Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்சில் தமிழ்செல்வனுக்கு சிலை திறப்பு (படங்கள்)

Featured Replies

பிரிகேடியர் தமிழ்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருக்கு பிரான்சில் சிலை திறக்கபப்ட்டது. சிறிலங்கா அ்ரசின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனின் திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான லாகூர்னெவில் நிறுவப்பட்டுள்ள இச்சிலைத் திறப்புவிழாவில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். இந்த சிலையினை பிரான்ஸ் பெண்ம்ணியொருவர் வடித்தமையும் கூடவே இந்த நிகழ்வில் அவரும் கலந்து கொண்டுள்ளார். தமிழ் மக்கள் சமாதானம் பெற்று வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார் அந்த ஆட்டிஸ்ற் அம்மணி

TS%20statue004.jpg

TS%20statue002.jpg

VIDEO

Edited by உமை

வெற்றி பெற்ற இந்த முயற்சிக்கு உழைத்த ஆதரவு அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..!

பிரான்ஸ் வாழ் மறத்தமிழர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.காரணம் இது சுலபமான காரியம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சிரத்தை எடுத்து சிலையை உருவாக்க பாடுபட்ட பிரான்ஸ் உறவுகளுக்கு நன்றி.மேலும் இதே முயற்சி பல நாடுகளுக்கும் விஸ்தீரிக்கப்பட்டு ஏனைய மாவீரர்களின் சிலை வைக்கப்படவேண்டும்.

  • தொடங்கியவர்

பிரிகேடியர் தமிழ் செல்வன் அவர்களின் சிலையினை செய்த பிரெஞ்சு பெண்மணி உணர்வு உள்ளவராகவும் இருப்பதாக தோன்றுகின்றது. குறித்த அந்த பெண்மனியினை கெளரவித்து எதிர்காலத்தில் இப்படியான நினைவிடங்களை உருவாக்க அவர்களை பயன்படுத்தலாம்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கருத்து: தாம் பிரெஞ்சு அதிகாரிகளுடன் சிலை வைப்பதனை தடுத்து நிறுத்தக்கேட்டதாகவும் ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் இந்த சிலை வைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என கூறியுள்ளதாகவும் அதனால் தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளனர்.

என்றாலும் தாம் தொடர்ந்து முயற்சிப்போம் என கூறியுள்ளனர்.

தனிமனிதனுக்கு என்றில்லாமல் ... எமக்காக தம்மை அர்ப்பணித்த அத்தனை போராளிகளுக்காகவோ அல்லது சிங்களத்தினால் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களுக்காகவோ ஒரு நினைவுச்சின்னம் அமைத்திருக்கலாம்!!!

இதற்கு பங்களித்த, ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்

தனிமனிதனுக்கு என்றில்லாமல் ... எமக்காக தம்மை அர்ப்பணித்த அத்தனை போராளிகளுக்காகவோ அல்லது சிங்களத்தினால் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களுக்காகவோ ஒரு நினைவுச்சின்னம் அமைத்திருக்கலாம்!!!

அதானே பார்த்தன்... எதிலாவது ஒரு நொள்ளை கண்டு பிடிக்காட்டி நித்திரை வராதே...? :lol:

நெல்லையன் ஏன் உங்களின் ஐடியாவை நீங்கள் வசிக்கும் லண்டனில் நடத்திக் காட்டக் கூடாது? மற்றவன் செய்வான் என்று இருக்காமல் இன்றே உங்கள் முயற்சியை தொடங்கலாமே?

Edited by நிழலி
to add smiley

  • கருத்துக்கள உறவுகள்

சு.ப. அவர்கள் ஒரு தனிமனிதனல்ல நெல்லையன்

அதேநேரம் இது ஒரு ஆரம்பந்தான்.

இதற்கே இங்கு வந்த முட்டுக்கட்டைகள் ஏராளம்.

அவர் ஒரு சமாதான தூதுவராக வந்தார் என்பதுடன் புன்சிரிப்புடன் எல்லோரையும் சந்தித்துவிட்டு திரும்பி போனவர் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார் என்பதானாலேயே அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதுவே வேறு ஒரு போராளியின் பெயராக இருந்திருந்தால் அது ஆரம்பத்துடனேயே தடைப்பட்டிருக்கும்

அதேநேரம் பிரித்தானியா கனடா மற்றும் அமெரிக்கா என்று எமது மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் அல்லது எம்மை இந்த நிலைக்கு உள்ளாக்கிய நாடுகளில் அல்லது படித்து பெரும் துறைகளில் எம்மவர் உள்ள நாடுகளில் இதை செய்யாதபோதும்

எம்முடன் எந்தவித தொடர்பும் அற்ற பிரான்ஸ் தேசத்தில் இதை சாதிக்க முடிந்ததை நினைத்து இந்த மண்ணில் வாழ்பவன் என்பதால் தலை வணங்குகின்றேன் இந்த மண்ணுக்கு.

நிழலி,

இங்கை தமிழ்த்தேசிய செயற்பாடுகள் ஏற்கனவே பூசாரிகளால் வரையறையற்ற காலத்துக்கு(கையில் அகப்பட்டிருக்கும் காசு முடியும் மட்டும்) குத்தகைக்கு எடுத்திட்டார்கள்!!! நாம, இதிலை தலையை போட்டால், மண்டையையும் போட வேண்டி வரும்!!

