Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் இருந்து திருப்பதி வரை ராஜபக்சவிற்கு இராஜ பவனி மரியாதை. விசேட பஞ்சாமிர்தம் தயார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் இருந்து திருப்பதிக்கு காரில் செல்கிறார் ராஜபக்சே

இந்தியா இலங்கை இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வருகிறார்.

முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்.

பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் காலை அங்கிருந்து புறப்பட்டு மும்பை செல்கிறார்.

ராஜபக்சே இன்று திருப்பதி கோவிலுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்தர் கூறும் போது, ராஜபக்சேவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியது. இதன்படி அவருக்கு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். அவர் திருப்பதி கோவிலுக்கு வரும் போது பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை பத்திரமாக அழைத்துச் செல்வோம் என்றார்.

ராஜபக்சே வருகை பற்றி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இதில் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அவருக்கு ஏழுமலையானின் அனைத்து பிரசாதங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=51190

------------------------------------------------------------------------------

நல்லூர் முருகன் தான் கொடிய சிங்கள பயங்கரவாதிகளுக்கு அருள் பாலிக்கிறான்னா.. திருப்பதி வெங்கடாச்சாரியும்.. போட்டி போட்டுக்கிட்டு அருள் பாலிக்கிறானே. :rolleyes::o

எங்கே எங்கள்.. ஈழத்தமிழ் ஆதரவு போர் முரசுகள். கருணாய் நிதியோட சேர்ந்து வாழை தோரணம் கட்டி ராஜபக்சவிற்கு இராஜ பவனி ஏற்பாடு செய்கிறார்களோ..???! இல்ல தேர்தல் களத்தில் அவை.. இடையில் ராஜபக்ச - கருணாநிதி கூட்டு.. புகுந்து விளையாட்டோ. :unsure::o:(

Edited by nedukkalapoovan

தோழர்களே! மும்பையில் நடக்கும் உலக கோப்பை இறுதி போட்டியில் கலந்து கொள்ள இனவெறியன் ராஜபக்சே மும்பை வருகிறான்....

மும்பையில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சார்ந்த தோழர்கள் தொடர்ச்சியாக சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்...

ராஜபக்சேயின் வருகையை கண்டித்து பாரிய அளவிலான போராட்டம் நடத்த தோழர்களை ஊக்குவியுங்கள், தொடர்பு கொள்ளுங்கள்....வாய்ப்பிருந்தால் போராட்டத்திற்கு உதவுங்கள்....

தொடர்பு கொள்ளுங்கள் :

சிரீதர் : +919702481441, பாண்டியன் : +919821072848

=============================================

வேர்ல்ட் கப் அரசியல்

ராஜபக்ஷே : நாங்கள் உலக கோப்பை வெல்வோம். உங்கள் எதிரி யான பாகிஸ்தான், ஆஸ்திரேலியா விடம் ரசாயன குண்டு பந்துகள் வாங்கி வீசியாவது உங்களை ஆல் அவுட் செய்து காலி செய்து விடுவோம் ஹா! ஹா!ஹா!

சோனியா : வெல் டன்! நாங்களும் தேவையானதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உங்கள் வீரர்களுக்கு பயிற்சியும் தருகிறோம். ஐசிசி இடமும், ஐ நா விடமும் சொல்லிடாதிங்கோ ......

மன்மோகன் : எங்களுக்கு உயிரை விட ஹர்பஜன் சிங்கின் மயிர் தான் ரொம்ப முக்கியம். கொண்டையை மட்டும் கழற்றி விட்டுடாதிங்கோ சொல்லி புட்டேன் ஆமாம், பி கேர் புல் , தலைப்பாகை எங்கள் உயிர் மூச்சு. ஹி!ஹி!ஹி!

கருணாநிதி : நாங்கள் இலங்கையை வெல்ல விட மாட்டோம். ஒவ்வொரு முறை அவர்கள் 4 அடிக்கும் போதும் போரை நிறுத்து, போரை நிறுத்து என்று தந்தி அடிப்போம். ட்ரிங்க்ஸ் ப்ரேக்கில் உண்ணாவிரதம் இருப்போம். தந்தி அடிப்போம், தமிழன் மானம் காப்போம். புறப்படு உடன்பிறப்பே மும்பைக்கு....,,,,,

(மின்னஞ்சலில் இருந்து )

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி : நாங்கள் இலங்கையை வெல்ல விட மாட்டோம். ஒவ்வொரு முறை அவர்கள் 4 அடிக்கும் போதும் போரை நிறுத்து, போரை நிறுத்து என்று தந்தி அடிப்போம். ட்ரிங்க்ஸ் ப்ரேக்கில் உண்ணாவிரதம் இருப்போம். தந்தி அடிப்போம், தமிழன் மானம் காப்போம். புறப்படு உடன்பிறப்பே மும்பைக்கு....,,,,,

(மின்னஞ்சலில் இருந்து )

:lol: :lol: :lol:

என் உயிரினும் மேலான ஹிந்திய டெஸ்ட் டியூப் உறவுகளே.. :D

ராஜபக்ச மட்டும் திருப்பதியில் பஞ்சாமிர்தம் சாப்பிட்டிவிட்டானென்றால் உங்களுக்கு கோப்பையும் இல்லை.. கேப்பையுமில்லை.. :rolleyes: ஆகவே துணிந்து உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஒரு கொலைகாரனுக்கு திருப்பதியானின் அனைத்துப் பிரசாதங்களும் வழங்கப்டுகின்றன, அப்படி என்னதான் அவன் செய்துவிட்டான்? கடவுள்பிரசாதங்களை மனிதன் கொடுப்பதற்கும், முடிவெடுப்பதற்கும் யார் அதிகாரம் தந்தது?? ஆகக் கடவுள் கூட மனிதனால் ஆட்டுவிக்கப்படும் பம்பரம் தான் என்கிறார்கள், நல்லது.

ஆக ஆக்குவதும் மனிதந்தான் அழிப்பதுவும் மனிதன் தான் இடையில் கடவுளுக்கு என்ன வேலை??

அந்த ஆளை நம்பி கோடானுகோடி பேதைகள்" கடவுளே, கடவுளே " என்று இரைஞ்சுவது வேதனையிலும், வேதனை.

போங்கடா நீங்களும் உங்கள் கடவுள்களும் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.