Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளியுடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் வடக்கிற்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடத்திற்கு முன்னம் துரையப்பா விளையாட்டரங்கில் நடந்து பார்த்தால் தெரியும் காலெல்லாம் நெருஞ்சி முள்ளு குத்தும்.எனக்கு துரையப்பா விளையாட்டரங்கு என்றாலே நெருஞ்சி முள்ளு குத்தினதுதான் ஞாபகத்திற்கு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா செந்தூரன்

95 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த பிள்ளைகளுக்கு போராட்டம் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது நீங்கள் பேசிப்பார்த்த மாணவர்கள் வாயிலாக அறிந்ததென்று குறிப்பிடுகிறீர்கள். முற்றிலும் தவறானது. அங்குள்ள பிள்ளைகளுக்கு எங்களைவிட சரித்திரமும் வரலாறுகளும் அதிகம் தெரிந்திருக்கிறது. பல விடயங்களில் நாங்கள் சரியான மண்டுகளாக இருந்திருக்கிறோம் இருக்கிறோம். இன்றைய சூழல் அவர்களுக்குத் தெரிந்த விடயங்களை வெளியே சொல்ல முடியாதபடி தடுத்திருக்கிறது. எல்லா விடயங்களையும் வெளிப்படையாகச் சொல்லி அவர்களை இக்கட்டுகளுக்கு மாட்டிவிடக்கூடாது. நானும் கனடா வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன இருப்பினும் என்னுடைய வரவு நாட்டுக்கு அதிகம். ஏன் கடந்த ஆண்டுகூட அங்கு வந்தேன் என்ன சுதந்திரம் எங்கே உள்ளது.? ஒவ்வொரு 100 மீற்றர்களுக்கு ஒரு காவலரன் யாரை அச்சுறுத்துவதற்கு? நான் இலங்கைத் தீவின் பல பாகங்களுக்குச் சென்றேன் அதென்ன தமிழரின் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் மட்டும் இப்படி இராணுவ கெடுபிடிகள்? இலங்கையின் மற்றைய பாகங்களில் ஏன் இப்படியான இராணுவ கெடுபிடிகள் இல்லை? இராணுவக் கெடுபிடிகள் மட்டுமல்ல அரசமரம் கண்ட இடத்தில் பௌத்த விகாரைகள். முழுமையான தமிழரின் பண்பாடுகளை அழித்து ஒரு சிங்கள நாடு என்பதான திணிப்புகள் இராணுவப்பார்வையில் செயலாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் சுதந்திரமான வாழ்வு கிடைத்துவிட்டதாக நம்புகிறீர்கள்? இராணுவம் ஏதோ ஒரு காலத்தில் அனைத்துலகத்தின் அழுத்தம் காரணமாகவும், புலம் பெயர்ந்த தமிழீழத்தை நேசிப்பவர்களாலும் வடக்கு மாகாணத்தைவிட்டு வெளியேறும் அதாவது 100 மீற்றருக்கு ஒன்றாக இருந்த காவலரன்கள் கொஞ்சம் அகற்றப்படும் அப்போது சிங்கள இனத்தின் அடையாளங்கள் உங்கள் தெருக்களில் எல்லாம் பாதுகாக்கப்படும் பொக்கிசமாக ஆக்கப்பட்டிருக்கும். அங்கே உங்களின் வேர்களுக்கான அடையாளங்கள் காணமல் போக்கடிக்கப்பட்டிருக்கும். அப்படியான ஒரு சூழல் உங்கள் பிள்ளைகளுக்கும் சுதந்திரமானதென்று நீங்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா செந்தூரன்

