Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதி மீன் வளத்தினை சூறையாடும் இந்திய மீனவர்கள். பரிதாபிமான நிலையில் யாழ் மீனவர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னவோ தமிழ் மீனவர்களிடையே நீண்ட தீராத பிளவை உண்டு பண்ணி அதில் குளிர்காய சிங்களம் முனைவதாகவே தெரிகிறது.

தமிழக மீனவர்கள் தெரிந்தும்.. பல சந்தர்ப்பங்களில் தெரியாமலும் தமிழீழக் கடல் எல்லைக்குள் வரும் போதெல்லாம்.. கடற்புலிகளின் வழிகாட்டலோடு பேசி.. அவர்கள் சிநேகிதபூர்வ வழியில் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதை தவிர்த்துக் கொள்ள முன் வந்துள்ளனர். இதுதான் தமிழீழக் கடல் எங்களின் கையில் இருந்த போது நடந்தது. ஆனால் இன்று அப்படியல்ல.

அக்கரையிலும் இக்கரையிலும் வாழ்பவன் தமிழன். அக்கரையிலும் மீனவர்கள் மத்தியில் வறுமை.. இக்கரையிலும் வறுமை. அதுமட்டுமன்றி மீன் வளம் அருக வேறு ஆரம்பித்திருக்கிறது. இடையில் சிங்களவனின் ஆதிக்க வெறியாட்டம். மீனவர் பிரச்சனையை வைத்து அவன் இராஜதந்திரம் செய்கிறான்.

இப்படியான ஒரு சூழலில்.. தமிழ் மீன சமூகங்களிடையே பகை உணர்வை வளர்க்கும் வகையில் நடந்து கொள்வதோ.. கருத்து வெளியிடுவதோ நன்றன்று. சிறீலங்கா அரசுக்கு சார்ப்பாக வடபகுதி மீனவர் சங்கங்கள் நடந்து கொள்வதைக் காட்டிலும் நீதியோடு நடந்து கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர் சங்கங்களும் வடக்கிக்கிழக்கு தமிழர் மீனவர் சங்கங்களும் நேரடியாக தொடர்புகளைப் பேணிக் கொண்டு இந்தப் பிரச்சனைக்கு எவருக்குமே மனஸ்தாபம் ஏற்படாத வகையில் சிநேகித பூர்வ வழியில் தீர்வு காண வேண்டும்.

சிங்களவன்.. இங்கும் கொல்கிறான்.. அங்கும் கொல்கிறான். இடை நடுவில்.. நல்ல பிள்ளைக்கு நடிச்சு சண்டையும் மூட்டி விடுகிறான்.

யாழ்.குடா மீனவ சங்கங்கள் மிகவும் பொறுமை காப்பது நன்று. இவர்கள் ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளோடும் முரண்பட்டு கருத்து வெளியிட்டிருந்தனர். அப்படியான நிலைகளை மீண்டும் தோற்றுவித்து சிங்களத்தையும் ஒட்டுக்குழுக்களையும் திருப்தி செய்ய என்று நடந்து கொள்ளாமல் தமிழக மீனவர்களோடு சிநேகித பூர்வ முறையில் பேசி.. பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதில் சிங்கள அமைச்சர்களையோ சிங்களப் படைகளையோ ஒட்டுக் குழுக்களையோ உதவிக்கு அழைப்பது எமக்கே ஆபத்தாகும்.

யாழ் குடா மீனவர்கள்.. வடக்குக் கிழக்கு மீனவர்கள்.. தமிழக மீனவ சமூகத்தோடு நெருங்கி செயற்படும் போது கிரமமான தொடர்பாடல்களை கலந்துரையாடல்களை செய்யும் போது.. பிரச்சனைகளுக்குரிய தோற்றுவாய்கள் களையப்பட்டு இரு தரப்பினர் மத்தியிலும் 3ம் தரப்பு குழப்பம் விளைவித்து குளிர் காய்வதை தடுக்க முடியும். இரு தரப்பு வறுமை நிலையையும் இங்கு கருத்தில் கொள்வதோடு மீன் வளப் பாதுகாப்பு பற்றிய கவனமும்.. ஆபத்தான மீன் பிடி முறைகள் குறித்த மீளாய்வு அரங்குகளும் தமிழ் மீனவ சமூகத்திடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இதில் தமிழக.. தமிழீழ மீனவர்கள் என்ற பிளவுகளுக்கு இடமில்லாது.. தமிழ் மீனவர்கள் என்ற முறையில் இந்தப் பிரச்சனை அணுகப்படுவதே பிராந்தியத்தில் தமிழீழத்துக்கும் தமிழகத்துக்கும் மீனவ சமூகங்களுக்கும் இதர மக்களுக்கும் நல்லது. பயனுள்ளதாக அமையும். :)

