Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.

அழகிய கனவுகளாலும்

ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும்

செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு.

பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த

24.12.10 அதிகாலை 5மணியோடு

அவனது வாழ்வு முடிந்து போயிற்று.

காரணம் அறியப்படாது

அவனது கனவுகளை அழித்துக் கொண்டு

காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில்

தலைசிதறிக் கதை முடிந்து

30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான்.

உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது

கதை முற்றுப் பெற்றது.

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத்

தன்னையழித்தானாம்….!

விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி…..

கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும்

பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய

நண்பர்கள் மூலமாய் அவன் செத்துப்போன கதை

செவிகளில் எட்டியது.

ஏன்…? எதற்கு….? எப்படி….?

கேள்விகளால் அவன் மரணம் துளையிடப்பட்டுக்

காரணம் அறியப்படாமல் வினாக்குறிகள் நீண்டு

அவனது விதிபற்றிய இரங்கல்களும்

நினைவு மீட்டல்களும்

புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது……

கோளையென்கின்றனர் சிலர் அவனைக்

குடிகாரனென்கின்றனர் சிலர்,

நல்ல வேலையில்லையென்றும் சிலர்

காதல் தோல்வியென்கின்றனர் இன்னும் சிலர்

அர்த்தம் புரியாமல் நிகழ்ந்த அவனது சாவுபற்றி

அந்தரிக்கும் அவன் உறவுகளின் துயர் நடுவில்

நின்று சிலர் இப்படியும் ஈனமாய் சொல்கின்றனர்…..

‘‘எனக்கு எண்ணாயிரம் யூரோ எனக்குப் பதினைந்தாயிரம் யூரோ‘‘

கடன்கொடுத்தோமென்று கதைவிடுவோர்

எதுவுமில்லா ஒருவனிடம் ஆயிரமாய் கொடுத்தோமென்றது

கதையல்ல நிசம்.

அவனது இறுதிப் பயணம் கூட

இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.

நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்

கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்

எங்கே போயினர்…..?

வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்

தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

பிறந்தவனை இறுதிப் பயணம் அனுப்பி வைக்க

கூடப்பிறந்தவர்களுக்குக் கூடக் கைகொடுக்க ஆளின்றிக்

அட்டைகளாய்க் கழன்றது நட்பெல்லாம்…..

ஆட்களிருந்தும் அனாதையாய் போனவன் பற்றி

அவனது அக்காக்களின் கண்ணீரில்

கடைசி வரை நட்பும் கடைசியிலும் உதவாத நட்பும்

வெளிறிக் கொண்டிருக்க – அவன்

என்றென்றும் போலக் கள்ளமற்ற சிரிப்போடு

படமாய்த் தொங்குகிறான்.

குழந்தையாய் அவன் உலவியது முதல்

அவனும் நாங்களும் எங்கள் வைரவர் ஆல்விழுதில்

ஊஞ்சலாடி அடிபட்டுக் கோபம் போட்டு

மண்வீடு கட்டி மண்சோறு காய்ச்சிய பிள்ளைப்பருவம்

நினைவுகளாய் மறக்க முடியாது

மனசோடு அவன் ஞாபகங்கள்

மழையாய்ப் பெய்கிறது.

போய்வா என்றவன் சாவைப் போக்காட்ட முடியாமல்

வாழ்கிறான் எங்கள் ஞாபகத்தில்……

இனிவருவாயென்றும் எம்முடன் வாழ்வாயென்றும்

எழுத முடியவில்லையடா……!

இனியொரு பிறவி உண்டாயின் பிறப்போம்

நாங்கள் பிறந்து நாங்கள் வாழ்ந்த

சமாதிகோவிலடிச் செம்பாட்டுப் புழுதியில்….

சண்டையிடாமல் கோவம் போடாமல்

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும்

ஞாபகம் கொள்வோம்.