95 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த பிள்ளைகளுக்கு போராட்டம் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது நீங்கள் பேசிப்பார்த்த மாணவர்கள் வாயிலாக அறிந்ததென்று குறிப்பிடுகிறீர்கள். முற்றிலும் தவறானது. அங்குள்ள பிள்ளைகளுக்கு எங்களைவிட சரித்திரமும் வரலாறுகளும் அதிகம் தெரிந்திருக்கிறது. பல விடயங்களில் நாங்கள் சரியான மண்டுகளாக இருந்திருக்கிறோம் இருக்கிறோம். இன்றைய சூழல் அவர்களுக்குத் தெரிந்த விடயங்களை வெளியே சொல்ல முடியாதபடி தடுத்திருக்கிறது. எல்லா விடயங்களையும் வெளிப்படையாகச் சொல்லி அவர்களை இக்கட்டுகளுக்கு மாட்டிவிடக்கூடாது. நானும் கனடா வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன இருப்பினும் என்னுடைய வரவு நாட்டுக்கு அதிகம். ஏன் கடந்த ஆண்டுகூட அங்கு வந்தேன் என்ன சுதந்திரம் எங்கே உள்ளது.? ஒவ்வொரு 100 மீற்றர்களுக்கு ஒரு காவலரன் யாரை அச்சுறுத்துவதற்கு? நான் இலங்கைத் தீவின் பல பாகங்களுக்குச் சென்றேன் அதென்ன தமிழரின் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் மட்டும் இப்படி இராணுவ கெடுபிடிகள்? இலங்கையின் மற்றைய பாகங்களில் ஏன் இப்படியான இராணுவ கெடுபிடிகள் இல்லை? இராணுவக் கெடுபிடிகள் மட்டுமல்ல அரசமரம் கண்ட இடத்தில் பௌத்த விகாரைகள். முழுமையான தமிழரின் பண்பாடுகளை அழித்து ஒரு சிங்கள நாடு என்பதான திணிப்புகள் இராணுவப்பார்வையில் செயலாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் சுதந்திரமான வாழ்வு கிடைத்துவிட்டதாக நம்புகிறீர்கள்? இராணுவம் ஏதோ ஒரு காலத்தில் அனைத்துலகத்தின் அழுத்தம் காரணமாகவும், புலம் பெயர்ந்த தமிழீழத்தை நேசிப்பவர்களாலும் வடக்கு மாகாணத்தைவிட்டு வெளியேறும் அதாவது 100 மீற்றருக்கு ஒன்றாக இருந்த காவலரன்கள் கொஞ்சம் அகற்றப்படும் அப்போது சிங்கள இனத்தின் அடையாளங்கள் உங்கள் தெருக்களில் எல்லாம் பாதுகாக்கப்படும் பொக்கிசமாக ஆக்கப்பட்டிருக்கும். அங்கே உங்களின் வேர்களுக்கான அடையாளங்கள் காணமல் போக்கடிக்கப்பட்டிருக்கும். அப்படியான ஒரு சூழல் உங்கள் பிள்ளைகளுக்கும் சுதந்திரமானதென்று நீங்கள்......

ஹலோ..

இலங்கைத் தீவென்பது சிங்கள மக்களுக்காக புத்தரால் அருளப்பட்டது.. அதில வந்தேறு குடிகளாக நீங்கள் போய் இருந்திட்டு இப்ப அரசமரம் நடக்கூடாதெண்டால் எப்பூடி?? :unsure:

உங்கள் சொந்தநாடு தமிழ்நாடு.. கள்ளத்தோணியில் வந்த தமிழரெல்லாம் சிங்களவன் சொல்கேட்டு நடக்கக் கற்றுக்கொள்ளவும்.. கேள்வி கேட்பதென்றால் தமிழ்நாட்டில் நின்று கேளுங்கள்..! :mellow: பஞ்சம் பிழைக்கப் போன உங்களுக்கு கேள்வி எதுக்கு? :blink:

உங்கடை ஊரான வல்வெட்டித்துறைக்கு உண்மையான பெயர் வல்வெட்டிகல.. சிங்களவனிட்டை இருந்து ஆக்கிரமிச்சிட்டு பெயரை மாத்தினது நீங்கள்தான்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ..

இலங்கைத் தீவென்பது சிங்கள மக்களுக்காக புத்தரால் அருளப்பட்டது.. அதில வந்தேறு குடிகளாக நீங்கள் போய் இருந்திட்டு இப்ப அரசமரம் நடக்கூடாதெண்டால் எப்பூடி?? :unsure:

உங்கள் சொந்தநாடு தமிழ்நாடு.. கள்ளத்தோணியில் வந்த தமிழரெல்லாம் சிங்களவன் சொல்கேட்டு நடக்கக் கற்றுக்கொள்ளவும்.. கேள்வி கேட்பதென்றால் தமிழ்நாட்டில் நின்று கேளுங்கள்..! :mellow: பஞ்சம் பிழைக்கப் போன உங்களுக்கு கேள்வி எதுக்கு? :blink:

உங்கடை ஊரான வல்வெட்டித்துறைக்கு உண்மையான பெயர் வல்வெட்டிகல.. சிங்களவனிட்டை இருந்து ஆக்கிரமிச்சிட்டு பெயரை மாத்தினது நீங்கள்தான்..! :rolleyes:

