Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Replies 57
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு

இன்றைய ஹிந்து நாளிதழின் தலையங்கத்தை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இலங்கைப் பிரச்சனை குறித்து ஹிந்துவில் எழுதப்படும் தலையங்கங்கள் விமர்சனப் பார்வைக்கு கூட தகுதியற்ற ஒரே agenda கொண்டு எழுதப்படும் அலுப்பு தரும் விஷயம் என்பது தான் என் எண்ணம். ஆயினும் இந்தத் தலையங்கத்தை படிக்கும் பொழுது மாறி வரும் சில விஷயங்கள், குறிப்பாக இந்திய நிலைப்பாடு குறித்து ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ள கவலையும், அதனை மூடிமறைக்க ஒன்றுக்கும் உதவாத சில விஷயங்களை பெரிதுபடுத்தி பேசி இருப்பதும் நல்ல Humourக உள்ளது. இந்தத் தலையங்கத்தின் நோக்கம் தலைப்பில் தெளிவாக தெரிகிறது. LTTE is an anti-India force.

இந்தியா எங்கே இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்து விடுமோ என்ற கவலை ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டிற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் Hindu is trying to make a frantic attempt to brand LTTE as an anti-India force.

மகிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போனதும், மாறாக இது வரையில் இல்லாத அளவு விடுதலைப் புலிகள் விஷயத்தில் இந்திய அரசு மொளனம் சாதித்ததும் "ஸ்ரீலங்கா ரத்னா" பட்டம் பெற்ற ஹிந்துவின் ஆசிரியருக்கு கவலையளித்துள்ளதாக தெரிகிறது.

ஹிந்துவுக்கு குறிப்பாக சில விஷயங்களில் கவலை ஏற்பட்டுள்ளது.

ஒன்று இலங்கை-இந்தியா கூட்டறிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளதே தவிர விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறுகிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியத் தலைவர்களிடம் முறையிட்டப் பிறகும், அது குறித்து அறிக்கையில் ஒன்றுமே கூறப்படவில்லை.

ஹிந்து இது குறித்து கவலை அடைந்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது.

Surprisingly, the joint statement is foggy about why the ceasefire is threatened. Instead of identifying the LTTE as the author of the escalating violence, it points to "the need for the strict observance of the ceasefire and immediate resumption of talks aimed at strengthening the ceasefire." Is the non-condemnation of the LTTE deliberate - a consequence of pro-Eelam parties in Tamil Nadu, two of which are constituents of the United Progressive Alliance, applying pressure by ratcheting up the noise against the Rajapakse Government?

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பாலியல் பாலத்காரமும், கிழக்கு மாகாணங்களில் நடந்து வரும் நிழல் யுத்தமும் ஹிந்துவுக்கு டிசம்பர் "Fog"ல் சரியாக தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அரசுக்கும், இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் அது குறித்து தெரிந்துள்ளது. எனவே தான் இரு தரப்பும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொதுவாக இரு தரப்புமே போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறி இருக்கிறார்கள் என்பது உலக நாடுகள் மத்தியில் தெரிந்த உண்மை. இதைத் தான் இந்தியாவும் செய்துள்ளது. அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு தன்னுடைய Credibilityஐ உலக நாடுகள் மத்தியில் கேலி பொருளாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. எக்காரணத்தைப் பிடித்தாவது புலிகளை எதிர்த்தே தீர வேண்டிய ஹிந்துவின் Agenda இந்திய அரசுக்கு இப்பொழுது இல்லாமல் போனது மகிழ்ச்சியை அளிக்கிறது.

மற்றொன்று யாருமே எதிர்பாராதது - ஜெயலலிதா மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்தது.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஜெயலலிதா இது போன்ற நிலைப்பாட்டினை மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் இல்லாதபட்சத்தில் அவர் இம் மாதிரியான நிலையினை மேற்கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் சிங்கள பேரினவாத தலைவராக, தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கும் ஒரு தலைவராக மகிந்தா பார்க்கப்படுகிறார். ஜெயலலிதாவின் நிலையே இவ்வாறு இருக்கும் பொழுது மைய அரசின் முக்கிய கூட்டணி கட்சியான திமுகவின் நிலை இந்திய அரசுக்கு புரிந்திருக்கும். மதிமுக, பாமக போன்ற கட்சிகள் இலங்கை அரசுக்கு இந்தியா எந்தவிதத்திலும் ஆதரவு வழங்க கூடாது என்று தொடர்ந்து பேசி வருகின்றன. இதனால் இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிரான, இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹிந்துவுக்கு மிகுந்த கவலையளித்துள்ளது. எனவே New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been unwaveringly clear about since May 21, 1991 என்ற பழைய ஆயுதத்தை மறுபடியும் பயன்படுத்த முனைந்துள்ளது.

இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமே காரணம் என்று கூறி விட முடியாது. இதே காலக்கட்டத்தில் ரனிலோ, சந்திரிகாவோ இருந்திருந்தால், ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டதற்கு மாறாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்க கூடும். மகிந்த ராஜபக்ஷ உலக நாடுகளால் எப்படி பார்க்கப்படுகிறார் என்பதை அவரது இந்தியப் பயணமே அவருக்கு உணர்த்தி இருக்கும்.

மகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் இரண்டு நோக்கங்களை முக்கியமாக கொண்டு இருந்தது

ஒன்று இந்தியாவை அணுசரணை செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற்றுவது. ஏற்கனவே நார்வே முக்கிய அணுசரணையாளராக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய "co-chair's" ஒன்றை இலங்கை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவையும் சேர்ப்பது ராஜபக்ஷவின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை.

மற்றொன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நிறுத்த அத்துமீறல்கள் குறித்து ஒரு கண்டனத்தையாவது பெற்று இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது.

ராஜபக்ஷ இந்த இரண்டு நோக்கங்களிலுமே வெற்றி பெறவில்லை.

இந்தியா அவரது முதல் நோக்கத்தை கண்டுகொள்ள வில்லை.

கடந்த காலங்களில் இலங்கையின் அமைச்சர்கள் இந்தியாவிற்கு ஒவ்வொரு முறையும் காவடி எடுக்கும் பொழுதெல்லாம், குறைந்தபட்சம் தனது கவலையையாவது இந்தியா வெளிப்படுத்தும். ஆனால் இம் முறை அவ்வாறு கூட இல்லை.

இவ்வாறு ராஜபக்ஷவின் நோக்கம் நிறைவேறாத பொழுதும் ஹிந்து தேடிக் கண்டுபிடித்து சில காரணங்கள் கூறுவது, நல்ல ஜோக்.

Of particular significance are bilateral efforts to identify joint ventures for the development of the eastern Sri Lankan port city of Trincomalee, and its surrounding region, and the agreement for a joint venture power plant in the same district. These projects will intensify India-Sri Lanka economic co-operation in a region the LTTE covets

இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒரு பொருளாதார உடன்படிக்கை என்பதை தவிர மேற்கண்ட உடன்படிக்கையில் எந்த முக்கியமான அம்சமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது ஒன்றும் புதிய உடன்படிக்கை இல்லை. திருகோணமலையில் இந்தியா-இலங்கை இடையே ஏற்கனவே சில உடன்படிக்கைகள் உள்ளன. அப் பகுதியில் இருக்க கூடிய வாய்ப்புகளை கண்டறியக்கூடிய உடன்படிக்கை தானே தவிர செயல்படுத்தப்படும் என்பது நிச்சயமில்லை. செயல்படுத்த கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக தெரியவில்லை.

ரனிலிடம் இருந்து பாதுகாப்பு போன்ற சில பொறுப்புகளை சந்திரிகா பறித்த பொழுது அவர் கூறிய ஒரு காரணம் திருகோணமலையை சுற்றிலும் புலிகள் அரண் அமைத்துள்ளனர். போர் துவங்கும் பட்சத்தில் திருகோணமலை சில மணி நேரங்களில் புலிகள் வசம் சென்று விடும் என்பது தான். அவ்வாறான பகுதியில் இந்தியா எந்த முதலீட்டையும் செய்யாது.

ஆனால் ஹிந்து அதனை வேறு நோக்கில் பார்க்கிறது.

With this, India has forcefully made the point that it considers the North-East to be an integral part of Sri Lanka

"Forcefully" என்பது தான் கொஞ்சம் அதிகபட்சம்.

Hindu is desperate about the changing situation என்பதைத் தான் இந்த தலையங்கம் காட்டுகிறது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் எப்பொழுதுமே புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாது. இந்திய அரசியல் சூழ்நிலையும் கடந்த கால நிகழ்வுகளும் அதற்கு இடம் தராது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருப்பதும், நடுநிலைமையுடன் செயல்படுவதும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இலங்கை அரசுக்கு ஆதரவான கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து இந்தியா இம் முறை சற்றே விலகி இருப்பது, நடுநிலைமையான அணுகுமுறையின் துவக்கம் என்று நான் நினைக்கிறேன்.

