Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதர் குமாரின் 6வது நினைவு தினம்

Featured Replies

நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் மாமனிதர் உரிய கௌரவத்துடன் நிலைக்கிறார்

இன்று குமாரின் 6 ஆவது நினைவு தினம்

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காக அவர் செய்த உயிர்த் தியாகத்தைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள்இ நினைவுமலர்கள் வெளியாகியிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் அவரின் உயிர்த் தியாகம் யாரும் மறக்கக்கூடிய காரியமல்ல. அதற்குரிய முக்கியமான காரணங்களாவன;

1. எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்?

2. தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் வெளிநாடுகளில் எங்கேயாவது சென்று வாழக்கூடிய சகல வசதிகள் இருந்தும் ஆயுதங்களைக் கையிலே வைத்துக் கொண்டு வாழும் எதிரிகளின் குகைக்குள்ளேயே தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டு வாழ்ந்தவர். நான் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் சில காலம் இருந்து தமிழர் பிரச்சினைகளை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் படி கூறிய பொழுது இனவாத அரசாங்கங்களுக்கும் எதிரிகளுக்கும் பயந்து வெளிநாட்டிலிருந்து அரசியல் நடத்த விருப்பமில்லை என்று கூறினார்.

3. அவரைப் பொறுத்தவரையில் சகல விதமான சௌகரியங்களும் கடவுளால் கொடுக்கப்பட்டிருந்த பொழுதும் அவற்றை எல்லாவற்றையும் மறந்து செயல்பட்டவர். மாமனிதனைப்பற்றி பல நினைவுமலர்கள் வெளியிடப்பட்டு நினைவுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவு தினத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நினைவு கூர்ந்து கொண்டிருப்பதிலிருந்து அவருடைய உயிர்த் தியாகத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மறக்கவில்லை என்பதே ஆகும்.

அவருடைய நினைவு மலர்கள் பலருக்கு கிடைக்காமல் இருக்கக்கூடும் என்று எண்ணி நினைவுமலர்களிலிருந்து சிலவற்றை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

கடும் குளிரிலும் மாமனிதனுக்கு கனடாவில் அஞ்சலி

கடும் குளிரிலும் ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றிலில் திறந்த வெளி அரங்கில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற அஞ்சலிப் பொதுக் கூட்டத்தில் ஸ்காபுறோ - எஜின் கொட் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம். கரிஜியானிஸ்இ ஸ்காபுறா - எஜின் கோட் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் அல்வின் கேளிங்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நோம்கெலிஇ ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர்கள்இ மனிதவுரிமை அமைப்புகள் ஏனைய இன அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாமனிதர் குமாரின் படுகொலையை வன்மையாகக் கண்டித்து அவர்கள் தமிழ் மக்களின் உரிமை வேண்டிய போராட்டத்திற்கு தமது ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

உலகத் தமிழர் கனடா:

சிங்கத்தின் குகைக்குள் கொல்லாமை பேசிய அன்பனே துப்பாக்கி முதுகுறுத்தும் போதும் அஞ்சாமல் தமிழருக்காய் உரத்து முழங்கிய மறத்தமிழன் நீ. எங்கள் நெஞ்சுக்குள் கனன்றிருந்த கேள்விகளையெல்லாம் கடிதமாய் வடித்தாய் நீ. துப்பாக்கி ரவைகளை பதிலாகனுப்பினர் கோழைகள். உண்மையை ஓங்கியொலித்த உன் மூச்சையே பிடுங்கினர்.

தமிழ் பெண்கள் அமைப்பு பிரான்ஸ்

அமரர் குமார் பொன்னம்பலம் எம் தமிழ் மக்களுக்கும்இ எம் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவாக மிகத் துணிவாக இன்னல்கள் நிறைந்த கொழும்புச் சூழ் நிலையிலும் குரல் கொடுத்து வந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் கொழும்பில் மட்டுமல்லாது சர்வதேச அளவில்இ தான் பங்கு கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் எம் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும்இ அவர்களுக்குச் சிங்கள அரசு கொடுக்கும் இன்னல்களைப் பற்றியும் முற்று முழுதான உண்மைகளை எடுத்துக் கூறிவந்தார்.