இயக்கரும், நாகரும் வாழ்ந்த வரலாறு தெரியாதவர்கள் தமிழரை வந்தேறுகுடிகள் என்று சொல்லாம். ஈழம் என்ற பெயரே ஆதிப்பழந்தமிழ் சொல்லாகும். அதுதான் ஈழம் என்ற சொற்பதத்தை அழிக்கச் சிங்கள அரசு பாடாய் படுகிறது. ஆதியில் ஈழத்தில் பேசப்பட்ட மொழி எலு மொழியாகும் விசயனும் அவனுடைய தோழர்களும் கெடு நடத்தை காரணமாக தந்தையால் நாடுகடத்தப்பட்ட போது கடல் மார்க்கமாகப்பயணித்து வந்து ஈழத்தில் குவேனியை மணந்தபின்னர் பாலி மொழியுடன் கலந்த எலு மொழி சிங்கள மொழியாக மாற்றம் கண்டதுதான் வரலாறாம். பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகளுடன் கலந்த எலு மொழியே சிங்களம் என்றால்..... அது உருவாக முன் பேசப்பட்ட எலு மொழி....... ஈழம் ...... ஏலு....:)

இசை இந்த ஆசைதான் கூடாது....... வல்வெட்டித்துறையை...... வல்வெட்டிக்கல..... நடக்காது மக்கள்

Edited by valvaizagara

பதின்மூன்று வயதில் ஒருவேளை "எல்லா சரித்திரமும்" தமிழ் மாணவர்களுக்கு தெரிந்திருக்கும் என எதிர்பார்க்க முடியாவிட்டாலும் பதினெட்டு வயது வரும் பொழுது அவர்களுக்கு முன்னால் நிச்சயமாக பல ச(த)ரித்திரங்கள் தலை எடுக்கும்: அவசரகாலச்சட்டம், தராதரப்படுத்தல், பயங்கரவாதி முத்திரை, சொந்த மண்ணில் இரண்டாம் தர பிரசை ...

அடுத்த சந்ததி சுதந்திரமாக நிம்மாதியாக தமது மண்ணில் வாழ வேண்டும் என்பதே தமிழர் எல்லோரினதும் அவா.

ராஜா செந்தூரன்

95 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த பிள்ளைகளுக்கு போராட்டம் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது நீங்கள் பேசிப்பார்த்த மாணவர்கள் வாயிலாக அறிந்ததென்று குறிப்பிடுகிறீர்கள். முற்றிலும் தவறானது. அங்குள்ள பிள்ளைகளுக்கு எங்களைவிட சரித்திரமும் வரலாறுகளும் அதிகம் தெரிந்திருக்கிறது. பல விடயங்களில் நாங்கள் சரியான மண்டுகளாக இருந்திருக்கிறோம் இருக்கிறோம். இன்றைய சூழல் அவர்களுக்குத் தெரிந்த விடயங்களை வெளியே சொல்ல முடியாதபடி தடுத்திருக்கிறது. எல்லா விடயங்களையும் வெளிப்படையாகச் சொல்லி அவர்களை இக்கட்டுகளுக்கு மாட்டிவிடக்கூடாது. நானும் கனடா வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன இருப்பினும் என்னுடைய வரவு நாட்டுக்கு அதிகம். ஏன் கடந்த ஆண்டுகூட அங்கு வந்தேன் என்ன சுதந்திரம் எங்கே உள்ளது.? ஒவ்வொரு 100 மீற்றர்களுக்கு ஒரு காவலரன் யாரை அச்சுறுத்துவதற்கு? நான் இலங்கைத் தீவின் பல பாகங்களுக்குச் சென்றேன் அதென்ன தமிழரின் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் மட்டும் இப்படி இராணுவ கெடுபிடிகள்? இலங்கையின் மற்றைய பாகங்களில் ஏன் இப்படியான இராணுவ கெடுபிடிகள் இல்லை? இராணுவக் கெடுபிடிகள் மட்டுமல்ல அரசமரம் கண்ட இடத்தில் பௌத்த விகாரைகள். முழுமையான தமிழரின் பண்பாடுகளை அழித்து ஒரு சிங்கள நாடு என்பதான திணிப்புகள் இராணுவப்பார்வையில் செயலாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் சுதந்திரமான வாழ்வு கிடைத்துவிட்டதாக நம்புகிறீர்கள்? இராணுவம் ஏதோ ஒரு காலத்தில் அனைத்துலகத்தின் அழுத்தம் காரணமாகவும், புலம் பெயர்ந்த தமிழீழத்தை நேசிப்பவர்களாலும் வடக்கு மாகாணத்தைவிட்டு வெளியேறும் அதாவது 100 மீற்றருக்கு ஒன்றாக இருந்த காவலரன்கள் கொஞ்சம் அகற்றப்படும் அப்போது சிங்கள இனத்தின் அடையாளங்கள் உங்கள் தெருக்களில் எல்லாம் பாதுகாக்கப்படும் பொக்கிசமாக ஆக்கப்பட்டிருக்கும். அங்கே உங்களின் வேர்களுக்கான அடையாளங்கள் காணமல் போக்கடிக்கப்பட்டிருக்கும். அப்படியான ஒரு சூழல் உங்கள் பிள்ளைகளுக்கும் சுதந்திரமானதென்று நீங்கள்......