Edited by nedukkalapoovan

இதில் பேசித்தீர்ப்பதுக்கு ஒண்டுமில்லை.... ஈழ மீனவர்களுக்கு இது வாழ்க்கை.. இப்போதுதான் அவர்கள் வாழ்வு வெளிக்கத்தொடங்கியிறக்கிறது.. தமிழகமீனவர்களுக்கும் இது வயித்துப்போராட்டம்.. மீன் இல்லாட்ட்டி ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லை.. அவர்கள் எல்லைதாண்டி வந்து மீன் பிடிக்கத்தான் செய்வார்கள்.. தகுந்த முறையில் இது சிங்கள அரசினால் தீர்க்கப்படா விட்டால்.. மீனவர்கள் மத்தியில் கைகலப்பு, கொலை, பதில் கொலை, எண்டு தொடங்கி தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களை கொல்லும் வரை போகலாம்....

பந்து சிங்களவனின் கையில்.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பேசித்தீர்ப்பதுக்கு ஒண்டுமில்லை.... ஈழ மீனவர்களுக்கு இது வாழ்க்கை.. இப்போதுதான் அவர்கள் வாழ்வு வெளிக்கத்தொடங்கியிறக்கிறது.. தமிழகமீனவர்களுக்கும் இது வயித்துப்போராட்டம்.. மீன் இல்லாட்ட்டி ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லை.. அவர்கள் எல்லைதாண்டி வந்து மீன் பிடிக்கத்தான் செய்வார்கள்.. தகுந்த முறையில் இது சிங்கள அரசினால் தீர்க்கப்படா விட்டால்.. மீனவர்கள் மத்தியில் கைகலப்பு, கொலை, பதில் கொலை, எண்டு தொடங்கி தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களை கொல்லும் வரை போகலாம்....

பந்து சிங்களவனின் கையில்.... :wub:

பந்தை சிங்களவன் கைக்கு உருட்டி விட்டிட்டு.. பந்து சிங்களவனின் கையில் என்பது நீங்கள்.

எமது விடுதலைப் போராட்ட உயிர் நாடிகளாக.. விளங்கியவர்களில் தமிழக மீனவர்களும் முக்கியமானவர்கள். எத்தனையோ தடைகளை துயர்களை தாண்டி எமக்காக பொருட்கள் கொண்டு வந்து தந்தவர்களும் அவர்களே. அதற்காக உயிர் விட்டும் இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் சிங்களப் படைகளின் அரசின் பின்னாடி செல்லாது.. வடக்கு கிழக்கு மீனவ சமூகம் தானாக தமிழக மீனவ சங்கத்துடன் தனது சொந்த இன மக்களோடு சொந்த மொழியில் பேசி.. தொடர்பை பேணி.. நிலைமைகளை சீராக்கிக் கொண்டு வாழ்வதே நீடித்த நிலையான பலமான மகிழ்ச்சிகர வாழ்வுக்கு உதவும்.

சிங்களத்திடம் இந்திய பேயரசிடம் இது தொடர்பில் எவர் உதவிக்கு போனாலும்.. அதன் வழி தான் கொலைகளும் கொள்ளைகளும் நடக்கும்.

இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இரு தரப்பு மீனவர்களும் சண்டை இட்டது கிடையாது. ஆனால் 540 இந்திய மீனவர்களையும் பல ஆயிரம் ஈழ மீனவர்களையும் கொன்ற கொடியவனிடமே பாதுகாப்புத் தேடச் சொல்லி பந்தை தட்டி விடும் உங்கள் போன்றோரின் கற்பனை.. என்ன பனைமரத்தில் பனங்காய் பறிப்பதோடா இருக்கிறது..???! :unsure::rolleyes::o

இரண்டுமுறை இதற்கு கருத்தெழுதினேன் காணவில்லை. வெட்டுவதற்கும் எல்லையுண்டு உண்மையை எழுதக்கூடாதென்று ஏதேனும் நிபந்தனைகளுண்டோ நடு நிலை கூடாதோ தமிழ் கலாச்சாரமோ மாற்றுக்கருத்துக்கு மண்டையில் போடுவது.

பந்தை சிங்களவன் கைக்கு உருட்டி விட்டிட்டு.. பந்து சிங்களவனின் கையில் என்பது நீங்கள்.

எமது விடுதலைப் போராட்ட உயிர் நாடிகளாக.. விளங்கியவர்களில் தமிழக மீனவர்களும் முக்கியமானவர்கள். எத்தனையோ தடைகளை துயர்களை தாண்டி எமக்காக பொருட்கள் கொண்டு வந்து தந்தவர்களும் அவர்களே. அதற்காக உயிர் விட்டும் இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனையில் சிங்களப் படைகளின் அரசின் பின்னாடி செல்லாது.. வடக்கு கிழக்கு மீனவ சமூகம் தானாக தமிழக மீனவ சங்கத்துடன் தனது சொந்த இன மக்களோடு சொந்த மொழியில் பேசி.. தொடர்பை பேணி.. நிலைமைகளை சீராக்கிக் கொண்டு வாழ்வதே நீடித்த நிலையான பலமான மகிழ்ச்சிகர வாழ்வுக்கு உதவும்.

சிங்களத்திடம் இந்திய பேயரசிடம் இது தொடர்பில் எவர் உதவிக்கு போனாலும்.. அதன் வழி தான் கொலைகளும் கொள்ளைகளும் நடக்கும்.

இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இரு தரப்பு மீனவர்களும் சண்டை இட்டது கிடையாது. ஆனால் 540 இந்திய மீனவர்களையும் பல ஆயிரம் ஈழ மீனவர்களையும் கொன்ற கொடியவனிடமே பாதுகாப்புத் தேடச் சொல்லி பந்தை தட்டி விடும் உங்கள் போன்றோரின் கற்பனை.. என்ன பனைமரத்தில் பனங்காய் பறிப்பதோடா இருக்கிறது..???! :unsure::rolleyes::o

முதலில் உங்களுக்குத்தேவை சிகிச்சை மயிலிட்டிக்கும் நெடுந்தீவிற்கும் குரு நகருக்கும் சென்று மீனவர்களுடன் பேசுங்கள் அதன் பின் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களுக்குத்தேவை சிகிச்சை மயிலிட்டிக்கும் நெடுந்தீவிற்கும் குரு நகருக்கும் சென்று மீனவர்களுடன் பேசுங்கள் அதன் பின் தெரியும் .

நீங்கள் சொல்லும் அத்தனை இடங்களிலும் வாழ்ந்த மக்களோடு நான் வாழ்ந்திருக்கிறேன். குருநகர் யாழ் நகரின் நகர்ப் புறப்பகுதி.

போர் காலத்திலும் சரி இடைப்பட்ட சமாதான காலத்திலும் சரி எல்லை தாண்டிய மீன்பிடி என்பது கரையோடு மீன்பிடித் தொழில் செய்து வந்த எமது மீனவர்களுக்கு பெரிய ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. எமது மீனவர்கள் சிங்களக் கடற்படையின் அச்சுறுத்தலால் ஆழ்கடல் மீன்பிடியை விட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னரும் றோலர்களை பயன்படுத்தி மீன்பிடிப்பது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

35 வருட காலம் இந்திய மீனவர்களால் ஏற்படாத பிரச்சனை வறுமை இன்று ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது..??! அதுமட்டுமன்றி.. வெட்டுவோம் குத்துவோம் என்ற நிலைக்குரிய வகையில் அல்ல இங்கு பிரச்சனை. இங்கு பிரச்சனை தொடர்பாடலே ஆகும். எமது மீனவர்கள் தமிழக மீனவர்களோடு வலுவான தொடர்பாடலை பேணும் போது இந்தப் பிரச்சனைக்கு இலகுவாக தீர்வு தேட முடியும். அதேபோல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இருப்பதையும் சுட்டிக்காட்ட முடியும்.

