Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர்களிடம் மகிந்த சவால்

Featured Replies

தெற்காசியாவில் அதியுயரமான கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.வன்னி, கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரம் 450 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக வட மாகாணத்திற்கான தொலைக்காட்சி வானொலி மற்றும் தொலைபேசிச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. சுமார் 174 மீற்றர் உயரமான இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மூலம் தொலைக்காட்சிச் சேவைகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சில விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கோபுரத்தை மகிந்த ராஜபக்ஸ இன்று திறந்து வைத்தார்.அங்கு உரையாற்றிய சிறீலங்கா அதிபர் புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

"வடக்கிலுள்ள இளைஞர்களை தெற்கிலுள்ளவர்கள் சந்தேகத்தில் நோக்கிய காலம் இருந்தது. சுமார் 25 வருடங்களுக்கு அதிகமாக இந்த நிலை காணப்பட்டது. எனினும் தற்போது அந்நிலை மாறியிருக்கிறது. நாம் மாற்றியமைத்துள்ளோம். வடக்கிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும்.

அதனை நிறைவேற்றுவதற்கு பல வழிகளிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு மக்கள் தொடர்பில் யதார்த்தமான உணர்வு இருந்தால் அம்மக்களுக்காக முடிந்தால் ஒரு டொலரையேனும் நன்கொடையாக வழங்குமாறு அவர் புலம்பெயர் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொக்காவில் தொலைதொடர்புக் கோபுர ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் உரிமைகளை பாதுகாக்குமாறு சர்வதேச நாடுகளிடம் கோரி வரும் எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு டொலரையேனும் செலவிட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் வீடுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசி பணம் திரட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பல புலம்பெயர் தமிழர்களினால் சரியாக தமிழ் பேச முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்கு தெரிந்தளவு கூட தமிழ் தெரியாத புலம்பெயர் தமிழர்களே தற்போது வெளிநாடுகளில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாது, போலியான பிரச்சாரங்களையும், தமிழ் மக்களையும் பிளவினையும் ஏற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்கள் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போலியான பிரச்சாரங்களினால் புத்திசாதூரியமான இலங்கைத் தமிழர்களிடையே பிளவினை ஏற்படுத்த முடியாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் வடக்கு மற்றும் தெற்கு அரசியல் தலைவர்களினால் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே வடக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

லண்டனில் வந்து நின்று எம்முடன் சவால்விடலாமே................

இந்த நிகழ்வில் புலம் பெயர் தமிழ் மக்கள் பற்றி பேசவேண்டிய தேவை என்ன?

எனக்கென்னவோ மகிந்தர் தாம் என்ன செய்தாலும் 'புலம்பெயர் தமிழர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்' என்பது போல் உள்ளது இந்த 'சவால்'.

நாங்களும் சவால்! உன்னை கம்பி எண்ண வைக்காமல் விடமாட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விளையாட்டும் சிறிலங்கவுக்குள்தான். வெளியே வந்தால் தெரியும்,

ஒருமுறை லண்டனுக்கு வந்து பட்ட பாடு எங்களுக்கு எல்லோ தெரியும்.

Edited by தமிழ் அரசு

இது சரி;

வடக்கு மக்கள் தொடர்பில் யதார்த்தமான உணர்வு இருந்தால் அம்மக்களுக்காக முடிந்தால் ஒரு டொலரையேனும் நன்கொடையாக வழங்குமாறு அவர் புலம்பெயர் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அது சரி;

ஆனால் ஏற்கனவே நெர்டோ போன்ற அமைப்புக்கள் புலம் பெயர் மக்களின் உதவியுடன் பல திட்டங்களை முன்னெடுத்தனர் எனவும், அதற்கு உதவி கோரி, சில கணக்கு அறிக்கைகளும் முன்வைக்கப்படன.

- நேர்டோவின் மாதிரிப்பண்ணை ஆரம்பம் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=77458

அப்ப எது சரி?

அப்படியானால் ஏன் மகிந்தர் அப்படியான அமைப்புக்களை புலம்பெயர் தமிழரை குறிப்பிடவில்லை என எண்ணத்தோன்றியது.

கூகிளில் நேட்டோவை தேடினேன் (http://nerdolanka.org/cgi-sys/suspendedpage.cgi), இது தான் கிடைத்தது This Account Has Been Suspended!

அடக்கு முறைகளில்லாத சூழலில் வாழும் புலம் பெயர் வாழ் தமிழர்களின் அரசியல் இராஜதந்திரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடும் மகிந்தாவின் உணர்வை இந்தப்பேச்சிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் பட்ட அவமரியாதையை எண்ணி எண்ணி புலம்புகிறார் மகிந்த.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் சவால்! உன்னை கம்பி எண்ண வைக்காமல் விடமாட்டோம்

கம்பி இல்லை...தூக்கு..சதாம்முக்கு நடந்தது போல்

:wub:

நேர்டோ அமைப்பு உள்ளதா? மூடப்பட்டதா?

