Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்சேகா விசுவாசிகள் அறுபது ஆயிரம் இராணுவத்தினரை அரசாங்கம் விலக்க திட்டம்

Featured Replies

பொன்சேகாவிற்கு ஆதராவான அல்லது எதிர்கட்சிகளுக்கு ஆதரவான இராணுவத்தில் இருந்த ஜெனரல்கள் பலரை அரசாங்கம் பதவி விலக்கிவருகின்றனர். அதுமட்டுமன்றி 60 ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களை விலக்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு விலக்கப்படுபவர்களுக்கு எதிராக காணப்படும் குற்றச்சாட்டு என்ன? குற்றச்சாட்டுக்கள்தான், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு இராணுவ சேவைக்கு சமுகமளிக்காமை, அதுவும் விடுமுறை பெற்று வராதவர்கள். குடிபோதையில் இராணுவத்தினர் கலகம் செய்துள்ளனர்.

அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களையும் விலக்கவுள்ளனர். 60 ஆயிரம் இராணுவத்தினர் ஓய்வூதிய கொடுப்பனவு இன்றி இராணுவத்தில் இருந்து விலக்கப்படவுள்ளனர்.

30 வருட யுத்தம் வெற்றிக் கொள்ளப்படும் வரை இவர்கள் நல்லம். ஆனால் யுத்தம் முடிவடைந்து இன்று அவர்களை கருவேப்பிலையாக மாறியுள்ளனர்.

அரசாங்கத்தின் இத்தகைய போக்கு கண்டிக்கதக்கது என ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி கூறியுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் சம்பளம் கொடுப்பதற்கு காசு இல்லைப் போல கிடக்குது :D

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் சம்பளம் கொடுப்பதற்கு காசு இல்லைப் போல கிடக்குது :D

ம்ம் அப்படித்தான் ஏனென்றால் விலத்தப்பட்டால் ஓய்வூதியமும் கொடுக்க தேவை இல்லையாம்

ம்ம் அப்படித்தான் ஏனென்றால் விலத்தப்பட்டால் ஓய்வூதியமும் கொடுக்க தேவை இல்லையாம்

அது தான் இறந்த இராணுவத்தை காணாமல் போனோர் பட்டியலில் இனைப்பார்கள், சம்பளம் மட்டும் கொடுத்து கொண்டு இருக்க.

அதனாலென்ன பாதாள உலகக் கும்பல் அவர்களை வரவேற்க தயாராகவிருக்கின்றனர்.

இருக்கும் பிரச்சினைகள் எல்லாத்திலும் அதிகமாக கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்ட புலிகளின் உறுப்பினர்களை தமிழினம் கவனிக்கவில்லை எண்டதை ஊதிப்பெருசாக்கி இண்டைக்கும் தமிழ் மக்களுக்கை ஒரு பிரச்சினையாக மிக முக்கிய பிரச்சினையாகவும், அரசியல் படுத்தி இருக்கிறது சிங்களம்...

ஆனால் சிங்களவர்களுக்காக போராடிய இந்த இராணுவம் விலக்கல் செய்தி சில நாட்களில் இல்லாமல் போய் விடும்... சிங்களவர் மத்தியில் இதை தாக்க பூர்வமாக கொண்டுவரும் வல்லமை தமிழர் தரப்பிடம் இல்லை...

Edited by தயா

  • தொடங்கியவர்

இருக்கும் பிரச்சினைகள் எல்லாத்திலும் அதிகமாக கைது செய்யப்பட்டு விடுவிக்க பட்ட புலிகளின் உறுப்பினர்களை தமிழினம் கவனிக்கவில்லை எண்டதை ஊதிப்பெருசாக்கி இண்டைக்கும் தமிழ் மக்களுக்கை ஒரு பிரச்சினையாக மிக முக்கிய பிரச்சினையாகவும், அரசியல் படுத்தி இருக்கிறது சிங்களம்...

ஆனால் சிங்களவர்களுக்காக போராடிய இந்த இராணுவம் விலக்கல் செய்தி சில நாட்களில் இல்லாமல் போய் விடும்... சிங்களவர் மத்தியில் இதை தாக்க பூர்வமாக கொண்டுவரும் வல்லமை தமிழர் தரப்பிடம் இல்லை...

ஓடினவங்களைப்பிடித்து விலத்தப்பட்டோர் சங்கம் ஒன்று அமைக்கலாம் ஜேவிபி இதனை செய்தாலும் செய்வாங்கள் போல இருக்கு

தமிழர்களை ஆயுத ரீதியில் அழிக்க சிங்களம் பெரிதாக்கிய அதன் இராணுவம் அதன் பொருளாதார வலுவுக்கு நீண்ட நாள் தாக்குப்பிடிக்க கூடியதல்ல. விலக்கப்படும் இந்த வீரர்கள் ஒருநாள் பெரிய தலையிடியாக அரசுக்கு எதிராக மாறும் அபாயம் உள்ளது.

தமிழர்களை ஆயுத ரீதியில் அழிக்க சிங்களம் பெரிதாக்கிய அதன் இராணுவம் அதன் பொருளாதார வலுவுக்கு நீண்ட நாள் தாக்குப்பிடிக்க கூடியதல்ல. விலக்கப்படும் இந்த வீரர்கள் ஒருநாள் பெரிய தலையிடியாக அரசுக்கு எதிராக மாறும் அபாயம் உள்ளது.

இது பூதாகாரமாக மாற வேண்டும் எண்டால் மகிந்த குடும்பமே நீண்ட காலம் ஆட்சி செய்ய வேண்டும்.... அப்போது தான் மீட்ச்சி இல்லாத ஆட்ச்சிக்கு எதிராக மக்கள் திரளும் சாத்தியம் உண்டு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.