சிங்கள மீனவர்கள் வடக்கு கிழக்கில் குடியமர்த்தப்பட்டு மீன்பிடி செய்யும் போதும் அதுவும் சிறீலங்கா அரசு மற்றும் கடற்படை உதவியோடு ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடும் போதும்.. வராத பிரச்சனை தமிழக மீனவர்களால் மட்டும் எப்படி புட்டுக் கொண்டு வருகிறது. காரைநகர் கடலில் சிங்கள மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். மாதல்கடல்.. மயிலிட்டி.. காங்கேசந்துறை.. சிங்கள மீனவர்களின் ஆதிக்கத்தில். சிங்கள கடற்படை அதற்கு காவல். அதேபோல் முல்லைத்தீவில்.. இன்று சிங்கள மீனவர்களின் மீன் பிடி. குடியேற்றங்கள். மட்டக்களப்பில் அப்படி. இங்கெல்லாம்.. வராத போட்டி.. தமிழக மீனவர்களால் தான் வந்துவிடுகிறதோ..?????!

சிங்கள மீனவர்களின் வருகை.. உபகரண பாவனை தொடர்பில் குறிப்பிட்ட யாழ் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் வாயே திறக்கவில்லை..???! ஏன்..?????! சிங்களம் சொல்லி வைத்ததோ..??! நவீன உபகரணங்களோடு வடக்குக் கிழக்கு கடலில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபட்ட 150 சிங்கள மீனவர்களை இந்தியா அண்மையில் கைது செய்திருந்தது..??! இதனை பற்றி எல்லாம் யாழ் குடா மீனவர் சங்கத்துக்கு கவலை வராதது ஏன்..?????! எமது மீன் வளங்களை சிங்களம் சூறையாடுவது பற்றிய கவலை வராதது ஏன்..??! சிங்களவன் சகோதரன் ஆகி.. தமிழகத்தான் எதிரியாகி விட்டானோ..???! அல்லது டக்கிளஸ் தேவானந்தா சொல்ல வேண்டாம் என்றவரோ..????!

இதே மீனவ சங்கங்கள் சில மகிந்தவை.. சிங்களப் படைகளை வாழ்த்தி.. ஊர்வலம் நடத்தியதையும் நாம் கவனிக்க வேண்டும்..! நம்மவர்கள் ஒன்றும் சுத்தம் கிடையாது. நல்லா அரசியல் செய்வார்கள்..! :unsure::o

Edited by nedukkalapoovan

இந்தப் பிரச்சனையில் சிங்களப் படைகளின் அரசின் பின்னாடி செல்லாது.. வடக்கு கிழக்கு மீனவ சமூகம் தானாக தமிழக மீனவ சங்கத்துடன் தனது சொந்த இன மக்களோடு சொந்த மொழியில் பேசி.. தொடர்பை பேணி.. நிலைமைகளை சீராக்கிக் கொண்டு வாழ்வதே நீடித்த நிலையான பலமான மகிழ்ச்சிகர வாழ்வுக்கு உதவும்.

நீங்கள் என்னதான் தலைகீழாக நிண்டாலும் சிங்கள அர்சின் அனுமதியில்லாமல்.. சொந்த இன மக்களோடு சொந்த மொழியில என்ன............... மூச்சுக்கூட விடமுடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்னதான் தலைகீழாக நிண்டாலும் சிங்கள அர்சின் அனுமதியில்லாமல்.. சொந்த இன மக்களோடு சொந்த மொழியில என்ன............... மூச்சுக்கூட விடமுடியாது..

