Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவில் நின்றவை

Featured Replies

நமக்குப் பிடித்த பாடல். விளக்கம் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

படம்: அன்னை

பாடியவர்: ஜே பி சந்திரபாபு

இசை: ஆர் சுதர்சனம்

பாடலாசிரியர்: கண்ணதாசன்.

புத்தியுள்ள மனிதரெல்லாம்

வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம்

மனமிருப்பதில்லை

மனமிருக்கும் மனிதரிடம்

பணமிருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே

வந்ததெல்லாம் சொந்தம்

பணமில்லாத மனிதருக்கு

சொந்தமெல்லம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே

காதல் கொழ்வதில்லை

காதல் கொண்ட அனைவருமே

மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே

சேர்ந்து வாழ்வதில்லை

சேர்ந்து வாழும் அனைவருமே

சேர்ந்து போவதில்லை

கனவு கானும் மனிதனுக்கு

நினைப்பதெல்லாம் கனவு

அவன் காணுகின்ற கனவினிலே

வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள்

அவளை பார்த்து சிரிப்பாள்

அவள் மனதில் யார் வருவார்

யாரை பார்த்து அழைப்பாள்?

http://music.cooltoad.com/music/song.php?id=262079

  • Replies 205
  • Views 32k
  • Created
  • Last Reply

பாடல்: இந்த உலகம் பலவிதம்

படம்: வேலைக்காரி

பாடியவர்: ஏ பி கோமளா

இசை: சுப்புராமன் சுப்பையா நாயுடு

பாடலாசிரியர்: உடுமலை நாராயணகவி

உலகம் பலவிதம்..இந்த உலகம் பலவிதம்..

இவர் அதிலேதான் ஒருவிதம்..உலகம் பலவிதம்..

இலைமறைந்த காயைப்போல இருப்பார் சிலபேர்.. * 2

எல்லாம் தெரிந்த மனிதர்போல ஏய்ப்பார் சிலபேர்.. * 2

உலகம் பலவிதம்..இந்த உலகம் பலவிதம்..

பொட்டுத்தடை மீசையோடு உருவங்கள் சிலதுண்டு

திருவுருவங்கள் சிலதுண்டு..

பட்டை நாமம் தீட்டுகின்ற பக்திமான்கள் உண்டு

பெரும் பக்திமான்கள் உண்டு..

கஸ்டப்பாடுபட்டிடாத காவடிகள் உண்டு

அன்னக்காவடிகள் உண்டு..

காக்காபிடித்து காலம்கடத்தும் காவாலிகளும் உண்டு

சுத்த காவாலிகளும் உண்டு..

உலகம் பலவிதம்.. இவர் அதிலேதான் ஒருவிதம்

உலகம் பலவிதம்..

ஓட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப்பணம் குடுத்து

ஊரார் முதலை கொள்ளையடிப்பார்..

இவர் ஊரார் முதலை கொள்ளையடிப்பார்..

அதை ஊதுவத்தி சாம்பிராணி சூடம் வாங்கி எரிப்பார்..

உண்ணாமலே செலவழிப்பார்..

பட்டம் பதவிக்கிரைப்பார்..கோயில் கட்டுதற்கும் செலவழிப்பார்..

இந்த உலகம் பலவிதம்..இந்த உலகம் பலவிதம்..

பேதமற்ற காதலென்றும் பிரியமாகப்பேசுவார்..

பெருமையாகப்பேசுவார்..

பெண்பிள்ளையை தவிக்கவிட்டே ஓடுவார்சிலர்.. *.2

நீதியில்லா உலகமிது.. நீதியில்லா உலகமிது..

நேர்மையற்ற உலகமிது..

ஜாதிமத சமயங்களால் சஞ்சலங்கள் சூழ்ந்த இந்த உலகம் பலவிதம்..

இந்த உலகம் பலவிதம்..

இவர் அதிலேதான ஒருவிதம்..உலகம் பலவிதம்..

http://music.cooltoad.com/music/song.php?id=262086

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ? ] * 3

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

ஆஆ.....

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வேணில் ஓடிவிடாமல் * 2

புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராதது ஏனோ

அருகில் வராதது ஏனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே

மறந்தே ஓடிடலாமா?

