Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்?

13 ஜூலை 2011

திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் ..

சன் டிவி அதிபர் கலாநிதிமாறன் கைது செய்யப்படலாம்?

திரைப்பட விநியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி சக்சேனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீதான திரைப்பட மோசடிக் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் மீது மூன்று வழக்குகள் பாய்ந்துள்ளன.

இந்நிலையில் சேலம் திரைப்பட விநியோகஸ்தகர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் சன் தொலைக்காட்சியின் அதிபரும், சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறனை விசாரணைக்கு வருமாறு சென்னை கே.கே.நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

12.07.2011 அன்று அழைப்பாணை அனுப்பினார்கள். 13.07.2011 அன்று அவரை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் 13.07.2011 அன்று இரவு தெரிவிக்கப்பட்டது. அவர் எந்த நேரத்தில் வர விரும்புகிறாரோ, அப்போது வரலாம் என்றும், அதுபற்றி முன் கூட்டியே தகவல் தெரிவித்தால், அவரை விசாரணை நடத்தும் அதிகாரிகள் தயாராக இருந்து விசாரிப்பார்கள் என்றும் காவல்துறையினர் கூறினார்கள்.

இதனால் ஊடகங்களின் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகவும் பெரியதும் பிரமாண்டமனாதுமான ஊடக நிறுவனங்களை நடத்திவரும் கலாநிதிமாறனை இன்று காவல்துறையினர் விசாரணைக்குட் படுத்தும் நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்ப்பும் நிலவுவதால் அவரது சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரப்படலாம் எனத் தெரிகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64018/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல்கள்........ம்ம்ம் பாப்பம் எண்ண நடக்க போதுன்னு.........

.... எங்கள் பணமும் ... நூறு கோடிக்கு மேல் ... இந்த கலாநிதியிடம் ஒதுங்கி விட்டதாம்!!! ... இனி யார் கேட்கப்போகிறோம்? தரவா போகிறான்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 13, ஜூலை 2011 (14:26 IST)

மோசடி புகார்: போலீசில் ஆஜராக கலாநிதி மாறனுக்கு அவகாசம்

சேலத்தை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் செல்வராஜ்.இவர் சென்னை கே.கே.நகர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சன்பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, என்னிடம், தீராத விளையாட்டு பிள்ளை படத்துக்கு சேலம் வினியோக உரிமை தருவதாக கூறி 83 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வாங்கினார். அதன் பிறகு சேலத்தில் அந்த படத்தை வெளியிடுவதற்கான உரிமை தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே சக்சேனா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து, சக்சேனா கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது "சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நான் என் விருப்பப்படி செயல்படவில்லை. நிர்வாகம் சொன்னபடிதான் நடந்து கொண்டேன்" என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, கே.கே. நகர் போலீசார் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனிடம் விசாரிக்க முடிவு செய்தனர். எனவே விசாரணைக்கு இன்று போலீஸ் நிலையம் வரும்படி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

இன்று காலை 10 மணிக்கு கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கலாநிதிமாறன் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும். எனவே கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் குருசாமி, இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் விசாரணைக்கு தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் வக்கீல் பாட்ஷா தலைமையில் 7 வக்கீல்கள் கலாநிதிமாறன் சார்பாக கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார்கள். போலீஸ் அதிகாரிகளை சந்தித்த வக்கீல்கள், கலாநிதி மாறன் ஏற்கனவே ஒப்புக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. 26 ந்தேதி வரை வெளியூரில் இருப்பதால் அவர் விசாரணைக்கு வர இயலவில்லை என்று விளக்கம் அளித்தனர்.

வக்கீல்களின் விளக்கத்தை போலீஸ் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வக்கீல்களின் விளக்கத்தை போலீசார் எற்றுக் கொண்டதால் கலாநிதிமாறன் 27ந் தேதி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று கூறப்படுகிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57683

தமிழகம் முன்னேற ஊழல் அழிக்கப்படல் வேண்டும். அதை யார் செய்வார்கள்?, அரசியல் வாதிகளே.

இது அரசியல் பழிவாங்கல் இல்லை, ஊழல் ஒழிப்பே.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: 2006ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தன்னை மிரட்டியதாக ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் கூறியுள்ள புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

கிட்டத்தட்ட ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் வலுக்கட்டாயமாக விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் சிவசங்கரன்.

ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்க இடைத்தரகராக செயல்பட்டது ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியாகும். இதையடுத்து இந்த வழக்கில் அடுத்தகட்டத்தை அடைந்துள்ள சிபிஐ, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி அதிகாரிகளிடம் இன்று தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

வங்கியின் கார்போரெட் பிரிவு அதிகாரிகளை டெல்லி சிபிஐ தலைமையகத்துக்கு வரவழைத்து இந்த டீல் தொடர்பான ஆவணங்களைக் கோரினர் சிபிஐ அதிகாரிகள்.

