Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் கட்சிகளுக்கு ஈ.பி.டி.பி. அழைப்பு

Featured Replies

தமிழ் கட்சிகளுக்கு ஈ.பி.டி.பி. அழைப்பு

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்காக அக்கட்சிகளுக்கான அழைப்பொன்றை ஈ.பி.டி.பி. விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் யாழ். மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகத்துக்கான மாணவர் அனுமதி, அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன குறைக்கப்படும். இவை தவிர பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அவ்வாறானதொரு நிலையில் போரினால் அழிந்த பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்ற முயற்சிகளும் பாதிப்பதாகவே அமையும். எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் பேதங்களுக்கப்பால் இவ்விவகாரத்துக்கு தீர்வொன்றைக் காண முன்வரவேண்டும். அனைவரும் ஒருமித்த கருத்தில் பதிலளித்தால் நிச்சயம் சாதகமான தீர்வொன்றைப் பெறமுடியுமென்று ஈ.பி.டி.பி நம்புகின்றது.

இவ்விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்து நாடாளுமன்ற ஆசனக்குறைப்பு விடயத்தில் போருக்குப் பின்னரான நிலையைக் கருத்தில் கொண்டு விஷேடமான ஏற்பாட்டின் அடிப்படையில் நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு கடந்த காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொள்ள கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையும், அழிவு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய வாய்ப்பையும் தவறவிட்டதுபோல் ஒற்றுமையீனத்தால் மீண்டுமொரு தவறு நடந்துவிடக்கூடாது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/25886-2011-08-05-16-49-23.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ......ஐயோ .....என்ன கொடுமையடா இது.

ஐயோ ......ஐயோ .....என்ன கொடுமையடா இது.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி.... அவர்களை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்க மறுத்தது சிங்களம். இப்போ.. ஜனநாயக வழியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்க முடியாதாம்.

அதனால்.. சிங்கள அரச ஒட்டுக்குழுக்களைக் கொண்டு அந்த இடத்தை நிரப்பலாமோ என்ற நாடகத்தின் அரங்கேற்றமே இவை.

64 ஆண்டு காலமா தமிழர்கள் நாடாளமன்றம் போய் ஏன் எதிர்கட்சி வரிசையில் குந்தி இருந்தும் சிங்களப் பாராளுமன்றத்தில் எதனையும் சாதிக்க முடியவில்லை.

அதுமட்டுமன்றி வடக்கிலும் கிழக்கிலும் பல கிராமங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு சிங்களப் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட்டு விட்டது. அப்போதெல்லாம் வராத கரிசணை.. இந்த நாய் பி டி பி க்கு இப்ப வந்திருப்பதன் நோக்கம்..

சிங்கள அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவத்தை நிராகரிக்க ஆதாரம் தேடிக் கொடுப்பது தான்.

யாழ் குடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகை குறைந்து போவதால்.. தமிழர்கள் எதனையும் புதிதாக இழந்துவிடப் போவதில்லை. ஆனால் வடக்கில் வன்னியிலும்.. மன்னாரிலும்.. வவுனியாவிலும்.. கிழக்கில் அம்பாறையிலும்.. மட்டக்களப்பிலும்.. திருமலையிலும் எமது நிலம் பறிக்கப்பட்டு சிங்கள மயமாவதால் தமிழர்களின் தாயக இருப்பே இல்லாமல் போகிறது. அதை மீட்கப் போராடிய புலிகளையும் மக்களையும் சிங்களவனோடு சேர்ந்து அழித்து.. மக்களை ஓட ஓட அகதிகளாக விரட்டியடித்த இந்த ஆயுதக் கும்பலுக்கு தமிழ் கட்சிகளை இதன் பின்னால் அணிவகுக்கக் கேட்க எந்த உரிமையும் கிடையாது. போய் சிங்களத்தின் காலடியில் சுருண்டு கிடந்து வாலாட்டிப் பிழைப்பதே இவர்களுக்கு நல்லது.

சிங்களத்திடம் இழக்கப்பட்ட நிலத்தை மீட்பதன் மூலம்.. சுதந்திர தமிழீழத்தை அமைப்பதன் மூலமுமே எமக்கு தீர்வு வருமே தவிர வேறு எந்த வழியிலும் எமக்கு தீர்வு பெறப்படமாட்டாது. அபிவிருத்தி என்று சனசமூக நிலையம் கட்டவும்.. லக்சபான கரண்ட் விநியோகம் செய்யவும்.. சிங்களத்தின் வருவாய்க்கு கப்பல் விடவும்.. ரெயில் ஓட்டவும்.. சங்கிலியன் சிலைக்கு பெயின்ரடிக்கவும் பாராளுமன்றம் போகத் தேவையில்லை. அப்படி போய் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப் போறதும் இல்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் என்ன பேச்சு வார்த்தை? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது தாடி மாமாவின் நாடகம். மகிந்தவுடன் சேர்ந்து கும்மி அடிப்பவர் மகிந்தவிடமே பேசி பாராளுமன்ற உறுப்பினர் தொகையை குறைக்காமல் செய்யலாமே!!

