இழந்த ஒருவரை மணக்க ஆசைப்படுவார்.

உ+மாக எனக்கு தெரிந்த பெண் தான் காதலித்தவரை விட்டு பெற்றோரின் வற்புறுத்தலால் வேறொருவரை திருமணம் செய்து சில வருடங்களில் விவாகரத்து ஆகி விட்டது.காதலன் பொறுத்து பார்த்து விட்டு இனி தமிழ் பெண்ணையே திருமணம் செய்யகூடாது என்று முடிவெடுத்து இந்திய பெண்ணை மணந்து கொண்டார்.இப்பெண் மிகவும் மனமுடைந்து யாரையும் சந்திகாமல், பேசாமல் காணப்பட்டார்.இதற்குள் அவர் தனியாள் என அறிந்து இளசில் இருந்து பழசு வரை லொள்ளில் இருந்து ஜொள்ளு விட்டவர்கள் பலர்.யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

திருமணம் செய்து வைத்த தந்தையுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்.சகோதரனின் மனைவியும் இவரும் பால்ய நண்பிகள். பெற்றோரை விட்டு சகோதரனின் வீட்டுக்கு குடிபெய்ர்ந்தார்.

தனது மனதில் உள்ளதை அதாவது விவாகரத்து செய்த ஒரு ஆணை தான் மணக்க விரும்புவதாக நண்பியிடம் தெரிவித்தார்.

அவர் நினைத்த படி அப்படியான ஒருவர் கிடைக்கப்பெற்று ஒரு வருடங்கள் பழகிய பின் பெற்றோரின் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது.இப்போ நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். anwei.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பெண் என்ற வரைவிலக்கணம் இல்லாத கட்டுப்பாடான ஒருவரை ஒருவர் மதித்து நடந்து கொள்ளும் சமுதாயமாக மாற வேண்டும்.

மனிதனை மனிதனாக மதித்து வாழும் சமுதாயமாக மாறவேண்டும்.

தன் குறையை மறைப்பதற்காக மற்றவனிடம் குறை கண்டு பிடிக்கும் சமுதாயமாக இல்லாது மற்றவனின் குறைகளுக்கும் தவறுகளுக்கும் தீர்வுகளைத் தரும் சமுதாயமாக மாறவேண்டும்

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.