Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவிற்கு எதுவித எல்லைகளும் இல்லை ‐ நியூயோர்க்கில் பணிகள் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவிற்கு எதுவித எல்லைகளும் இல்லை ‐ நியூயோர்க்கில் பணிகள் ஆரம்பம்

20 July 10 05:52 am (BST)

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்பி;ல் தமக்கு ஆலோசனை வழங்க, நியமித்துள்ள நிபுணர் குழு நேற்று ஜுலை 19ஆம் திகதி முதல் தடவையாக கூடியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐநா அலுவலகத்தில் இந்தக்குழு முதற்தடவையாகக் கூடியதாக இன்னர் பிரஸ் சிற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

இது நேற்றிலிருந்து நான்கு மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதற்கேற்ற வகையில் வகையில் இந்தக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நோர்த்லோன் கட்டிடத்தில் நிபுணர் குழுவின் தலைவர் மர்ஸுகி தாருஸ்மான், உறுப்பினர்களான யஸ்மின் ஸுக்கா மற்றும் ஸ்ரீவன் ரட்னர் ஆகியோர் பிற்பகல் ஜுலை 19 அன்று பிற்பகல் 1.30க்கு தமது கலந்துரையாடலை ஆரம்பித்தனர் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிபுணர்குழு இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறதா என்பதனை அதுவே முடிவு செய்யும். ஐநாவின் அனுமதி அதற்குத் தேவையில்லை என்று ஐநா பேச்சாளர் மார்ட்டின் நேர்ஸ்கி தெரிவித்தார்.

முன்னதாக இவர்களுக்கு விஸா வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. நிபுணர்குழுவின் தலைவர் மர்ஸுகி தாருஸ்மான் "துரதிர்ஸ்டவசமானது" என இது தொடர்பில் கூறும் போது கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இன்னர் சிற்றி பிரஸின் ஜுலை 17ஆம்திகதிய செய்திக்குறிப்பில் இலங்கையில் இடையூறுகள் எதுவுமின்றி பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதாக கணிசமானளவு உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் வழங்கியிருப்பதாக ஐ.நா. இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதோடு. ஐநா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவிற்கு எதுவித எல்லைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.

ஜுலை 16ஆம் திகதியான கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் மதியவேளை செய்தியாளர் மாநாட்டின்போது இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்திருந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இன்னர்சிற்றி பிரஸ்: நீல்புனேயின் பதவிக்காலம் முடிவடைவதாக இந்த வார முற்பகுதியில் தெரிவிக்கப்பட்டதாகத் தோன்றியது. அவர் இப்போது இங்கிருக்கும் நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அவர் திரும்பிச் செல்வாரா?

இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக்: இல்லை இல்லை. கடந்த வாரம் நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் என்ன குறிப்பிட்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு ஞாபகமிருந்திருந்தால், ‐ குழப்பங்கள் மற்றும் ஐ.நா. பணியாளர்கள் தமது வேலையை மேற்கொள்ள முடியாமல் இருந்தமை என்பவை தொடர்பாக நாங்கள் அறிக்கை விடுத்திருந்தோம்.‐ இதனால் அதில் நீல்புனே திருப்பி அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தோம். கடந்த வாரம் அவர் இங்கிருந்தார்.

அதேவேளை இலங்கைத் தரப்பிலிருந்து கணிசமானளவு உறுதிமொழிகளை நாங்கள் பெற்றுக் கொண்டுள்ளோம். இதனடிப்படையில் எமது பணியை எவ்வித இடையூறின்றி மேலும் தொடர முடியும். அதனைவிட நீல்புனே இலங்கை அரசாங்கத்துக்கு செய்தியொன்றைக் கொண்டு செல்வார் என்பது பற்றிய விடயத்தை நான் இப்போது வாசித்திருந்ததை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

இன்னர்சிற்றி பிரஸ்: நிச்சயமாகக் கேட்டுள்ளேன். ஆனால், இந்த வார முற்பகுதியில் காணப்பட்ட சிந்தனை குறித்து என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நிலைமை அபாயகரமானதாக இருந்தால் தனிப்பட்ட ஒருவரை மட்டும் நீங்கள் ஏன் திருப்பியழைக்க வேண்டும். பணியாளர்கள் முழுப்பேருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தென்பட்டதே. இப்போது நிலைமையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்பது குறித்து நான் ஆச்சரியமடைந்துள்ளேன். முன்னர் கூறப்பட்டது போன்று அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளதா? அல்லது ஏதாவவொரு வழியில் நீடிக்கப்பட்டிருக்கிறதா?

இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக்: இந்த விடயம் குறித்து நான் இப்போது வாசித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். உங்களுக்காக திரும்ப வாசிக்க முடியும். ஆனால், நான் முதலில் கூறியதே அடிப்படை விடயமாகும்.

