Jump to content

என்னை வைச்சுப் பராமரிக்க என்ர வீட்டுக்காறரராலை முடியாது.


Recommended Posts

5தங்கைகளுக்கு ஒற்றை அண்ணன் இவன். திருமலை மாவட்டத்தின் சிறுகிராமமொன்றில் பிறந்து வளர்ந்தவன் கலவரங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இடப்பெயர்வு துயரங்களால் துரத்தப்பட்டதால் சோர்ந்தவன் அவனை நம்பிய தங்கைகளை அம்மாவை அப்பாவை விட்டு ஆயுதப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். கனவுகளோடு கனரகத்தையேந்தியவன் இலட்சியக்கனவோடு களங்களில் வாழ்ந்தான். ஒரு களச்சமரில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்து போய் ஓயாது ஓடித்திரிந்த கால்கள் ஒரு சக்கர நாற்காலிக்குள் அடங்கிக்கொண்டது. மாற்றுவலுவுள்ளோருக்கான கல்வி கற்றலில் தன்னால் இயன்றவற்றையெல்லாம் சக்கரநாற்காலிக்குள்ளிருந்தபடி கற்றான். அம்மா அப்பா தங்கைகள் எல்லாரையும் மறந்து தனது இலட்சியக்கனவோடு கடைசிவரை இருந்தவன்… கடைசியுத்தத்தில் மீளவும் பொக்கணையில் காயமுற்று நெஞ்சின் கீழ் இயக்கம் இழந்த நிலையில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது தான் இவனுக்கு தனது எதிர்காலம் பற்றி நினைவு வருகிறது. அடுத்ததாய் என்ன செய்வேன் ? எவரிடம் போவதென்ற நிலமையேதும் தெரியாமல் இருக்கிறான். தற்காலிகமாக காயங்கள் ஆறும்வரை மருத்துவமனையில் இருந்தாலும் பின்னர் எங்கே போவதென்று தெரியாது நிலமையில் இருக்கிறான். வறுமையின் பிடியில் வாழும் குடும்பம் 4தங்கைகளும் திருமணமாகிவிட்டார்கள். ஒரு தங்கை 27வயது வசதிகள் இல்லாமையால் திருமணம் இல்லை வயதான அம்மாவும் அவளும் கூலிவேலை செய்து அன்றாடச் சீவியத்தை ஓட்டுகிற நிலையில் இவனையும் பராமரிக்க அவர்களிடம் வசதியுமில்லை வருமானமுமில்லை. தனக்கான அடுத்த கட்ட வாழ்வை யார் பொறுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் எங்களை நாடி வந்திருக்கிறான். உறவுகளே இவனுக்கு ஒரு கரம் நீட்டுவீர்களா ? உயிர்வாழ வழிகொடுப்பீர்களா ?
Link to comment
Share on other sites

இந்த 33 வயது இளைஞனுக்கு உதவிக்கும் ஆளில்லை உறவுகளும் அருகிலில்லை. மருத்துவமனையில் ஆறாத காயங்களோடு கிடக்கிறான். தனது அவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் அற்றுள்ளான். குடும்பத்தினராலும் எதுவும் கொடுக்க முடியாத நிலை.

மருத்துவமனையை விட்டு இவன் வெளியேறும் வரையில் இலங்கை ரூபா 4000ரூபா உதவி இவனுக்காக தேவைப்படுகிறது. யாராவது உதவினால் தனக்கான சவர்க்காரம் பற்பொடி விரும்பிய ஒரு உணவை வாழும் நாள்வரை உங்களை நன்றியோடு நினைவுகூர்ந்தபடி பெற்றுக்கொள்ளுவான்.

Shanthy Germany – 0049 6781 70723 / 0049 1628037418

அல்லது மின்னஞ்சல் - nesakkaram@gmail.com / rameshsanthi@gmail.com

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி அக்கா. 50 யூரோ அனுப்பி உள்ளேன். அச்சகோதரனுக்கு உதவுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி அக்கா. 50 யூரோ அனுப்பி உள்ளேன். அச்சகோதரனுக்கு உதவுங்கள். நன்றி.

பேபால் ஊடாக வந்துள்ளது உங்கள் உதவி. நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 years later...