இங்கு எனக்கு சுதந்திரமான வாழ்வு கிடைத்திருப்பதாக நான் குறிப்பிடவில்லையே. நீங்கள் எந்தத் தாயகத்துக்காகப் போராடுகிறீர்களோ... இந்தத் தாயகத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் அதை விரும்பியே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கு வந்து வாழத் தொடங்கியபின் இங்குள்ள இளைய தலைமுறையினரின் மனவோட்டம் எப்படியிருக்கின்றது என்பதில் எனக்கு ஒரு கணிப்பு இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இது எப்படி மாறும் என்பதிலும் ஒரு கணிப்பு இருக்கிறது.

உங்களிடமும் இதுபற்றிய ஒரு கணிப்பு இருக்கின்றது. அது எனது கணிப்புக்குத் தலைகீழாக இருக்கிறது.

உங்கள் கணிப்புப்படி நடந்தால் நல்லது.

என்னுடைய கணிப்பு ஒரு அபாய மணியை ஒலிக்கிறது. அபாய மணி தவறு... யாவரும் நலம் என்று நீங்கள் நம்பினால் உங்கள் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள்.

பதின்மூன்று வயதில் ஒருவேளை "எல்லா சரித்திரமும்" தமிழ் மாணவர்களுக்கு தெரிந்திருக்கும் என எதிர்பார்க்க முடியாவிட்டாலும் பதினெட்டு வயது வரும் பொழுது அவர்களுக்கு முன்னால் நிச்சயமாக பல ச(த)ரித்திரங்கள் தலை எடுக்கும்: அவசரகாலச்சட்டம், தராதரப்படுத்தல், பயங்கரவாதி முத்திரை, சொந்த மண்ணில் இரண்டாம் தர பிரசை ...

அடுத்த சந்ததி சுதந்திரமாக நிம்மாதியாக தமது மண்ணில் வாழ வேண்டும் என்பதே தமிழர் எல்லோரினதும் அவா.

18 வயதில் அவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திப்பார்கள் என்பது நிஜம்தான். அதைத்தான் நானும் கூறுகிறேன். அதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு முடிவை அப்போது அவர்கள் எடுக்கப் போகின்றார்கள். அந்த முடிவு 20 வருடங்களுக்குமுன் இதே பிரச்சனைகளில் சிக்கியுள்ளவர்கள் எடுத்த முடிவிலிருந்து மாறுபட்டு இருக்கப் போகின்றது என்பதையே நான் கூறுகிறேன்.

தற்போது 18-20 வயதில் இங்கிருக்கும் ஆட்கள் எடுக்கும் முடிவை.... கடந்த வருடம் எடுத்த முடிவை... தொடருவார்கள். அதுவே நடைமுறையாகப் போய்விடும்.

சேச்சே அதெல்லாம் இல்லை.. இப்போது சும்மா வேறு வழியில்லாமல் எடுக்கிறார்கள். நாளைக்கே எல்லாம் சரியாகும்போது முடிவு மாறிவிடும் என்று நம்புவதில் தப்பில்லை. ஆனால் அந்த “நாளைக்கே” வருவதற்குக் காலம் வருடக் கணக்கில் இழுத்துச் சென்றால் அதற்குமுன் முடிவு எடுத்தவர்களின் சதவீதம்தான் அதிகம் இருக்கும். அந்த முடிவுதான் Default முடிவாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிடும். இதைத்தான் கஷ்டப்பட்டு சொல்ல வருகிறேன். (அண்ணை நீங்கள் வீணாகக் கஷ்டப்பட வேண்டாம் என்று இதற்கும் யாராவது இடக்காகப் பதில் தருவார்கள்)

வெளிநாட்டில் இருந்து காசு மட்டும் அனுப்பி உங்களை கொழுக்க வைக்க மட்டும் தான் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் எனும் மன நிலையில் ஊறிய உங்களை போண்ற ஆக்களிட்டை இதை விட பெரிசா எதையும் எதிர்பார்க்க முடியாதுதானே....??