நன்றி......

http://thamizhsasi.blogspot.com/2006/01/blog-post.html

இந்தியா என்றுமே இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல ஈராக் பிரச்சினையிலும் நடு நிலை வகிக்க தான் விரும்பும்.... இந்தியாவின் 'பிராண்ட் இமேஜ்" அது தான்... அதனால் தான் இந்தியா அணிசேரா நாடுகளுக்கு தலைமை வகிக்க முடிந்தது...

சரியாக சொன்னார் நண்பர் லக்கி லுக்.வாழ்த்துகள்

எழுதப்பட்டது: செவ்வாய் தை 03, 2006 8:00 am Post subject:

--------------------------------------------------------------------------------

இந்தியா என்றுமே இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல ஈராக் பிரச்சினையிலும் நடு நிலை வகிக்க தான் விரும்பும்.... இந்தியாவின் 'பிராண்ட் இமேஜ்" அது தான்... அதனால் தான் இந்தியா அணிசேரா நாடுகளுக்கு தலைமை வகிக்க முடிந்தது...

எழுதப்பட்டது: செவ்வாய் தை 03, 2006 8:12 am Post subject:

--------------------------------------------------------------------------------

சரியாக சொன்னார் நண்பர் லக்கி லுக்.வாழ்த்துகள்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

எமது கருத்துக்களுக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் நண்பர் திரு வினித் அவர்களுக்கு நன்றி...

இந்தியா என்றுமே இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல ஈராக் பிரச்சினையிலும் நடு நிலை வகிக்க தான் விரும்பும்....

இப்போது இந்தியா இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் நடுநிலையாகச் செயற்படுகிறதா...? என்பது பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால் இதற்கு முதல் இந்தியா என்றுமே நடு நிலையாகச் செயற்பட்டது கிடையாது என்பது வெளிப்படை.

ஏதாவது உதாரணம் கூற முடியுமா?

ஆனால் இதற்கு முதல் இந்தியா என்றுமே நடு நிலையாகச் செயற்பட்டது கிடையாது என்பது வெளிப்படை.

புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சி அளித்ததே.... அதைப்பற்றி கதைக்கிறீர்களா?

புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சி அளித்ததே.... அதைப்பற்றி கதைக்கிறீர்களா?

அதுவும் ஒன்றுதான், பின் அதை தா என்று அடம்பிடித்து அடிவாங்கிகொண்டு போனதும் ஒன்றுதான், சிங்களத்துக்காக தமிழருடன் பொருதி அங்கவீனர்களாக தாய்நாடு திரும்பியதும் ஒருகாரணம், அதற்காக அப்பாவி மக்களை கொலை செய்ததும் ஒருகாரணம், ஒட்டுமொத்தமாக தனது சுயநலத்திற்காகத்தான் இந்தியா செயற்பட்டது ஒழிய, இதில் எங்கிருக்கய்யா நடுநிலைமை? :twisted:

துனிப்புல் மேய்யும் குருட்டுச் செம்மறியின் ஆசிரியர் தலையங்கங்கள். சென்னையை தளமாக கொண்டு இயங்கு ஹிந்துவின் நரசிம்மன் ராம் 2005 ஆண்டில் தலமை ஆசிரியர் என்ற தகமையில் இருந்து எடுத்த வாந்திகள் பற்றிய ஒரு சிறு ஆய்வு.

http://www.sangam.org/taraki/articles/2006...e_Ignoramus.php

துனிப்புல் மேய்யும் குருட்டுச் செம்மறியின் ஆசிரியர் தலையங்கங்கள்.

ஆமாம்.... வால்ஸ்ட்ரீட் ஜர்னல் எல்லாம் ஈழத்தில் இருந்து தான் பிரிண்ட் ஆகி வெளிவருகிறது..... :lol::lol::lol:

இந்தியாவின் தேசிய பத்திரிக்கை இந்து . அது இந்திய மக்களின் பிரதிபலிப்பாக தான் விழயஙளை வெளியிடும். யார்க்கும் சார்பாக அதில் விழயம் வராது.

இந்தியாவின் தேசிய பத்திரிக்கை இந்து . அது இந்திய மக்களின் பிரதிபலிப்பாக தான் விழயஙளை வெளியிடும். யார்க்கும் சார்பாக அதில் விழயம் வராது.

ஆகவே ஈழப்பிரச்சினையை நீங்கள் முக்கியமான இந்தியாவிற்கான பிரச்சினையாய் பாக்கிறீர்கள்....

