Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புவி வெப்ப மடைதலுக்கு காரணம் புலிதலைவர் பிரபாகரனே -கற்பனை பேட்டி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சியே என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"இலங்கைப் பிரச்னைக்குக்கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது போல தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சியின் திட்டப்படி 1987ல் உருவான ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மட்டும் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்நேரம் இலங்கையில் தமிழர்களுக்கென ஒரு தனி மாநிலம் உருவாகியிருக்கும்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அதன் முதல்வராக இருந்திருப்பார். ஆனால், அதை கெடுத்தது விடுதலைப் புலிகள்தான். இதையெல்லாம் மக்களிடம் காங்கிரஸ் கட்சியினர்தான் கூற வேண்டும்" என்றார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75418

புவி வெப்ப மடைதலுக்கு காரணம் புலிதலைவர் பிரபாகரனே -கற்பனை பேட்டி...

2008030151720301.jpg

நிருபர்: இலங்கை அரசியல் தீர்வு குறித்து?

ப.சி: ஆம் புலிகள் மாநில அரசியல் தீர்வினை அன்றே ஏற்றிருந்தால் இந்த இக்கட்டான நிலை வந்திருக்காது. பிரபாகரன் மாநில முதல்வராக இருந்திருப்பார்..

நிருபர்: இன்றுதான் அவர்கள் இல்லையே... மத்திய அரசு அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்துமா?

ப.சி: ஆம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே தான் இருப்போம் 2070 ல் அரசியல் தீர்வு வருமென நம்பிக்கை உள்ளது..

நிருபர்: அதுவரை அவர்கள் இருப்பார்களா?

பசி: முதலில் ஒன்றினை புரிந்து கொள்ளவேண்டும்.. இலங்கை ஒரு இறை ஆமை உள்ள நாடு..

galapagos-tortoise.jpg

கொழும்பில் உள்ள ஆக்குவேரியத்தில் வைத்து பராமரிக்கிறார்கள் என நினைக்கிறேன்... அதனால் எதனையும் உடனடியாக செய்யமுடியாது..

நிருபர்: அங்கு நிவாரண பணிகள் எந்த அளவில் நடைபெறுகின்றன?

பசி: நிவராண பணிகள்... முழுவீச்சில் நடைபெறுகின்ற்ன என வெளியுறவுத்துறை செயலாளர் என்னிடம் கூறினார் அத்தோடு சில குறைபாடுகள் உள்ளன ...அதை நிவர்த்தி செய்யுமாறு ங்கோத்தபாய ராஜ பக்சேவுக்கு அறிவுறை கூறிவிட்டு வந்துள்ளார்..

நிருபர்: என்னென்ன குறைபாடுகள் ..? என்னென்ன அறிவுரைகள் என தெளிவாக விளக்க முடியுமா?

1199676499_chicken-biriyani.jpg

1236854002_Chivas%20Regal.jpg

1.gif

smiles_415.gif

பசி: பிரியாணியில் லெக் பீஸ் சரியாக வேகவில்லை என கூறினார்... அதனால் வயிற்று போக்கு ஏற்பட்டதாக கூறினார்... மேலும் அன்று இரவு நடந்த பார்டியில் சரக்கடிக்கும் போது முதல் ரவுண்டு மற்ற அனைவரையும் விட நம்மவருக்கு குறையாக ஊற்றியதாகவும்... கடைசி ரவுண்டு நம்மவருக்கு ஊற்றாமல் மொத்ததினையும் ராஜபக்சேவே குடித்துவிட்டதாகவும் அறிகிறொம் அத்தோடு சிக்கன் கபாப் சைடிஸை... நம்மவருக்கு கூட தராமல் பசில் ரஜபக்சே பசி தாளாமல் புசித்துவிட்டதாகவும் தெரிகிறது..

நிருபர்: அங்கு தமிழர்கள் வீடு கட்டும் வேலைகள் எப்படி சென்று கொண்டுள்ளன?

பசி: ஆம் இந்த முறை புதியதாக5000 வீடுகள் இந்திய அரசின் சார்பில் கட்டி கொடுக்கபடும்.

நிருபர்: போன முறை கட்டி கொடுத்த வீடுகள் என்ன ஆனது..?

பசி: ஆம் அது போன முறை நான் சொல்வது இந்த முறை... போன முறை வீடு கட்ட ஒதுக்கிய பணம்.. 500 கோடி... கட்டிய பிறகுதான் தெரிந்தது கட்டிய வீடுகள் அனைத்து கொழும்பிலே என்று..

நிருபர்:இது தங்களுக்கு நியாயமாக தெரிகிறது?

பசி: முதலில் ஒன்றினை புரிந்து கொள்ளவேண்டும்.. இலங்கை குட்பு நாடு எதை செய்யவேண்டும்.. எதை செய்ய கூடாது என நாம் கூற கூடாது.. இந்த முறை சரியாக செயல்பாடுவோம் என நம்புகிறேன்...

(நிருபர் மனதுக்குள் அதானே ஊரான் வீட்டு காசுதானே?)

நிருபர்: போகட்டும் காங்கிரஸ் மேலிடம் தாங்கள் மாநாடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதில்லை என்று குறைபாடு கூறியுள்ளார்களாமே ? தங்கள் மேல் நடவடிகை உறுதி என்கிறார்களே?