இன்னர்சிற்றி பிரஸ்: இந்த வார முற்பகுதியில் என்ன கூறப்பட்டது என்பதுடன், இதனை எவ்வாறு ஒப்பிட முடியும். அதனையே நான் கேட்கிறேன்.

இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக்: ஆம், நான் அதனை விளங்கிக் கொள்கிறேன். ஆனால் நாங்கள் என்ன கூறியிருந்தோம் என்பதை நீங்கள் அவதானித்திருந்தால் ‐ அதாவது அவர் கொழும்புக்குத் திரும்பிச் செல்வாரென நான் கூறியிருந்தேன். அடுத்த முக்கியமான விடயமாகவிருப்பது "இலங்கை மக்களுக்கு ஐ.நா. உதவுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளும் விடயமாகும். குறிப்பாக வடபகுதியில் மீள்கட்டுமானம், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதாகும்." ஆதலால் அந்த இலக்கு தொடரும். அதேசமயம், செயலாளர் நாயகத்தின் கடுமையான எதிர்பார்ப்புகளை நீல்புனே கொண்டு செல்வார் என்று நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதாவது இலங்கையிலுள்ள ஐ.நா. குடும்பம் சிறப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான செயலாளர் நாயகத்தின் வலுவான செய்தியை நீல்புனே எடுத்துச் செல்வார்.

இன்னர்சிற்றி பிரஸ்: செயலாளர் நாயகத்துடன் நீல்புனே மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக நிபுணர் குழு தொடர்பாக இலங்கை குறித்த சரத்தொன்றில் குறித்த விடயமொன்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் பணிகளின் விஸ்தீரணத்தை மேலும் மட்டுப்படுத்துவதற்கான சரத்தாக அது காணப்படுகிறது. அதாவது சாட்சிகளிடமிருந்தோ அல்லது அவற்றைப் போன்ற ஏதோவொன்றிடமிருந்தோ பெறும் தகவல்களை நிபுணர்குழுவினர் பரிசீலிக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது நிபுணர் குழுவின் பணியாளர்கள் தொடர்பாக நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த பணியாளர்; குழுவிற்கு யசிகா நியூவேர்த் தலைமை தாங்குகிறாரா? அத்தோடு மேலும் ஏழு அலுவலர்கள் பணியாயாற்றுவார்களா?

இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக்: பணியாளர்கள் தொடர்பாக உங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கான விபரத்தை நான் வைத்திருக்கவில்லை. சிறிய செயலகமொன்று இருக்கும். அவர்கள் தமது இலக்கை மேற்கொள்வதற்கு உதவுவார்கள். ஆனால், இப்போது எந்தவொரு பெயர்கள் தொடர்பாகவும் என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஆனால், நிபுணர்குழுவின் பணிகள் தொடர்பாக எல்லைகள் எதுவும் இல்லை.

இன்னர் சிற்றி பிரஸ் : பணியாளர்களின் தரம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக...

இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக்: நிபுணர்குழுவின் பணியாளர்களின் தரம் குறித்து என்னால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=27480&cat=1

கொழும்பிடமிருந்து ஐ.நா.வுக்கு கணிசமான அளவு உறுதிமொழிகள்

"நிபுணர் குழுவின் எல்லைகள் மட்டுப்படுத்தப்படவில்லை"

இலங்கையில் இடையூறுகள் எதுவுமின்றி பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதாக கணிசமானளவு உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் வழங்கியிருப்பதாக ஐ.நா. இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் மதியவேளை செய்தியாளர் மாநாட்டின்போது இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸின் செய்தித்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இன்னர்சிற்றி பிரஸ்: நீல்புனேயின் பதவிக்காலம் முடிவடைவதாக இந்த வார முற்பகுதியில் தெரிவிக்கப்பட்டதாகத் தோன்றியது.அவர் இப்போது இங்கிருக்கும் நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அவர் திரும்பிச் செல்வாரா?

இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக்:கடந்த வாரம் நாங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களுக்கு ஞாபகமிருக்கும். குழப்பங்கள் மற்றும் ஐ.நா. பணியாளர்கள் தமது வேலையை மேற்கொள்ள முடியாமல் இருந்தமை என்பவை தொடர்பாக நாங்கள் அறிக்கை விடுத்திருந்தோம். நீல்புனே திருப்பி அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தோம். கடந்த வாரம் அவர் இங்கிருந்தார். அச்சமயம் இலங்கை தரப்பிலிருந்து கணிசமானளவு உறுதிமொழிகளை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். இதனடிப்படையில் எமது பணியை மேலும் இடையூறின்றித் தொடர முடியும். அதனைவிட நீல்புனே இலங்கை அரசாங்கத்துக்கு செய்தியொன்றைக் கொண்டு செல்வார் என்பது பற்றிய விடயத்தை நான் இப்போது வாசித்திருந்தேன். அதனை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