அய்யா முதலில் காமடிபண்ணாமல் சர்வதேதச அரசியலையும் சேர்த்து பாருங்கள். இந்தியா இருக்கும் இடம் கரணம் தப்பினால் மரணம் எண்டு சர்வதேசமே உற்றுப்பார்க்கும் ஈழப்பிரச்சினையில்.... அவர்களால் கடுமைவாதி இராஜபக்சவுக்கு உதவி செய்ய முடியாது... செய்து பாருங்கள் பின்விளைவுகளை.... :wink:

அப்ப தினத்தந்தி தான் அதிகம் வாசகர் கொண்ட பத்திரிகை என்பது எப்பிடீங்க.. :wink: :wink: :lol:

ஆமாம்.... வால்ஸ்ட்ரீட் ஜர்னல் எல்லாம் ஈழத்தில் இருந்து தான் பிரிண்ட் ஆகி வெளிவருகிறது..... :lol::lol::lol:

ஈழத்தவன் அறிவற்றவன் எண்ட உங்களின் நிலைப்பாடும், அவர்களின் திறனை அளவிட முடியாத உங்களின் திறன் இன்மைதான்.. ஈழப்பிரச்சினையில் உங்களால் ஒரு வல்லரசாய் நடந்து கொள்ள முடியாமைக்கு காரணம்...

ஈழத்தமிழ் அறிவாளிகள் கொல்லப் படுகிறார்கள் என்பதுகாக எல்லாரும் இறந்துவிட்டார்கள் எண்டு அர்த்தம் இல்லை....

முதலில் ஈழத்தவன் நாட்டில் என்ன நடக்கிறது எண்டு அறிந்து போசுங்கள்... இந்து ராம் மாதிரி நுணிப்புல் மேயாதீர்...

ஐயா தலை !! ஹிந்து ராம் ச்ரிலன்கா விருது வாங்கி கொண்டதில் எந்த தமிழ்னுக்கும் சந்தோசம் இல்லை. அது ஒரு மட்டமான செயல். ஆனால் அவர் பத்த்ரிகை இந்திய நாடு முழுதும் படிக்கும் ஒன்று.அதை மற்க்க வேண்டாம். விழயம் இல்லாமல் அது தேசிய பத்த்ரிக்கை ஆகாது.

அந்த கட்டுரை(ஆய்வு)

-1- ராம் என்ற தனிமனிதருக்கு இந்தியா என்ற நாடு விருது கொடுத்தது பற்றி அல்ல.

-2- இந்து என்ற பத்திரிகை மற்றும் அதன் தலமை ஆசிரியர் ராம் எழுதும் எல்லா விடையங்கள் பற்றய பொதுவான விமர்சனமும் அல்ல.

-3- இந்து பத்திரிகை இந்தியா என்ற நாட்டின் தேசிய பத்திரிகையை இல்லையா என்பது பற்றியும் இல்லை.

-4- ராம் உம் சம்பந்தனும் எழுதுவது எல்லாம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிபலிப்பா இல்லையா என்று கேள்வியும் கேக்கப்படவில்லை.

ஏன் என்றால் இவை எல்லாம் இந்தியாவின் உள்வீட்டு விவகாரங்கள். அதை விமர்சனம் செய்ய எமக்கு உரிமையில்லை. :!:

அதேபால் தான் ராமும் சம்பந்தனும் ஏனை இந்துப் பத்திரிகை பரிவாரங்களும் ஈழத்தமிழர் பற்றிய அரைவேக்காட்டு பித்தலாட்டம் தேவை அற்றது. அவர்கள் ஈழமக்கள் போராட்டம் பற்றி எடுக்கும் எல்லா நிலைப்பாடுகள் பற்றியும் விமர்சிக்கும் முழு உரிமை ஈழத்தமிழராகிய எமக்கு உண்டு. அது தான் இங்கு நடக்கிறது எதிர்காலத்திலும் நடக்கும். :!:

இந்துவினதும் ராமினதும் எமைப்பற்றிய கருத்துக்களை நாம் விமர்சிக்கும் போது கொஞ்சமமும் சம்பந்தமில்லாம் WallStreet Journal ஈழத்திலா அச்சடிக்கிறார்கள் என்று கேக்கபது மிகவும் நகைப்பிற்குரியது.

இதிலிருந்து விளங்கிறது அவரின் சிந்தனை ஆழமும் மனநிலையும். எனைய கள உறவுகளே இதை கருத்திற் கொண்டு பதில்கருத்துக்களை வைப்பதற்கு இங்கு சிலர் அருகதை அற்றவரா இல்லை என்று முடிவு செய்யுங்கள். உங்களுக்கு என்று சிறிதளவு சுயமரியாதை இருக்கிறதா இல்லயா என்பதை அது தீர்மானிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தேசிய பத்திரிக்கை இந்து . அது இந்திய மக்களின் பிரதிபலிப்பாக தான் விழயஙளை வெளியிடும். யார்க்கும் சார்பாக அதில் விழயம் வராது.