மூடப்பட்டால் ஏன் மூடப்பட்டது? பணம் கொடுத்து உதவிய திட்டங்களுக்கு என்ன நடக்கும்?

கூகிளில் நேட்டோவை தேடினேன் (http://nerdolanka.org), இது தான் கிடைத்தது This Account Has Been Suspended!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போயும்போயும் நாங்கள் ஏனப்பா நெடுக சிங்களவனையே திட்டோணும்?

அண்டு தொடக்கம் மோட்டுச்சிங்களவன் எண்டு அவனை பளிச்சுக்கொண்டு.......அவனுக்கே ஆலவட்டம் ஆரார்த்தி எடுத்து பொட்டுவைச்சு மாலை போட்டு வரவேற்கிறது எல்லாம் ஆரப்பா?

ஒப்பிறேசன் செய்யேக்கை பாவம்பரிதாபம் பார்த்ததாலை வந்தவினை இண்டைக்கு....சொந்த பூமியிலையே அவலவாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

[ செவ்வாய்க்கிழமை, 07 யூன் 2011, 01:01 GMT ] [ வவுனியா செய்தியாளர் ]

விடுதலைப் புலிகள் கேட்டதையே சில அரசியல் சக்திகள் கேட்க முனைகின்றன. புலிகள் கோரியதை ஒருபோதும் அவர்களுக்கு கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று கொக்காவிலில் பாரிய தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ளவர்களை தெற்கிலுள்ளவர்கள் சந்தேகத்துடன் நோக்கிய காலம் இருந்தது. சுமார் 25 வருடங்களுக்கு அதிகமாக இந்த நிலை காணப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. நாம் மாற்றியமைத்துள்ளோம்.

வடக்கிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும். அதனை நிறைவேற்றுவதற்கு பல வழிகளிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம்.

புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அதை ஒருபோதும் வழங்க முடியாது.

வடக்கு மக்களுக்கான அதிகாரப்பகிர்வை, வடக்கு,தெற்கு அரசியல் தலைவர்களின் கலந்துரையாடலுக்குப் பின்னரே தீர்மானிக்க முடியும்.

அரசியல் விவகாரங்கள், தீர்வுகள் தொடர்பாக நாம் நிறையவே பேச வேண்டியுள்ளது. அதுபற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்.

அதிகாரப்பகிர்வு, அரசியல் பிரச்சினைகள் என்று எப்படிக் கூறினாலும், இவையெல்லாம் உள்நாட்டு விகாரங்கள்.

இதில் வெளிநாட்டு சக்திகளுக்கு தலையீடு செய்ய உரிமைகள் கிடையாது. மக்களுக்கான தீர்வு ஒன்றை அவர்கள் திணிக்க முடியாது.

அரசியல்தீர்வு என்பது மக்களின் இதயத்தில் இருந்தே வெளிப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் புனர்வாழ்வுக்காக ஒரு டொலரைக் கூடத் தரவில்லை.

அப்படிக் கொடுத்திருந்தால் அவர்கள் இங்குள்ள மக்களின் உரிமைகள் பற்றி கவலைப்படலாம்.

அவர்களுக்கு கொழும்பில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில் வீடுகள் உள்ளன. சென்னையில், ஐரோப்பாவில், கனடாவில் கூட அவர்களுக்கு வீடுகள் உள்ளன.

ஆங்கிலத்தில் பேசி புலம்பெயர் தமிழர்கள் நிதி சேகரிக்கிறார்கள். அவர்களில் பலருக்கு தமிழ் பேசத் தெரியாது. எனக்குத் தெரிந்தளவுக்குக் கூட அவர்களால் தமிழ் பேச முடியாது. ஆனால் அவர்கள் தமிழர்களுக்காக நிதி சேகரிக்கிறார்கள்.

அந்த நிதியை புலம்பெயர் தமிழர்கள் இங்குள்ள தமிழர்களின் புனர்வாழ்வுக்காகப் பயன்படுத்தவில்லை. தமிழர்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தவே அதைப் பயன்படுத்துகின்றனர்.

ஈழக்கனவுக்கு மீண்டும் உயிர்கொடுக்கவே அவர்கள் முனைகின்றனர்.

ஆனால் இங்குள்ள தமிழ்மக்கள் புத்திசாலிகள். உண்மையான நிலைமை புரிந்து கொண்டிருப்பவர்கள்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புதினப் பலகை.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசி பணம் திரட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பல புலம்பெயர் தமிழர்களினால் சரியாக தமிழ் பேச முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்கு தெரிந்தளவு கூட தமிழ் தெரியாத புலம்பெயர் தமிழர்களே தற்போது வெளிநாடுகளில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருபத்தொராம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாளராக மகிந்தவை முன் மொழிகின்றேன்!

இவரது தமிழைக் கேட்டிருங்கின்றேன்! இவரது தமிழைக் கேட்டுத் தமிழ் அன்னை மயிர்கூச்செறிகின்றாள்!!!

ஏன் அவுஸ்திரேலியாவை விட்டு விட்டார் என்று விளங்கவில்லை. எங்கள் தமிழ் பரவாயில்லைப் போல!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.