Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆ.ராசா `திடீர்' கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6200932a-c739-44cd-ab8a-27ac1e4ba1fd_S_secvpf.gif

ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆ.ராசா `திடீர்' கைது: 2 அதிகாரிகளும் கைது

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறி இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. டெலிபோன் துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று 4-வது முறையாக ஆ.ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து மதியம் வரை நீடித்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்தனர்.

ராசாவின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோ லியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ.ராசா கைது குறித்து பா.ஜனதா கூறியதாவது:-

முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆர்.ராசா கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் காலதாமதமானது.1.76 லட்சம்கோடி ரூபாயையும் ராசாவே அடித்திருப்பார் என்று கூறமுடியாது. உழலுக்கு பின் பலர் இருக்கிறார்கள் அவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும்.

ராசா கைது என்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தின் தொடக்கம் தான். இதற்காக யாரும் அரசுக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டாம். ஊழல் குறித்து இன்னும் பல கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு பா.ஜனதா தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

ஆர். ராசா கைது குறித்து காங்கிரஸ் கூறியதாவது:-

இது போன்ற ஊழல் வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம் தன் கடமையை செய்யும். இதனால் தி.மு.க. உடனான உறவில் எந்த பாதிப்பும் இருக்காது.

இவ்வாறு காங்கிரஸ் பொது செயளர் ஜனார்தன் திவேதி கூறினார்.

மாலை மலர் செய்தி

6200932a-c739-44cd-ab8a-27ac1e4ba1fd_S_secvpf.gif

ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆ.ராசா `திடீர்' கைது: 2 அதிகாரிகளும் கைது

ஆர். ராசா கைது குறித்து காங்கிரஸ் கூறியதாவது:-

இது போன்ற ஊழல் வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டம் தன் கடமையை செய்யும். இதனால் தி.மு.க. உடனான உறவில் எந்த பாதிப்பும் இருக்காது.

இவ்வாறு காங்கிரஸ் பொது செயளர் ஜனார்தன் திவேதி கூறினார்.

மாலை மலர் செய்தி

ராசா: "மாப்பு மாப்பு வச்சிண்டான்ய்யா காங்கிரஸ் ஆப்பு "

Edited by நெருப்பு நீலமேகம்

ராசா கைதுக்கு ஒப்புக்கொண்டார் கருணாநிதி?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா இன்று சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு ராசா கைதாகப் போவது குறித்து முன்கூட்டியே தெரியும் என்று இதன் பின்னணியில் உள்ள அரசியல் பேரங்களை கூறி அதிர வைக்கின்றனர் டெல்லியிலுள்ள விவரப் புள்ளிகள்!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்துதான், ராசா,அரசியல் அதிகார தரகர் நீரா ராடியா உள்ளிட்ட பலரது வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனைகளை மேற்கொண்டு, பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றி சென்றன.

அதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ராசாவிடம் கடந்த டிசம்பர் 24,25 ஆகிய தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனிடையே 2ஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் 2ஜி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ராசா உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி வலியுறுத்தினார்.

இதனையடுத்து தற்போதைய தொலை தொடர்புதுறை அமைச்சரான கபில் சிபல், சிஏஜி-யின் அறிக்கை தவறானது என்று கூறி அவரை விமர்சித்த நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையின்போது கபில் சிபல் இவ்வாறு கூறியதற்காக அவரை கடுமையாக காய்ச்சி எடுத்தது உச்ச நீதிமன்றம்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1102/02/1110202048_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ ராசாவிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை

புதுதில்லி, ஜன.31 (டிஎன்எஸ்) 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தகவல் வெளியிட்டது.

இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து பிப்ரவரி மாதம் 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை அடுத்து கடந்த டிசம்பர் 8 மற்றும் 15ஆம் தேதிகளில் டெல்லி, சென்னை, பெரம்பலூர் நகரங்களில் முன்னாள் மத்திய அமைச்சர்ஆ.ராசா, அரசியல் இடைத்தரகர் ராடியா, ஹவாலா தரகர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது லேப்-டாப்கள், பென் டிரைவ்கள், ஏராளமான ஆவணங்கள், டைரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் அந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

கம்ப்யூட்டர் தகவல் ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் 3 பேர் அப்ரூவராக மாறி பல தகவல்களை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக தரகர் நீரா ராடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் 2 நாட்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 16 மணி நேரம் நடந்த அந்த விசாரணையில் ஆ.ராசாவிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. கம்ப்யூட்டர் தகவல்களை ஆதாரமாக காட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

ஆ.ராசா மற்றும் தரகர் நீரா ராடியா இருவரும் அளித்த பதில்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்திருந்தனர். அந்த பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பல சர்ச்சையான விஷயங்களில் அவர்களுக்கு விடை கிடைக்கவில்லை.

குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம், தொலைத் தொடர்புத்துறையில் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்தது, மற்றும் வங்கி கடன்கள் பெற்றது போன்றவைகளில் சி.பி.ஐ. அதிகாரிளுக்கு இன்னமும் தெளிவான விடை கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே ஆ ராசா, நீரா ராடியா இருவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

இன்று முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக, காலையிலேயே சிபிஐ அலுவலகத்துக்கு ஆ ராசா வரவழைக்கப்பட்டார். அவரிடம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முந்தைய சூழ்நிலைகள், பண விவகாரம் ஆகியவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை 9 மணி நேரம் நீடித்தது.

ஆ.ராசா, விசாரணைக்கு பிறகு அவரது வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. (டிஎன்எஸ்)

Jan 31, 2011

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=a595cabe-797b-4d58-8e56-73403ce957a4&CATEGORYNAME=TNATL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.