முடியும். இப்போதும் தமிழக மீனவ சமூகத்தோடும் தமிழீழத்தோடும் தொடர்பில் உள்ள தமிழக மற்றும் தமிழீழ தலைவர்கள் இதில் சம்பந்தப்பட்டு இதற்கு ஒரு முடிவை எட்ட வேண்டும். சிங்களத்தின்.. இந்திய மத்திய அரசின் உதவிகளை இது தொடர்பில் எதிர்பார்ப்பதிலும்.. நம் தலைவர்கள் இதில் கருசணை காட்டினால் நிச்சயமாக முடியும். அதுவும் நவீன செய்மதி தொடர்பாடல் உள்ள உலகில்.. இது ஒரு சின்னப் பிரச்சனை. :)

முடியும். இப்போதும் தமிழக மீனவ சமூகத்தோடும் தமிழீழத்தோடும் தொடர்பில் உள்ள தமிழக மற்றும் தமிழீழ தலைவர்கள் இதில் சம்பந்தப்பட்டு இதற்கு ஒரு முடிவை எட்ட வேண்டும். சிங்களத்தின்.. இந்திய மத்திய அரசின் உதவிகளை இது தொடர்பில் எதிர்பார்ப்பதிலும்.. நம் தலைவர்கள் இதில் கருசணை காட்டினால் நிச்சயமாக முடியும். அதுவும் நவீன செய்மதி தொடர்பாடல் உள்ள உலகில்.. இது ஒரு சின்னப் பிரச்சனை. :)

இந்திய அரசுக்கு இதில் செய்வதர்க்கு ஒண்டுமில்லை.. ஈழ மீனவர்கள் தமிழக மீனவர்களை நம்பி சிங்களவனுடன் முரன்படமாட்டார்கள்.

நீங்கள் சொல்லும் அத்தனை இடங்களிலும் வாழ்ந்த மக்களோடு நான் வாழ்ந்திருக்கிறேன். குருநகர் யாழ் நகரின் நகர்ப் புறப்பகுதி.

போர் காலத்திலும் சரி இடைப்பட்ட சமாதான காலத்திலும் சரி எல்லை தாண்டிய மீன்பிடி என்பது கரையோடு மீன்பிடித் தொழில் செய்து வந்த எமது மீனவர்களுக்கு பெரிய ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. எமது மீனவர்கள் சிங்களக் கடற்படையின் அச்சுறுத்தலால் ஆழ்கடல் மீன்பிடியை விட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னரும் றோலர்களை பயன்படுத்தி மீன்பிடிப்பது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

35 வருட காலம் இந்திய மீனவர்களால் ஏற்படாத பிரச்சனை வறுமை இன்று ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது..??! அதுமட்டுமன்றி.. வெட்டுவோம் குத்துவோம் என்ற நிலைக்குரிய வகையில் அல்ல இங்கு பிரச்சனை. இங்கு பிரச்சனை தொடர்பாடலே ஆகும். எமது மீனவர்கள் தமிழக மீனவர்களோடு வலுவான தொடர்பாடலை பேணும் போது இந்தப் பிரச்சனைக்கு இலகுவாக தீர்வு தேட முடியும். அதேபோல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இருப்பதையும் சுட்டிக்காட்ட முடியும்.

சிங்கள மீனவர்கள் வடக்கு கிழக்கில் குடியமர்த்தப்பட்டு மீன்பிடி செய்யும் போதும் அதுவும் சிறீலங்கா அரசு மற்றும் கடற்படை உதவியோடு ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடும் போதும்.. வராத பிரச்சனை தமிழக மீனவர்களால் மட்டும் எப்படி புட்டுக் கொண்டு வருகிறது. காரைநகர் கடலில் சிங்கள மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். மாதல்கடல்.. மயிலிட்டி.. காங்கேசந்துறை.. சிங்கள மீனவர்களின் ஆதிக்கத்தில். சிங்கள கடற்படை அதற்கு காவல். அதேபோல் முல்லைத்தீவில்.. இன்று சிங்கள மீனவர்களின் மீன் பிடி. குடியேற்றங்கள். மட்டக்களப்பில் அப்படி. இங்கெல்லாம்.. வராத போட்டி.. தமிழக மீனவர்களால் தான் வந்துவிடுகிறதோ..?????!

