Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜிவ் ஒரு அரசியல் தலைவரே அல்ல. 2014ல் ராகுல் பிரதமர் ஆவார். குஷ்வந்த் சிங்

Featured Replies

ராஜிவ் உண்மையில் ஒரு தலைவர் அல்ல; அவரிடம் சில திட்டங்கள் இருந்தன. அவை சாதாரணமானவை தான். ராகுல், தன் தந்தையை விட அதிபுத்திசாலியாக உள்ளார்' என்று, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்(95) கூறியுள்ளார்.

இந்தியாவின் பிரபல மூத்த எழுத்தாளரான குஷ்வந்த் சிங், "அப்சொல்யூட் குஷ்வந்த்: தி லோ டவுன் ஆப் லைப், டெத் அண்டு மோஸ்ட் திங்ஸ் இன் பிட்வீன்' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், நிகழ்ச்சிகள் குறித்த தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது:

ராகுலுக்கு என்று ஒரு தொலைநோக்கு இருக்கிறது. மாயாவதி மற்றும் சிவசேனாவின் மண்ணிலேயே அவர்களை ராகுல் எதிர்கொண்டிருக்கிறார். அமேதியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் தங்கி, அவர் உணவு உண்டது சர்ச்சையைக் கிளப்பியது. எனினும், நாட்டின் வெட்கக்கேடான நிலையை அவர் வெளிப்படுத்தினார். இந்த 21ம் நூற்றாண்டிலும் நம் நாட்டில் தீண்டத்தகாதோர் உள்ளனர். அவர்கள் இன்னும் துன்பத்தில் உழல்கின்றனர்.

சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று, அதை எதிர்ப்பது போல், மும்பைக்குச் சென்று, "மும்பை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம்' என்று சிவசேனாவை எதிர்த்துப் பேசினார் . ராஜிவைப் பொருத்தவரை, அவரால் கையாள முடியாத பதவியில் அவர் திணிக்கப்பட்டார். அவரிடம் சில நல்ல யோசனைகள் இருந்தன. ஆனால் அவை ஒன்றும் அசாதாரணமானதல்ல. உண்மையில் அவர் தலைவரே அல்ல.

ஆனாலும் அவர் அரசியலுக்குப் பொருந்தாதவர் என்று நான் கருதவில்லை. அவர் தன் தாயைப் பின்பற்றினார்; அவரைப் போலவே பல தவறுகளைச் செய்தார். அவர் ஊக்குவித்த தொலைத் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் பற்றிய திட்டங்கள், அவரது தாயின் ஆட்சிக் காலத்திலேயே துவக்கப்பட்டவை தான். இலங்கை பிரச்னையில் அவர் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார். ஒரு பொதுக் கூட்டத்தில் ஓர் அமைச்சரைத் திட்டினார். ஷாபானு வழக்கு மற்றும் பாபர் மசூதி சம்பவம் ஆகியவற்றில் அவர் செய்த பெருந்தவறுகள், நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டன.

இந்திராவின் படுகொலையை ஒட்டி நடந்த, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை அவரால் எளிதில் அடக்கியிருக்க முடியும். ஆனால், "ஒரு பெரிய மரம் விழும்போது, பூமி அதிரத்தான் செய்யும்' என்ற அவரது பேச்சின் மூலம் கலவரத்தை நியாயப்படுத்தினார். அவரது தாத்தா நேரு இதுபோன்ற கலவரங்களை அனுமதித்திருப்பாரா என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

சஞ்சய், செயல் ஊக்கமுள்ளவர். 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், ராகுல் பிரதமர் ஆவார். ராகுல் என் வீட்டுக்கு வந்த போது, "முகஸ்துதி செய்பவர்களை விலக்கி வையுங்கள்' என்று சொன்னேன். இவ்வாறு குஷ்வந்த் சிங் எழுதியுள்ளார். அதே சமயம் டில்லியில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழுக்கு தன்னை ஆசிரியராக நியமித்த சஞ்சய் உதவியையும் நூலில் பதிவு செய்திருக்கிறார் குஷ்வந்த் சிங். அதே போல பிரதமர் மன்மோகன் மிகவும் நல்லவர் என்றும் துதிபாடியிருக்கிறார்.

ராஜிவ் மற்றும் ராகுல் படங்களுக்கு

http://www.thedipaar.com/news/news.php?id=17277

இது ஒருவகை பிரச்சார யுக்தி... படித்தவர்கள் மனதில் அடுத்த தலைவராக ராகுலை ஏற்றுக்கொள்ள , மனதில் வல்லவராக படிய வைக்க எடுக்க படும் பிரச்சாரம்...

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் மகாத்மா காந்தியின் மறு அவதாரம் என்று சொன்னால், இந்தியாவில் நம்ப ஆளிருக்கு.

பொச்சுமட்டை பயலுகள்.

ராகுல் மகாத்மா காந்தியின் மறு அவதாரம் என்று சொன்னால், இந்தியாவில் நம்ப ஆளிருக்கு.

பொச்சுமட்டை பயலுகள்.

smiley-laughing021.gif smiley-laughing024.gif சரியா சொன்னீங்கள் சிறி அண்ண :wub:

அமைதிப் படை என்ற பெயரில் ஈழத் தமிழருக்கு இந்திய பயங்கரவாதப் படையால் ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகளால், ஒரு பயங்கரவாதக் கும்பலின் தலைமைப் பயங்கரவாதி என்ற மிகப் பொருத்தமான காரணப் பெயரைப் பெற்றவர் ராஜீவ்.

குஷ்வந்த் சிங் இந்த தலைமைப் பயங்கரவாதி ராஜிவை விட, மகன் ராகுல் மிக மோசமான பயங்கரவாதி என்று சொல்கிறார்!?

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தி இந்தியப் பிரதமராக வந்தால் இந்தியா இருபதாக உடைந்து போக வாய்ப்பிருக்கின்றது.

அதை நாம் வரவேற்போம் :huh:

வாத்தியார்

********

பயங்கரவாதியின் அடுத்த வாரிசு வருவதற்கு முன்னரே உடைந்தால் மிக நல்லது.

ராஜீவ் அரசியல் தலைவரே அல்ல.

ஆனால் ராஜீவ் இந்திய பயங்கரவாதிகளின் தலைவர் என்ற உண்மையை குஷ்வந்த் சிங் மறைத்துவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.