Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் அனைத்துல செயலகத்தின் முன்னாள் பொறுப்பாளர் வே.மனோகரன் செவ்வி

Featured Replies

திரு மனோகரன் அவர்கள் பற்றிய சிறு அறிமுகம்

* 1980களின் ஆரம்பத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினை உருவாக்கியவர்களில் முதன்மையானவராக பிரான்சில் செயற்பட ஆரம்பித்த மனோகரன், 1983ன் பிற்பாடு தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியாக இயக்கத்தினால் நியமிக்கப்பட்டார்.

* 1997ல் இயக்கம் இவரை தனது அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளராக நியமித்தது. இந்தக் காலப்பகுதியில் தாயகத்தில் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிகளை இயக்கம் சந்தித்தது. ஜெயசுக்குறுய் இராணுவ நடவடிக்கை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பலத்தினை களத்தில் அதிகரிப்பதற்கான மிகப்பெரும் செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பினை புலத்து தமிழ்சமூகம் மத்தியில் இவர் வழங்கினார்;

* இயக்கத்தின் சார்பில் சர்வதேச தரப்புக்களுடனான பேச்சுக்கள் பலவற்றின் ஆரம்பகட்டங்களை மனோகரன் அவர்களே தலைமையின் வழிகாட்டலில் நடத்தினார்.

* புலம்பெயர்ந்த தமிழர் தரப்புக்குள்,வேர் விட்டுள்ள நச்சு சக்திகள் என்பனவற்றின் நெருக்கடிகளை மீறி பிரான்சில் நாடுகடந்த அரசுக்கான சனநாயக பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்;துவதற்காக அமைக்கப்பட்ட செயற்குழுவுக்குத் தலைமை தாங்கி தேர்தலை நடாத்தி முடித்தார்.

இத்தகைய அரசியல், இராஐதந்திர, நிர்வாக, இயக்கப் பின்னணியினைக் கொண்ட மனோகரன் இன்றைய காலத்தின் தேவைகருதி...

Edited by அகரன்

இது சரியான துரோகம்! எங்கடை போராட்டம் தோத்தது எண்டு இவர் எப்பிடி சொல்ல ஏலும். சிறீ லங்காவோடை நாங்கள் ஏன் பேசவேணும்? எங்கடை புதிய நோர்வே தலைவரின் தலைமையிலை கறுப்பு உளவுப்படையும் சேர்நது சிறீ லங்காவுக்கு ஒரு பாடம் படிப்பிக்கேக்கை விழங்கும் உவருக்கு!

கடந்தகால பொறுப்பு மாற்றங்களினால் கடும் பாதிப்புக்குட்பட்ட மனநிலையில் சொல்லப்பட்ட, சுயநலம் ஆழ ஊடு புகுந்திருக்கும் ஒருபாகச் சார்பான கருந்துக்கள் நிறைந்துள்ள செவ்வி.

நல்ல கருத்துக்கள் மிகச்சிலவே உள்ளது.

திரு மனோகரன் அவர்கள் மனம் திறந்து பேசி இருகிறார்,இதனை வரவேற்க வேண்டும்.அவர் கூறிய சில விடயங்களில் அவர் குழப்பமாக இருப்பது தெரிகிறது.

ஜிடிவி ஒரு பக்க கருத்தை மட்டும் முன் வைக்காமால் இருபக்கக் கருதுக்களையும் முன் வைக்கும் வகையில் கருத்தாடல்களை நாடாத்த வேண்டும் அதன் மூலமே மக்களும் கருத்து முரண்பட்டை உடையோரும் அவற்றைப் பேசி ஒரு தீர்வுக்கு வரலாம்.மேலே பொண்டர் எழுதி இருப்பதைப் போல் இடையில் புகுந்து இருக்கும் முரண்பாடுகளை தனிமனித முரண்பாடாக கூர்மையடைய வைக்க பல சக்திகள் உள் நோக்கத்தோடு செயற்படுகின்றன.இத்தகைய சக்திகளை இரு தரப்பும் அடையாளம் காண வேண்டும்.

மனோகரனின் கருதுக்களில் இருக்கும் முரண்பாடுகள் எவை?

ஒரு இடத்தில் மக்களின் போராட்டம் தொடரும் என்று சொல்லி விட்டு இன்னொரு இடத்தில் போராட்டம் முடிவடைந்து விட்டது இனி இருபது வருடங்களிற்க்கு ஒன்றும் நடக்காது என்று சொல்கிறார்.இரு தரப்பிற்க்கும் இருக்கும் பிரதான முரண்பாடு இதுவே,ஒரு தரப்பு ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டது நாம் இனி எல்லாப் போராட்டங்களையும் முடக்கி வைத்து விட்டு சிறிலங்கா அரசுடன் சேர்ந்து போராளிகளையும் மக்களையும் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.அப்படியாயின் ஏன் அவர் நாடுகடந்த தமீழழ அரசிற்கான தேர்தலை நாடாத்தினார் என்னும் கேள்விக்கு என்ன பதில்?