மேலும் ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக வங்கிக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றம் தொடர்பான முழு ஆவணங்களையும் சிபிஐ கோரியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னையா ஊழல் ஒழிப்பு? அப்பிடி பாத்தா அந்த அம்மாவ தூக்கி தான் உள்ளபோடனும்....

இது முழுக்க முழுக்க வடிந்து கட்டிய அரசியல் பழிவாங்கலே...........

எல்லாம் சரி.... இந்தப் பிரச்சினையாலை சன்ரீவிக்கு ஒரு பழுதும் வந்திடாது தானே! பிறகு தொல்லைக் காட்சித் n தாடர் எல்லாம் அரை வாசியிலை நிண்டால் எங்கடை புலன் பெயர்ந்த சனத்தின்ரை பொழுது பொக்குக்கு ஆப்பு வைபட்டிடும் எல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்

well u see கலாநிதியா கொக்கா..ஆள் இப்ப சுவிஸ்லயாம்.............

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து, இன்று வரை மத்திய அரசுக்கு ஆதரவு வழங்கி அமைச்சராகவும் உள்ளார்கள்.

அவர்கள் செய்த பல கோடி ஊழலுகுத் தான் இப்போ மாட்டுப் பட்டு....... சிறையிலும், சி.பி.ஐ. விசாரணை வளையத்தினுள்ளும் வந்துள்ளார்கள்.

சுண்டல் சொல்வது போல்... காங்கிரஸ் கட்சியே தனது கூட்டணி கட்சியை அரசியல் பழி வாங்குகின்றது என்பது தவறு.

வேறு வழியில்லை...... எக்கச்சக்கமாக மாட்டுப் பட்டுப் போனார்கள். நீதி மன்றுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அதனால் கருணாநிதி வழக்கம் போல்.... அரசியல் பழி வாங்கல் என்று பீலா விட்டுக் கொண்டிருக்கின்றார்.

கலாநிதி மாறன் சுவிசில் என்றால்... சிறைக்குப் போக முன், தனது பணத்தை பத்திரப் படுத்தவோ.... அப்புறப் படுத்தவோ.... வந்திருக்கலாம்.

இப்போ... மாறன் சகோதரர்கள், சுவிசுக்கு சுற்றுலா செல்லும் மனநிலையில் இல்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்குகளில் இருந்து கனிமொழியாகட்டும் ராஜா ஆகட்டும் சிறை மீள்கின்ற நாட்கள் வெகு தொலைவில் இல்லை......ராஜா ஒரு கைதேர்ந்த வக்கீல்........சட்டத்தின் ஒட்டைகளை எல்லாம ;பயண்படுத்தி எப்பிடி வெளியே வருவது எண்பதெல்லாம் திமுக என்ற கட்சிக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை அதற்க்கு சில மாதங்கள் ஆகலாம்....

லாலுபிரசாத்தின் மீதும் தான் சிபிஜ மாட்டு தீவன ஊழல் வழக்கை தொடர்தது நிறுபிக்க முடிந்ததா இல்லை...இன்றுவரை அவர் வெளியே தான்....

ஏன் ஊழல் ராணி ஜெயலலிதாவை டான்சி வழக்கிலே உள்ளே போட முpடிந்ததா இல்லை....

இன்று அவர் தமிழகத்தின் முதல்வர்....

தனது வளர்பு மகனின் பெயரிலே பலகோடிகளை அள்ளி கொட்டி திருமணம் செய்தாரே? அது அவர் சொந்தமாக நடித்து சம்பாதித்த பணமா? இல்லை தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்த பணம்

பிண்பு அதே வளர்ப்பு மகன் மீது கஞ்ஞா வைததிருந்ததாக புகார் கூறி அவர் பெயரிலே இருக்கின்ற சொத்துகளை பறிக்க தனது ஆட்சிலே காவல் துறையை ஏவி விட்டாரே இவர் தனது ஆட்சியிலே மற்றவர்கள் மீது எப்பிடியெல்லாம் வழக்கு போடுவார் என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.....

சரி அப்பிடியே திமுக மீது எல்லாம் இந்த ஊழழ் புகார்கள் கூறப்பட்டாலும் இதை எல்லாம் விழுங்கி ஏப்பம் விடுகின்ற வகையில் இன்னொரு சம்பவம் வெளியில் வரும்...இது மறக்கப்படும்..மீண்டும் திமுக ஆட்சியில் அமரும்...............அது அடுத்த ஆடசியாக இருக்கும் அதுக்கு பிறது திமுக என்ற கட்சி தமிழக்கத்தில் இருக்குமா என்றது சந்தேகமே....

ஏன் என்றால் ஸ்ட்டாலின் அவர்களுடைய பேச்சுத்திறமை என்றது மிக மிக குறைவு அரைத்த மாவையே திரும்ப திரும'ப அரைப்பார்.....கடந்த திமுகவின் தோல்விக்கு அவருடைய பிரச்சாரமும் ஒரு காரணம்....தந்தையின் குரல் வளம் அவருக்கு இருந்தும் ஏனோ பேச்சு திறமையை வளர்க்க வில்லை அவர்....

காங்கிரஸ் மலையாளிகள் பிடியில்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.