உங்கட பிரச்சினை என்ன ? எங்கட சில்லறை வேணும் ஆனால் பிரச்சினைக்கு தீர்வுக்காக முன்னெடுப்புக்களை செய்யக்கூடாது அதுதானே... அதை வெளிப்படையாக சொல்லுங்கோவன்....

ஐயோ அண்ணை... ஆள் யாரென்று தெரியாமல் எழுதிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

முப்பது வருடத்துக்கு முன்னால் அன்றைய இளையோர் முடிவு ஒன்றை எடுக்கக்கூடிய நிலைமை இருந்தது, அவர்கள் எடுத்தார்கள்.

இன்று அகச்சூழலும் புறச்சூழலும் வேறு.

அண்மையில் விடுதலை பெற்ற தென் சூடானில் இருந்து அதற்கு முன்னர் சுதந்திரம் பெற்ற கோசவா, கிழக்கு திமோர் வரை போன்று எமது நியாமான விடுதலை ஏற்றுக்கொள்ளும் வரை சர்வதேசம் ஊடாக சிங்களத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. அதை மூன்று இலட்சம் சிங்கள ஆயுதப்படைகள் மத்தியில் தாயகத்தில் உள்ள தமிழர்களால் செய்ய முடியாது. புலம் பெயர் மக்களால் மட்டுமே அதை செய்ய முடியும், அது அவர்கள் கடமையும் கூட.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள சிறுவர்கள் மிக மோசமாக பாதித்துள்ளனர். ஒரு விளையாட்டு பொம்மையைக் கூட பார்த்தறியாத அந்த சிறுவர்கள், துப்பாக்கியைத் தூக்கினார்கள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. நிச்சயம் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். நிதி திரட்டித் தருவது பற்றி யோசித்து வருகிறேன்," என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/03/29/sir-ian-botham-makes-emotional-visit-lanka-aid0091.html

சிறுவர்கள் துப்பாக்கியைத் தூக்கினார்கள் என்ற கருத்து இங்கே திணிக்கப்பட்டிருக்கிறது அல்லது அயன் போதமுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இராணுவத்தினால் ஏற்பட்ட அழிவுகளைப் புலிகளினால் ஏற்பட்ட அழிவுகள் என்று சிங்கள நாட்டு விளையாட்டு வீரர்கள் அயன் போதமுக்கு சொல்லியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எனக்கு சுதந்திரமான வாழ்வு கிடைத்திருப்பதாக நான் குறிப்பிடவில்லையே. நீங்கள் எந்தத் தாயகத்துக்காகப் போராடுகிறீர்களோ... இந்தத் தாயகத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் அதை விரும்பியே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கு வந்து வாழத் தொடங்கியபின் இங்குள்ள இளைய தலைமுறையினரின் மனவோட்டம் எப்படியிருக்கின்றது என்பதில் எனக்கு ஒரு கணிப்பு இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இது எப்படி மாறும் என்பதிலும் ஒரு கணிப்பு இருக்கிறது.

உங்களிடமும் இதுபற்றிய ஒரு கணிப்பு இருக்கின்றது. அது எனது கணிப்புக்குத் தலைகீழாக இருக்கிறது.

உங்கள் கணிப்புப்படி நடந்தால் நல்லது.

என்னுடைய கணிப்பு ஒரு அபாய மணியை ஒலிக்கிறது. அபாய மணி தவறு... யாவரும் நலம் என்று நீங்கள் நம்பினால் உங்கள் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள்.

