Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்களை இலங்கைத் தமிழ் மீனவர்கள் தாக்கினார்களா???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகமீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கியதாக இந்திய இணையத்தளச்செய்திகள் தெரிவிக்கின்றது. மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது..

தமிழகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை நடுக் கடலில் சுற்றி வளைத்த இலங்கைத் தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கி், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்தெறிந்து விரட்டினர்.

இத்தனை காலமாக இலங்கை கடற்படையினரிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்தனர் தமிழக மீனவர்கள். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லாத நிலை இருந்தது.

ஆனால் இத்தனை காலமாக தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

சமீப காலமாக இலங்கைத் தமிழ் மீனவர்கள், தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அதற்குக் காரணம் கூறப்படுகிறது.

சமீ்பத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்களை சிறை பிடித்த இந்த இலங்கைத் தமிழ் மீனவர்கள், இப்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை நடுக் கடலில் தாக்கி சரமாரியாகத் தாக்கி அவர்களது வலைகளையும் அறுத்து கடலில் வீசி விரட்டியுள்ள செயல் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 5 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக் கடலில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் அவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்குதகல் நடத்தினர். பின்னர் மீனவர்களின் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்து வீசினர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக திட்டி, விரட்டியுள்ளனர்.

இலங்கைத் தமிழ் மீனவர்களின் இந்த வெறிச் செயல் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Thatstamil

என்ன ஒரு கருத்தையும் ( கதையும் கத்தலும் ) காணோம் ???

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கருத்தையும் ( கதையும் கத்தலும் ) காணோம் ???

எதையும் நம்புவதாக இல்லை..! :D முன்பு புலிகள் கடத்தினார்கள் என்று சேறடிப்பு நடந்ததை இன்னும் மறந்துவிடவில்லை..!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

எமது உறவு யார்

பகை யார் என்று எமக்கு தெளிவுண்டு.

இல்லாதவர்கள் தான் கத்துவார்கள்

கத்தவேணும் என்று எதிர்பார்ப்பார்கள். :(

என்ன ஒரு கருத்தையும் ( கதையும் கத்தலும் ) காணோம் ???

TR பாலுவின் படகுகளை கடத்தி போன டக்கிளஸ் கதை எல்லாம் வந்ததே படிக்கவில்லையா...?? கலைஞரின், மன்மோகனின் ஆதரவு பெற்ற டக்கிளசும் தமிழன் தான் அண்ணோய்....! <_<

5 மைல் தூரத்துக்கு வெளியிலை போக தடை உள்ள ஈழத்தமிழ் மீனவர்கள் பலமான இழுவை படகிலை வந்த தமிழக மீனவர்களை திட்டம் போட்டு சிறு படகுகளிலை வந்து தாக்கிற அளவுக்கு திறனோடை இல்லை...! இப்படி சிந்திக்க உங்களுக்கு பெரியார் தர நினைச்ச பகுத்தறிவும் இல்லை எண்டது எங்களுக்கு நல்லா தெரியும்...!

தீர விசாரிக்காமல் பழி போட்டு பழகின உங்கட ஊடகங்களுக்கு இது ஒண்டும் புதுசு இல்லைதானே....??

நல்ல வேளை புலிகள் தான் இதை செய்தவை எண்டு வழமை போல நீங்கள் சொல்ல இல்லை....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.