Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 18, ஜனவரி 2011 (22:6 IST)

ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில்

அறிவிக்கப்படவுள்ளார் :நாடு கடந்த தமிழ் ஈழ அரசு

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை தெற்கு சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தெற்கு சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்புகிறது.

சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்பார்கள். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் "நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தெற்கு சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வேண்டிக்கொள்கிறது.

விடுதலை பெற்ற தெற்கு சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு சூடான் போலவே தமிழ் ஈழமும் விரைவில் விடுதலை பெறுமென ஈழத்தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

தெற்கு சூடானில் வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அதிபர் ஒபாமா "நியுயார்க் டைம்ஸ்" பத்திரிகையில், "லட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒபாமாவின் இச்செய்தியை வரவேற்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேபோல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

1977ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி தமிழ் ஈழ அரசை அமைப்போம் என்று வாக்குக் கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்கள்.

புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய இலங்கைவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது.

சூடானின் அதிபர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்
சூடானின் அதிபர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
:unsure::unsure:

:unsure::unsure:

என்ன நுணுவிலான்?

சூடான் ஜனாதிபதிக்கு சர்வதேச குற்றவியல் நிதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டது தெரியாதா?>

Edited by I.V.Sasi

வெறும் அறிக்கை ஜாலங்களை தவிர்த்து செயலில் ஈடுபட்டு, அது வெற்றிகரமாக முடிவடையும் போது அறிக்கை விடுவது தப்பில்லை.

பண்புள்ள பொறுப்பாளர்கள் அது நடக்கும், இது நடக்கும் என்று அறிக்கை விட்டு பிழைப்பு நடத்தமாட்டார்கள்.

வெறும் அறிக்கை ஜாலங்களை தவிர்த்து செயலில் ஈடுபட்டு, அது வெற்றிகரமாக முடிவடையும் போது அறிக்கை விடுவது தப்பில்லை.

பண்புள்ள பொறுப்பாளர்கள் அது நடக்கும், இது நடக்கும் என்று அறிக்கை விட்டு பிழைப்பு நடத்தமாட்டார்கள்.

பண்புள்ள பொறுப்பாளர்கள் எதுவும் செய்துவிடக் கூடாது, அவர்களை செய்யாமல் தடுப்பதிலேயே உங்களைப் போன்றவர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கிறீர்கள்.

தமது செயற்பாடுகளை அறிக்கைகள் மூலம் மக்களிற்குத் தெரியப்படுத்துகிறார்கள். இது ஒரு நல்ல சனநாயகப் பண்பு.

தமக்கான விடுதலையை பெறவுள்ள தெற்கு சூடானின் அதிகார பூர்வ பிரதிநிதிகள் (விடுதலைப் போரை முன்னெடுத்தவர்கள்) தமது விடுதலை நிகழ்வில் கலந்துகொள்ள நாடு கடந்த தமிழீழ அரசிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இது எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள ஒர் அங்கிகாரம். இதற்கு காரணம் அந்த பண்புள்ள பொறுப்பாளர்களின் செயற்பாடே.

அவர்கள் நேர்வழில்தான் செல்கிறார்கள். அந்த வழிகளை அடைத்து அவர்களை முடக்க நினைக்காது ஒத்துழைப்பைக் கொடுங்கள். மெதுவாக பயணிக்கும் அவர்கள் எல்லோரின் ஒத்துழைப்புடன் வேகமாக செயற்படுவார்கள்.

பண்புள்ள பொறுப்பாளர்கள் எதுவும் செய்துவிடக் கூடாது, அவர்களை செய்யாமல் தடுப்பதிலேயே உங்களைப் போன்றவர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கிறீர்கள்.

தமது செயற்பாடுகளை???? அறிக்கைகள் மூலம் மக்களிற்குத் தெரியப்படுத்துகிறார்கள். இது ஒரு நல்ல சனநாயகப் பண்பு.

அவர்கள் நேர்வழில்தான் செல்கிறார்கள். அந்த வழிகளை அடைத்து அவர்களை முடக்க நினைக்காது ஒத்துழைப்பைக் கொடுங்கள். மெதுவாக பயணிக்கும் அவர்கள் எல்லோரின் ஒத்துழைப்புடன் வேகமாக செயற்படுவார்கள்.