நீங்கள் வெளிநாட்டில் வாழும் வதிவிடத்தகுதி பெற்றிருந்தும் நாட்டில் வசிக்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள். எனக்கும் ஒரு சகோதரன் இருக்கிறார் அவரும் உங்களைப் போல் புலம்பெயர்ந்த நாடொன்றில் வாழக்கூடிய வதிவிட உரிமை பெற்றவர். அவரும் நாட்டில் இருப்பதில் ஆர்வம் கொண்டு அங்கேயே இருக்கிறார். அவரிடம் பேசினால் அவர் வீட்டை விட்டு வெளியே தான் உலாவுவது குறைவென்றும் மாலை ஆறுமணிக்குமேல் வெளியே எங்குமே செல்வதில்லை என்றும் கூறுவார். நான் ஏன் அப்படி என்றால் இங்கு யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது.... எடுத்ததற்கெல்லாம் பயந்துபயந்தே வாழவேண்டிக்கிடக்கிறது என்பார். கிட்டத்தட்ட அவர் அங்கு வாழ முற்பட்டு 8 வருடங்களுக்குமேலாகிறது. ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சூழலில் முடக்கப்பட்டதான ஒரு வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார். நீங்களும் இப்படிப்பட்ட ஒரு வாழ்வின் சூழலிலேயே இருக்கமுடியும். நீங்கள் அபாயமணியின் எச்சரிக்கையை ஒலிப்பதாகக் கூறுகிறீர்கள். உங்களின் கணிப்புப்படி அடுத்த 5 ஆண்டுகாலத்தில் எப்படி மாறும் என்று நீங்கள் ஒற்றைப்பக்கத்தில் நினறு பேசுவதாகப்படுகிறது. நாட்டில் இரண்டுவிதமான இளையோர் வளர்வார்கள். ஒன்று ஏகமானதான வெளிநாட்டுப்பணத்தில் கண்மண் தெரியாமல் அடிமை வாழ்வே சொர்க்கம் என்று சொல்லிக்கொண்டு சீரழியும் ஒரு வகையும், சிங்கள அரசின் கொடியபோரால் பாதிக்கப்பட்ட கோபக்கார இளையவர்களுமாக இரண்டுவகையினர் மூச்செடுப்பர். சிங்கள அரசின் கொடிய போரால் அடிமைகளாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட இளையோருக்கு வரலாற்றை யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சொகுசாக வெளிநாட்டு பணத்திலும், சிங்கள அரசின் கூலிக்குள்ளும் இருக்கும் இளையோருக்குச் சுட்டுப்போட்டாலும் வரலாறு தெரியப்போவதில்லை அந்த வகையில் உங்கள் கவலை எந்த வகையானவர்களில் தேங்கிக்கிடக்கிறது?

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எனக்கு சுதந்திரமான வாழ்வு கிடைத்திருப்பதாக நான் குறிப்பிடவில்லையே. நீங்கள் எந்தத் தாயகத்துக்காகப் போராடுகிறீர்களோ... இந்தத் தாயகத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் அதை விரும்பியே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கு வந்து வாழத் தொடங்கியபின் இங்குள்ள இளைய தலைமுறையினரின் மனவோட்டம் எப்படியிருக்கின்றது என்பதில் எனக்கு ஒரு கணிப்பு இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இது எப்படி மாறும் என்பதிலும் ஒரு கணிப்பு இருக்கிறது.

உங்களிடமும் இதுபற்றிய ஒரு கணிப்பு இருக்கின்றது. அது எனது கணிப்புக்குத் தலைகீழாக இருக்கிறது.

உங்கள் கணிப்புப்படி நடந்தால் நல்லது.

என்னுடைய கணிப்பு ஒரு அபாய மணியை ஒலிக்கிறது. அபாய மணி தவறு... யாவரும் நலம் என்று நீங்கள் நம்பினால் உங்கள் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள்.

இங்கு யாரும் உங்குள்ள இளையோருக்கு ஒன்றையும் புகுத்தவில்லை.அவர்கள் தாங்களாகவே நல்ல முடிவை தங்களுக்கு எடுப்பார்கள் என நம்புவோம்.