இன்னர்சிற்றி பிரஸ்: நிச்சயமாகக் கேட்டுள்ளேன். ஆனால், இந்த வார முற்பகுதியில் காணப்பட்ட சிந்தனை குறித்து என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நிலைமை அபாயகரமானதாக இருந்தால் தனிப்பட்ட ஒருவரை மட்டும் நீங்கள் ஏன் திருப்பியழைக்க வேண்டும். பணியாளர்கள் முழுப்பேருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தென்பட்டதே.இப்போது நிலைமையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்பது குறித்து நான் ஆச்சரியமடைந்துள்ளேன். கூறப்பட்டது போன்று அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளதா? அல்லது ஏதோவொரு வழியில் நீடிக்கப்பட்டிருக்கிறதா?

பேச்சாளர்: இந்த விடயம் குறித்து நான் இப்போது வாசித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். உங்களுக்காக திரும்ப வாசிக்க முடியும். ஆனால், நான் முதலில் கூறியதே அடிப்படை விடயமாகும். இன்னர்சிற்றி பிரஸ்: இந்த வார முற்பகுதியில் என்ன கூறப்பட்டது என்பதுடன்,இதனை எவ்வாறு ஒப்பிட முடியும். அதனையே நான் கேட்கிறேன்.

பேச்சாளர்: ஆம்,நான் அதனை விளங்கிக்கொள்கிறேன். நாங்கள் என்ன கூறியிருந்தோம் என்பதை நீங்கள் அவதானித்திருந்தால் அதாவது அவர் கொழும்புக்குத் திரும்பிச் செல்வாரென நான் கூறியிருந்தேன். அடுத்த முக்கியமான விடயமாகவிருப்பது இலங்கை மக்களுக்கு ஐ.நா. உதவுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளும் விடயமாகும். குறிப்பாக வடபகுதியில் மீள்கட்டுமானம்,புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதாகும். ஆதலால் அந்த இலக்கு தொடரும். அதேசமயம், செயலாளர் நாயகத்தின் கடுமையான எதிர்பார்ப்புகளை நீல்புனே கொண்டுசெல்வார் என்று நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதாவது இலங்கையிலுள்ள ஐ.நா. குடும்பம் சிறப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான செயலாளர் நாயகத்தின் வலுவான செய்தியை நீல்புனே எடுத்துச் செல்வார்.

இன்னர்சிற்றி பிரஸ்: நிபுணர் குழுத் தொடர்பாக இலங்கை குறித்த சரத்தொன்றில் விடயமொன்று கூறப்பட்டுள்ளது. செயலாளர் நாயகத்துடன் நீல்புனே மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் பணிகளின் விஸ்தீரணத்தை மேலும் மட்டுப்படுத்துவதற்கான சரத்தாக அது காணப்படுகிறது. சாட்சிகளிடமிருந்தோ அல்லது அதனைப் போன்ற ஏதாவதொன்றிடமிருந்தோ பெறும் தகவல்களை நிபுணர்குழு பரிசீலிக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிபுணர் குழுவின் பணியாளர்கள் தொடர்பாக நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த அலுவலர்கள் குழுவிற்கு யசிகா நியூவேர்த் தலைமைதாங்குகிறாரா?

பேச்சாளர்: பணியாளர்கள் தொடர்பாக உங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கான விபரத்தை நான் வைத்திருக்கவில்லை. சிறிய செயலகமொன்று இருக்கும். அவர்கள் தமது இலக்கை மேற்கொள்வதற்கு உதவுவார்கள். ஆனால், இப்போது எந்தவொரு பெயர்கள் தொடர்பாகவும் என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஆனால், நிபுணர்குழுவின் பணிகள் தொடர்பாக எல்லைகள் எதுவும் இல்லை.

[ தினக்குரல் ] - [ Jul 20, 2010 04:00 GMT ]

நோர்வேயின் சமாதானப் பணிகளை குழப்பிய இந்திய சொறிநாய்கள் இதையும் குழப்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் சமாதானப்பணி நாடகமே இந்திய அமெரிக்கக் கூட்டுசதிதான். அமெரிக்காவின் "கிளர்சிக்கு எதிரான நடவடிக்கைப் பிரிவு"ம் இந்தியாவிலே ஈழத்தமிழனை கருவறுக்கக் காத்திருந்த காந்தி குடும்பமும் இணைந்து ஆடிய நாடகமே நோர்வேயின் சமாதனப்பணி.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் சமாதானப் பணிகளை குழப்பிய இந்திய சொறிநாய்கள் இதையும் குழப்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இதில நீங்கள் குழம்பாமல் இருப்பதே நல்லது!

இது வேட்டைநாய்கள் பங்கு பிரிக்கும் நாடகம்! ஐ.நா போன்று அயோக்கியர்கள் இருக்கும் ஒரு சபை வேறு எங்குமில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.