Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரணடைகிறான் வீரத் தமிழன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைகிறான் வீரத் தமிழன்

news

சிலை புனரமைப்பு என்ற பேரில், யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலியனை போவோர் வருவோரிடம் எல்லாம் யாழ். மாநகர சபை சரணடைய வைத்திருப்பது குறித்து குடாநாட்டில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சங்கிலியன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு தமிழ் வீரன்; மன்னன். அவனை வாளினைத் தூக்கியபடி சரணடையும் கோலத்தில் சிலையாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. நிபுணத்துவ யோசனைகள் எதனையும் பெறாது சகட்டுமேனிக்குத் தான் தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுப்பதால் ஏற்படும் விளைவு இது என்று பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் ஒருவர் ஆதங்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் சங்கிலிய மன்னனுக்குச் சிலை நிறுவப்பட்டிருந்தது. அந்தச் சிலையைப் புனரமைக்க யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்திருந்தது. முன்னர் அங்கு நிறுவப்பட்டிருந்த சிலை சுக்கு நூறாக்கப்பட்டு, புதிய சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கைலாசபிள்ளையார் கோயில் திருப்பணிக்காக இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த சிற்பி ஒருவரினால் புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய சங்கிலியன் சிலையின் மாதிரி உருவில் அவனது வலது கரம் தாங்கி இருந்த வாள், முன்னர் இருந்த நிலையிலும் பார்க்க கீழ் இறங்கி இருந்தது. இது குறித்துக் கடும் கண்டனங்கள் தாயகத்திலும் புலத்திலும் எழுந்தன.

இதனை அடுத்து சங்கிலியனின் கை மேலே உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது சங்கிலியன் தனது கைகளில் வாளினை தூக்கிப் பிடித்தபடி சரணடைவதற்குத் தயாராக இருப்பது போன்ற பாவனையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது கரத்தினை தோள் உயரத்துக்குத் தூக்கியபடி, உள்ளங்கை வெளித் தெரிய வாளினைத் தூக்கிப் பிடித்தபடி இருக்கும் சங்கிலியனின் சிலையே தற்போது முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டுள்ளது. சங்கிலியனின் இந்த நிலையே மீண்டும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.

சரணடைய மறுத்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ஒரு மன்னனை இதை விடக் கேவலப்படுத்த முடியாது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கைகளை உயரத் தூக்கி உள்ளங்கை வெளித் தெரிய நிற்கும் நிலை சரணடைதலுக்கான உடல் மொழியாகவே உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் எதிரே இருக்கும் எவருக்கும் தன்னால் ஆபத்து ஏற்படாது என்று உணர்த்துவதும் தனது கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை என்று நிரூபிப்பதும்தான். சங்கிலியனும் இப்போது அப்படித்தான் கைகளைத் தூக்கியபடி நிற்கிறான் என்றார் பல்கலைக்கழக விரிவுரையாளர்.

இந்த நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி புதிய சிலை திறந்து வைக்கப்படும் என்று யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா நேற்று அறிவித்தார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. திறப்பு விழாவுக்கு அறிவுசார் பெருந்தகைகளையும் அரசியல் தலைவர்களையும் அழைப்பது என்று அந்தக் கூட்டத்தில் இணங்கப்பட்டது. எனினும் சிலையை யார் திறந்து வைப்பார் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், "திறப்பு விழா முழுவதும் அரசியல்மயப்பட்டதாகவே இருக்கும்'' என்று முதல்வர் தெரிவித்தார். உள்வீட்டுத் தகவல்களின்படி பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே சிலையைத் திறந்து வைப்பார் என்று தெரிகிறது.

27 ஜுலை 2011, புதன் 8:05 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=32072452727388455

வேறென்ன ஒன்றுக்கும் உதவாதவர்கள்தானே திறந்து வைக்கப்போகிறார்கள். சிலையிடம் வாளிருந்தால் கூட இவர் திறந்து வைக்க மாட்டார். இப்போது வாளில்லை. பயப்படாமல் திறந்து வைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாநகர சபையின் அதிகாரத்தால் சிலையை உடைத்து விட்டுப் புதிய சிலையை வைக்க முடியுமென்றால், ஏன் இந்தச் சிலையையும் தூக்கி எறிந்து விட்டு, மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் மாறும்போது, இன்னொரு சங்கிலியன் சிலையை வைக்கக் கூடாது?

சரணடையும் சங்கிலியன் சிலையிலயும் பார்க்கச் சிலை இல்லாதிருப்பதே மேல்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாநகர சபையின் அதிகாரத்தால் சிலையை உடைத்து விட்டுப் புதிய சிலையை வைக்க முடியுமென்றால், ஏன் இந்தச் சிலையையும் தூக்கி எறிந்து விட்டு, மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் மாறும்போது, இன்னொரு சங்கிலியன் சிலையை வைக்கக் கூடாது?

சரணடையும் சங்கிலியன் சிலையிலயும் பார்க்கச் சிலை இல்லாதிருப்பதே மேல்!

புங்கையூரன், சிலை இல்லாட்டி, புத்தரின் சிலையை வைத்து விடுவார்கள்

சிலைக்குகூட எங்களை போரட வைக்கிறார்கள்,

எம்மில் முள்ளத்தண்டு இல்லா அரசியல் வாதிகளும், அரச ஊழியர்களும் இருக்கும் வரை, தமிழ் மக்கள்ளென்ன நாய், சிலைகள் கூட தங்கள் உரிமைகளுக்கு போரட வேண்டும்.

ஒரு உண்மையான வீரனை இந்த கெமுணு கூட்டம் சிறுமைப்படுத்தி தன்னை மேலும் கேவலப்படுத்திக்கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன், சிலை இல்லாட்டி, புத்தரின் சிலையை வைத்து விடுவார்கள்

சிலைக்குகூட எங்களை போரட வைக்கிறார்கள்,

எம்மில் முள்ளத்தண்டு இல்லா அரசியல் வாதிகளும், அரச ஊழியர்களும் இருக்கும் வரை, தமிழ் மக்கள்ளென்ன நாய், சிலைகள் கூட தங்கள் உரிமைகளுக்கு போரட வேண்டும்.

உடையார் தயவு செய்து நாய்களை பற்றி பேசாதீர்கள் அதுகளுக்கும் இப்போதைய அரசியலில் வரலாறு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.