ஒ.. அது தான் சுனாமியில் தேசியத் தலைவருக்கு சோகம் நிகழ்ந்தது என்று எவரோ பீலா விட, கொட்டை எழுத்தில் தலையங்கமாகப் போட்டதோ??

ஐயா தலை !! ஹிந்து ராம் ச்ரிலன்கா விருது வாங்கி கொண்டதில் எந்த தமிழ்னுக்கும் சந்தோசம் இல்லை. அது ஒரு மட்டமான செயல். ஆனால் அவர் பத்த்ரிகை இந்திய நாடு முழுதும் படிக்கும் ஒன்று.அதை மற்க்க வேண்டாம். விழயம் இல்லாமல் அது தேசிய பத்த்ரிக்கை ஆகாது.

²ý¼¡ «õÀ¢ ! §¿¡ìÌ ¦¾Ã¢Ô§Á¡ þóÐ Àò¾¢Ã¢ì¨¸ÈÐ §¾º¢Â Àò¾¢Ã¢ì¨¸ þøÄ¼¡ ! ¿õÁÅ¡ Àò¾¢Ã¢ì¨¸ ¿õÁÅ¡ ìÌ ²Ðõ À¢ÃÉÉ¡ «í¸ þÕìÌÈ Ã¡õ íÈ ¿õÁ¡òÐ ¨ÀÂý ¯¼§É §ÀɡбÎòÐñÎ §¸¡ÀÁ¡ ²Ø¾ ¯ð¸¡÷óÐÎÅ¡ý, þô§À¡ ¯¾¡Ã½òÐìÌ ´ýÛ ¦º¡ø¦Ä¡§Èý §¸ðÎ째¡ ,þó¾ ¿£º Àò¾¢Ã¢ì¨¸¸Ç¡ þÕ째¡ý¦É¡ ,«¾¡ý¼¡ «õÀ¢ þó¾ ¾¢É¾ó¾¢,¾¢É¸Ãý þÅ¡ûÄ¡õ ¦ºö¾¢ Áðξ¡ý §À¡ÎÅ¡,«Å¡ÙìÌ «ÐìÌ Áðξ¡ñ¼¡ «È¢×,¬É¡ ¿õÁÅ¡ ±ýÉ ÀýÛÅ¡ ¦¾Ã¢Ô§Á¡ ¾¨ÄÂí¸õ¸¢È §À÷Ä, ¿õÁÅ¡ Ä¡õ ±ýÉ ¿¢É츢ȡ¦Ç¡ «¾ «ó¾ «õÀ¢ ±Ø¾¢ÎÅ¡ý,þРŨà «ôÀÊ ¿¢¨É째§ÄÉ¡ þóÐÄ ±ýÉ ÅÕ§¾¡ «Ð¾¡ý ¾¡ñ¼¡ ¿õÁ ¿¢¨ÄôÀ¡Î.Òâԧ¾¡.þô§À¡ þó¾ º¢§Ä¡ý À¢ÃÉ ±ÎòÐ째¡ ¿õÁ ¨ÀÂý áõ ±ÐìÌ ¦Ã¡õ§À¡ ¬÷ÅÁ¡ þÕ측ý ¦¾Ã¢Ô§Á¡, «¾ À¡÷òÐðÎ

þí¸ þÕì¸ÈиÙõ ±í¸ÙìÌõ ¾É¢Â¡ö ¿¡Î §ÅÛõ Á¡Î §ÅÛõ §¸ð¼ÐÛ ¨Å¢ ,¿õÁ ¦À¡ÆôÒ ¿¡È¢Îõ¼¡ «¾¡ý «Åý ¦Ã¡õÀ À¢ÊÅ¡¾Á¡ «×í¸Ç ±¾¢÷òÐ ±ØÐÈ¡ý,

þô§À¡ º¡¾Ã½Á¡ ÌôÀý,ÍôÀý í¸¢È §À÷Ä Áò¾ Àò¾¢Ã¢ì¨¸ûÄ ,þó¾ Á¡¾¢Ã¢ ±í¸ ¦¾Õ×Ä ¾ñ½¢ ÅÃÄ,¨Äð ±Ã¢ÂÄýÛ ¿£ ±ØÐÉ¡ Á¾¢ôÀ¢Õ측Ð,«Ð§Å þóÐÄ letter to the editer À̾¢Ä ±í¸ ¸¡ÄÉ¢Ä þý þýÉ À¢ÃÉýÛ ±Ø¾¢ ¯ý ¦ÀÂÕìÌ «ÎòÐ ´Õ ³Â§Ã¡,þøÄ º¡Šò¾¢§Â¡ §º÷òÐñ§¼ýÛ ¨Å¢ ¸¡¨ÄÄ Ó¾ §ÅÄ «ó¾ «¾¢¸¡Ã¢Ä¡õ ´ÊÅóÐ À¡÷ôÀ¡í¸¼¡.

