Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி மகள் என்பதை வெளிப்படுத்திய நண்பரை சிறைக்கு அனுப்பிய கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம்.கே.டி.சுப்பிரமணியம்...இவரைப் பற்றி தெரியாத திராவிடக் கழகத் தோழர்களே இருக்கமாட்டார்கள். பெரியாருடன் நெருக்கமாக இருந்த இவர், அந்தக் காலத்திலேயே அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். ஆஜானுபாகுவான எம்.கே.டி.சு. பகுத்தறிவு பிரசாரம் செய்ய என்.வி.நடராஜனுடன் பெரியாரால் அனுப்பப்பட்டவர்.

காமராஜரைப் ‘பச்சைத் தமிழன்’ என்று பெரியார் பிரசாரம் செய்த காலகட்டத்தில் எம்.கே.டி.சு. அதை ஏற்று காங்கிரஸில் சேர்ந்தார். அதன்பின்பு காங்கிரஸ் கட்சியில் சிறந்த பேச்சாளரானார். ‘ஜவகரிசம்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்தி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக் காட்டியும் வந்தார்.

தனது இறுதிக் காலங்களில் நெடுமாறனுடன் காங்கிரஸில் இருந்து விலகி, தமிழ்த்தேசிய அரசியலில் தடம் பதித்தார். இப்படிப்பட்ட எம்.கே.டி.சு. ஒருமாத சிறைத் தண் டனையை அனுபவிக்க அவரது நெருங்கிய நண்பரான கருணாநிதியே காரணமானார் என்றால் நம்ப முடிகிறதா? ஏன், எதற்காக, எப்படி என்ற கேள்விகளுக்கான பதில் சுவாரஸ்யமானது.

‘’தி.க.வில் பெரியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாதாரண தொண்டராக வலம் வந்த கருணாநிதிதான் எம்.கே.டி.சுப்பிரமணியத்தின் நெருங்கிய நண்பர். முதன் முதலில் சென்னையில் கூட்டம் போடுவதற்கு கருணாநிதிக்கு பொருளாதார உதவி செய்தவர் எம்.கே.டி.சு.

முதல் மனைவி பத்மாவதி இறந்த நிலையில், சினிமாவிலும் அரசியலிலும் இருந்த கருணாநிதிக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. அந்தச் சூழ்நிலையில் சீர்காழிக்கும் பூம்புகாருக்கும் இடையே ஒரு சிற்றூரில் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் தகவல் அறிந்து, அந்தப் பெண் வீட்டாரிடம் போய் கருணாநிதிக்குப் பெண் கேட்டார் எம்.கே.டி.சு.

பெண் தர மறுத்த பெண்ணின் தந்தையிடம், ‘என்றாவது ஒரு நாள் என் நண்பர் எம்.எல்.ஏ.வாக வாய்ப்பிருக்கிறது. அவருக்குப் பெண் கொடுங்கள்’ என்றதும், சம்மதித்தி ருக்கிறார் அந்தத் தந்தை. அந்தப் பெண்தான் தயாளு அம்மாள்.

அப்படிப்பட்ட எம்.கே.டி.சுப்பிரமணியம் சிறைத் தண்டனை பெற கருணாநிதி எப்படி காரணமானார்?

எம்.கே.டி.சுப்பிரமணியம் நடத்திய ‘ஜவகரிசம்’ பத்திரிகையில், 1970-ம் ஆண்டு ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் ‘குறிப்பிட்ட நாளில், சென்னையில் ஒரு மருத்து வமனையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் ராஜாத்தி என்ற பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்தப் பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி?’ என்று ஒரு பெட்டிச் செய்தி வெளியிட்டிருந்தார்.

அந்தச் செய்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘‘அந்தப் பெண் யார் என்று எனக்குத் தெரியாது... எந்தப் பெண் குழந்தையும் எனக்கில்லை...’’ என்று நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

அடுத்து நடந்தது என்ன என்று காங்கிரஸ்காரரும், பேச்சாளருமான திருச்சி வேலுச்சாமி சொல்கிறார்...