ஒரு உதாரணம்:எனது நண்பன்/நண்பியின் அப்பாவின் வீட்டில் யாழ் பல்கலைகளக மாணவர்கள் வாடகைக்கு இருந்தார்கள். நண்பனின் அப்பாவும் வெளிநாடொன்றில் வசிப்பதால் அவரின் சகோதரி தான் வாடகையை மட்டும் வாங்கிக்கொள்வார்.அண்மையில் நண்பனின் அப்பா வீட்டைப்பார்க்க சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.வீடு குப்பையாக இருந்தது ஒரு புறமிருக்க கிட்டத்தட்ட 5000 வெறும் போத்தல்கள் வீடு முழுவதும் பரவிக்கிடந்தன.நாம் மாணவர்களாக இருந்த போது பெரும்பாலோர் இப்படி இருக்கவில்லை.அரசு திட்டமிட்டு எமது சமூகத்தை பாழ்கிணற்றில் தள்ளி விட்டது.இது ஒரு சிறு உதாரணம்.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்த ஏலியன்கள் அல்ல.அவர்களில் பெற்றோர்,சகோதர சகோதரிகள்,உறவினர்கள் நண்பர்கள் என ஒரு உறவுச்சங்கிலியை கொண்டவர்கள்.அவர்களில் அன்பு , அக்கறை கொண்டவர்கள்.அவர்கள் எம்கண்முன்னே கெட்டுப்போவதை யாரும் விரும்பமாட்டார்கள்.

ஆனால் இன்னும் 5 வருடத்தில் அதிசயதக்க வகையில் ஒரு நல்ல முடிவை தமக்காக எடுப்பார்களாயின் யாரும் குறுக்கே நிற்கப்போவதில்லை.

ஆனால் இன்னும் 5 வருடத்தில் அதிசயதக்க வகையில் ஒரு நல்ல முடிவை தமக்காக எடுப்பார்களாயின் யாரும் குறுக்கே நிற்கப்போவதில்லை.

நல்ல முடிவல்ல. ஆனால் அது நல்ல முடிவு அல்ல என்று அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. அதற்குப் பெயர்தான் சூழ்நிலைக்கான இசைவாக்கம்.

நல்ல முடிவல்ல. ஆனால் அது நல்ல முடிவு அல்ல என்று அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. அதற்குப் பெயர்தான் சூழ்நிலைக்கான இசைவாக்கம்.

சூழ்நிலைகள் என்றும் மாறிய வண்ணம் இருக்கும். இன்றைய மத்திய கிழக்கு நிலைமைகள் நேற்றைய கிழக்கு ஐரோப்பிய பிளவுகள் வரை சூழ்நிலைகள் மாறுகின்றன, மாறின.

நாம் எல்லோரும் தொடர்ந்து விழிப்பாக இருந்து நேரம், சந்தர்ப்பம் வரும்பொழுது நிலைமையை எமக்கு சாதகமாக்க வேண்டும். அதற்கு ஒற்றுமையாக உழைப்போம்.

சூழ்நிலைகள் என்றும் மாறிய வண்ணம் இருக்கும். இன்றைய மத்திய கிழக்கு நிலைமைகள் நேற்றைய கிழக்கு ஐரோப்பிய பிளவுகள் வரை சூழ்நிலைகள் மாறுகின்றன, மாறின.

நாம் எல்லோரும் தொடர்ந்து விழிப்பாக இருந்து நேரம், சந்தர்ப்பம் வரும்பொழுது நிலைமையை எமக்கு சாதகமாக்க வேண்டும். அதற்கு ஒற்றுமையாக உழைப்போம்.

குறைந்தபட்சம் நீங்கள் ஒருவராவது இப்படியொரு பிரச்சனை தாயகத்தில் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களே. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு காலத்தில் தமிழீழம் என்று இயக்கம் தொடங்கியோர் மாணவப் பருவத்தினராகத்தான் இருந்தனர். அவர்களோடு ஒப்பிடும்போது தற்போது தாயகத்தில் மாணவர்களாக இருப்பவர்கள் அரசியலை ஒதுக்கி, தமது வாழ்வில் முன்னேறவே விரும்புகின்றனர். முன்னேற்றத்திற்கு தமிழர்களாக இருப்பதுதான் தடையென்று அவர்கள் உணரும்போது, அரசியல்ரீதியாக உரிமைகளைப் பெற முயற்சி செய்வார்கள். அதற்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து அரசியல் சித்துவேலைகள் செய்பவர்களின் விருப்பங்களுக்குத் தகுந்தமாதிரி அவர்களின் செயற்பாடுகள் இருக்கும் என்று சொல்லமுடியாது!

தலைப்பிற்கு வந்தால்:

முரளிதரனின் முயற்சி வெற்றபெற வாழ்த்துக்கள். தமிழர்களும் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தால் நல்லதுதானே. வல்வெட்டிகலவில் இருந்தும் நல்ல விளையாட்டு வீரர்கள் வருவார்கள் என்பது நிச்சயம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.