Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரின் விருந்தோம்பல் கலாசாரத்துக்கு தலை வணங்கிய பிரதமர்!

Featured Replies

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் விருந்தோம்பல் கலாசாரத்தையும், பகிர்ந்து உண்ணும் பண்பாட்டையும் உள்ளம் மிகவும் நெகிழ்ந்து பாராட்டினார் பிரதமரும், பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண.

இவர் கொழும்பு-பம்பலப்பிட்டியில் உள்ள கதிரேசன் மண்டபத்தில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆலயங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போதே இவ்வாறு உள்ளம் நெகிழ்ந்து பேசினார்.

அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு:

நான் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அண்மைய நாட்களில் விஜயம் செய்திருக்கின்றேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்மக்களை சந்தித்து இருக்கின்றேன்.

அவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தும்படியும், உண்ணும்படியும் மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றார்கள். நான் இச்சந்தர்ப்பங்களில் மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கின்றேன்.

இப்படியான தமிழ் மக்களை சில சக்திகள் எங்களிடம் இருந்து பிரித்து வைத்தன. மக்களால் ஜனநாயக தெரிவு செய்யப்பட்ட அரசு பிரச்சினைகள் ஏற்படும்போது சும்மா இருக்காது. தமிழர் விடயத்திலும் அதுதான் நடந்தது.

ஆனால் இதில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்கிற பாகுபாட்டுக்கு இடமே இல்லை. முன்பு கலகம் செய்த ஜே.வி.பியினர்கள் அடக்கப்பட்டார்கள். அவர்கள் சிங்களவர்களே.

எமது நாட்டில் பெரும்பான்மை சமயமாக பௌத்தம் இருந்தாலும் எல்லா சமயங்களும் சம உரிமைகளுடன் நடத்தப்பட வேண்டும். சமயங்களால் மாத்திரம் வாழ்வை வளப்படுத்த முடியாது. மக்களின் வறுமை ஒழிக்கப்பட வேண்டும்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=13068:2010-10-29-08-45-30&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இதில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்கிற பாகுபாட்டுக்கு இடமே இல்லை. முன்பு கலகம் செய்த ஜே.வி.பியினர்கள் அடக்கப்பட்டார்கள். அவர்கள் சிங்களவர்களே.

நல்லா சீன் காட்டுறான்யா..! :lol: 83 கலவரத்துக்கும் ஜேவிபிதான் காரணமாமா? :lol:

நல்லா சீன் காட்டுறான்யா..! :lol: 83 கலவரத்துக்கும் ஜேவிபிதான் காரணமாமா? :lol:

இவன் ஒரு இனவாதி. கம்பளை ரவுடி.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தும்படியும், உண்ணும்படியும் மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றார்கள். நான் இச்சந்தர்ப்பங்களில் மிகவும் நெகிழ்ந்து போய் இருக்கின்றேன்.

அண்ணே ஓவர் செண்டி மெண்டு உடம்புக்கு சூடு... கொழும்புக்கு போய் உற்சாக நீர் அருந்துவிட்டு வேற மாதிரி பேசாதீங்கோ <_<

தலை வணங்கிய பிரதமர்! - மாலைக்கு <_<

நல்லா சீன் காட்டுறான்யா..! :D 83 கலவரத்துக்கும் ஜேவிபிதான் காரணமாமா? <_<

70 கடசி 80 தொடக்கங்களில் ஒரு லச்சத்துக்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் சிங்கள அரசங்கத்தினால் கொல்லப்பட்டனர்.. இவர்களில் அறுபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்றுவரை கானாமல் போனவர்களாகத்தான் இனங்கணப்படுகிறர்கள்.. இதே நேரம் பல்லாயிரக்கணக்கான சிங்கள அரசாங்க உத்தியோகத்தர்கள் ஜே.வி.பியினால் கொல்லப்பட்டனர்..

டிஸ்கி..

ஜேவிபியின் முக்கிய தாக்குதலான ''அனைத்து பொலிஸ் ஸ்டேஸன்களயும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும்'' முயற்சியில்... 17,000 ஜேவிபி இளைஞர்கள்.. சிங்கள இராணுவத்தாலும் இந்திய விமானப்படியினாலும் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்..

ஜேவிபியின் முக்கிய தாக்குதலான ''அனைத்து பொலிஸ் ஸ்டேஸன்களயும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும்'' முயற்சியில்... 17,000 ஜேவிபி இளைஞர்கள்.. சிங்கள இராணுவத்தாலும் இந்திய விமானப்படியினாலும் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்..

இது தவறான தகவல். சிங்கள, வட இந்திய பயங்கரவாதிகளின் தமிழின நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் முயற்சியா?

-----

சிங்கள பயங்கரவாத அரசின் பிரதமரின் நடிப்புகளை கண்டு தற்கால தமிழர்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்.

முன்னர் அமிர்தலிங்கம் போன்றவர்கள் ஏமாந்ததையும் அறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு கிளிநொச்சியில் விவசாயத்திற்கு பொறுப்பான சிங்கள அமைச்சர் ஒருவர் நிகழ்வொன்றில் கலந்த்திருந்த்தார், அந்நிகழ்வில் கலந்தது கொண்ட ஒரு கிளிநொச்சி வாழ் தமிழர், அமைச்சருக்கு வெங்காயத்தில் மாலை அணிவித்தாராம், அதனை நிகழ்வில் கலந்தது கொண்ட அமைச்சர் சொன்னார் 'வெங்காயம் போட்ட மாலை' என்று.

புலி வாரத்திற்கு முந்தி தமிழன் என்றால் நாய் என்பவர்கள் அவர்கள்,அது உண்மைதான் என்று விசுவாசம் காட்ட இப்ப பலர் போட்டி போட்டு கொண்டு நிக்கினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.