திரு மனோகரன் அவர்கள் மனம் திறந்து பேசி இருகிறார்,இதனை வரவேற்க வேண்டும்.அவர் கூறிய சில விடயங்களில் அவர் குழப்பமாக இருப்பது தெரிகிறது.

ஜிடிவி ஒரு பக்க கருத்தை மட்டும் முன் வைக்காமால் இருபக்கக் கருதுக்களையும் முன் வைக்கும் வகையில் கருத்தாடல்களை நாடாத்த வேண்டும் அதன் மூலமே மக்களும் கருத்து முரண்பட்டை உடையோரும் அவற்றைப் பேசி ஒரு தீர்வுக்கு வரலாம்.மேலே பொண்டர் எழுதி இருப்பதைப் போல் இடையில் புகுந்து இருக்கும் முரண்பாடுகளை தனிமனித முரண்பாடாக கூர்மையடைய வைக்க பல சக்திகள் உள் நோக்கத்தோடு செயற்படுகின்றன.இத்தகைய சக்திகளை இரு தரப்பும் அடையாளம் காண வேண்டும்.

மனோகரனின் கருதுக்களில் இருக்கும் முரண்பாடுகள் எவை?

ஒரு இடத்தில் மக்களின் போராட்டம் தொடரும் என்று சொல்லி விட்டு இன்னொரு இடத்தில் போராட்டம் முடிவடைந்து விட்டது இனி இருபது வருடங்களிற்க்கு ஒன்றும் நடக்காது என்று சொல்கிறார்.இரு தரப்பிற்க்கும் இருக்கும் பிரதான முரண்பாடு இதுவே,ஒரு தரப்பு ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டது நாம் இனி எல்லாப் போராட்டங்களையும் முடக்கி வைத்து விட்டு சிறிலங்கா அரசுடன் சேர்ந்து போராளிகளையும் மக்களையும் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.அப்படியாயின் ஏன் அவர் நாடுகடந்த தமீழழ அரசிற்கான தேர்தலை நாடாத்தினார் என்னும் கேள்விக்கு என்ன பதில்?

இவர் கேபியை ஓர் மூலைக்குள் வைத்துவிட்டு ஏனையோர் என்ன செய்கின்றார்கள் என்று கேட்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மால் இயன்றவரை வேலை செய்கின்றார்கள். வன்னியில் மக்களிற்கான வாழ்வாதார பணிகள், சிறுவர் இல்லங்களை மீழ இயக்குதல், கல்வி செயற்பாடுகள் ஆகியவற்றில் பல திட்டங்களை செய்கின்றார்கள்.

பல்வேறு காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்றார்கள். இவர்களுக்கு ஊடக பலம் இல்லாதபடியாலும் அரசாங்கம் இவர்களது பணிகளை புரொமோட் பண்ண விரும்பாததாலும் இவர்களின் செய்திகள் வருவதில்லை. ஆனால் கணிசமான நபர்களிடம் இவர்களின் பணிகளை கேட்கமுடிகின்றது.

போராளிகளை எடுத்து விடவில்லையென்பது உண்மைதான். ஆனால் கே.பி அவர்கள் எத்தனை பேரை எடுத்து விட்டுள்ளார்? ஆக கூடியது 24 பேரை என்று சொல்கின்றார்கள். மீதி 3475 போராளிகளையும் யார் விடுவித்தார்கள் எம்.பி க்களும் அல்ல கே.பி அவர்களும் அல்லவே. ஏதோ அரசாங்கம் அரசியலுக்காக கொஞ்சம் கொஞ்சமாக விடுகின்றார்கள்.

ஆகவே அவர் என்ன செய்தார் இவர் என்ன செய்தார் என்பதனை விட நான் என்ன செய்தேன் என்பதே சரியான கேள்வி. திரு மனோ ஐயா அவர்கள் முள்ளிவாய்க்காலின் பின்னர் என்ன செய்தார் என்பதனை பட்டியலிட்டால் அதன் விளைவுகளை பார்க்கலாம்.

அல்லது போர் நடக்கும் காலத்திலும் அதற்கு முன்னரும் இவருக்கு என்ன பணி தலைமைப்பீடத்தால் கொடுக்கப்பட்டது?

அதனை இவர் சொல்லுவாரா? அந்த கடமைகளை ஏன் செய்ய வில்லை என்பதனை சொல்லுவாரா? வெளி நாட்டில் பணி செய்வது கஸ்டம் எண்டால் இங்க வந்து கொஞ்ச நாளைக்கு பெடியங்களுக்கு வகுப்பு எ்டுங்கோ அண்ணர் என்று வன்னி அழைத்த போது ஏன் போகவில்லை என்று கூறுவாரா?

எல்லாவற்றையும் கூறினால் தான் மக்களுக்கும் நல்ல தெளிவு ஏற்படும்.

