Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் டக்ளஸுக்கு இந்தியா அழைப்பு

Featured Replies

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அழைப்பு விடுத்ததாக அக்கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த எஸ். எம்.கிருஷ்ணா நாடு திரும்பும் தருணத்தில் அவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா தாம் அவசரமாக நாடு திரும்ப வேண்டியிருப்பதால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதபடி தமிழ் கட்சிகளின் அரங்கத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்திக்க முடியாமல் போயுள்ள விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைப் புரிந்து வரும் இந்திய அரசிற்கு தமிழ் மக்களின் சார்பாகவும் ஒரு அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பாகவும் நன்றி தெரிவித்திருந்ததோடு தொடர்ந்தும் தமிழ் மக்களின் மீள் குடியேற்றப்பணிகள் மற்றும் வாழ்வாதார வசதிகளுக்கான உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

கடந்த தடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு இந்தியா வந்திருந்த சமயம் தாம் விடுத்திருந்த கோரிக்கையினை அடுத்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தபடி இடம்பெயர்ந்து இடர்படும் ஈழத்தமிழர்களுக்கான ஐம்பதாயிரம் வீடமைப்புத் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டமை என்பது ஈழத்தமிழர்கள் மீதான இந்தியாவின் அக்கறையினை வெளிப்படுத்தியிருப்பதோடு மட்டுமன்றி இது இலங்கை இந்திய உறவை மேலும் பலப்படுத்தவும் வழி சமைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இலங்கைத்தீவில் நிலவும் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வு என்பது 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே ஆரம்பம் ஆகும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அவர்கள் தெரிவித்திருந்தமை குறித்து கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது குறித்து தான் பெரிதும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவதாகவும் இதையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தங்களின் இந்த கருத்தானது ஜனாதிபதி அதை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றது என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தினால் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளிப்பதற்கென தயாரித்து வைத்திருக்கும் மகஜரை இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ஊடாக தமிழ் கட்சிகளின் அரங்கம் அனுப்பி வைக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12158-2010-11-30-16-59-36.html

இதேவேளை, இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைப் புரிந்து வரும் இந்திய அரசிற்கு தமிழ் மக்களின் சார்பாகவும் ஒரு அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் சார்பாகவும் நன்றி தெரிவித்திருந்ததோடு தொடர்ந்தும் தமிழ் மக்களின் மீள் குடியேற்றப்பணிகள் மற்றும் வாழ்வாதார வசதிகளுக்கான உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

கடந்த தடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு இந்தியா வந்திருந்த சமயம் தாம் விடுத்திருந்த கோரிக்கையினை அடுத்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தபடி இடம்பெயர்ந்து இடர்படும் ஈழத்தமிழர்களுக்கான ஐம்பதாயிரம் வீடமைப்புத் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டமை என்பது ஈழத்தமிழர்கள் மீதான இந்தியாவின் அக்கறையினை வெளிப்படுத்தியிருப்பதோடு மட்டுமன்றி இது இலங்கை இந்திய உறவை மேலும் பலப்படுத்தவும் வழி சமைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

மக்களின் மறுவாழ்வு மீள் குடியேற்றம் போன்றவற்றில் செயலாளர் நாயகத்தின் பணிகள் மேன் மேலும் தொடரவேண்டும்.

கொலைக் குற்றவாளியை இந்தியாவுக்கு அழைத்ததன் மூலமும், கொலைக் குற்றச் செயல்களில் தன்னை விடுவிக்கும்படி டக்லஸ் கேட்டதன் அடிப்படையிலும் இந்தியர்கள் காட்டுமிராண்டிகள், கீழ்த்தரமானவர்கள் என்பதை உறுதிபடுத்தப்படுகிறது.

கடத்தல், கப்பம், படுகொலை, .. மன்னன் டக்லஸ், இந்திய வெளிவிவகார அமைச்சரை நேரடியாக சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்ததன் மூலம் கடத்தல், கப்பம், படுகொலை, .. மன்னன் டக்ளசின் மனதில் இந்தியாவில் இந்த குறுக்கு வேலைகள் சாத்தியம் என்ற எண்ணம் நிறைந்துள்ளதைக் காட்டுகிறது.