ஆஆ.......

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே

மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும் * 2

கனவாய் கதையாய் முடியும் முன்னே

அருகில் வராதது ஏனோ * 2

[அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ? ]* 3

வேணில் ஓடிவிடாமல் - என்று வரும் என நினைக்கிறேன்.

மேலும், மனதில் ஆசையை மூட்டிய பின்னே என்று வருவதுதான் சரியென்று நான் நினைக்கிறேன். ஏனெனில் - நிலவைப் பார்த்து அல்லிப்பூப்போன்ற ஒரு பெண் பாடுவதுபோன்ற ஒரு கற்பனை இப்பாடல் வரிகள் போலும். யாராவது எம் சந்தேகத்தை தீர்ப்பீர்களா?

அல்லிகா

படம்: தங்கமலை ரகசியம்

பாடியவர்: பி சுசீலா

இசை: ரி ஜி லிங்கப்பா

பாடலாசிரியர்: கு மா பாலசுப்ரமணியம்

அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ? * 3

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

ஆ..ஆ..

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியை பாராய்

புது மலர் வீணே வாடிவிடாமல் * 2

புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராததேனோ

அருகில் வராததேனோ?

(அமுதைப்பொழியும்)

மனதில் ஆசையை மூட்டிய பின்னே

மறந்தே ஓடிடலாமா?

ஆஆ..

மனதில் ஆசையை மூட்டிய பின்னே

மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும் * 2

கனவாய் கதையாய் முடியும் முன்னே

அருகில் வராததேனோ * 2

அமுதை பொழியும் நிலவே

நீ அருகில் வராததேனோ

அருகில் வராதாதேனோ?

http://music.cooltoad.com/music/song.php?id=262206

http://music.cooltoad.com/music/song.php?id=262210

அடடா அங்கிள் உங்கள் காலத்துப் பாடல்கள் எல்லாம் போட்டு அசத்துறீங்கள்.

உந்தப் பாடல்கள் எல்லாம் அப்பா ஒரே கேப்பார். :lol::lol:

எனக்கும் பிடிக்கும் ;) இணைப்புக்கு நன்றி :wink:

படம்: கார்த்திகை தீபம்

பாடியவர்: பி சுசீலா

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: ஆர் சுதர்சனம்

பாடலாசிரியர்: கண்ணதாசன்??

எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா.. * 2

உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா.. * 2

தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா.. * 2

இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே துன்பம் வரவில்லையா.. * 2

உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே துடிப்பது தெரியல்லையா..

உண்மையறிந்தும் உள்ளம் வருந்த நடப்பது தவறில்லையா..

(எண்ணப்பறவை)

ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா..

உன்னை உரிமையினாலே குழந்தையைப்போலே அள்ளி அணைத்திடவா..

அன்னையைப்போலே உன்னுடல்தன்னை வருடி கொடுத்திடவா..

நீ அமைதியுடன் துளில்கொள்ளும் அழகை ரசித்திடவா..

(எண்ணப்பறவை)

http://music.cooltoad.com/music/song.php?id=262358

http://music.cooltoad.com/music/song.php?id=229253

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஓர் பாடலை வருடக்கணக்காக தேடி வருகிறேன். யாராவது இந்த பாடலை வைத்துருப்பவர்கள் தந்துதவ முடியுமா.

பாடல்

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிஜமல்லவா (2)

நீ இல்லத வாழ்க்கை கனவல்லவா

மனோ பாடியது. 1989 அல்லது 1990 இல் வெளிவந்த பாடல்.

பி.கு. இப்பாடலை உங்களில் எத்தனை பேர் கேட்டீர்களோ தெரியாது :cry:

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...ghlight=#125198

யாரிடமாவது சிறைக்கதவுகள், விஷ்வரூபம் ஆகிய படப்பாடல்கள் இருந்தால் இங்கே இணைக்க முடியுமா..?

