Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழன் என்றால் இழக்காரமா?

Featured Replies

தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. காரணம்... நான்குமுறை உலக ‘செஸ் சாம்பியன்’ விஸ்வநாதன் ஆனந்துக்கு ஹைதராபாத்தில் நடந்த கணித நிபுணர்கள் மாநாட்டில் ‘டாக்டர்’ பட்டம் மறுக்கப்பட்டிருப்பதுதான். மறுத்திருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.

‘ஆனந்த், ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமை பெற்றவர். அவர் இந்தியர்தானா என்பதில் சந்தேகம் இருக்கு. அதனால் டாக்டர் பட்டம் கொடுக்க வழியில்லை!’ இப்படி உப்புசப்பில்லாத காரணங்களை அடுக்கியிருக்கிறது மத்தியஅரசு. இதில் வேதனையான வேடிக்கை என்ன தெரியுமா? அமெரிக்காவின் ‘ஹார்வேர்ட்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர். டேவிட் மம்ஃபோர்டு என்பவருக்கு அதே மாநாட்டில் டாக்டர் பட்டம் கொடுக்க மத்திய அரசு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதுதான்.

ஏன் இந்தப் பாகுபாடு? ஆனந்த் தமிழன் என்பதாலா? ‘தமிழ்நாடு செஸ் கழக’ பொதுச்செயலாளர் முரளி மோகனிடம் கேட்டோம்.

‘‘ஆனந்துக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான முயற்சியின்போதே அவரைப் பற்றிய தகவல்கள், சாதனைகள் அனைத்தையும் அவரது மனைவி அருணா முறைப்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டார். உலக செஸ் சாம்பியன் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் ஆனந்த் விளையாடும்போது மேஜையில் நமது தேசியக் கொடி இருக்கும். நமது நாட்டுக்காகத்தான் அவர் விளையாடுகிறார். அவர் இந்தியர்தான் என்பதற்கு இந்தச் சான்றுகள் போதாதா?

அடுத்து ஆனந்த், ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமை பெற்றவர் என்கிறார்கள். அதற்குக் காரணம் உண்டு. பெரும்பாலான செஸ் போட்டிகள் ஐரோப்பிய நாடுகளில்தான் நடக்குது. அதனால் சௌகரியம் கருதி அங்கே வாழ்கிறார். அது அவரது உரிமை. ஒருவர் வெளிநாட்டில் வாழ்வதாலேயே இந்தியர் இல்லை என்று ஆகிவிடுமா என்ன? அவரிடம் இந்திய ‘பாஸ்போர்ட்’ இருக்கு. அதனை அவரே சொல்லியிருக்கிறார். பிறப்பால் அவர் தமிழர்.

இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஆனந்துக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறுத்தது, அவரைமட்டுமல்ல தமிழர்களை கேவலப்படுத்துவதற்குச் சமம். தமிழன் என்றால் இளக்காரமா? இதில் அரசு அதிகாரிகளின் கைவண்ணம் இருக்குமோ என்கிற சந்தேகம் இருக்கு. ஒரு விஷயம்... ஆனந்த்தால்தான் டாக்டர் பட்டத்துக்குப் பெருமை; பட்டத்தால் அவருக்கு அல்ல; அதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!’’ -சற்றே குரல் உயர்த்தி தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் முரளிமோகன்.

இதில் மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா? ஆனந்த்தின் சாதனையைப் பாராட்டி ஸ்பெயின் அரசு, 2003-ம் ஆண்டிலேயே தனது நாட்டுக் குடிமகனுக்கு அளிக்கும் மிகப் பெரிய விருதைக் கொடுத்து அவரை கௌரவித்திருப்பதுதான்.

இந்த அனல் அடிக்கும் பிரச்னையைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆனந்த் அந்தப் பட்டத்தை வாங்க மறுத்திருக்கிறார். எப்படியோ, சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறை தலைகுனிந்திருப்பது மட்டும் நிஜம்!.

படங்களைப் பார்வையிட

http://www.thedipaar.com/news/news.php?id=17880

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

கேம்பிட்ஜ் பல்கலை கழக... கேண்டின் ஓட்டல் சப்ளையர்...... சோனியா மைனாவுக்கும் இதே அளவு கோள்தான் பயன் படுத்த வேண்டும்...

(NRI) இரட்டை குடியுரிமை என சட்டம் இயற்றினார்களே அது என்ன ஆச்சு?? அது செட்டாவது எல்லாம் வடவரகளுக்கு மட்டும்தானா... கிரான்ஸ்லாம் பட்டம் வென்ற போது தூக்கி தூக்கி ... இந்தியன் இந்தியன் என்று கொண்டடினார்களே என்ன ஆச்சு? இப்ப தமிழனாக மாறி போய்விட்டாரா?

கேள்வி கேக்க தெரியாத முண்டங்களை....டெல்லி வாலாக்களுக்கு.... மனைவி... மகள்கள் ....எனகூட்டி குடுக்கும் மாமாக்களை... நாடாளுமன்றம் அனுப்பினால் இதுதான் கதி :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பட்டத்தை ஆனந் வாங்காமல் விட்டது அவருக்கு தான் பெருமை.இனிமேல் இந்தியாவுக்காக விளையாடாமல் ஸ்பெயினுக்காக விளையாடி தன்னை மதிக்கும் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.ஏற்கனவே ரகுமான் ஒஸ்கார் எடுத்தற்கு அமிதாப் போன்றோர் மனம் வெதும்பியது தெரிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் உள்ள டமிளர்கள் தான்......

ஆகா.... ஒகோ..... என்று இந்தியாவுக்கு காவடி தூக்கினம்.

ஆனால் இவையளை ஒருத்தரும் மதிக்கிறதே...... இல்லை.

இவை குஸ்புவின்ரை இட்லி எப்ப வரும் எண்டு பாத்துக் கொண்டிரிக்கினம். ரூ..... லேட்.

கடைசியாய்....... "அணில் ஏற விட்ட நாய் மாதிரி" இருக்கப் போயினம்.

இந்தியாவில் உள்ள டமிளர்கள் தான்......

ஆகா.... ஒகோ..... என்று இந்தியாவுக்கு காவடி தூக்கினம்.

ஆனால் இவையளை ஒருத்தரும் மதிக்கிறதே...... இல்லை.

இவை குஸ்புவின்ரை இட்லி எப்ப வரும் எண்டு பாத்துக் கொண்டிரிக்கினம். ரூ..... லேட்.

கடைசியாய்....... "அணில் ஏற விட்ட நாய் மாதிரி" இருக்கப் போயினம்.

போலி இந்திய மாயையிலிருந்து தமிழர்கள் விடுபடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போலி இந்திய மாயையிலிருந்து தமிழர்கள் விடுபடவேண்டும்.

அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் விடிவு வராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.