இவ்வாறாக தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் உறுதியும் துணிவும் மிக்க ஒரு நல்ல மனிதன் இழப்பு தமிழ் இனத்திற்கு பேரிழப்பாகும்.

ஐ.பி.சி. குடும்பம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பி வந்தவரும் எதிரியின் வாசலில் இருந்து கொண்டே தமிழீழ விடுதலையையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஆதரித்துக் குரலெழுப்பி வந்த அஞ்சா நெஞ்சன் குமார் பொன்னம்பலம் அவர்களது படுகொலைச் செய்தி கேட்டு தமிழ் தேசிய இனம் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.

தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்ட அளவற்ற நேயம் காரணமாக சட்டத்துறையில் பெற்ற அறிவையும் ஆற்றலையும் தமிழினத்தின் விடுதலைக்காய் அர்ப்பணித்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் அகாலமரணம் தமிழ் தேசிய இனத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.

அடங்கி வாழும் இனமல்ல தமிழினம் என்பதை

ஸ்ரீலங்கா பேரினவாத அரசிற்கு எடுத்தியம்பி வந்த

சுதந்திர புருஷன் குமார் பொன்னம்பலம் அவர்களுடனான

நினைவை நாம் என்றும் மறக்க முடியாது

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களே

ஈழத்தமிழருக்காய் பாரெங்கும் நீவீர் எழுப்பிய

குரல் இன்று நீதிமன்றங்கள்இ மனிதவுரிமை

நிலையங்கள்இ தொடர்பு சாதனங்கள்

உலகமெல்லாம் ஒலிக்கிறது ஐயா!

தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறைச்சாலை 2000 ஆம் ஆண்டு

ஆதரவற்று நின்ற தமிழ் அரசியல் கைதிகளான எங்களுக்கு தனது சட்ட அறிவைக் கொண்டு சிறந்த மீட்பராகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் இருந்து கொண்டு தாயக விடுதலையில் தணியாத தாகத்துடனும்இ தளராத உறுதியுடனும் தனக்கெனத் தனித்துவமான பண்பையும் இலட்சியத்தையும் வரித்துக் கொண்டு ஈழத் தமிழ் தேசிய இனத்தின் குரலாக தமிழ் அரசியல் வானில் தன்னிகரில்லாத் துண்மதியாக சிங்கள இனத்தின் சிரசில் இருந்து கொண்டே சிம்ம சொப்பனமாக விளங்கிய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் கோரத்தனமானதும் கோழைத்தனமானதுமான படுகொலை எமக்கு அதிர்ச்சியையும் ஆறாத்துயைரையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மாமனிதரின் இழப்பு தமிழ் தேசிய இனத்தால் என்றுமே ஈடு செய்ய முடியாது. அவர்தம் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேவேளைஇ அன்னாரின் வாழ்நாளில் வரித்துக் கொண்ட இலட்சியங்களால் கவரப்பட்டவர்கள் என்ற வகையிலும்இ எமது வளமான வாழ்வுக்காக வாதாடியவர் என்ற வகையிலும்இ துரோகக் கொலை செய்த கோழைகளின் நோக்கம் நிறைவேறாத வகையிலும் அவரது இலட்சியங்களை நிறைவேற்ற திட சங்கற்பம் கொள்கிறோம்.

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ருளுயு

ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள்இ படுகொலைகள்இ கைதுகள் இ சித்திரவதைகள்இ பாலியல் வன்முறைகள் இவற்றிற்கு எதிராக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி நீதி கோரி வாதாடினார். பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்முறைக்குப் பலியாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நீதிமன்றம்இ உலக மனித உரிமைகள் அமைப்புகள் இவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்து அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்தியவர் குமார் பொன்னம்பலம் அவர்களே.

மேலும்இ அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகளுக்கு செய்த பிரசாரத்தை எதிர்த்து அதற்கு மாறாக அவர்களின் சுயரூபத்தையும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டையும்இ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நீதி நியாயத்தையும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள்இ கொழும்புக்கு வருகை தந்த அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களது தார்மீக ஆதரவை திரட்ட முயற்சி செய்தவர் குமார் பொன்னம்பலம். அவர் அந்நேரம் கொழும்பில் இருந்திராவிட்டால் வெளிநாட்டவர்கள் அரசாங்கத்தின் கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள்.

