Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2011 நவம்பர் முதல் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு கூடாத காலம்! தென்னிலங்கையின் ஆஸ்தான ஜோதிடர் ஆரூடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2011 நவம்பர் முதல் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு கூடாத காலம்! தென்னிலங்கையின் ஆஸ்தான ஜோதிடர் ஆரூடம்

ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 22:09

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வரை பொதுவாக நாட்டுக்கு நல்ல காலம் கிடையாது என்று எதிர்வு கூறி உள்ளார் தென்னிலங்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சோதிட மேதைகளில் ஒருவரான பியசேன ரத்துவிதான (வயது 80). இந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலருக்கும் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வருகின்றார்.

இவர் கிரக மாற்றம் எப்படிப்பட்ட பல்ன்களை இலங்கைக்கு கொடுக்க இருக்கின்றது? என்பது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சோதிட ரீதியாக விளக்கம் கொடுத்து உள்ளார்.

இவர் தெரிவித்தவை வருமாறு:-

"2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நாட்டுக்கு போதாத காலம். குறிப்பாக பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றுக்கு கூடாத காலம். ராகு-கேது மாற்றம், சனி மாற்றம் ஆகியன சாதகமாக இல்லை. செவ்வாய் மாற்றம் சாதகமும், பாதகமும் கலந்த பலனைக் கொடுக்க உள்ளது. செவ்வாய் மாற்றம் காரணமாக இயற்கை அழிவுகள் தற்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

வர்த்தகம், சுற்றுலா, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை முன்னேற்றம் ஏற்படும். ஆனால் நாட்டில் உற்பத்தி துறைகளில் அமோகமான பலன்கள் கிடைக்காது.

தற்போதைய பொருளாதார நிலை குறித்து மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடையாது என்று நினைக்கின்றேன். எனவே எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் பெரிதாக வாக்களிக்கப் போவது இல்லை.

மிகவும் அபூர்வமான வகையில் அடுத்த வருடம் 21 நட்சத்திர யுத்தங்கள் இடம்பெற உள்ளன. கிட்டத்தட்ட 1931 ஆம் ஆண்டு, 1942 ஆம் ஆண்டு ஆகிய காலப் பகுதிகளில் நாட்டில் பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டன.

இக்கால கட்டத்தில் நாட்டில் மிக உயர்ந்த ஒரு கட்டிடம் தகர்ந்து விழுகின்றமைக்கான வாய்ப்பும் தெரிகின்றது.

இவ்வருடம் ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரகசியமான அரசியல் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். இக்காரணத்தால் ஒரு அரசியல் கட்சிக்குள் உடைவுகள் ஏற்படலாம். நாடு மற்றும் அரச உயர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் பதவி நிலைகள் மாறக் கூடும். ஊழல்கள், பண மோசடி குற்ற்ச்சாட்டுக்கள் போன்றன தலை விரித்து ஆடும்.

ஜனாதிபதியின் வெற்றி

நாட்டில் உள்ள சில தலைவர்களுக்கு ராகு-கேது மாற்றம் நல்ல பலனைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது. சிலருக்கு பாதகமான நிலையில் உள்ளது. ஆனால் ஜாக்கிரதையாக நடந்து கொண்டால் ஆபத்துக்களில் இருந்து தப்பிப் பிழைக்கலாம்.

நாட்டில் மிகப் பெரிய தலைவருடைய கிரக மாற்றத்துக்கும், நாட்டுக்கும் தொடர்பு உண்டு. நாட்டின் அத்தலைவருடைய காலம் கூடாமல் இருக்கும்போது அது நாட்டைப் பாதிக்கச் செய்யும். இந்நிலையில் தலைவர் வேறு நாட்டுக்கு சென்று சில காலம் தங்கி இருக்கின்றமையைத் தவிர பாதிப்பைத் தவிர்க்க வேறு மார்க்கம் கிடையாது. இது நாட்டுக்கும், தலைவரும் நன்மையை கொடுக்கும்.

ஆயினும் ஜனதிபதியின் ஜாதகம் மிகவும் வலிமையானது. கெட்ட காலங்களை இவர் வெற்றி கொள்வார். அத்துடன் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் அவருக்கு ஏற்படும். குறிப்பாக அருகில் இருந்து காட்டிக் கொடுக்கின்ற எதிரியை அடையாளம் கண்டு கொள்வார். அத்துடன் ஜூன் மாதத்துக்கு பின் அவருக்கு இன்னும் அதிக அதிகாரங்கள் கிடைக்கும், நிம்மதிப் பெருமூச்சு விடுவார்.