05.01.2010

(24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்த உறவுக்கு இது சமர்பணம்)

(யாழ்மாவட்டம் வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள செம்பாட்டுமண் கிராமம் குப்பிளான். குப்பிளானின் வடக்கேயமைந்த குறிச்சியின் பெயர் சமாதிகோவிலடி. சரவணைச்சாமியார் என்றொரு சாமியார் சமாதியடைந்தமையால் சமாதிகோவிலடியெனப் பெயர்மாறியதாக அப்பு ஆச்சியின் கதைகள் சொல்கிறது. அந்தச் சரவணைச்சாமியார் சமாதியான பூமியில் பிறந்து அகாலமாய் இறந்து போனவனை இக்கவிதையால் நினைவு கொள்கிறேன்)

//

அவனது இறுதிப் பயணம் கூட

இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.

நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்

கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்

எங்கே போயினர்…..?

வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்

தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

//

அருமையான கவிதை அக்கா! ஆமா எனக்கு நெடுநாளா ஒரு சந்தேகம்....முகப்புத்தகத்தில் இருக்கிற சாந்தி அக்கா நீங்கதானே.....?

Edited by நெருப்பு நீலமேகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை அக்கா! ஆமா எனக்கு நெடுநாளா ஒரு சந்தேகம்....முகப்புத்தகத்தில் இருக்கிற சாந்தி அக்கா நீங்கதானே.....?

கனநாள் சந்தேகமா :lol:மூஞ்சிப்புத்தகத்தில் நானும் இருக்கிறேன். இங்கு பதிவிடும் விடயங்களை மூஞ்சிப்புத்தகத்திலும் பதிவிடுவேன். அந்தப்பதிவுகளை இடும் சாந்தியென்றால் அது நான்தான் நெருப்பு நீலமேகம்:

அக்கா உங்கள் முல்லைமண் என்ட வலைபூவின் கனநாள் ரசிகன் .. ஆனால் இப்போது தான் தெரியும் அது தாங்கள் வலைபூ என்டு..அக்கா எனது வாழ்த்துக்கள் , உங்கள் பணி மேன் மேலும் தொடர வேண்டும் ,

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

வாழ்க தமிழ்

நன்றி

என்றும் அன்புடன்

விஜயகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்தவனின் ஓராண்டு நினைவுநாள் இன்று.

deathnotice01012010.jpg

30வயதில் வாழ்வை முடித்துக் கொண்டு போன உறவே உன்னை ஞாபகம் கொள்கிறோம். உன்னையிழந்து தவிக்கிற உனது குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் வாழ்வு, சாந்தி!

உங்களைப் போலவே, கவிஞர் கண்ணதாசனும் சொல்லி வைத்தார்!

'வீடு வரை உறவு,

வீதி வரை மனைவி,

காடு வரை பிள்ளை,

கடைசி வரை யாரோ?

இதே வெளி நாட்டில்,

மூடி வரை உறவு,

கோடு வரை மனைவி,

காசு வரை பிள்ளை,

காஸ் அடுப்பு வரை யாரோ?

உறவுகளும் மெருகேருகின்றன, போலும் சாந்தி.

சொல்லிக்கொண்டு பச்சை போடுவது மிகவும் குறைவு!!!

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.

அழகிய கனவுகளாலும்

ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும்

செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு.

பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த

24.12.10 அதிகாலை 5மணியோடு

அவனது வாழ்வு முடிந்து போயிற்று.

காரணம் அறியப்படாது

அவனது கனவுகளை அழித்துக் கொண்டு

காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில்

தலைசிதறிக் கதை முடிந்து

30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான்.

உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது

கதை முற்றுப் பெற்றது.

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத்

தன்னையழித்தானாம்….!

விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி…..

கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும்

பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய

நண்பர்கள் மூலமாய் அவன் செத்துப்போன கதை

செவிகளில் எட்டியது.

ஏன்…? எதற்கு….? எப்படி….?