சிட்னி தமிழ் அமைப்புகள்

ஈழத்தமிழர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும்இ தமிழ் தேசம்இ சிங்களத் தேசம் என்ற இரண்டு தேசங்கள் இணைந்ததுதான் இலங்கை என்பதையும் ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தவர் அமரர் குமார் பொன்னம்பலம். இந்தக் கருத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு திணிக்கப்பட முடியாது. மாறாக ஈழத் தமிழர்களின் கைகளில் தான் தற்போதைய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று ஆணித்தரமாக அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் தனித்து ஒலித்துவந்த இந்த ஜனநாயக மரபு வந்த தமிழ் அரசியல்வாதியின் குரல் ஒடுக்கப்பட்டமை மிதவாத அரசியலில் நேர்மையான ஈழத்தமிழருக்கு இடம் இல்லை என்பதைக் காட்டுகின்றது. வன்முறை அரசியலாக மாறிவிட்ட இலங்கை அரசியலில் ஜனநாயக கோட்பாடுகள் அடக்கப்படும் மற்றொரு துரதிர்ஷ்ட நிகழ்வே குமார் பொன்னம்பலத்தின் கொலை எனக் கூற வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அமரர் குமார் பொன்னம்பலம் என்ன இலட்சியத்துக்காக போராடி மரணித்தாரோ அதை நிறைவேற்றுவதுதான் தமிழ் மக்களாகிய நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - ஜேர்மனி

மாமனிதர் சட்டவல்லுநர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மனிதத்தை உலகத்தில் காப்பாற்ற தனது உழைப்பையும் காலத்தையும் அர்ப்பணித்து நின்ற ஒரு மனிதர். தாயகத்தில் எமது மக்களைக் காப்பாற்ற உயிர் கொடுத்து உழைக்கும் புலிகளை பகிரங்கமாக அங்கீகரித்து சிங்களத்துத் தலைநகரிற் துணிவோடு நின்ற ஒரேயொரு தமிழர்.

இவர் கொழும்பு நகரில் கைது செய்யப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு நீதியின் துணை கொண்டு விடுதலை பெற்றுக் கொடுத்த பாசம் நிறைந்த சட்டவல்லுநர். தமிழரின் உரிமைக்காக உலகில் குரல் எழுப்பிய விடுதலை நேசர். சிங்கள அரசுகளின் கொடூரமான இராணுவச் சித்திரவதைகளையும் பாலியற் கொலைகளையும் சட்ட மீறல்களையும் உலக நாடுகளின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நீதியாளர்.

இவர் மரணத்தின் வாசலிலும் மண்ணை நேசித்தவர். மக்களை நேசித்தவர். நீதிக்காக போராடியவர். நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் "மாமனிதர்" என்ற உரிய கௌரவத்தைப் பெற்று நிலைக்கிறார்.

மேலே கூறியவற்றிலிருந்து எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்? என்ற இரு கேள்விகளுக்குரிய விடை துலாம்பரமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின

படுகொலையின் பின் குமாரின் சடலமும் காரும் வெள்ளவத்தையில் இராமகிருஷ்ண மிஷனுக்கும் விவேகாந்த வீதிக்கும் இடையில் அநாதரவாகக் கிடந்த அந்தச் சோகச் சூழலை கண்டிருக்கிறோம்..! இராணுவமும் பொலீசும் சோதனை எதுவும் இன்றி மக்களை விடுப்புப் பார்க்கவும் அனுமதித்தது..! :idea:

இதை விட வேறு என்ன வேண்டும் அரசபயங்கரவாதம் என்பதை நிரூபிப்பதற்கு. இதற்கு மேல என்ன சொல்ல செயல் தான் சிறந்தது. அதை தமிழர்கள் செய்வார்கள் என்பது உறுதி.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா அவர்களை தமிழர்கள் கௌரவத்தோடு மனதுள் பூசிக்கின்றார்கள். ஐயாவின் இலட்சியம் வெல்லட்டும்.