‘‘எந்தப் பெண்ணையும், பெண் குழந்தையையும் எனக்குத் தெரியாது என்று கூறிய கருணாநிதி, முதல்வர் பதவிக்கு களங்கம் விளைவித்ததாக நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குப் போட்டார். அதில் ‘ஜவகரிசம்’ பத்திரிகை ஆசிரியர் எம்.கே.டி.சு.வை நீதிமன்றம் வரை இழுத்தடித்தார். அந்தக் காலகட்டத்தில் அவரால் அந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

இதனால் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார் எம்.கே.டி.சுப்பிரமணியம். அதுமட்டுமல்ல... சட்டப்பேரவையில் எதிர்க்க ட்சி உறுப்பினர் ஒருவர், ராஜாத்தி அம்மாள் பற்றி கேட்ட கேள்விக்கு, ‘அந்தப் பெண் என் மனைவி இல்லை. ஆனால் அவர் என் மகள் கனிமொழியின் தாய்’ என்று வித்தியாசமான விளக்கம் கொடுத்தார்.

நெல்லை புகாரி என்ற காங்கிரஸ்காரர் அண்ணாவின் மரணத்தில் அந்தத் தலைவரை தொடர்புபடுத்தி சந்தேகங்களை எழுப்பியிருந்தார். அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் மில்லர், ‘அண்ணா மீது குறைந்தபட்சம் 40 வாட்ஸ் பல்பு வெளிச்சம்கூட படக்கூடாது. அவரை உஷ்ணமான இடத்தில் வைத்திருக்கக் கூடாது’ எ ன்று அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், தேர்தலில் போட்டியிட்ட காமராஜருக்கு எதிராக அண்ணாவின் பேச்சை படமாகப் பதிவு செய்ய கருணாநிதி ஏற்பாடு செய்தார். அப்போது ஆயிரக்கணக்கான வாட்ஸ் பல்புகளின் வெளிச்சத்தைத் தாங்கமுடியாமல் அண்ணாவின் உடல்நிலை மோசமானதாக புகாரி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, புகாரி மீது மானநஷ்ட வழக்குப் போட்டார் அந்த தன்மானத் தலைவர். அந்த வழக்கில் அமெரிக்காவில் இருந்து, ‘அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மில்லரை வரவழைத்து விசாரிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது.

உடனே அந்த வழக்கை வாபஸ் வாங்கிய அந்தத் தலைவர், தனக்கெதிராகப் பேசிய புகாரியை ‘கவனித்து’ தன்னுடன் சேர்த்துக் கொண்டார். தன்னுடைய கடைசி காலம் வரை புகாரி தி.மு.க.காரராகவே இருந்து மறைந்தார். உண்மையிலேயே புகாரியின் குற்றச்சாட்டால் அந்தத் தலைவரின் பெயருக்கு களங்கம் என்றால் அந்த வழக்கை அவரே வாபஸ் வாங்கியது ஏன்?

இப்போது இதைக் கூற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால், தன்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மானநஷ்ட வழக்குப் போடுவதை கருணாநிதி அண்மைக் காலமாக வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

எந்தப் பெண் குழந்தையை தன் மகளே இல்லை என்று கூறி, அது குறித்து செய்தி வெளியிட்ட எம்.கே.டி.சுப்பிரமணியத்தை சிறையில் அடைத்தாரோ, எந்தப் பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என்று மூடி மறைத்தாரோ, அதே பெண் குழந்தையை... இன்று டெல்லி திகார் சிறைக்குச் சென்று சந்தித்து கண்ணீர் விடுகிறார் கருணாநிதி.

இனிமேலும் மானநஷ்ட வழக்குப் போடுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார் வேலுச்சாமி.

படம்: கணேஷ்

வே.வெற்றிவேல்

-குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத் தான் சொல்லுறது போல, நதிமூலமும், ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது என்று! எல்லாமே அசிங்கமானவை போலும்!

இணைப்புக்கு நன்றிகள் கந்தப்பு!!!

என்ர கடவுளே.. :o

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ தெரியல்ல.. தமிழன் வாக்குப் போட்டு தன் தலைவனா தேர்ந்தெடுக்கிறதுகள் பலதுமே இப்படித்தான் இருக்குதுங்க..! நாங்களும் கெட்டவனானா.. நாளைய தலைவன் ஆகிடலாமோ...???! ரங்கா கிளம்படா.. கடப்பாறையோட.. நாடு பிடிப்பம்..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

உபதேசங்கள் யாவும் ஊருக்கு மட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.