[size=5]இச்செய்திக்குரிய முன்னாள் போராளிக்கு கள உறவு ஒருவர் ஒருவருடத்திற்கு மேலாக மாதாந்தம் 5ஆயிரம் ரூபாய்களை உதவி வந்தார். குறித்த உறவின் தனிப்பட்ட பொருளாதார இறுக்கத்தினால் தொடர்ந்து இந்தப் போராளிக்கு உதவ முடியாது போய்விட்டது.

ஒரு கட்டத்தில் இவன் உயிர்வாழும் நாட்களை மருத்துவர்கள் எண்ணிக்கையில் தான் சொன்னார்கள். மரணப்படுக்கையில் இருந்து தொடர் சத்திரசிகிச்சைகள் செய்து இப்போது உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இடையில் ஒருவர் உதவ முன்வந்து உதவ ஆரம்பித்த போது இணையத்தளமொன்றில் இந்தப் போராளிக்கு த.தே.கூ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உதவுவதாக படமும் செய்தியும் வெளிவந்தது. உதவ முன்வந்தவர் செய்தியை பார்த்துவிட்டு தன்னை இவன் ஏமாற்றுவதாக கோபித்து உதவியை நிறுத்திவிட்டார்.

குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் படத்தைப் போட்டபோது எவ்வளவு பணத்தை இந்த படுக்கையில் கிடக்கும் போராளிக்கு கொடுத்தேன் என்பதனை போடவில்லை. ஒருமுறை மட்டும் 5ஆயிரம் ரூபாவே அந்த அரசியல்வாதியால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இன்றுவரை ஒரு சதம்தானும் இவனுக்கு மு.பாராளுமன்ற உறுப்பினரும் கொடுக்கவில்லை.

வயதான தாயாரின் கூலியில் கிடைத்த உணவும் இப்போது கிடைப்பது சிரமமாக உள்ளது. வயதான அம்மா அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். அத்தோடு மழைகாலம் கூலிவேலைக்கும் போக முடியாத அம்மாவோடு இவனும் இப்போது அன்றாட உணவுக்கே மிகவும் சிரமமான நிலமையில் இருக்கிறான்.

மழைகாலம் முடியும் வரையேனும் தனக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது உதவுமாறு கடந்த சில வாரங்களாக அழைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான். நிரந்தர படுக்கை நிரந்தர ஊனம் வாழும் வரையும் பண உதவியே இவனுக்குத் தேவைப்படுகிறது.[/size]

யாராவது இவனுக்கு உதவ விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் நேரடியாகவே உதவியை வழங்கிக் கொள்ளலாம்.

[size=5]Shanthy Germany – 0049 6781 70723[/size][size=5] / 049 1628037418 [/size]

[size=5]Skype ID – Shanthyramesh[/size]

[size=5]Email : nesakkaram@gmail.com[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான தொகையை உடனடிஉதவியாக நான் பொறுப்பெடுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான தொகையை உடனடிஉதவியாக நான் பொறுப்பெடுக்கின்றேன்.

அண்ணா நீங்கள் தெய்வம் என்றும் நன்றியுடன்

Link to comment
Share on other sites

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான தொகையை உடனடிஉதவியாக நான் பொறுப்பெடுக்கின்றேன்.

நன்றிகள் குமாரசாமி. இன்னும் ஒருவர் இந்தப் போராளிக்கு உதவ முன்வந்துள்ளார். அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான தொகையை உடனடிஉதவியாக நான் பொறுப்பெடுக்கின்றேன்.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல். 333

நீங்கள் வாழும் மனிதர்களில் ஒருவர் குமாரசாமியர் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96394&st=280

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குமாரசாமி இந்தப்போராளிக்கு முதல் 3மாதங்களுக்குமான உதவியை (€98,45 EUR)இன்று உதவியுள்ளார். மேலும் ஒரு உறவு 4வது மாதத்துக்கான தனது பங்களிப்பாக 5ஆயிரம் ரூபாவை குறித்த போராளிக்கு நேரடியாக அனுப்பியுள்ளார். பெப்ரவரியின் பின்னர் தொடரும் 11மாதங்களுக்கு உதவ ஒருவர் முன்வந்து மடலிட்டிருக்கிறார். உதவியவர்களுக்கு மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

உதவியவர்களுக்கு இருகரம் கூப்பிய நன்றிகள்.

உதவும் உறவுகளை ஒருங்கிணைத்த சாந்திக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.