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...ghlight=#204358

1989ம் ஆண்டு பாடசாலையில் நண்பர் ஒருவரின் walkmanஇல் இந்த பாடலை கேட்டேன். சில ஆண்டுகள் கழித்து இப்பாடலை என்னையறியாமல் முணுமுணுத்துக்கொண்டிருந்தே

வணக்கம் தியாகம்

இந்தப் பாடல் உங்களைப் போலவே என் பாடசாலை நாட்களை நினைவுபடுத்தும் பாடல். உங்களைப் போலவே நிறைய நாள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் புண்ணியத்தில் எனக்கும் பாடல் விருந்து. இப்படம் நிழல்கள் ரவி நடித்தது, பாடல் போல் படம் பிரமாதம் அல்ல.

வணக்கம் வசம்பு

வெள்ளி விழா படப்பாடலான "காதோடுதான் " இதற்கு இசை வி.குமார். எம்.எஸ்.விஸ்வனாதன் அல்ல. இதே படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், உனக்கென்ன குறைச்சல் என்ற பாடலை வி.குமாரின் இசையில் பாடியிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

இழந்தென்றல் காற்று தாலாட்டும் நேரம்

எனை மீறி நெஞ்சம் உனை நாடுதே

வெண்மேகத்தேரில் விளையாட எண்ணி

ஏதேதோ ஆசை உண்டாகுதே

நீ எங்கு சென்றாலும் என் உள்ளமே

நீ போகும் வழி மீது பூத்தூவுமே

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நதியாக நானும் பிறந்தாலும் போதும்

உன் பேரைச்சொல்லி நடை போடுவேன்

மண்ணாக நானும் மறு ஜென்மம் கொண்டால்

உன் பாதம் தாங்கும் நிலமாகுவேன்

என்னாளும் தேயாத சந்ரோதயம்

என் நெஞ்சில் ஒளி வீசும் தேவாலயம்

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

நான் பாடும் பாடல் நீயல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீயே என் வாழ்வின் நிழலல்லவா

நீ இல்லாத வாழ்க்கை கனவல்லவா

யாழ் அண்ணைமாரே, தங்கச்சிங்களா

கீழ் வானம் சிவக்கும் படத்தில் வரும் " கடவுள் நினைத்தான், மணநாள் கொடுத்தான்" பாடலையும், தைப்பொங்கல் படத்தில் வரும் "தீர்த்தக்கரை தனிலே என்ற ஜென்ஸி பாடிய பாடல் ( ஜேசுதாசின் அல்ல) இந்த இரண்டு பாடலையும் தேடுகின்றேன்.

நான் கேட்ட பாடல்களைத் தந்தால் மதன் மற்றும் தூயா கேட்ட " ஏலோலங்கிளியே என்னைத் தாலாட்டும்" எண்ட பாட்டு இலவசமா இணைததில அனுப்புவன். விஷ்ணு முந்தி அனுப்பின குவாலிட்டி இல்லாத (தூசுக்குள்ள தேடியெடுத்தது) சரக்கில்லை. நல்ல ஒறிஜினல் தரத்தில இருக்கு.

எங்க பாப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" ஏலோலங்கிளியே என்னைத் தாலாட்டும்" எண்ட பாட்டு இலவசமா இணைததில அனுப்புவன். விஷ்ணு முந்தி அனுப்பின குவாலிட்டி இல்லாத (தூசுக்குள்ள தேடியெடுத்தது) சரக்கில்லை. நல்ல ஒறிஜினல் தரத்தில இருக்கு.

:):D:lol: என்ன செய்கிறது.. என்கிட்ட தரமான பாடல் இருக்கவில்லை. ஆனால் தூயா கட்டாயம் வேணும் என்று அழுதிட்டு இருந்திச்சு... அதுதான் இணைக்க வேண்டியதா போச்சு.. :roll:

படம்: ஹரிதாஸ்

பாடியவர்: என் சீ வசந்தகோகிலம்

இசை: பாப்பனசம் சிவன்

பாடவாசிரியர்: பாப்பனசம் சிவன்

கதிரவன் உதயம் கண்டேன்..

கமலங்கள் முகம் மலரும்..

கதிரவன் உதயம் கண்டே..ன்..

கமலங்கள் முகம் மலரும்..ம்.. ம்..

கதிரவன் உதயம் கண்டே..ன்..

கமலங்கள் முகம் மலரும்..

