Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள்

Featured Replies

தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள்

ஐ.நா. நிபுணர் குழுவுக்கும் தருஸ்மன் அறிக்கைக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இறைமையுள்ள ஒரு நாடு என்ற வகையில் , இந்த அறிக்கையின் உண்மையற்றத்தன்மை, பக்கச்சார்பு குறித்து அணிசேரா இயக்கம், ஐ.நா. அங்கத்துவ நாடுகள் உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் அறிவிக்க இலங்கை நடவடிக்கை மேற்கொள்ளும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புகவெல்ல கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/20407-2011-04-28-07-39-02.html

தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக

சிங்களவன் வெற்றியை நோக்கி போகிறான்.

  • தொடங்கியவர்

ஆர்ப்பாட்டம் நடத்தும் உத்தேசமில்லை: வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களையும் கிளர்ச்சிகளையும் நடத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ராஜதந்திரிகளை சந்தித்தபோது இவ்வாறு கூறியதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலரால் கூறப்படுவதைப் போல், வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும் கிளர்ச்சிகளையும் நடத்தும் உத்தேசம் அரசாங்கத்திடம் இல்லை. நாம் ஹிஸ்டீரியாவையோ வன்முறைகளையோ ஐ.நா சமூகத்துக்கு அல்லது ஏனைய வெளிநாட்டு தூதரகங்களுக்கு அசௌகரியங்களையோ தூண்டிவிடவில்லை. அந்த குற்றச்சாட்டுகள் தற்போதைய உணர்வு பூர்வமான சூழ்நிலையில் இந்நாட்டின் புகழை மங்கச் செய்யும் அரசியல் நிகழ்ச்சிநிரல் கொண்டவர்களினால் சுமத்தப்படுவதாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/20434-2011-04-28-14-08-11.html

இந்தப் போர்க்குற்ற விசாரணையையும் சிங்களம் கடந்து செல்லும். புத்திசாலித்தனமானதும் வலிமைமிக்கதுமான ஒரு தேசிய இனமாக இந்த விசாரணையை சிங்களம் சந்திக்கும். மகிந்தா பாதிக்கப்படலாம் ஆனால் சிங்களப்பேரினவாதம் வெற்றிபெறும் ஏனெனில் இதை சிங்களம் கடந்துசெல்வது தமிழனுக்கான இறுதி ஆப்பாக அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் போர்க்குற்ற விசாரணையையும் சிங்களம் கடந்து செல்லும். புத்திசாலித்தனமானதும் வலிமைமிக்கதுமான ஒரு தேசிய இனமாக இந்த விசாரணையை சிங்களம் சந்திக்கும். மகிந்தா பாதிக்கப்படலாம் ஆனால் சிங்களப்பேரினவாதம் வெற்றிபெறும் ஏனெனில் இதை சிங்களம் கடந்துசெல்வது தமிழனுக்கான இறுதி ஆப்பாக அமையும்.

அப்ப ஆப்பு தமிழனுக்குத்தான் ஐ.நா வைக்கின்றது என்று சொல்ல வாறியளோ?

பரமசிவன் கழுத்தில இருக்கிற பாம்பிடம், பரமசிவனின் பலமே இருப்பதாக காண்பிப்பதில் என்ன சுகம் சுகனுக்கு?

அப்ப ஆப்பு தமிழனுக்குத்தான் ஐ.நா வைக்கின்றது என்று சொல்ல வாறியளோ?

பரமசிவன் கழுத்தில இருக்கிற பாம்பிடம், பரமசிவனின் பலமே இருப்பதாக காண்பிப்பதில் என்ன சுகம் சுகனுக்கு?

தேவன் நீங்கள் எல்லாம் நெருப்பு என்று சொன்னாலே வாயில் சூடுவரும் என்று நினைப்பவர்கள். உங்களுக்கு சுகன் சொன்னது புரியாமல் போனது தவறில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன் நீங்கள் எல்லாம் நெருப்பு என்று சொன்னாலே வாயில் சூடுவரும் என்று நினைப்பவர்கள். உங்களுக்கு சுகன் சொன்னது புரியாமல் போனது தவறில்லை.

எனது புரிதல்களை, நீங்கள் அளவு செய்வதும், முடிவு செய்வதும்தான் எனக்கு புரியவில்லை!