மின்னல் அவர்களே - எமது நோக்கம் யாரையும் முடக்குவதல்ல.

மிகப்பெரும் பொறுப்பு எடுத்துக்கொண்டவர்கள் சரியான பாதையில் நடக்கவேண்டும் என்ற அவா மட்டுமே. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்துகொண்டுள்ளோம். சவால்களையும் அறிந்துகொண்டுள்ளோம். ஆனால் குறிக்கோள்களை நோக்கி நகர்வதாக தெரியவில்லை.

அவர்களுக்கு பலம் சேர்க்க சில விடயங்களை செய்துள்ள உரிமையுடன்தான் எழுதுகிறோம். ஆனால் அவர்கள் செயற்பாடு மிக மந்தமாக உள்ளது. தொடர்புகளை வழங்கியும் குறைந்தபட்சம் சில ஆவணங்கள் கிடைத்தது என்ற பதிலைக்கூட தெரிவிக்காத பண்பாளர்கள்.

அவர்கள் அருகில் இருந்தால் அவர்களை சீர் செய்யுங்கள். கடந்தகால தவறுகளை விடவேண்டாம்.

============

உந்த அறிக்கைகளை தமிழ் மக்களால் நடத்தும் ஊடகங்களில் வெளியிட்டு என்னத்தை சாதிக்கமுடியும் என்று நா. க. த. அ. பிரதிநிதிகள் ("அமைச்சர்கள்") கருதுகிறார்களோ தெரியவில்லை. மீண்டும் தமிழ் மக்களை போலிச் சந்தோசங்களுக்குள், பகற் கனவுகளுக்குள் சிக்க வைக்க, சிந்திக்க முடியாத தமிழ் மக்கள் கூட்டம் நா. க. த. அ. இயங்குகிறது என்ற போலி மாயையை ஏற்படுத்த இவை நிச்சயம் உதவும். இவை தான் நா. க. த. அ. இன் குறிக்கோள்களா?

எமக்கு விளைவுகளுடன் கூடிய செயல்களே இனித் தேவை.

தமிழ் மக்களை தொடர்ந்தும் கொலைசெய்து, சூறையாடி வரும் சிங்கள பயங்கரவாத அரசை எந்த நாடும் இதுவரை வெளிப்படையாக கண்டிக்கவில்லை - இது நடக்கத் தேவைப்படும் பலவகை செயற்பாடுகளை (அறிக்கைகள் அல்ல) நா. க. த. அ. உறுப்பினர்கள் விரைந்து செய்யவேண்டும்.

சிறையில் இருக்கும் போராளிகள் விடுவிக்கப்படவில்லை, குறைந்தபட்சம் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை, சர்வதேச நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை - இது நடக்கத் தேவைப்படும் பலவகை செயற்பாடுகளை (அறிக்கைகள் அல்ல) நா. க. த. அ. உறுப்பினர்கள் விரைந்து செய்யவேண்டும்.

சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்மக்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை - இது நடக்கத் தேவைப்படும் பலவகை செயற்பாடுகளை (அறிக்கைகள் அல்ல) நா. க. த. அ. உறுப்பினர்கள் விரைந்து செய்யவேண்டும்.

ஆகக் குறைந்தது இடைக்கால அரசியல் தீர்வு பற்றி எந்த முயற்சியும் சிங்கள பயங்கரவாத அரசால் மேற்கொள்ளப்படவில்லை - இது நடக்கத் தேவைப்படும் பலவகை செயற்பாடுகளை (அறிக்கைகள் அல்ல) நா. க. த. அ. உறுப்பினர்கள் விரைந்து செய்யவேண்டும்.

சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறி நடக்கும், பல தசாப்பதங்களாக தமிழின படுகொலைகளை நடாத்திவரும் சிங்கள பயங்கரவாத அரசை, பயங்கரவாத அரசாக எந்தவொரு நாடும் பிரகடனப் படுத்தவில்லை - இது நடக்கத் தேவைப்படும் பலவகை செயற்பாடுகளை (அறிக்கைகள் அல்ல) நா. க. த. அ. உறுப்பினர்கள் விரைந்து செய்யவேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் "என்றொரு இயக்கத்தின்" மீது பல்வேறு நாடுகள் விதித்த அர்த்தமற்ற தடைகள் நீக்கப்படவில்லை - இது நடக்கத் தேவைப்படும் பலவகை செயற்பாடுகளை (அறிக்கைகள் அல்ல) நா. க. த. அ. உறுப்பினர்கள் விரைந்து செய்யவேண்டும்.

சர்வதேச நாடுகளில் பல தசாப்பதங்களாக தமிழின படுகொலைகளை நடாத்திவரும் சிங்கள பயங்கரவாத அரசின், ராஜதந்திர பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை - இது நடக்கத் தேவைப்படும் பலவகை செயற்பாடுகளை (அறிக்கைகள் அல்ல) நா. க. த. அ. உறுப்பினர்கள் விரைந்து செய்யவேண்டும்.

கடந்தகால தமிழின அழிப்புக்களை முறையாக ஆவணப்படுத்துவதுடன், சிறந்த முறையில் தொகுக்கப்பட்ட கையேடுகளை சர்வதேச அரசுகளுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை - இது நடக்கத் தேவைப்படும் பலவகை செயற்பாடுகளை (அறிக்கைகள் அல்ல) நா. க. த. அ. உறுப்பினர்கள் விரைந்து செய்யவேண்டும்.

இவையே காலத்தின் கட்டாய தேவைகள். செய்வார்களா?

போர்குற்றவாளியை லண்டனில் பேசவிடாது அனுப்பிய ஐரோப்பிய தமிழ் மக்களின் வீரச் செயல்களிலிருந்து நா. க. த. அ. உறுப்பினர்கள் நிறையக் கற்க வேண்டும்.

ஆராவமுதன்

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் மெதுவாகவே செல்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அவர்களைத் துரோகிகளாக்கி ஓரம்கட்டும் முயற்சியில் நம்மவர்கள் மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசின் மந்த நிலைச் செயற்பாட்டிற்கு இந்த புண்ணியவான் வழங்கும் நெருக்கடிகளும் முக்கிய காரணங்கள்.

உங்களுடைய கருத்துக்களும் நாடு கடந்த தமிழீழ அரசினைக் குறைகூறுவதிலேயே இருக்கிறது. அதனால்தான் அப்படி எழுதினேன்.

அறிக்கை விடுவது பிழையல்ல அது நல்ல பண்பு. அவர்களின் செயற்பாடுகளை மக்கள் அறிந்து கொள்ள அந்த அறிக்கைகள் கட்டாயம் தேவையே.

இல்லாதுவிட்டால் அவர்களின் செயற்பாடுகள் பெரும்பான்மையான மக்களிற்கு தெரியாமலேயே போய்விடும்.

நா.க.த.அரசிற்கான தென் சூடானிய விடுதலை இயக்கத்தின் அழைப்பு என்பது ஒரு அங்கிகாரம், இது எமக்கு கிடைத்த ஒரு வெற்றி. இப்படியான வெற்றிகளே. நாடு கடந்த அரசின் செயற்பாடுகளிற்கான மக்களின் ஒத்துழைப்புக்களை உற்காகமாக வழங்க, நம்பிக்கை கொள்ள வழியேற்படுத்தும்.

நா.க.த.அரசிற்கான தென் சூடானிய விடுதலை இயக்கத்தின் அழைப்பு என்பது ஒரு அங்கிகாரம், இது எமக்கு கிடைத்த ஒரு வெற்றி. இப்படியான வெற்றிகளே. நாடு கடந்த அரசின் செயற்பாடுகளிற்கான மக்களின் ஒத்துழைப்புக்களை உற்காகமாக வழங்க, நம்பிக்கை கொள்ள வழியேற்படுத்தும்.

நான் இதை ஆமோதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்பார்கள். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசை, அங்கீகரித்த முதலாவது நாடாக, தெற்கு சூடான் இருந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.