கேள்விகளால் அவன் மரணம் துளையிடப்பட்டுக்

காரணம் அறியப்படாமல் வினாக்குறிகள் நீண்டு

அவனது விதிபற்றிய இரங்கல்களும்

நினைவு மீட்டல்களும்

புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது……

கோளையென்கின்றனர் சிலர் அவனைக்

குடிகாரனென்கின்றனர் சிலர்,

நல்ல வேலையில்லையென்றும் சிலர்

காதல் தோல்வியென்கின்றனர் இன்னும் சிலர்

அர்த்தம் புரியாமல் நிகழ்ந்த அவனது சாவுபற்றி

அந்தரிக்கும் அவன் உறவுகளின் துயர் நடுவில்

நின்று சிலர் இப்படியும் ஈனமாய் சொல்கின்றனர்…..

‘‘எனக்கு எண்ணாயிரம் யூரோ எனக்குப் பதினைந்தாயிரம் யூரோ‘‘

கடன்கொடுத்தோமென்று கதைவிடுவோர்

எதுவுமில்லா ஒருவனிடம் ஆயிரமாய் கொடுத்தோமென்றது

கதையல்ல நிசம்.

அவனது இறுதிப் பயணம் கூட

இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.

நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்

கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்

எங்கே போயினர்…..?

வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்

தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

பிறந்தவனை இறுதிப் பயணம் அனுப்பி வைக்க

கூடப்பிறந்தவர்களுக்குக் கூடக் கைகொடுக்க ஆளின்றிக்

அட்டைகளாய்க் கழன்றது நட்பெல்லாம்…..

ஆட்களிருந்தும் அனாதையாய் போனவன் பற்றி

அவனது அக்காக்களின் கண்ணீரில்

கடைசி வரை நட்பும் கடைசியிலும் உதவாத நட்பும்

வெளிறிக் கொண்டிருக்க – அவன்

என்றென்றும் போலக் கள்ளமற்ற சிரிப்போடு

படமாய்த் தொங்குகிறான்.

குழந்தையாய் அவன் உலவியது முதல்

அவனும் நாங்களும் எங்கள் வைரவர் ஆல்விழுதில்

ஊஞ்சலாடி அடிபட்டுக் கோபம் போட்டு

மண்வீடு கட்டி மண்சோறு காய்ச்சிய பிள்ளைப்பருவம்

நினைவுகளாய் மறக்க முடியாது

மனசோடு அவன் ஞாபகங்கள்

மழையாய்ப் பெய்கிறது.

போய்வா என்றவன் சாவைப் போக்காட்ட முடியாமல்

வாழ்கிறான் எங்கள் ஞாபகத்தில்……

இனிவருவாயென்றும் எம்முடன் வாழ்வாயென்றும்

எழுத முடியவில்லையடா……!

இனியொரு பிறவி உண்டாயின் பிறப்போம்

நாங்கள் பிறந்து நாங்கள் வாழ்ந்த

சமாதிகோவிலடிச் செம்பாட்டுப் புழுதியில்….

சண்டையிடாமல் கோவம் போடாமல்

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும்

ஞாபகம் கொள்வோம்.

05.01.2010

(24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்த உறவுக்கு இது சமர்பணம்)

(யாழ்மாவட்டம் வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள செம்பாட்டுமண் கிராமம் குப்பிளான். குப்பிளானின் வடக்கேயமைந்த குறிச்சியின் பெயர் சமாதிகோவிலடி. சரவணைச்சாமியார் என்றொரு சாமியார் சமாதியடைந்தமையால் சமாதிகோவிலடியெனப் பெயர்மாறியதாக அப்பு ஆச்சியின் கதைகள் சொல்கிறது. அந்தச் சரவணைச்சாமியார் சமாதியான பூமியில் பிறந்து அகாலமாய் இறந்து போனவனை இக்கவிதையால் நினைவு கொள்கிறேன்)

தூக்கியது உங்கள் கவி

கோடு வரைந்தது என் விழி

நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றோர்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!! :( :( :( :( 2 .

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கியது உங்கள் கவி

கோடு வரைந்தது என் விழி

நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை

எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே

பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றோர்

பாலகனின் வருகையை

வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!!

எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக

ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!! :(

கோமகனா? இல்லைக் கொக்கா?

வாழ்த்துக்கள், கோமகன்!!!>

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.