Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனுக்கு நோபல் பரிசு கிடைக்குமா? வைரமுத்து ஆதங்கம்?

Featured Replies

கோடம்பாக்கம் திரைப்பாடல்களின் திருவிழாவிற்குத் தயாராகிவிட்டது. கவிப்பேரரசு வைரமுத்து தன் தங்கத் தமிழால் எழுதி முடித்த ஏழாயிரம் திரைப் பாடல்களிலிருந்து இலக்கியச் செழுமை கொண்ட ஆயிரம் பாடல்களை தானே தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார்.

ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் அந்தப் பாடல் உருவான சூழலை அழகு நடையில் எழுதியிருப்பது படிக்கப் படிக்க சுவாரஸ்யம். மரபு, நவீனம் இரண்டையும் குழைத்து தனக்கென்று தனி கவிதை மொழியை உருவாக்கிக் கொண்ட வைரமுத்துவின் இந்த ஆயிரம் பாடல்களையும் இசையில்லாமல் கூட வாசிக்கும் வகையில் வடிவமைத்திருப்பது சிறப்பு.

ஆயிரம் பாடல்கள் என்ற இந்தத் தொகுப்பிற்கு முதல்வர் கலைஞர் ‘‘வைரமுத்து எங்கள் குடும்பத்தோடு பழகி ஐக்கியமாகிவிட்டார். அவரை நான் பாராட்டுவதும் அதற்காக என்னை அவர் வணங்கி மகிழ்வதும் அண்ணனுக்கும் தம்பிக்குமிடையே அவ்வளவு அழகாகத் தோன்றவில்லை. அவரது உயரம் எனக்குத் தெரியும். அவர் மேலும் மேலும் உயர்வார் என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது’’ என்று முன்னுரை எழுதியிருப்பது கவிஞருக்கு கலைஞர் சூட்டிய மகுடம்.

5 தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், மூன்று பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என்று எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது, பச்சைத் தமிழரின் இந்தப் பாச முத்தம். கவிஞரிடம் பேசினோம்.

‘சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு’ என்று எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் இப்போது இருப்பது சிகரத்திலா? வானத்திலா?

‘‘(அட்டகாசமாகச் சிரிக்கிறார்....) நான் இன்னும் இருப்பது அடிவாரத்தில். இங்குதான் நிறைய மூலிகைகள் கிடைக்கும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒரு கவிதையில் எழுதியிருந்தார் ‘சிகரத்தில் என்னை ஏற்றி வைக்காதீர்கள்; அங்கு வசிப்பதற்கு இடமில்லை’ என்று. அதனால் எனக்கு அடிவாரம்தான் வசதி. இந்த அடிவாரத்தில் தான் நான் மக்களோடு இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். அடிவாரத்தில் தான் விவசாயம் செய்வதற்கு வசதி அதிகம். அதனால் நான் ஒரு மொழி விவசாயியாய் அடிவாரத்தில் இருக்க ஆசைப்படுகிறேன்.’’

அதிகமாக முதலமைச்சரோடுதான் இருக்கிறீர்கள். உங்கள் எதிர்காலம் அரசியலிலா? இலக்கியத்திலா?

‘‘இந்தக் கேள்விக்கு இரண்டு வகையாக பதில் சொல்லலாம். ஒன்று சாமர்த்தியமாக பதில் சொல்வது. மற்றொன்று சத்தியமாக பதில் சொல்வது. பொதுவாக நான் கேள்வி பதில்களை கவனிக்கிறபோது பெரும்பாலும் சாமர்த்தியமான பதில்கள்தான் சொல்லப்படுகின்றன. சாமர்த்தியமான பதில்கள்தான் ரசிக்கப்படுகின்றன. சத்தியமான பதில்கள் அதிகம் சொல்லப்படுவதுமில்லை. ரசிக்கப்படுவதுமில்லை. ‘அது காலத்தின் கையில் இருக்கிறது’ என்று சொன்னால் அது சாமர்த்தியமான பதில். இந்தக் கேள்விக்கு என் சத்தியமான பதில் என்னவென்றால் என்னுடைய வாழ்வியல் மதிப்பீடுகளுக்கும், இயல்புகளுக்கும் ஆன களம் இதுதானா என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கிறது. இதில் நிறைய சூழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. சத்தியத்துக்கு விரோதமான விஷயங்களில்கூட சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயங்கள் நிறைய நேருகின்றன. அரசியலுக்கான தேவைகளும் பிறவிக் குணங்களும் ஒரே புள்ளியில் ஒத்துப்போகுமா என்ற நம்பிக்கை இதுவரையில் ஏற்படவில்லை. ஏற்படும் சூழல் வருமா பார்ப்போம். ஆனால் ஒன்று, களத்தில் இறங்கினால் ஒரு துறவு மனப்பான்மையோடுதான் இறங்கவேண்டியிருக்கும். துறவிக்குதான் எதுவுமே துரும்பு.’’

அரசவைக் கவிஞர் பொறுப்பு இன்னும் உங்களுக்குக் கிடைக்காதது பற்றி?

‘‘அரசவைக் கவிஞர் பொறுப்பு என்பது ஒரு கவிஞருக்குச் செய்யப்படுகிற மரியாதை என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. நாமக்கல் கவிஞர், கவியரசு கண்ணதாசன் போன்ற பெருமக்களெல்லாம் அதில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு ஜனநாயகத்தில் அரசவைக் கவிஞருக்கு என்ன பொறுப்பு இருக்க முடியும் என்ற கேள்வி எனக்கிருக்கிறது. ஒரு மன்னர் அவையில் அரசவைக் கவிஞர் பொறுப்பு என்பது வேறு. ஒரு ஜனநாயகத்தில் அரசவைக் கவிஞர் பொறுப்பு இன்னும் வரையறுக்கப்படவில்லை. பொறுப்பு என்ன என்பதை வரையறுக்கப்படாத ஒரு பதவிக்கு நான் எப்படி ஆசைப்பட முடியும்?’’