பசி: முதலில் ஒன்றினை தெரிந்து கொள்ளவேண்டும்.. இந்த கார் 1987 வாங்கபட்டது .. இதில் முதன் முதலில் என்னுடன் பயணம் செய்தவர் பிரபாகரன்.. அதனால்தான் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கினை நோக்கி பயணம் செய்ய மறுக்கிறது..இதையே மேலிடத்தில் தெளிவாக எடுத்து கூறினேன்.. மேலிடம் திருப்தி அடைந்துள்ளது..

நிருபர்: காங்கிரஸில் கொஸ்டி பூசல்கள் அதிகரித்துள்ளனவே?

பசி: முதலில் கோஸ்டி பூசல் என்ற பதமே தவறு.. காங்கிரஸ் ஒரு ஜன நாய்க கட்சி.. அனைவரும் தங்களுக்கு இடபட்ட வேலைகளை செய்கிறார்கள்... ஒருவர் சோனியா மைனா புடவை துவைத்தால் மற்றோருவர் ராகுல் ஜீயின் ஜட்டி துவைக்க அவரை கேட்காமலே உருவி கொண்டு சென்றுவிடுகிறார்..

underwear-rug.jpg

ஆக இதனை ஜனநாய்க சேவைக்கா போட்டியாக ... இந்தியாவினை முன்னேற்றும் போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும்

(நிருபர் மனதுக்குள் சத்தியமாக இதெல்லாம் தேறாத கேசுகள்)

நிருபர்: தாங்கள் உடல் நிலை எப்படி உள்ளது அறுவை சிகிச்சை நன்றாக நடைபெற்றதா?

பசி: இப்போது பரவாயில்லை... இதற்கும் காரணம் புலிகள் தான் உளவு துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது... பாலில் டிக்கேசனுக்கு பதில் பினாயில் கலந்துவிட்டதாக அறிகிறோம்.. இதற்காக விசாரணை குழு அமைக்கபடும்..

(நிருபர் இந்தாளுக்கு எது நடந்தாலும் அவுங்களை இழுக்கலன்ன தூக்கவராதே)

நிருபர்: போகட்டும்.. பந்தி பூர் சரணாலயத்தில் வனவிலங்குளை வேட்டையாடுகிறார்களே... புலிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறதே..

பசி: முதலில் ஒன்றினை புரிந்து கொள்ளவேண்டும் தீவிரவாதிகளில் நல்ல தீவிர வாதி கெட்ட தீவிர வாதி என்று ஒன்று இல்லை... எவ்வாறாயினும் தீவிரவாதம்.. ஒழிக்கபடவேண்டும்...

நிருபர்: சார்.. இப்போ 2010 அத்தோடு நான் கேட்டது நம்ம சரணாலயங்களை பத்தி...

பசி: ஹி ஹி மன்னிக்க வேண்டும்... புலிகள் என்றவுடன் பழக்க தோசத்தில் வந்துவிட்டது இதை நீங்க போடவேண்டாம்..

(நிருபர் மைக்கை தூக்கி கொண்டு ஆளை விட்ட போதும் என ஓடுகிறார்..)

th_running1.gif

டிஸ்கி:

3010 இல்அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் ஒரு பேட்டி...

Bangalore_Open_2008_3965_medium.jpg

நிருபர்: இனியாவது ஈழ சிக்கலில் காங்கிரஸ் ஆக்க பூர்வமாக நடைவடிக்கை எடுக்குமா?

காசி: எனது தந்தை இலங்கை தமிழர்களுக்காக உழைத்து ஓடாக தேய்ந்து இறந்து போனார் என அனைவருக்கும் தெரியும்.. இலங்கை தமிழர்களுக்காக அதிக தியாகங்களை செய்த கட்சி காங்கிரச் கட்சி... இப்போது நான் பொறுப்பேற்றுள்ளேன்3070 க்குள் ஒரு தீர்வு வருமென நம்புகிறேன்..

நிருபர்: சார் அங்க இருப்பது இப்ப 10,000க்கும் குறைவே... இனியாவது நடவடிக்கை எடுக்கலாமே?

காசி: இதற்கு காரணம் புலிகளும் பிரபாகரனும்தான்... அன்றே....

நிருபர்: போகட்டும் புவி வெப்பமடைந்து வருகிறதே... ஏதாவது ஆக்கபூர்வமாக மத்திய அரசு சார்பில் நடவடிக்கைஎடுக்கபடுமா?

காசி: இதற்கும் காரணம் புலிகளும் பிரபாகரனும்தான்... அன்றே....

(நிருபர் மனதுக்குள் அவங்க அப்பன போலவே இருக்கிறாரப்பா...தூத்தேறி....)

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
:lol::lol::D
  • கருத்துக்கள உறவுகள்

பசி: முதலில் ஒன்றினை புரிந்து கொள்ளவேண்டும்.. இலங்கை ஒரு இறை ஆமை உள்ள நாடு..

கொழும்பில் உள்ள ஆக்குவேரியத்தில் வைத்து பராமரிக்கிறார்கள் என நினைக்கிறேன்... அதனால் எதனையும் உடனடியாக செய்யமுடியாது..

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிருபர்: அங்கு நிவாரண பணிகள் எந்த அளவில் நடைபெறுகின்றன?

பசி: நிவராண பணிகள்... முழுவீச்சில் நடைபெறுகின்ற்ன என வெளியுறவுத்துறை செயலாளர் என்னிடம் கூறினார் அத்தோடு சில குறைபாடுகள் உள்ளன ...அதை நிவர்த்தி செய்யுமாறு ங்கோத்தபாய ராஜ பக்சேவுக்கு அறிவுறை கூறிவிட்டு வந்துள்ளார்..

:lol: :lol: :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.