கே.பி அவர்கள் அரசாங்கத்தின் பிடியில் இருக்கின்றார் அவர் என்ன செய்தாலும் செய்யட்டும் ஆனால் இனி அவரை நியாப்படுத்திக்கொண்டு இருப்பதோ அல்லது துரோகியென ஆய்வுகள் நடத்துவதனையோ எல்லோரும் கைவிட வேண்டும் முக்கியமாக ஊடகங்கள்தான் இந்த கூத்துக்களை செய்கின்றது. ஊடகங்களுக்கு இது ஓர் பொழுது போக்காகவும் அல்லது சந்தைப்படுத்தல் தந்திரோபாயமாகவும் இருக்கலாம்.

இவற்றை கைவிட்டு விட்டு செய்யவேண்டியதை பார்ப்போம்.

நாடு கடந்த அரசின் தேர்தல் பிரச்சினைகள் ஏன் இன்னமும் தீர்த்து வைக்கப்படவில்லை? அவர்களின் ரோட் மைப் என்ன? அரைச்ச மாவை புது கிரைண்டரில் அரைப்பதுதான் அவர்களது பணியா?

தமிழீழ மக்கள் பேரவை என்ன செய்கின்றது? அவர்களின் ரோட் மைப் என்ன? அதன் பேச்சாளர் யார்? அதன் தலைவர்கள் எங்காவது ஒன்று கூடி வேலைத்திட்டங்களை மக்கள் முன் சொன்னார்களா?

வெளி நாட்டிலும் தாயகத்திலும் ஜன நாயக ரீதியாக தேர்வு செய்யபட்டவர்கள் எல்லோரும் ஒன்று பட்டு சந்தித்துள்ளார்களா? இல்லையெனின் ஏன்?

குளோபல் தமிழ் போரத்தின் பணி என்ன? இலண்டனில் அலுவலகம் திறந்துள்ளதாக கேள்வி இதனை ஏன் அனைத்துலக ரீதியில் பகிரங்கபப்டுத்தப்படவில்லை?

இயக்க தடைகளை நீக்க வழக்கு போடுவதற்காக மலேசிய தமிழர்கள் குளோபல் தமிழ் போரத்திற்கு நிதி கொடுத்ததாக பாரிசில் நடந்த கூட்டத்தில் சொல்லப்பட்டதே ஆகவே அந்த வேலைத்திட்டம் எந்த நிலையில் உள்ளது?

புனர்வாழ்வுக்கழகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் அதன் நிலை இப்போ என்ன?

ஆகவே வாசகர்களும் மக்களும் இங்கு எழுதுவோர்களும் ஊடகங்களும் இப்படியான கேள்விகளை கேட்டு உரிய அமைப்பினை நடத்திக்கொண்டு இருப்பவர்களிடம் பதிலை எடுக்க முன்வரவேண்டும்.

அதைவிடுத்து யாழில் கே.பி வாதம் காஸ்ரோ வாதம் என்றால் அதன் பத்திக்கு கூட்டமோ கூட்டம்.

உண்மையாக நாம் எதையாவது செய்ய வேண்டும் என்றால் ஆரோக்கியமான பாதையில் வாதங்களை முன்வைத்து செயற்படுவோம்.

ஆத்திரத்தில் கொஞ்சம் உளரிபோட்டேனோ தெரியல மன்னிக்கவேண்டும்

உமை நீங்கள் எழுப்பிய கேள்விகள் நியாயமானவை, ஆனால் எமது ஊடகங்களும் சரி பதில் சொல்ல வேண்டியவர்களும் சரி இவ்வாறான ஆக்கபூர்வமான கருத்தாடல்களை நடாத்துவதில்லை.இதனாலெயே மக்கள் குழப்பமான நிலையிலும் சோர்வான நிலையிலும் உள்ளனர்.அவர்கள் முற்று முழுதாக நம்பிக்கை இழக்கமுன்னர் எவர்கள் எதாவது செய்தாக வேண்டும்.

இந்த மனோகரன் காலத்தில் நடந்த சில திருவிழாக்களை எழுதினேன் இங்கு!! அன்பாக தூக்கி விட்டார்கள்! ... யாழ்களம் அனுமதித்தால் பல திருவிழாக்களை ....!!!

யாரவது சொல்லுங்கள் மனோகரன் இருந்த காலத்தில் சாதித்தவை என்னவென்று??????????? தன் அனுபவம் பற்றி குறிப்பிடுகிறார், புரியவில்லை!!!????

இங்கு இப்போ நடப்பது மாமாக்களை விட்டு மாடு பிடிக்கும் விளையாட்டு!! தொடர்ச்சியான போன் கோல்களாம்!

  • கருத்துக்கள உறவுகள்

மனோ அண்ணா

எனது அன்புக்குரியவர்

அவரது தற்போதய நடவடிக்கைகள் பற்றி எழுத விரும்பவில்லை

ஆனால் அதற்கொரு அளவு உண்டு என்பது அவருக்கும் தெரியும்

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.