Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞர் டிவி அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை, பிப்.18: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர்(சிபிஐ) இன்று அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

17tv.jpg

2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

63484334kaliagnar.jpg

ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஷாகித் பல்வாவின் ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கும், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல்வாவின் டிபி ரியாலிட்டி குழுமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ 200 கோடி கடன் வழங்கியிருந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் சிபிஐ நடத்தியுள்ள இந்த சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dinamani.com

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=378245&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

சிங்கள அரசிடம் பெற்ற பணத்தில் உரிய பங்கை சோனியாவுக்கு கொடுக்கவில்லை போலும்!

எங்களுக்கு கூட தெரிந்த விடயம் இவர்களுக்கு தெரியவில்லை :D

==============================================================

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த மாற்றுத் திறனாளிகள் நல வாரியக் கூட்டத்தில், கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், நிருபர்களின் கேள்விகளுக்கு கனிமொழி அளித்த பதில்:

* சி.பி.ஐ.,யிடம் இருந்து உங்களுக்கு சம்மன் வந்துள்ளதா? : இதுவரை எதுவும் எனக்கு வரவில்லை.

* "கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது குறித்து? அதுபற்றி தெரியாது.

* இந்த ரெய்டுகள், தி.மு.க., - காங்., இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்துமா?

அதுபற்றி எனக்கு தெரியாது. இவ்விஷயத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190813

  • கருத்துக்கள உறவுகள்

வரவில்லை, தெரியாது, பதில் சொல்ல விரும்பவில்லை போன்ற கனிமொழியின் பதில்களைப் பார்க்க....

நரிக்குப் பிறந்தது நாயாகாது, அதுகும்.... நரி தான். என்று, சின்ன வகுப்பிலை வாத்தியார் சொன்னது ஞாபகம் வந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

சிபிஐ சோதிச்சு பார்த்து எல்லாம் சரியாகவே உள்ளது என்று ஒரு அறிக்கையை விட்டிருக்க வேண்டுமே?

ஏன் தாமதிக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சிபிஐ சோதிச்சு பார்த்து எல்லாம் சரியாகவே உள்ளது என்று ஒரு அறிக்கையை விட்டிருக்க வேண்டுமே?

ஏன் தாமதிக்கிறார்கள்?

இன்னும் யார், யாருடன் சேர்ந்து... தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று..... கூட்டணிப் பேரம் முடியவில்லை.

காங்கிரசுக்கு 90 தொகுதியை கருணா கொடுத்தால்....., அந்த அறிக்கையும் வரும்.

ஆனால் சோனியாவுக்கு 90ஐ கொடுத்துப் போட்டு மிகுதி தொகுதிகளில் ஜெயலலிதாவின் கட்சிக்கு ஈடு கொடுக்க முடியாது.

கருணாநிதிக்கு இப்ப.... ஆப்பிழுத்த மங்கியின் நிலைமை.

எனக்கு ஒரு ஆசை, கருணாநிதி தமிழ் இன அழிபிற்கு துணை போனவர் என்று சொல்வது தவறு, ஏன் என்றால் சிங்கள்வனிற்கு நிகராக போட்டி போட்டுக் கொண்டு தம்ழ் இனத்தை அழித்த பரதேசி தனது இறுதி காலத்தை இந்த ஸ்ப்க்ட்ரம் வழக்கில் சிக்கி சிறையில் கழித்து எல்லவற்றையும் இழந்து தான் கடி வளர்த்த சாம்ராஜ்யம் தனது கண் முன்னே அழியக் கண்டு ஒரு கேவலமான மரணத்தை அடைய வேண்டும் ( எமது தலைவர் 39 வருட போராட்டம் முள்ளிவாய்க்காலுக்குள் முடங்கிய போது எவ்வளவு கவலைப்பட்டு இருப்பார் :( :( :( ) அது நடக்குமா

வரவில்லை, தெரியாது, பதில் சொல்ல விரும்பவில்லை போன்ற கனிமொழியின் பதில்களைப் பார்க்க....

நரிக்குப் பிறந்தது நாயாகாது, அதுகும்.... நரி தான். என்று, சின்ன வகுப்பிலை வாத்தியார் சொன்னது ஞாபகம் வந்திட்டுது.

2008 இல் இந்த மாறன் குடும்பதிற்கும் கருணா குடும்பதில் ஏற்பட்ட குழப்பம் வெறும் நாடகம் எனவும் குறிப்பிடபட்டது, அதை விட ஒரு முக்கிய அம்சம் இந்த பிரச்சனையின் பின்னர் தான் கலாநிதி மாறன், ஸ்டாலினின் மகன், அழகிரியின் மகன் என எல்லோறும் படத்தயாரிப்பில் இறங்கினர், படத்த்யாரிப்பு என்பது மிகவும் சிக்கலான ஒரு விடயம் ஒரு குறுகிய காலதிற்குள் இவர்கள் எல்லம் கோடி கோடியாக பணம் கொட்டி படம் எடுத்தார்கள் என்றால், அப்பணமெல்லம் இலவசமாக வந்த பணமாக்வே இருக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.