தமிழுக்கு நோபல் பரிசு என்பது கனவாகவே இருக்கிறதே?

‘‘இல்லை... இல்லை. அப்படியெல்லாம் நான் கருதவில்லை. ஏனென்றால், முப்பது லட்சம் பேசுகிற ஒரு மொழி கூட நோபல் பரிசு பெற்றிருக்கிறது. உலகத்தின் மூத்த மொழிகளில் ஒன்றாகவும், செம்மொழிகளில் ஒன்றாகவும், உலக நாகரிகத்திற்கு பங்களிப்புச் செய்த மொழிகளில் ஒன்றாகவும் இருக்கிறது தமிழ். இந்த நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ள தமிழ் மொழிக்கு அந்த முழுத்தகுதியும் இருக்கிறது. நம்மவர்கள் இன்னும் நம்மையே மதிக்கவில்லை. நம்மை நாம் மதித்து முன்மொழிவதற்கு ஆள் இல்லை. ஒருவர் இன்னொருவரைப் பார்த்து வியந்து பார்க்கிற அந்த கலாசாரமே இன்னும் வரவில்லை. கலைமாமணி பட்டம் பெற்றாலே பக்கத்து வீட்டுக்காரனுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. பத்மஸ்ரீ பட்டம் பெற்றால் பக்கவாதமே வந்து படுத்துவிடுகிறார். முதலில் நம்மிடமிருந்தே நாம் மீள வேண்டும். அப்போதுதான் தமிழை உலகத்திற்கு ஏற்றிச் செல்ல முடியும். பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், கலாசார நிறுவனங்கள் ஆகியவற்றுக்கெல்லாம் இதில் பொறுப்பு இருக்கிறது. தமிழில் சிறந்த படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உலகத்திற்கு இன்னும் போதுமான அளவுக்கு அறிமுகப்படுத்தவில்லை. சங்க இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்ட அளவிற்கு இன்னும் நவீன படைப்புகள் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே, நோபல் பரிசு தமிழுக்கு எட்டாதது தமிழரின் தவக்குறைவே தவிர தமிழின் தரக்குறைவு அல்ல.’’

திரைப்பாடல்கள் தொகுப்பு என்பதால் கேட்கிறோம், இளையராஜாவை இந்த விழாவிற்கு நீங்கள் அழைப்பீர்களா?

‘‘அழைக்காமல் இருக்க மாட்டேன். ஏனென்றால் அவர் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுவரைக்கும் யாரோடும் பகிர்ந்துகொள்ளாத சம்பவத்தை குமுதத்தில் பதிவு செய்கிறேன். என் மூத்த மகன் மதன்கார்க்கி திருமணத்திற்கு இளையராஜாவுக்கும் அழைப்பிதழ் தர ஆசைப்பட்டேன். மிகுந்த மனப் போராட்டத்திற்குப்பிறகு இளையராஜாவின் மனைவி, சகோதரி ஜீவாவுக்கு தொலைபேசியில் சொல்லிவிட்டு அவர்களை அழைக்க அவர் வீட்டுக்குச் சென்றேன். 24 ஆண்டுகளுக்குப்பிறகு அவர் வீட்டுப்படியை மிதிக்கிறேன். முறைப்படி அழைப்பிதழ் கொடுத்தேன். ‘திருமணத்திற்கு வரவேண்டும்’ என்று மனப்பூர்வமாக இருவரையும் கேட்டுக்கொண்டேன். ஜீவா மட்டும் வந்தார். இளையராஜா வரவில்லை. நான் மிகவும் வாடிப் போனேன். அதனால் கபிலன் திருமணத்திற்கு அவருக்கு நான் அழைப்பிதழே அனுப்பவில்லை. ஆனால், ஆயிரம் பாடல்களின் விழாவிற்கு அழைப்பு அனுப்புவேன். ஏனென்றால் என் திரைத்தமிழுக்கு முதலில் இசையமைத்த இசைவாணர் அவர்தான். என் வளர்ச்சிக்கு துணையாய் இருந்தவர் அவர்தான். அழைப்பிதழ் அனுப்புவேன். வந்தால் மகிழ்வேன். மரியாதையும் செய்வேன்.’’.

  • கருத்துக்கள உறவுகள்

karunanidhi.nodedisplay.jpgoscar-award.gifknidhi.jpg

தமிழனுக்கு, ஒஸ்கார் விருது கொடுப்பதென்றால்........

மூன்று மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்த கலைஞர், நடிகர் கருணாநிதிக்குத் தான் கொடுக்க வேண்டும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ! சிலநேரம் நீங்கள் சொல்வது பலித்துவிடும். உண்மையாகவே மிகக் குறைந்த நிமிடங்கள் உன்னாவிரதமிருந்தவர் என்று கொடுத்துவிடப் போகின்றார்கள்!! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

knidhi.jpg

தமிழனுக்கு, ஒஸ்கார் விருது கொடுப்பதென்றால்........

மூன்று மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்த கலைஞர், நடிகர் கருணாநிதிக்குத் தான் கொடுக்க வேண்டும்.

.

கிழடு தன்ர பின்பக்கத்துக்கு காத்தடிச்சு இனப்படுகொலையை மறைச்சுக்கொண்டிருக்கு..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.