எனது தேசத்திற்காக வாழ்ந்து உரிமைக்காக குரல் கொடுத்து அதன் காரணமாய் ஓய்ந்து போன குமார் பொன்னம்பலம் ஐயாவுக்கு எனது வணக்கங்களுடன் கூடிய நினைவஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு எனது நினைவஞ்சலிகள்.

(அவர் காரினில் சுடப்பட்டு இறந்து கிடந்தபோது, நேரில் அவரை அந்தக் கோலத்தில் பார்த்த நினைவுகள் இப்போதும் கண்முன் தோன்றி கலங்கவைக்கின்றது)

நேரே எதிர்க்க தைரியமில்லாத கோழைகளால் கொல்லப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு எனது நினைவஞ்சலிகள்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு எனது நினைவஞ்சலிகள்.

மாமனிதருக்கு எனது 6_ம் ஆண்டு நினைவஞ்சலிகள் :lol:

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினை பேச்சினைக் லண்டன் அலேக்ஸாண்டிரா பலஸில் 1999ல் நடைப்பெற்ற ஈழத்தமிழர்களின் பிரச்சனை சம்பந்தமாக உலகில் இருந்துவந்த அறிஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கேட்டிருந்தேன். மிக அழகாக வாதிட்டார். அவருக்கு எனது

6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு எனது நினைவஞ்சலிகள்.

மாமனிதருக்கு எனது நினைவஞ்சலிகள்

:(:(:(:(:(:(:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“தனி மனிதப் படையணியாய் நின்று

அரசியல் போர் புரிந்தவர் குமார்.”

ஜனவரி 05 இவரது நினைவு நாள்

தழிழர்கள் ஆண்ட பரம்பரையினர் மீண்டும் ஆள நினைக்கின்றனர் என்ற அடிப்டையில் தமிழர்களுக்கென ஒரு தனித் தேசத்தை உருவாக்க 1977 இலும், தொடர்ந்து 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலிலும், 1981 சர்வசன வாக்கெடுப்பிலுமாக தமிழ் மக்களால் ஆணை இடப்பட்டது. இந்த ஆணையானது தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அதி முக்கிய கோட்பாட்டின் வழியே பிறந்ததாகும்.

எனினும், 1977 இலும் சரி, அதன் பின்னர் 2001 வரையிலும் சரி, தமிழர் வாக்குகளைப் பெற்று அவர்களது அரசியல் பிரதிநிதிகளாக, இலங்கைப் பாராளுமன்றம் சென்று, கதிரைகளை அலங்கரித்த எந்த ஒரு அரசியல் தலைவருமே இதனை மறந்து – தங்களுக்கு தமிழர் வழங்கிய ஆணையை மறந்து – தாங்கள் மேடை மேடையாக ஏறி வழங்கிய உறுதிகளை மறந்து, அவற்றை காற்றில் பறக்கவிட்டபடி, சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் எதிர்பார்த்தபடி, தமது நிரைகளில் இருந்து சறுக்கி விழத் தயாராகவே இருந்தார்கள்.

இது காரணமாக இளைஞர்கள் இவ்வாணையை ஏற்று, அகிம்சாவழியில் நம்பிக்கை இழந்து, ஆயுத ரீதியில் எமது உரிமைகளைப் பெற்றிட அணிதிரண்டனர்.