நதி தடங்கள் நீராடும்..

நதி தடங்கள் நீராடும்..

நங்கையர் குடங்களுடன்..

ஆ..ஆ..ஆ..

நதி தடங்கள் நீராடும்..

நங்கையர் குடங்களுடன்..

கலகலவெனும் பலவித ஒலியுடனே..

சகல உலகும் மிகு குதூகலமுடனே..

கலகலவெனு..ம் பலவித ஒலியுடனே..

சகல உலகும் மிகு குதூகலமுடனே..

கூடுமே.. ஆ.. ஆ..

கூடுமே.. பரமன் அருள் புகழ்ந்து பாடுமே..

பரிவுடன் இசை திசை போடுமே..ஏ.. ஏ.. ஏ..

கூ..டு..மே.. பரமன் அருள் புகழ்ந்து பாடுமே..

பரிவுடன் இசை திசை போடுமே..

மகிழ்ந்த துள்ளி விளையாடுமே..

மகிழ்ந்த துள்ளி விளையாடுமே..

இளம் கன்றின் குரல் கேட்டு..

கனிந்து வரும் பசுவும்போலே..ஏ.. ஏ.. ஏ..

கனிந்து வரும் பசுவும்போலே..

அன்பு சுரந்த மனிதரை கானேநே..

கனிந்து வரும் பசு..போ.. ஓ.. லே..

அன்பு சுரந்த மனிதரை கானேநே..

கதிரவன் உதயம் கண்டேன்..

http://music.cooltoad.com/music/song.php?id=262544

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நலமா?

தயவுசெய்து வா கண்ணா வாவிலிருந்து ஒரு காலத்திலே என்னை கட்டிப்போட ஒரு பாடலும் அதே படத்திலிருந்து வேறுபாடல்கள் இருநஇதுால் அவையும் இணையுங்கள் நன்றி

http://www.coolgoose.com/music/song.php?id=262546

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தியாகம் எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

S.K.பரராஜசிங்கம், M.A.குலசீலநாதன் பாடிய பாடல்கள் எங்கே கிடைக்கும்

யாழ் அண்ணைமாரே, தங்கச்சிங்களா

கீழ் வானம் சிவக்கும் படத்தில் வரும் " கடவுள் நினைத்தான், மணநாள் கொடுத்தான்" பாடலை தேடுகின்றேன்.

நான் கேட்ட பாடல் தந்தால் மதன் மற்றும் தூயா கேட்ட " ஏலோலங்கிளியே என்னைத் தாலாட்டும்" எண்ட பாட்டு இலவசமா இணைததில அனுப்புவன். விஷ்ணு முந்தி அனுப்பின குவாலிட்டி இல்லாத (தூசுக்குள்ள தேடியெடுத்தது) சரக்கில்லை. நல்ல ஒறிஜினல் தரத்தில இருக்கு.

எங்க பாப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ் வானம் சிவக்கும் படத்தில் வரும் " கடவுள் நினைத்தான், மணநாள் கொடுத்தான்"

கீழ் வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்யலாம்.

http://ds05.cooltoad.com/music/send.php?id...4c0c179f4617fe3

அல்லிகா

மிகவும் நன்றிகள் அல்லிகா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தியாகம் எனக்கு மிகவும் பிடித்தபாடல்

±ÉìÌõ À¢Êò¾ À¡¼ø¸û «¨Å.

ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் பாடல்களை தரவேற்றம்செய்வது சரியல்ல வீண்விரயம் என்று நினைத்து சில தொடுப்பு கொடுத்திருந்தேன்.. இவற்றை இறக்கம் செய்து பார்த்தபோதுதான் அவற்றுடைய தரம் புரிந்தது.. எனவே என்னுடைய நினைவில் நின்றவையில் ஒண்ணாயிருக்க கத்துக்கணும் திரும்பவும் ஏற்றியிருக்கிறேன்.. தேவையானோர் மீண்டும் தரவிறக்கம் செய்யவும்..

http://music.cooltoad.com/music/song.php?id=262604

படம்: அன்புக்கரங்கள்

பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்

இசை: ஆர் சுதர்சனம்

பாடலாசிரியர்: வாலி

ஒண்ணனாயிருக்க கத்துக்கணும்.. அந்த

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

காக்காக்கூட்டத்தைப் பாருங்க.. அதுக்கு

கத்துக்கொடுத்தது யாருங்க..