சிங்கள மீனவர்களின் வருகை.. உபகரண பாவனை தொடர்பில் குறிப்பிட்ட யாழ் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் வாயே திறக்கவில்லை..???! ஏன்..?????! சிங்களம் சொல்லி வைத்ததோ..??! நவீன உபகரணங்களோடு வடக்குக் கிழக்கு கடலில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபட்ட 150 சிங்கள மீனவர்களை இந்தியா அண்மையில் கைது செய்திருந்தது..??! இதனை பற்றி எல்லாம் யாழ் குடா மீனவர் சங்கத்துக்கு கவலை வராதது ஏன்..?????! எமது மீன் வளங்களை சிங்களம் சூறையாடுவது பற்றிய கவலை வராதது ஏன்..??! சிங்களவன் சகோதரன் ஆகி.. தமிழகத்தான் எதிரியாகி விட்டானோ..???! அல்லது டக்கிளஸ் தேவானந்தா சொல்ல வேண்டாம் என்றவரோ..????!

நீங்கள் சொல்லுமிடமெல்லாம் அந்தக்காலத்திலேயே 60பது 70பதுகளில் சிங்களவர் சீசனுக்கு வந்து மீன் பிடித்தவர்கள் அதுவல்ல பிரச்சனை இந்திய றோலர்கள் எல்லை தாண்டி அத்து மீறி எமது மீனவர்களின் வலையை வெட்டிச்செல்வது பவழப்பாறைகள் நாசமாப்போவது இதனால் எமது மீனவரின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிவிட்டது.இதுதான் பிரச்சனை இதற்கு வழி ****

Edited by மோகன்
***நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுமிடமெல்லாம் அந்தக்காலத்திலேயே 60பது 70பதுகளில் சிங்களவர் சீசனுக்கு வந்து மீன் பிடித்தவர்கள் அதுவல்ல பிரச்சனை இந்திய றோலர்கள் எல்லை தாண்டி அத்து மீறி எமது மீனவர்களின் வலையை வெட்டிச்செல்வது பவழப்பாறைகள் நாசமாப்போவது இதனால் எமது மீனவரின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிவிட்டது.இதுதான் பிரச்சனை இதற்கு வழி ****

இது கண்ணை மூடிக்கொண்டு ஏதோ தேவைக்காக எழுதுவது போன்றுள்ளது.

வடக்குக் கிழக்கு கரை எங்கும் சிங்களக் குடியேற்றங்களோடு சிங்களவர்கள் மீன்பிடிக்கு ஊக்குவிக்கப்பட்டு வடக்குக் கிழக்கு மீன் வளம் சிங்களவர்களால் திட்டமிட்டு சூறையாடப்படுவது.. பிரச்சனைக்கு உரிய ஒன்றல்ல.. 10 - 20 தமிழக மீனவர்களின் மீன்பிடிப்படகுகள் ஏற்படுத்தும் தாக்கம் பெரியதாம். தமிழக மீனவர்கள் இன்று நேற்றல்ல கச்சதீவை கையளிக்க முதலும் பரந்த எல்லையில் மீன் பிடித்தனர். கச்சதீவைக் கையளித்து இன்று வேதனைகளை அனுபவிப்பவர்களும் அவர்களே.

வடக்குக் கிழக்கு மீனவர்கள் தென்பகுதியில் போய் மீன் பிடிக்கட்டும் பார்க்கலாம். அல்லது நீர்கொழும்பில் போய் மீன் பிடிக்கட்டும் பார்க்கலாம். இன ஒருமைப்பாடு சிங்கள சகோதரத்துவம் பேசுறவை.. அதையும் செய்ய வேண்டும்..???!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவது இன்று நேற்றல்ல. அது பல காலமாக நடந்தாலும்.. பேசித் தீர்க்கக் கூடிய விடயம் இது.