தனியரசுக்கு தமிழர் ஆணை வழங்கிருந்தும், மாவட்டசபைகளோடு திருப்திப்படத் தயாராகவே தமிழ் அரசியல் தலைமைகள் இருந்தன. அதற்காகவே சர்வகட்சி மகாநாடு, வட்டமேசை மகாநாடு என குந்தி எழும்பி, அதில் குதூகலிக்கவும் செய்தனர். இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு தடைவருகிறது. 1983 களில் இலங்கைத் தமிழன் எரியூட்டப்படுகின்றான். இம் முறை பௌத்த பேரினவாத்தின் உண்மை முகம் சர்வதேசத்துக்குத் தெரியவருகிறது. “உயிர்களைக் கொல்லுவது பாவம் ; ஆனால் அதைவிடப் பாவம் தமிழர்களைக் கொல்லாமல் விடுவது” என புத்த பிக்குகளே முன்னின்று இந்த இனக் கொலை நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். இது ஈழத் தமிழர்களை அரசியல் புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு படையெடுக்க வைக்கின்றது. குறிப்பாக இந்தியா நோக்கிய தமிழர்களது இடப்பெயர்வு காரணமாக, இந்தியாவினது ஒழுங்கமைபின் கீழ் இலங்கையினது விடுதலை கோரும் இயக்கங்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று 1985 ஜூலை 13 இல் திம்புவில் இடம்பெறுகிறது. இப் பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட இலங்கைத் தமிழரின் ஆறு விடுதலை அமைப்புகளும் ஒருமித்து தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை முன் வைத்தன. இதன் அடிப்படையிலே அமையும் எந்த ஒரு அரசியல் தீர்வே சிங்களவர் தமிழர்களுக்கிடையிலான பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்ற யதார்த்த நிலையினை சர்வதேசமும் அறிய உதவினர்.

வழமைபோல சிங்களப் பேரினவாதம் இதனை அங்கீகரிக்க மறுத்தது. திம்புப் பேச்சுவார்த்;;;;தையும் முறிந்தது. தமிழ் இளைஞர்கள் தமது ஆயுதப் போராட்டத்தினையே முழுமையாக நம்பும் நிலைக்கு அவர்களைச் சிங்களப் பேரினவாதிகள் தள்ளிச் சென்றனர். இது எமது தேசத்தின் கடந்தகால வரலாறு. இங்கே தமிழர்கள் தமது உரிமைகளை அகிம்சை ரீதியில் கோரிநின்ற போதும் சரி, பின்னர் ஆயுத ரீதியில் பெற்றுக் கொள்ள முனைந்த போதும் சரி, தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற கோட்பாட்டினை, உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஆழமாகவும் ஆணித்தரமாகவும் வலியுறுத்தி வந்தவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் 1944 ஆகஸ்ட் மாதமளவில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியானது இக் கோட்பாட்டினையும் அடிப்படையாகக் கொண்டே உதயமாகியது என்பதும் இவரது இந்தச் செயற்பாட்டிற்கு காரணமாயமைந்திருக்கலாம்.

ஏதோ ஒரு வகையில் தமிழ் அரசியல் தலைவர்களை ஏமாற்றியபடி, இலங்கைத் தீவின் தமிழின அழி;ப்பிலும், தமிழ் நில ஆக்கிரமிப்பிலும், இலங்கை அரசு தொடர்ந்தும் தனது அரசியல் நாடகத்தை அரங்கேற்றத் தவறவில்லை. ஜெயவர்த்தனா, பிரேமதாசச, விஜயதுங்கா, சிறிமா, சந்திரிகா, ரணில் என நீளும் இந்தப்பட்டியலில் விஜயதுங்கா சற்று வித்தியாசமான ஒரு நிலைமையைத் தமிழர் தொடர்பில் எடுக்கத் துணிகின்றார். இலங்கைத் தீவு சிங்களவர் நாடு என்றும், தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர் மட்டுமன்றி, மரத்தில் படரும் கொடிகளைப் போன்றவர்கள் என்றும், இலங்கையில் நிலவுவது இனப்பிரச்சனை என்ற ஒன்று அல்ல எனவும், இங்கு பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே நிலவுவதாகவும், நிறுவ முயலுகின்றார். இவரது இந்த நிலையையே சந்திரிகாவும் லக்ஸ்மன் கதிர்காமரது துணையோடு ஆரம்பத்தில் சர்வதேசத்தில் பரப்பத் துணிகின்றார். இந்த நிலமையில் கூட தனி;த்து நின்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் உள்நாட்டு ஊடகங்கள் மூலமாகவும், சர்வதேச கலந்துரையாடல்களுடாகவும், இவர்களது இந்த வாதத்தை பொய்யெனத் தோலுரித்துக் காட்டும் செயல்களில் துணிந்து ஈடுபட்டார்.