எனது புரிதல்களை, நீங்கள் அளவு செய்வதும், முடிவு செய்வதும்தான் எனக்கு புரியவில்லை!

சுகனுக்கு மட்டுமா அந்த சுதந்திரம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போர்க்குற்ற விசாரணையையும் சிங்களம் கடந்து செல்லும். புத்திசாலித்தனமானதும் வலிமைமிக்கதுமான ஒரு தேசிய இனமாக இந்த விசாரணையை சிங்களம் சந்திக்கும். மகிந்தா பாதிக்கப்படலாம் ஆனால் சிங்களப்பேரினவாதம் வெற்றிபெறும் ஏனெனில் இதை சிங்களம் கடந்துசெல்வது தமிழனுக்கான இறுதி ஆப்பாக அமையும்.

தங்களது ஆசிர்வாதத்துக்கு நன்றிகள்.

இந்தப் போர்க்குற்ற விசாரணையையும் சிங்களம் கடந்து செல்லும். புத்திசாலித்தனமானதும் வலிமைமிக்கதுமான ஒரு தேசிய இனமாக இந்த விசாரணையை சிங்களம் சந்திக்கும். மகிந்தா பாதிக்கப்படலாம் ஆனால் சிங்களப்பேரினவாதம் வெற்றிபெறும் ஏனெனில் இதை சிங்களம் கடந்துசெல்வது தமிழனுக்கான இறுதி ஆப்பாக அமையும்.

... சுகனது எதிர்வு கூறு சரியென்றுதான் தெரிகிறது!!! ... சிங்களம் திட்டமிட்ட செயற்பாடுகளில் இறங்கி இருக்கிறது!!! ... நாமோ ...???????? ... <_<

இந்தப் போர்க்குற்ற விசாரணையையும் சிங்களம் கடந்து செல்லும். புத்திசாலித்தனமானதும் வலிமைமிக்கதுமான ஒரு தேசிய இனமாக இந்த விசாரணையை சிங்களம் சந்திக்கும். மகிந்தா பாதிக்கப்படலாம் ஆனால் சிங்களப்பேரினவாதம் வெற்றிபெறும் ஏனெனில் இதை சிங்களம் கடந்துசெல்வது தமிழனுக்கான இறுதி ஆப்பாக அமையும்.

சிங்கள இனம் தங்கள் தலைவர்களை தலையில் வைத்து தூக்கி கொண்டாடுவதில்லை. இனத்தின் தேவைக்காக மகிந்தரையும் குடும்பத்தையும் முற்றாகவே பலி கொடுக்கும். முள்ளிவாய்க்கால் முடிவில் பாடம் படித்திருந்தால், கிடைத்த சந்தர்ப்பத்தை ஈழத் தமிழினம் பயன்படுத்திக்கொள்ளும். அல்லது வெறுமெனே எங்களுக்குள்ளேயே அரசியல் நடத்தியிருந்தால் கஷ்டந்தான்.

Edited by thappili

சுகனின் எதிர்வு கூறல்தான் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது...

மேற்குக்கு தேவையான வியாபாரங்கள் படியுமானால் ஐ.நாவினால் போர்க்குற்ற பிரச்சினை தூக்கியெறியப்பட்டுவிடப்படும்..

சிங்களம் முடிந்தவரை சுமூகமாக முடிக்க முயற்சி செய்யும்.... இதில் சிங்களாவர்கள் கைதேர்ந்தவர்கள்..

  • தொடங்கியவர்

முதலில் நம்பிக்கை இருக்கவேண்டும், அதை தளரவிடக்கூடாது. புலம்பெயர் தமிழர்கள் இன்று பத்து இலட்சம். எம்மால் முடியும் என்ற நம்பிக்கை நிச்சயம் தேவை.

இன்று வெளியாகும் பல போர்க்குற்ற ஆவணங்கள் சிங்களவன் மூலம் தான் பெறப்பட்டவை. அவையும் தமிழர்களால் தான் பெறப்பட்டவை.

இந்த குழுவை அமைத்தபோது நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கவில்லை. அதையும் மீறி அறிக்கை வெளியில் வரும் என்று பின்னர் நம்பவில்லை. இன்று வந்த அறிக்கையின் பின்னால் எல்லாம் நன்றாகவே நடக்கும், நடக்க வைப்போம் என ஒன்று சேர்ந்து உழைப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.