யாழ் குடா பவளப் பாறைகள் சிதைவடைவது சிங்களவன் வெட்டி அகற்றும் சுண்ணாம்புப் பாறைகளால் மிக அதிகமாகும். அவன் அவற்றை அகற்றி காலிக்கு கொண்டு சென்று அங்கு சீமெந்தை உற்பத்தி செய்கிறான். இதன் மூலம் யாழ் குடா கடலரிப்புக்கு இலக்காகி கடல் நீர் நிலத்தை விழுங்கி வருவதுடன்.. நன்னீரும் உவர் நீராகி வருகிறது.

அதுமட்டுமன்றி சிங்கள கடற்படை பயன்படுத்தும் கப்பல்கள்.. ஆழ் கடல் கலங்களால் எமது மீனவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை இட்டு எந்தக் கரிசணையும் காட்டாதவர்கள்.. இன்று தமிழக மீனவர்களின் சிறிய ரக றோலர்களின் தாக்கம் அளவுக்கு மிஞ்சியது என்று விம்பி அழக் காரணம் என்ன..???!

சரி அளவுக்கு மிஞ்சிய சேதம் என்றால்.. அதை இட்டு தமிழக மீனவ சங்கங்களுக்கு அறிவித்து அவர்களின் பிரதிநிதிகளோடு பேசி.. இதற்கு ஒரு சுமூக முடிவை கட்ட வேண்டியதுதானே. அப்படி விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர் தான். ஏன் இந்தப் பிரச்சனை கடந்த 35 ஆண்டுகளாக இருக்கவில்லை. இப்போ திடீர் என்று முளைத்ததும் இன்றி.. தீர்வுக்கு சிங்கள அமைச்சரின் உதவியை நாடுவதும்... மீனவர்களை சுற்றிவளைப்பதும் என்று வேடிக்கை காட்டுகிறார்கள்.

உண்மையில் அந்த மீனவர்கள் கரையில் நின்று சுற்றிவளைக்கப்பட்டார்களா.. அல்லது நடுக்கடலில் வைத்து சிங்கள மீனவர்களாலும் சிவில் உடை சிங்கள கடற்படையாலும் சுற்றி வளைக்கப்பட்டு பழி தமிழ் மீனவர்கள் மீது போடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இதில் ஆராய வேண்டும்.

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் தமிழகத்தை தாயகத்தை கூறுபோடும் பெரும் சதி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு துணைபோவர்கள் நிச்சயம்.. அதனால் எமக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கும் உடந்தையாவார்கள்.

இப்படி தான் இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் இடையிலை சிங்களம் சிண்டு முடிஞ்சது...

சிங்களத்தின் உளவியல் நடவடிக்கைகளை எங்கட ஊடகங்கள் புரிந்து கொள்ளாத வரைக்கும் மக்களை எங்கட இனத்துக்கு எதிராக தூண்டி விடுகிறது மட்டும் தான் நடக்கும்... !

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி தான் இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் இடையிலை சிங்களம் சிண்டு முடிஞ்சது...

சிங்களத்தின் உளவியல் நடவடிக்கைகளை எங்கட ஊடகங்கள் புரிந்து கொள்ளாத வரைக்கும் மக்களை எங்கட இனத்துக்கு எதிராக தூண்டி விடுகிறது மட்டும் தான் நடக்கும்... !

ஊடகங்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி என்பதே சிறிதும் இல்லாமல், தமது ஊடகங்களுக்கான விளம்பரத்துக்காகவே அலைவனவாக விளங்குகின்றன.

ஊடகங்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி என்பதே சிறிதும் இல்லாமல், தமது ஊடகங்களுக்கான விளம்பரத்துக்காகவே அலைவனவாக விளங்குகின்றன.

அண்மையை நாட்க்களாக சிங்களம் மிகவும் தீவிரமான உளவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது... தமிழ் மக்களை குழப்புவது அதுதான் இப்போதைய நோக்கமே...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையை நாட்க்களாக சிங்களம் மிகவும் தீவிரமான உளவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது... தமிழ் மக்களை குழப்புவது அதுதான் இப்போதைய நோக்கமே...!

எங்கள் ஊடகங்களே சிங்களத்தை விட நன்றாகச் செய்வார்கள் போல் இருக்கின்றது அந்தச் செய்யலை.

