Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் மக்களின் மனங்களை ஆட்கொள்ள நடாத்தப்படும் இசை நிகழ்ச்சிகள்

Featured Replies

மக்களின் கவனங்களை திசை திருப்பி யதார்த்த நிலமைகளை மறைக்கும் விதமாக யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியில் புதுவருடத் திருவிழா என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொணடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிகளை டான் தமிழ் தொலைக்காட்சி அனுசரனை வழங்கி நடத்துகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சிங்களப் பாடல்கள் பாடப்பட்டு கவர்ச்சி நடனங்களும் இடம்பெறுவதாக எமது செய்தியார் குறிப்பிடுகின்றார்.

நேற்றைய நிகழ்ச்சியில் இசைப்பிரியனின் இசையமைப்பில் ஈழத்தின் முன்னணிப்பாடகர்கள் சாந்தன், சாந்தனின் புதல்வர், சாந்தனின் புதல்வி போன்றவர்கள் சிங்களப் பாடல்களை பாடினர். அதேவேளை தமிழ் பாடல்களை இராணுவப் பாடகர்களும் பொலிஸ் படாகர்களும் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் காட்டமான அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த இசை நிகழ்ச்சிகள் மக்களின் கவனத்தை திசை திருப்பி யதார்த்த நிலமைகளை மறைக்கும் சூழ்ச்சி மிக்க நடவடிக்கையானது என பலரும் கூறுகிறார்கள்.

தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் சிங்கள மக்களுடன் இணைந்து ஆடிப் பாடுகின்றனர் என்றும் இவ்வாறான விசாரணைகள் அவசியமற்றவை என்றும் குழப்பமான அர்த்தத்தை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டவை என்ற சந்தே

இந்த இசை நிகழ்ச்சிகள் கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் உள்ள யாழ்ப்பாணம் நகரத்தின் இயல்புக்கு மாறாக இசை நிழ்ச்சி துரையப்பா விளையாட்டரங்கில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இந்த நிகழ்வின் அனுசரனை ஊடகமாக செயற்படும் டான் தொலைக்காட்சியின் நிறுவனர் குகநாதன் சிறப்புரையாற்றுகையில் இலங்கை இந்திய உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்ற பொழுது யாழப்பாணத்தில் தமிழர்கள் வெடி கொலுத்தி கொண்டாடியிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

இலங்கை எமது தாய்நாடு என்றும் இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் வென்றால் மட்டுமே அதை நாம் கொண்டாட வேண்டும் என்றும் அப்படிக் கொண்டாடுவது எமது நாட்டுக்குக் களம் என்றும் தேசிய ஒருமைப்பாட்டை அது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார். இப்படியான இசை நிகழ்ச்சிகளை கொண்டாடும் ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டதற்கு ஜனாதிபதியும் படையினருமே உழைத்தவர்கள் என்றும் நினைவுபடுத்தினார்.

www.globaltamilnews.net

பிரான்ஸ் நண்பர்களுக்குத் தெரியும் இந்தப் பெரியமனிதர் இங்கு எப்படி புலிவேசம் போட்டுக் கல்லா கட்டினார் என்று.இவர்களை என்னவென்று சொல்வது. ^_^^_^^_^^_^^_^

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வின் அனுசரனை ஊடகமாக செயற்படும் டான் தொலைக்காட்சியின் நிறுவனர் குகநாதன் சிறப்புரையாற்றுகையில் இலங்கை இந்திய உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்ற பொழுது யாழப்பாணத்தில் தமிழர்கள் வெடி கொலுத்தி கொண்டாடியிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

இலங்கை எமது தாய்நாடு என்றும் இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் வென்றால் மட்டுமே அதை நாம் கொண்டாட வேண்டும் என்றும் அப்படிக் கொண்டாடுவது எமது நாட்டுக்குக் களம் என்றும் தேசிய ஒருமைப்பாட்டை அது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார். இப்படியான இசை நிகழ்ச்சிகளை கொண்டாடும் ஆரோக்கியமான சூழல் ஏற்பட்டதற்கு ஜனாதிபதியும் படையினருமே உழைத்தவர்கள் என்றும் நினைவுபடுத்தினார்.

பிரான்ஸ் நண்பர்களுக்குத் தெரியும் இந்தப் பெரியமனிதர் இங்கு எப்படி புலிவேசம் போட்டுக் கல்லா கட்டினார் என்று.இவர்களை என்னவென்று சொல்வது. ^_^^_^^_^^_^^_^

அவரது சில நடவடிக்கைகளை ஆரம்பத்தில் நாங்கள் விமர்சித்தபோது...

அவரது தாயக பற்று அதிகமானது என்றும் புலிகளுக்கு அவருடன் சேர்ந்து வேலை செய்யத்தெரியவில்லை என்றும் சிலர் சொன்னார்கள். இன்று அவரது தாயகம் எது என்பதை அவரே சொல்லியுள்ளார். :(:(:(

அவரது சில நடவடிக்கைகளை ஆரம்பத்தில் நாங்கள் விமர்சித்தபோது...

அவரது தாயக பற்று அதிகமானது என்றும் புலிகளுக்கு அவருடன் சேர்ந்து வேலை செய்யத்தெரியவில்லை என்றும் சிலர் சொன்னார்கள். இன்று அவரது தாயகம் எது என்பதை அவரே சொல்லியுள்ளார். :(:(:(

உங்களைத்தான் எதிர்பார்த்தேன் விசுகு இந்தப் பிரபலத்திற்கு சிஞ்சக் அடிக்க என்றே ஒரு கூட்டத்தை வைத்திருந்தார்.இவர்களால் தான் நாம் மனதால் அதிகம் களைத்துப் போயுள்ளோம். :(:(:(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைத்தான் எதிர்பார்த்தேன் விசுகு இந்தப் பிரபலத்திற்கு சிஞ்சக் அடிக்க என்றே ஒரு கூட்டத்தை வைத்திருந்தார்.இவர்களால் தான் நாம் மனதால் அதிகம் களைத்துப் போயுள்ளோம். :(:(:(:(:(

அனுபவ உண்மை

சாண் ஏற முழம் சறுக்கச்செய்தவர்கள் அவர்களேநன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வின் அனுசரனை ஊடகமாக செயற்படும் டான் தொலைக்காட்சியின் நிறுவனர் குகநாதன் சிறப்புரையாற்றுகையில் இலங்கை இந்திய உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்ற பொழுது யாழப்பாணத்தில் தமிழர்கள் வெடி கொலுத்தி கொண்டாடியிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்

எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க, தமிழ் மக்கள் இன்னும் பால்குடிகளா?

தங்கள் முடிவுகளைத் தாங்களே எடுக்கக் கூடியவர்கள், தமிழ் மக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.