சில கிழமைகளுக்கு முன், திலீபனின் நினைவு தினம், லண்டனில் சிலரால்(குத்தகைகாரர்களின் ஒப்புதல் இன்றி) செய்யப்பட்டது, குத்தகைகார மேஸ்திரிக்கு பிடிக்கேலையாம்!! யாரை கேட்டு உந்த நிகழ்வை நடத்துகிறீர்கள் என்று பாய்ச்சலாம்! பலர் நிகழ்விற்கு போகவில்லை, அங்கு இதனால் பிரட்சனை வந்தாலும் என்று ...

முன்பு ... ஒவ்வொரு யூலை 27ம் இங்கு மிகப்பெரிய ஊர்வலம் நடைபெறும் ... அது 2000களில் சடுதியாக நிறுத்தப்பட்டது. அந்த யூலை இனக்கலவரங்கள் எம்மை யார் என்று சிங்களம் மீண்டும் மீண்டும் சொல்லியதால் ... நாமும் மறக்காதிருக்க நினைவு கூருகிறோம்!! அது நிறுத்தப்பட்டது தவறு என கருதிய சிலர், அந்த யூலை நிகழ்வை மீண்டும் யுத்தநிறுத்த காலத்தில் செய்ய முற்பட, தொலைபேசி மேல் தொலைபேசி அழைப்புகள், போய் சந்தித்தவர்களை மிரட்டல் கலந்த செய்ய முயல வேண்டாம் என்ற செய்தியும் கொடுக்கப்பட்டதாம்!!

ஏனப்பு, உந்த வம்பெல்லாம் .... யாழே போதும்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன், முந்தி ஆனந்தவிகடனில் நடிகைகள் பற்றி கிசுகிசு கதை எழுதியது நீங்களளோ? ஏல்லாம் தெரிந்தவன் போல எழுதித் தள்ளுறீங்கள். அது தான் சந்தேகத்தில கேட்டேன்.

நெல்லையன், முந்தி ஆனந்தவிகடனில் நடிகைகள் பற்றி கிசுகிசு கதை எழுதியது நீங்களளோ? ஏல்லாம் தெரிந்தவன் போல எழுதித் தள்ளுறீங்கள். அது தான் சந்தேகத்தில கேட்டேன்.

தூயவன், இந்த புலத்து பூசாரிகளின் ... கிசுகிசுக்கள் எழுத்தக்கூடியதாக இரகசியமாக இருப்பதாக தெரியவில்லை ... மாறாக பரகசியமாக ....!!! ... இன்றும் பதிவின் ஒரு நாற்றம் யாழில், இணைக்கப்பட்டு ... நல்லவேளை தூக்கப்பட்டு விட்டது!! .... நாற்றம் ....

  • தொடங்கியவர்

சு.ப. அவர்கள் ஒரு தனிமனிதனல்ல நெல்லையன்

அதேநேரம் இது ஒரு ஆரம்பந்தான்.

இதற்கே இங்கு வந்த முட்டுக்கட்டைகள் ஏராளம்.

அவர் ஒரு சமாதான தூதுவராக வந்தார் என்பதுடன் புன்சிரிப்புடன் எல்லோரையும் சந்தித்துவிட்டு திரும்பி போனவர் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார் என்பதானாலேயே அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதுவே வேறு ஒரு போராளியின் பெயராக இருந்திருந்தால் அது ஆரம்பத்துடனேயே தடைப்பட்டிருக்கும்

அதேநேரம் பிரித்தானியா கனடா மற்றும் அமெரிக்கா என்று எமது மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் அல்லது எம்மை இந்த நிலைக்கு உள்ளாக்கிய நாடுகளில் அல்லது படித்து பெரும் துறைகளில் எம்மவர் உள்ள நாடுகளில் இதை செய்யாதபோதும்

எம்முடன் எந்தவித தொடர்பும் அற்ற பிரான்ஸ் தேசத்தில் இதை சாதிக்க முடிந்ததை நினைத்து இந்த மண்ணில் வாழ்பவன் என்பதால் தலை வணங்குகின்றேன் இந்த மண்ணுக்கு.

பொதுவாக மாவீரர்களுக்கான வணக்க ஸ்தலமும் கூடவே எம் மடிந்துபோன எம் மக்களிற்கான நினைவு சின்னமும் ஒவ்வொரு நாட்டிலும் முடிந்தவரை அமைத்தே ஆகவேண்டும்.

சில இடங்களில் அதற்கு தடை எனின் தமிழர்களுக்கு என ஓர் நூலகமோ அல்லது பொது மண்டபமோ அமைத்து அதில் இந்த நினைவு சின்னங்களையும் சேர்த்து வைத்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது.

ஆரம்பகாலத்தில் எம்மவர்கள் வெளி நாடுகளில் கோயில் அமைக்கும் போது இவ்வாறான தந்திரோபாயங்களை மேற்கொண்டார்களாம்.

ஏன் இப்போதும் பள்ளிவாசல் அமைக்க இடம்கொடுக்காவிட்டால் இஸ்லாமிய சமூக பாடசாலை அமைக்கப்போகின்றோம் என்றுதானே இஸ்லாமியர்கள் இடம் கேட்டு அதில் வெற்றியும் பெறுகின்றார்கள்.

சிலை நிறுவியாயிற்று ஆனால் அதை காப்பதுதான் முக்கியம்.

விடுதலை போரை நாம் நட்டாற்றில் கையை விரித்து,--- தலைவர் பார்த்துக்கொள்வார், தமிழீழம் பெற்றுத்தருவார் என்று பார்த்து தான் ----நாம் எல்லாம் இழந்தோம்.

எமது பங்கு இல்லையெனில் வெறும் பூச்சியம் தான் மிஞ்சும்

Edited by சுனாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.