±ýÉ «ó¾ áÁº¡Á¢(«¾¡ñ¼ «ó¾ ¦Àâ¡÷) ¬ð¸ÙìÌ ÁðÎõ ¿õÁ º¡Âõ ¦¾Ã¢Ôõ,

இந்து ராமுக்கு வைகோவின் மதிமுக நிகழ்ச்சிகளில் மரியாதை வழங்கப்படுவதின் ரகசியம் என்ன?

உதாரணத்துக்கு நேற்றைய மதிமுகவின் ரத்ததான பிரிவு நிகழ்ச்சியில் கூட சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாரே?

கழ்ன்ட கேசு தம்பிய்டயான் !! நீ முத்ல்ல கும்டிபூண்டி தான்டு. அப்புரம் நீ இத பத்தி எல்லாம் பேசலாம்.

அந்த கட்டுரை(ஆய்வு)

௧- ராம் என்ற தனிமனிதருக்கு இந்தியா என்ற நாடு விருது கொடுத்தது பற்றி அல்ல.

௨- இந்து என்ற பத்திரிகை மற்றும் அதன் தலமை ஆசிரியர் ராம் எழுதும் எல்லா விடையங்கள் பற்றய பொதுவான விமர்சனமும் அல்ல.

௩- இந்து பத்திரிகை இந்தியா என்ற நாட்டின் தேசிய பத்திரிகையை இல்லையா என்பது பற்றியும் இல்லை.

௪- ராம் உம் சம்பந்தனும் எழுதுவது எல்லாம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிபலிப்பா இல்லையா என்று கேள்வியும் கேக்கப்படவில்லை.

ஏன் என்றால் இவை எல்லாம் இந்தியாவின் உள்வீட்டு விவகாரங்கள். அதை விமர்சனம் செய்ய எமக்கு உரிமையில்லை.

அதேபால் தான் ராமும் சம்பந்தனும் ஏனை இந்துப் பத்திரிகை பரிவாரங்களும் ஈழத்தமிழர் பற்றிய அரைவேக்காட்டு பித்தலாட்டம் தேவை அற்றது. அவர்கள் ஈழமக்கள் போராட்டம் பற்றி எடுக்கும் எல்லா நிலைப்பாடுகள் பற்றியும் விமர்சிக்கும் முழு உரிமை ஈழத்தமிழராகிய எமக்கு உண்டு. அது தான் இங்கு நடக்கிறது எதிர்காலத்திலும் நடக்கும்.

இந்துவினதும் ராமினதும் எமைப்பற்றிய கருத்துக்களை நாம் விமர்சிக்கும் போது கொஞ்சமமும் சம்பந்தமில்லாம் Wஅல்ல்ஸ்ட்ரேட் Jஒஉர்னல் ஈழத்திலா அச்சடிக்கிறார்கள் என்று கேக்கபது மிகவும் நகைப்பிற்குரியது.

இதிலிருந்து விளங்கிறது அவரின் சிந்தனை ஆழமும் மனநிலையும். எனைய கள உறவுகளே இதை கருத்திற் கொண்டு பதில்கருத்துக்களை வைப்பதற்கு இங்கு சிலர் அருகதை அற்றவரா இல்லை என்று முடிவு செய்யுங்கள். உங்களுக்கு என்று சிறிதளவு சுயமரியாதை இருக்கிறதா இல்லயா என்பதை அது தீர்மானிக்கும்.

அத்ல்லாம் சரி !! ஏன் இந்தியன் எஸ்பிரஸ், தின மலர், டைம்ஸ் ஆப் இந்தியா பற்றி விமர்சனம் வருவதே இல்லை ??

நன்றி லக்கி லுக்.சில நண்பர்கள் மாற்று கருத்தை எதிர் கொள்ளும் மன நிலையில் இல்லை என்று தெறிகிறது.ஏன் இந்திய தமிழ்ர்கள் உங்கள் கருத்தோடு மாறுபடுகிறார்கள் என்று அறிய முயற்சி செய்ய தயங்குவதேன்.