(ஒண்ணனாயிருக்க)

வீட்டைவிட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்..

அந்த நாலும்தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லயிருக்கலாம்..

உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா..

அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்தமுடியுமா..

(ஒண்ணனாயிருக்க)

தன்னைப்போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே..

அந்தத் தன்மைவர உள்ளத்திலே கருனை வேண்டுமே..

உன்மை போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை..

இதைப் புரிந்துகொண்ட ஒருவனைப்போல் மனிதன்வேறில்லை..

(ஒண்ணனாயிருக்க)

கொஞ்சநேரம் காற்றடித்து ஓய்ந்துபோகலாம்..

வானில் கூடிவரும் மேகங்களும் கலைந்துபோகலாம்..

நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்..

நாம் நேர்வழியில் நடந்துசென்றால் நன்மையடையலாம்..

ஒண்ணனாயிருக்க கத்துக்கணும்.. அந்த

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

படம்: சிவந்த மண்

பாடியவர்கள்: சௌந்தரராஜன் சுசீலா

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

ஓரு நாளிலே.. என்னவாம்..

உறவானதே.. தெரியுமே..

கனவாயிரம்..ம்..ம்..ம்..

நினைவானதே.. ம்.. அ..ஹ..ஹ..

ஓரு நாளிலே.. உறவானதே..

கனவாயிரம்.. நினைவானதே..

வா வெண்னிலா.ஆ.. ஆ..

வா வெண்னிலா..இசையோடுவா..

மழைமேகமே..அழகோடுவா..

மகராணியின் மடிமீதுவா..

மகராணியின் மடிமீதுவா..

வந்தால்.. அணைக்கும்..

சிலிர்க்கும்.. உகூம்..துடிக்கும்..

நாளை வரும்..நாளை..என

நானும் எதிர்பார்த்தேன்..

காலம் இது காலம்..என

காதல் மொழி கேட்டேன்..

போதை தரும் பார்வை..எனை

மோதும்..அலை மோதும்.. 2

போதும் எனக்கூறும்வரை..

பூவே விளையாடு..

வரும் நாளெல்லாம்..இது போதுமே.. 2

ஓரு நாளிலே.. உறவானதே..

கனவாயிரம்.. நினைவானதே..

மஞ்சம்..இது மஞ்சம்..

என் மார்பில் விழிமூடு..

கொஞ்சும் இதழ்..சிந்தும்..

என் நெஞ்சில் ஒரு கோடு..

தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.. 2

மெஞ்சும் சுகம் யாவும்..வரவேண்டும் துணையோடு..

வரும் நாளெல்லாம்..இது போதுமே.. 2

ஓரு நாளிலே.. உறவானதே..

கனவாயிரம்.. நினைவானதே..

http://music.cooltoad.com/music/song.php?id=262639

படம்: பாசவலை

பாடியவர்: சீ எஸ் ஜெயராமன்

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்

இந்த ஆட்டுக்கும்.. இந்தா..இந்தா..புர்ர்ர்ர்ர்ர்ர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பழையபாடல்களுக்கு இருக்கும் ஆர்வம் என்னை இந்த முயற்சியில் ஆர்வப்படுத்துகின்றது. இந்தப்பாடல் 30 வருடங்களுக்கு முன்னர் வந்தபாடல் இணையத்தில் மட்டும் கேட்ககூடியவாறு இணைத்திருக்கின்றனர். அதை பதிவு பண்ணி சற்று மெருகேற்றி இணைத்துள்ளேன். நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து இப்படியான பாடல்களை இணைக்க முயல்வேன்.

இணையத்தில் மட்டும் கேட்ககூடியபாடல்கள் உங்களுக்கு பிடித்து தேவைப்பட்டால் அந்தபாடலின் பெயரையும் லிங்கையும் எனக்கு தனிமடல்மூலம் அனுப்பிவிடுங்கள்

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சல என சாலையிலே.

படம் : தெரியாது

பாடியவர் : தெரியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.