Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எங்கள் மூத்த அக்கா - சிறிலங்கா அமைச்சர்

Featured Replies

பங்கங்களை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச மட்டத்திலிருந்து வருகின்ற அழுத்தங்களை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அரசாங்கம் தமிழ் மக்களை அரசியல் அதிகாரத்துக்குள் ஈடுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் அரசியல் தீர்வு தொடர்பான விடயத்திலும் அர்ப்பணிப்புடன் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப் பெரும தெவித்தார். அயல் நாடான இந்தியாவுடனான உறவு சிறப்பாக வலுவடைந்துவருகின்றது. இந்தியாவை நாங்கள் எமது மூத்த சகோதரியாகவே பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச விவகாரங்கள் மற்றும் இந்திய உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் போன்றவை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் : சில தரப்பினன் அழுத்தம் காரணமாக சர்வதேச மட்டத்தில் எமக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தெரிகின்றது. முக்கியமாக எமக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிக்கலை தோற்றுவிக்க முயற்சிப்பதாக தெரிகின்றது.

ஆனால் சர்வதேச மட்டத்தில் பிரயோகிக்கப்படும் நியாயமற்ற மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலுமான அழுத்தங்களை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

யுத்தகாலத்தில் இதனைவிட அதிகளவில் அழுத்தங்கள் வந்தன. நாங்கள் அவற்றை சமாளித்தோம். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த அழுத்தங்களுக்கு அடிபணிந்திருந்தால் யுத்தம் நிறைவடைந்திருக்காது. எனவே நியாயமற்ற அழுத்தங்களுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம்.

தற்போதைய நிலைமையில் யுத்தத்துக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் அனைவரும் பார்க்கவேண்டும். இடம்பெயர்ந்த மக்களில் மிக அதிமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றனர். அண்மையில் கூட பலர் விடுவிக்கப்பட்டனர். அந்த வைபவம் ஒன்றில் நானும் கலந்துகொண்டிருந்தேன்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்.

மேலும் பொலிஸ் சேவைக்கு தமிழ் மொழி உத்தியோகத்தர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நியமிக்கப்படவுள்ளனர். இவ்வாறு பல துறைகளில் இலங்கை முன்னேற்றத்தைக் கண்டுவருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நியாயமற்ற முறையில் அழுத்தங்கள் வருகின்றன. ஆனால் அவ்வாறான நியாயமற்ற அழுத்தங்களை நாங்கள் ஏற்கமாட்டோம்.

இதேவேளை நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை படிப்படியாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. இதனை வலியுறுத்தி நான் அண்மையில் பாராளுமன்றத்திலும் உரையாற்றியிருந்தேன். அதாவது நாட்டின் நிலைமை சீரடைந்துள்ள நிலையில் அவசரகால சட்டத்தை படிப்படியாக நீக்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.

இந்தியாவுடனான இலங்கையின் உறவுகளும் தொடர்புகளும் மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. என்றுமில்லாதவாறு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளன. அதாவது இந்தியாவை நாங்கள் எங்கள் மூத்த சகோதரியாகவே பார்க்கின்றோம். மூத்த சகோதரிக்கு தம்பியின் மீது அன்பு அதிகளவில் இருக்கும்.

தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதாவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் நாங்கள் கூறுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் எங்களது அனைத்து தொடர்புகளும் நடவடிக்கைகளும் நகர்வுகளும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே உள்ளது. மத்திய அரசாங்கத்துடன் நாங்கள் நெருங்கிய முறையில் செயற்பட்டு வருகின்றோம். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் விடயங்களை இந்தியா பார்த்துக்கொள்ளும்.

இதேவேளை அரசியல் தீர்வுகாணும் செயற்பாட்டிலும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. பல்வேறு விடயங்கள் குறித்து இந்தப் பேச்சுக்களில் ஆராயப்பட்டு வருகின்றன. முக்கியமாக அரசியல் தீர்வு விடயம் குறித்தும் இந்தப் பேச்சுக்களில் ஆராயப்பட்டுவருகின்றது. தமிழ் மக்களை அரசியல் அதிகாரத்துக்குள் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

...........?........?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எங்கள் மூத்த அக்கா - சிறிலங்கா அமைச்சர்

அக்கா உங்க சொக்காவை கழற்றாத வரைக்கும்.. காசா? பணமா?ஒரே பஞ்ச் டயலாக்ஸா அள்ளி போடுங்கள் :rolleyes:

இந்தியா எங்கள் மூத்த அக்கா - சிறிலங்கா அமைச்சர்

மூத்த அண்ணா சீனாவா???? தம்பி உரஷ்சியாவா? இந்தியாவைப்பெட்டையன் என்றே இலங்கை பார்ப்பது இன்னும் ஏன் இந்தியகாங்கிரசுக்குப்புரியவில்லை???????????????????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப் பெரும தெவித்தார். . இந்தியாவை நாங்கள் எமது மூத்த சகோதரியாகவே பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://akkinikkunchu.com/new/

சிங்களவருக்கு மூத்த அக்கா என்றால்..............?

தமிழருக்கு முதல் மச்சாள் என்று சொல்ல வாறாரோ தெரியவில்லை................ ஆதாவது அவா காதலிக்காவிட்டலும் நாம் காதலுடன் பார்க் வேணும் என்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

தரம் கேட்ட குடும்பத்திலை முறையென்ன, முதல்மரியாதைஎன்ன.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடிப்பட்ட அக்காவா? :D

http://www.youtube.com/watch?v=Qm2hFdyoeuk

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அமைச்சர் சொன்னதில் நியாயம் இருப்பதாகவே படுகின்றது!

அக்கா எப்போதும் அன்பைக் கொட்டுவார்!

அக்கா எப்போதும் தனது எதிர்காலத்துக்குத் தம்பியையே நம்பியிருப்பார்!

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை, என்று அக்காவின் கருத்தைத் தம்பியின் கருத்து, சிறு பிள்ளைத்தனமான கருத்தாக இருந்தாலும், அம்மா, அப்பாக்களால் ஏற்றுக்கொள்ளப் படும்!

நல்ல கருத்தாக இருந்தாலும், பெண் புத்தி பின் புத்தி, என்று சொல்லப் பட்டு நிராகரிக்கப் படும்!

அக்கா தம்பிக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொடுப்பார்!

நான் இலங்கையில் உள்ள அக்காமரைத்தான் குறிப்பிட்டேன்! புலத்தில் உள்ள அக்காக்கள் என்னுடன் சண்டைக்கு வர வேண்டாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா தனக்கு இலாபம் என்றால் தம்பிக்கோ தங்கைக்கோ ஆப்பு வைப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.