காலத்தின் தேவைகருதி, அந்த அந்தக் கால அரசியல் நிலைக்கு ஏற்ப சிங்களத் தலைமைகள் தூக்கிப்பிடிக்கும் தீர்வுப் பொதிகளை – மாயமான்களை – தமிழ்மக்களுக்கு விளக்கி நின்றதுடன், திம்புக் கோட்பாட்டின் அடிப்படையினையே குழிதோண்டிப் புதைப்பதற்காகவே அவை முன்வைக்கப்படுகின்றன இவற்றை ஆராய முற்படுவதோ, சிங்களத் தலைவர்களோடு சேர்ந்து கதைப்பதோ நாம் எமது எதிர்கால தமிழ் சமுகத்திற்கு செய்யும் கேடாக அமையும் என்பதை அழுத்தமாக உரைத்து நின்றவர் குமார் அவர்களே.

1990 களில் இலங்கையினது இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள்தான் பிரதான உரிமைதாரர்கள் என்றும், அவர்களது நிலைப்பாடு என்பது 1985 ஜூலையில் திம்புவில் முன்வைக்கப்பட்ட அந்த நான்கு பிரதான கோட்பாடுகளுமே என்பதனையும் சர்வதேசத்தின் முன்னே எடுத்துச் சென்றவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களே.

இவர் தனது கட்சி சார் அரசியலை இவ்வாறு முன்னெடுத்துச் செல்லும் போது, தலைநகரிலே தனிமனிதனாக நின்று செயற்படும் போது, தனக்கு பேரினவாதிகளால் வரக்கூடிய ஆபத்தினைப் பற்றியும் அறிந்தே இருந்தார். இருந்தும், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் குரலை, அந்நிய சிங்கள இராணுவம் ஒலிக்க விடாமல் தடுத்திருக்கும் போது, தமிழ் இனத்தினுடைய நிலைப்பாட்டை உலகறியச் செய்யக்கூடிய நிலையில் இருக்கும் கொழும்பு வாழ் தமிழர்கள் ஒலிக்காதிருப்பது எவ்வளவு வேதனையானது என்று கூறியபடி தனது விடுதலைக் குரலை ஓங்கி ஒலித்தவர் இவர்.

1966 களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் வாலிபர் முன்னணிச் செயலாளராகத் தெரிவாகி அரசியலுக்குள் நுழைந்த குமார் அவர்கள், தனது கால் நூற்றாண்டுகால அரசியல் வாழ்வுக்குப் பின்னர் ஒரு பக்குவப்பட்ட, முதிர்ந்த அரசியல்வாதியாகி, தமிழர்களது அரசியல் நிலை தொடர்பாக தீர்க்கதரிசனத்தோடு கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியவர். ஆரம்பத்தில் இவர் கூறிய கருத்துக்களை எதிர்த்தவர்கள் கூட பின்நாளில் குமாருடைய அரசியல் கருத்துக்களின் நியாயத் தன்மையினையும், நிதர்சன உண்மைகளையும் உணர்ந்து தெளிவு பெற்றவர்களாக மாறியமை வரலாறு.

குமாருடைய மரணச் செய்தி சர்வதேச ரீதியில் கூட ஒரு சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு இலங்கைத் தமிழர்களது அரசியல் அடிமை வாழ்வு பற்றி இவர் அடிக்கடி தெரிவித்த நியாயபூர்வமான கருத்துக்கள் காரணமாயிருக்கலாம். இவரது மரணச் செய்தி அறிந்து, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கையொப்பம் இட்டு வெளியிட்ட அறிக்கை கூட சர்வதேச சமூகத்தை ஈர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தேசியத் தலைவரால் இவருக்கு “மாமனிதர்” என்ற கௌரவம் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய இடத்தில் இருந்து, இவருக்கு கிடைத்த இந்த உண்மை கௌரவம் தழிழுலகம் உள்ளவரை இவரது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

ஜி.சந்திரன்

திருமலை

குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு எனது நினைவஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.