தலைப்புக்கள் எழுதப்படும் விதம், அவற்றுக் கொடுக்கும் முக்கியத்துவம் என்பவை ஆனையிறவு முகாம் தாக்குதாலுக்கு வளங்கப்பட்டதற்கு ஒப்பானதாகவே இருக்கின்றது!

எங்கள் ஊடகங்களே சிங்களத்தை விட நன்றாகச் செய்வார்கள் போல் இருக்கின்றது அந்தச் செய்யலை.

தலைப்புக்கள் எழுதப்படும் விதம், அவற்றுக் கொடுக்கும் முக்கியத்துவம் என்பவை ஆனையிறவு முகாம் தாக்குதாலுக்கு வளங்கப்பட்டதற்கு ஒப்பானதாகவே இருக்கின்றது!

பரபரப்பு இல்லாத போது சின்ன சரசரப்பையும் பெரிய பரபரப்பாக்கி விட வேண்டியது தான்....!

  • கருத்துக்கள உறவுகள்

Eezham fishermen seize trawlers with 100 Indian fishermen in the seas off Jaffna

[TamilNet, Tuesday, 15 February 2011, 11:56 GMT]

Around 15 fishing trawlers operated by more than 100 fishermen from Naakappaddinam of Tamil Nadu state of India, destroying the livelihood of Eezham fishermen by bottom-trawling, have been seized by the local fishermen in the seas off Point Pedro Tuesday afternoon. The trawlers are being towed to Munai in Point Pedro by the fishermen, a fishing society representative told TamilNet. The latest development comes following repeated complaints by the local fishermen over a long period of time about the fishing trawlers destroying the fishing tools and the resources in the sea. The fishermen representatives further said around 100 Tamil Nadu fishermen were in their custody and they were being looked after well.

When Eezham Tamils had their own naval power, the Sea Tigers, Indian trawlers did not engage in such aggressive acts, the representatives of the fishermen further said blaming Colombo and New Delhi for setting Eezham Tamils against the fishermen of Tamil Nadu.

"There was a clear understanding between the communities on both the sides," the representatives further said, urging Tamil Nadu political leaders to visit and witness the plight of Eezham Tamil fishermen who are threatened by the occupation of Sri Lankan military on one hand and by the invading fishing trawlers from Tamil Nadu, causing serious destruction to their livelihood.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33552

தமிழ்நெட்டின் செய்திப்படி இது ஒரு அடையாளமான சுற்றிவளைப்பு என்பது போலவும்.. தமிழக மீனவர்கள் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள் என்றும்.. இவர்களின் இந்தக் கைது தொடர்பில் உடனடியாக இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டும் உள்ளது என்றும் செய்தி கூறுகிறது.

அதே நேரம் செய்தி.. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கக் கூடிய சதிகள் குறித்தும் எச்சரிக்கிறது.

ஆக.. கடலில் இரு தரப்புக்கும் இடையில் மீன்பிடி தொடர்பில் சிக்கல்கள் இருக்கின்றன என்பது உண்மை. இருந்தாலும்.. இது ஒரு அடையாளக் கைது அவ்வளவே. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க இரு தரப்பும் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதோடு நெருக்கமான கிரமமான தொடர்பாடல்வதிகளையும் செய்து கொண்டால்.. பல பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள முடியும். தமிழக மீனவர்கள் வேறு யாருமல்ல.. எமது சகோதர்கள் என்பதை எல்லோரும் நினைவிருத்துவது முக்கியம்.

வடபகுதி மீன் வளத்தினை சூறையாடும் இந்திய மீனவர்கள். பரிதாபிமான நிலையில் யாழ் மீனவர்கள்

தமிழீழ எல்லைக்குள் தமிழக மீனவர்கள் வந்து, ஈழத்து மீனவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதை உடன் நிறுத்த வேண்டும்.

தமிழின விரோத இந்திய - சிங்கள அரச பயங்கரவாதிகளின் சதிவலையில் தமிழ் மீனவர்கள் விழாமல் இருக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.