இலங்கைப் பிரச்சனையின் மிக அண்மைக்கால வரலாறுகளை இந்தியா மறந்துவிடக் கூடாது: ஆய்வாளர் எஸ்.வி.இராசதுரை

[புதன்கிழமை, 4 சனவரி 2006, 05:35 ஈழம்] [கொழும்பு நிருபர்]

இலங்கை அரசாங்கத்துடன் உறவுகளை மேற்கொள்ள விரும்புகிற இந்திய அரசு அண்மைக்கால வரலாறுகளை மறந்துவிடக் கூடாது என்று தமிழக ஆய்வாளர் எஸ்.வி.இராசதுரை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் தினமணி நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரை:

அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சவின் சென்னைப் பயணம் ஏதோவொரு காரணத்தால் கடைசி நேரத்தில் இத்து செய்யப்பட்டுவிட்டது. கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் இந்திய ஊடகங்களில் இலங்கை அரசின் கொள்கைகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கணிசமான ஆதரவு இருப்பதை அவர் அறியாதவரல்லர். 1980-களில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களில் யாழ். நூலகம் எரிக்கப்பட்டது உட்படப் பல்வேறு நடவடிக்கைகளில் நேரடியான, மறைமுக ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் எனத் தமிழ் மக்களால் கருதப்படும் காமினி திஸ்ஸநாயக்க போன்றோரும்கூட ஜனநாயகவாதிகளாகக் கருதப்படுவதையும் அவர் அறிந்திருப்பார்.

எனினும் அவருடன் வந்திருந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட நபரைப் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது ராஜபக்சவின் "கூட்டணி தர்ம'த்தால்கூட இயலாததாக இருந்திருக்கும். அவரது கூட்டணியைச் சேர்ந்த இரண்டு சிங்கள தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியத் தலைவரான உதய காம்மன்பில என்பவரும் அதிபரின் குழுவில் இடம்பெற்றிருந்தார். அந்தத் தீவில் போருக்கு எதிராகவும் அமைதிக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காகவும் குரல் கொடுக்கும் சிங்களக் கலைஞர்கள் மீது தொடர்ந்து வன்முறையைத் தூண்டிவிட்டு வருபவர் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர் அவர். அந்த நாட்டின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் "பாதுகாப்புக் குழு'வில் அவரும் இடம்பெற்றிருப்பதாக ஒரு செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

இது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்திற்கு உண்டு.

ஜாதிக ஹெல உறுமயவும் மற்றொரு சிங்கள தீவிரவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனவும் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ராஜபக்சய தலைமையிலான கூட்டணி உருவாகிற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் சுனாமி நிவாரணத்திற்கு சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் இரத்து செய்ய வேண்டும். இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்குதல் என்னும் அடிப்படையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கைவிட வேண்டும் என்பன இந்த நிபந்தனைகளில் அடங்கும்.

அதாவது மீண்டும் உள்நாட்டுப் போரைத் தொடங்க வேண்டும் என்பதுதான் இந்த நிபந்தனைகளின் சாரம். இது ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைபாட்டுக்கு மட்டுமன்றி, சந்திரிகா ஆட்சியிலிருந்த வரை ராஜபக்சவும் கூட ஏற்றுக்கொண்டிருந்த கொள்கைக்கும் எதிரானதாகும்.

அச்சமயம் சந்திரிகா அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ராஜபக்ச, கண்டியில் புத்தரின் பல் இருப்பதாகக் கருதப்படும் ஆலயத்திற்குச் சென்று அங்கு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான எல்லாவல மேதானந்தவின் காலில் விழுந்து அந்த ஒப்பந்தத்தின் பிரதியை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு அனைத்துச் சமயச் சடங்குகளையும் செய்த பின்னர் அந்த ஆவணத்தை புத்தரின் பல் இருப்பதாகச் சொல்லப்படும் பேழைக்கு முன் வைத்து வணங்கினார். இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் எல்லாருமே புத்த பிக்குகளின் ஆசியைப் பெறுவது வழக்கம் என்றாலும் தேர்தல் அறிக்கைகளையோ கூட்டணி அரசியல் ஒப்பந்தங்களையோ அவர்களது காலடிகளில் இதுவரை சமர்ப்பித்ததில்லை.

பிற முதன்மையான அரசியல் கட்சிகள், அரசு யந்திரம், இராணுவம் ஆகியவற்றில் விரவியுள்ள புத்தமதவாதத்தின் அதிதீவிர வெளிப்பாடுகள்தான் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கைகள். உறுமயவின் தலைவரின் முன் ராஜபக்ச மண்டியிட்டது இலங்கை அரசின் மற்றொரு வெளிப்பாடுதான். அந்த நாட்டின் நாடாளுமன்ற இடதுசாரிகளின் ஆதரவுடன் 1972-ல் இலங்கையில் புத்தமதம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே இன்று உறுமய, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே அந்த நாட்டை ஆள்வதற்கான உரிமை இருக்கிறது என இடைவிடாது கூறி வருவதாகும்.

சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தேவையான இனவாத அரசியலுக்கு அடிப்படையாக உள்ள புத்த பிக்குகள், ஆங்கிலேயரின் காலனியாதிக்கப் பண்பாட்டை எதிர்த்தல் என்னும் பெயரால், பழங்கால சிங்கள மன்னர்களின் ஆட்சியைச் சுட்டிக்காட்டி, அந்த நாடு முழுவதுமே சிங்களர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததாகக் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர்.

உண்மையில் இத்தகைய கட்டுக்கதைகளைச் சாத்தியமாக்கியவர்கள் பிரிட்டிசார்தான். கண்டியின் கடைசி சிங்கள அரசைத் தோற்கடித்த பின்னர், அந்த அரசின் வாரிசுகளுடன் 1815-ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் "புத்தமதமும், அதன் சடங்குகள் சம்பிரதாயங்களும், பிக்குகளும் பௌத்த வழிபாட்டுத் தலங்களும் பராமரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும்" எனப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூறினர். தாங்கள் பாதுகாக்க விரும்பிய அரசியல் சமநிலையைக் குலைக்கும் வகையில் சமுதாய மாற்றங்களுக்கும் சீர்திருத்தங்களுக்குமான இயக்கங்கள் தோன்றுமானால் அவற்றை வலுக்குன்றச் செய்வதற்கு பௌத்த மதம் பயன்படும் என பிரிட்டிசார் கருதியதாக இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் கே.எம்.டி சில்வா கூறியுள்ளார்.

பிரிட்டிசாருக்குப் பின்வந்த சிங்கள ஆட்சியாளர்கள் இதனை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டனர். இலங்கை அரசாங்கம் ஒவ்வோராண்டும் தனது வரவு - செலவுத் திட்டத்தில் பௌத்த விவகாரங்கள் துறைக்கு பெருந்தொகைகளை ஒதுக்குகிறது. 2004-ல் இப்படி ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 18.50 கோடி. இப்படி ஒதுக்கப்படும் தொகையில் பெரும்பகுதி புத்த மடங்களுக்குப் போய்ச் சேர்கிறது. எனவே அவர்களும் தங்கள் பங்குக்கு, ஆட்சியாளர்களும் பிற முதன்மையான சிங்களக் கட்சிகளும் விரும்புகிற இனவாத அரசியலுக்குத் தூபம் போடுகின்றனர். எடுத்துக்காட்டாக சுனாமி நிவாரணப் பணிகளைக் கூட்டாக மேற்கொள்வதற்கு சந்திரிகா அரசாங்கம் புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக உறுமயவின் செயலாளரும் புத்த பிக்குவுமான ஓமல்பெ சோபித, கண்டியிலுள்ள கோவிலுக்கு முன் அமர்ந்து "சாகும் வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக'' அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள பிக்குகளும் இந்த ஒப்பந்தம் தேசத் துரோகமானது என அறிவித்து உண்ணாநோன்பைத் தொடங்கினர்.

சிங்களவகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகப் பிரசாரம் செய்த உறுமய, கடந்த இரண்டாண்டுகளில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தியது.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் பெரும்பான்மை மதவாதத்திற்கு எதிராகவும் பேசுபவர்கள், சிங்கள பௌத்தவாதம் அந்த நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் ஏற்படுத்தி வரும் பாதிப்புகளைப் பற்றி மௌனம் காக்கின்றனர். அந்த நாட்டில் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல் நிபந்தனை சிங்கள பௌத்தத்தை அரசு மதம் எனக் கூறும் அந்த நாட்டின் அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதுதான். இந்த அரசியல் சட்டப் பிரிவுதான் தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டுவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக அரசாங்கத்திற்கும் அதன் பிறகு ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கத்திற்கும் அடிப்படையாக இருந்து 1983-ல் இனக் கலவரத்தைத் தூண்டிவிட்டது.

இலங்கையுடன் தொழில் - வர்த்தக உறவுகளையோ பாதுகாப்பு உறவுகளையோ வலுப்படுத்திக் கொள்வதையும் இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படுவதையும் விரும்பும் மத்திய அரசாங்கம் இந்த மிக அண்மைக்கால வரலாற்றை மறந்துவிடக் கூடாது என்று அதில் எஸ்.வி.இராசதுரை குறிப்பிட்டுள்ளார்.

http://www.eelampage.com/?cn=23076

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.