கடத்தல், கப்பம், படுகொலை, .. மன்னன் டக்ளசின் இந்தக் கோரிக்கை, குற்றவாளிக்கு அழைப்பு என்பன இந்தியர்கள் காட்டுமிராண்டிகள், கீழ்த்தரமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களின் மறுவாழ்வு மீள் குடியேற்றம் போன்றவற்றில் செயலாளர் நாயகத்தின் பணிகள் மேன் மேலும் தொடரவேண்டும்.

எங்கை?எதுக்கை? என்னெண்டு?என்னத்தாலை?ஆருக்கு?எதுக்காலை? சும்மாய் பகிடி விடாதேங்கோ.

பூஞ்சணம் பாசி புடிச்ச கோயில் சிவருக்கு சுண்ணாம்பு அடிக்கிறதுக்கும் மகிந்தவிட்டை கேக்கவேண்டி கிடக்குதாம் :rolleyes:

எங்கை?எதுக்கை? என்னெண்டு?என்னத்தாலை?ஆருக்கு?எதுக்காலை? சும்மாய் பகிடி விடாதேங்கோ.

பூஞ்சணம் பாசி புடிச்ச கோயில் சிவருக்கு சுண்ணாம்பு அடிக்கிறதுக்கும் மகிந்தவிட்டை கேக்கவேண்டி கிடக்குதாம்

பகிடி இல்லை... சர்வதேசம் அங்கீகரித்து தமிழீழம் உருவாகும் போது செயலாளர் நாயகம் தான் அதற்கு தலைவராக வர நிறைய சந்தர்ப்பம் இருக்கின்றது. அமைச்சர் மீதான அவதூறுகள் வருத்தமளிக்கின்றது.

  • தொடங்கியவர்

ஈராக்கில் நேச நாடுகள் அங்கு அணு ஆயுதம் மாதிரி மனித குலத்தை அழிக்ககூடிய பாரிய ஆயுதங்கள் இருக்கலாம் ( என் பொய் சொல்லி ) உள்ளே சென்று அங்கு இருந்த சதாம் ஹுசைனை அகற்றினர். பின்னர் வெளிநாடுகளில் உள்ள, மேய்கைத்திய நாடுகளில் இருந்தவர்களை கொண்டு தமது கொள்கை சார்பான அரசை நிறுவினர்.

அப்கானிஸ்தானில் உள்ள அதிபர் அக்மத் கார்சாய் கூட அமெரிக்காவில் இருந்த வந்தவர்.

காலம் வரும்போது மேலைநாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசையே விரும்பலாம்.

காலம் வரும்போது மேலைநாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசையே விரும்பலாம்.

தாயகத்தில் வாழும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்களையே மேலைநாடுகளும் விரும்பும்.

  • தொடங்கியவர்

"அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா அழைப்பு விடுத்ததாக அக்கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

இந்தியாவும் இதில் சேர்ந்து வெளியிட்டதா என்பதே தெரிய வேண்டியது. இந்தியா இந்த அறிக்கையை மறுத்தால் இது செயலாளர் நாயகத்தின் பொய் அறிக்கை என்பது தெரியவரும். அண்மையில் நேபாளம் சம்பந்தமாக பீரிஸ் சொன்ன ஒரு கருத்து பின்னர் அந்த அரசால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பேசாமல் இருந்தால் அதுவும் சேர்ந்து தான் இந்த அறிக்கையை விட்டது என்பது நம்பக்கூடியதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் மறுவாழ்வு மீள் குடியேற்றம் போன்றவற்றில் செயலாளர் நாயகத்தின் பணிகள் மேன் மேலும் தொடரவேண்டும்.

தனது, இனத்தை சிங்களவனுக்கு காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால்... மீள் குடியேற்றம், மறுவாழ்வு என்னும் பேச்சுக்கே... இடமிருந்திராது.

இழுக்கிற தேரை, ஒற்றுமையாக இழுக்கத்தெரியாத.... புறம் போக்குகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.