பொன்சேகா- பல்லுப் பிடுங்குப்பட்ட புலி

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்புக் கிடைக்கும். ஆனால் அந்நேரத்தில் அவர் பல்லுப் பிடுங்குப் பட்ட புலியாகதான் இருப்பார்.

ஐ.தே.கவுக்கு புது தலைமை

ஒரு துடிப்புள்ள இளைஞன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக வருவார்.

அக்கட்சியின் தற்போதைய தலைவர் பின்னுக்கு தள்ளுப்படுவார். ஆனால் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசு எல்லா விதமான முட்டுக் கட்டைகளையும் கடந்து ஆட்சிக் காலம் முடியும் வரை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்.

உலக கிண்ணத்தை இலங்கை நெருங்கும்

இலங்கையின் ஜாதகப்படி 2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிறிக்கெற் போட்டியில் அரை இறுதிப் போட்டி, இறுதிப் போட்டி ஆகியவற்றுக்குள் இலங்கை அணி நுழைய நிறைய வாய்ப்புகள் உண்டு. இலங்கை வீரர்கள் மத்தியில் எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து இருக்கும். உலகக் கிண்ணத்தை இலங்கை அணி நெருங்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாட்டு அணிகளும் முன்னிலையில் நிற்கும். இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் அரை இறுதிப் போட்டிக்குள் நுழையும். இங்கிலாந்துக்கு இற்திப் போட்டியில் விளையாடும் வாய்ப்புக்கள் அதிகம்."

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து உலகப் கோப்பையை வெண்டால் இவரின் சாஸ்திரம் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்பு தொடர்ந்து கூடாத காலமாகவே இருக்கிறது.

இலங்கையின் ஜாதகப்படி 2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிறிக்கெற் போட்டியில் அரை இறுதிப் போட்டி, இறுதிப் போட்டி ஆகியவற்றுக்குள் இலங்கை அணி நுழைய நிறைய வாய்ப்புகள் உண்டு.

உலகக் கிண்ணத்தை இலங்கை அணி நெருங்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாட்டு அணிகளும் முன்னிலையில் நிற்கும். இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் அரை இறுதிப் போட்டிக்குள் நுழையும். இங்கிலாந்துக்கு இற்திப் போட்டியில் விளையாடும் வாய்ப்புக்கள் அதிகம்."

tamilcnn

இவற்றை கருத்தின் படி பார்த்தால் சிறிலங்காவும் இங்கிலாந்தும் தான் இறுதிப் போட்டி விளையாடும். இந்தியா அரை இறுதிக்குச் செல்லும். அவுஸ்திரெலியா நன்றாக விளையாடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பியசேன ரத்துவிதான (வயது 80) நன்றாக பத்திரிக்கை வாசிப்பார் போல் உள்ளது. பத்திரிக்கையில் வந்ததையும், சோமவன்ச அமரசிங்கவினது பேச்சையும் கலந்து ஒரு கலவை தயாரித்து விட்டுள்ளார். :D

2011 நவம்பர் முதல் ஒரு வருடத்துக்கு நாட்டுக்கு கூடாத காலம்! தென்னிலங்கையின் ஆஸ்தான ஜோதிடர் ஆரூடம்

ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 22:09

இலங்கையின் ஜாதகப்படி 2011 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிறிக்கெற் போட்டியில் அரை இறுதிப் போட்டி, இறுதிப் போட்டி ஆகியவற்றுக்குள் இலங்கை அணி நுழைய நிறைய வாய்ப்புகள் உண்டு. இலங்கை வீரர்கள் மத்தியில் எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து இருக்கும். உலகக் கிண்ணத்தை இலங்கை அணி நெருங்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாட்டு அணிகளும் முன்னிலையில் நிற்கும். இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் அரை இறுதிப் போட்டிக்குள் நுழையும். இங்கிலாந்துக்கு இற்திப் போட்டியில் விளையாடும் வாய்ப்புக்கள் அதிகம்."

tamilcnn

இலங்கையின் பலனின்படிதான் ஆஸ்திரேலியா இந்தியா இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முன்னிலை வகிக்குமா? :D:D:D

நவம்பர் மாவீரர் மாதம் என்பதால், தலை வந்தால் என்ற பயத்தில் சிங்களத்தின் சோதிடர் உளறுகிறார்,

வெளிநாடுகளில் தங்கினால்தான் நாட்டுக்கு நன்மையென்றால் எந்த நாட்டில் தங்கலாம். யாராவது ஆலோசனை சொல்லுங்கப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.