ஆக தேர்த்தலின் போது புலிகளின் வால்கள் தான் கூட்டணியினர்.அவர்கள் இனவாதம் பேசி மக்களிடம் வாக்குகளை வென்று விட்டார்கள் என்றவர் மக்களிடம் சீலைகள் வேட்டிகள் கொடுத்தும் வெல்லாமல் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவர் இன்று பேச்சுவார்த்தை மூலம் மக்களுக்கு உரிமை பெற்றுக்கொடுக்க போகிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாவில் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பின் நிமித்தம்.. ஈபிடிபி கும்பலின் ஆயுத அச்சுறுத்தல் நிமித்தம்.. மக்கள் வெளியேறிச் சென்றதனால் ஏற்பட்ட மக்கள் தொகை குறைவு காரணமாகவே பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகிறது. திருமலையில்... அம்பாறையில்.. சிங்களக் குடியேற்றம் காரணமாகவும்.. வவுனியாவில் சிங்களக் குடியேற்றம் காரணமாகவும் நாம் ஏற்கனவே பல நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை இழந்துவிட்டோம். இப்போ முல்லைத்தீவு மாவட்டமும் சிங்கள மயமாகி வருகிறது. அங்கும் அது சிங்களவர் கைவசம் ஆகலாம். யாழ் குடாவில் மட்டும் இந்தப் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதன் மூலம்.. ஈபிடிபி சில ஆயிரம் வாக்குகளில் நாடாளுமன்றம் போக வாய்ப்பு வருமே தவிர.. தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப் போறதில்லை.

1991 இல் இருந்து இவர் டக்கிளஸ் தேவானந்தா பாராளுமன்றம் போறார்.. இன்னும் பலர் போனார்கள். இவர்கள் சிங்கள அரசிடம் பெற்ற நிதிகளைக் கொண்டு செய்த அபிவிருத்தி தான் என்ன..?! தாங்கள் லண்டனிலும் பிற நாடுகளிலும் முதலீடுகளைச் செய்ததோடு.. உள்ளூரில் வர்த்தகப் போட்டியில் ஈடுபட்டு சிங்களத்துக்கு வருவாய் தேடிக் கொடுத்தது தான்.

போர் காலப்பகுதியில் இந்த வெண்ணையிடம் போய் யாழ் மாவட்ட மாணவர்கள் வெட்டிப்புள்ளிகளைக் குறைக்கக் கோர இவர் அதற்கு தீர்வு தேடுறன் என்றுவிட்டு சந்திரிக்காவின் முந்தானைக்குள் ஓடி ஒளித்தவர்.

பல்கலைக்கழக அனுமதி.. விகிதாசார முறைப்படி அன்றி.. வெட்டுப்புள்ளி அடிப்படையில் அமைவதால்.. நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைவதால்.. மட்டும் அது பாதிப்படையமாட்டாது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆண்டு கால நிதி ஒதுக்கீடு 50 இலட்சம் என்றால்.. அந்த 50 இலட்சமும் சிங்கள அரசு ஒதுக்கீடு செய்தால் தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை வந்து சேர முடியும். சிங்கள அரசு தனக்கு சார்பில்லாத உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடுகளை வேண்டும் என்றே பின்னடித்து வருவதே கடந்த கால வரலாறு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டால் இதன் பின்னணியில் உள்ள உண்மை தெரியும்.

சிங்கள அரச படைகள் 40,000 பேர் இருக்கிறார்.. யாழ்ப்பாணத்தில். சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் என்ன எங்கும் குடியேறி வாழலாம் என்று இன ஐக்கிய தத்துவம் பேசிய டக்கிளசு அங்கிள்.. இப்போ.. நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பறிபோகிறதே என்று அழுவதன்.. பின்னால் உள்ள நோக்கம்..

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால்.. சில தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு நாடாளுமன்றம் போக.. பெறப்பட வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஊர்காவற்றுறை தொகுதி.. பிற சில தொகுதிகளோடு இணைக்கப்பட்டால்.. அங்கு ஈபிடிபி வாலாட்ட முடியாவிட்டால்.. டக்கிளசு தேசிய பட்டியலில் அன்றி.. எனி நாடாளுமன்றம் போக முடியாது. தேசிய பட்டியலில் போனால்.. அமைச்சர் பதவிக்குப் பதில்.. பிரதி அமைச்சர்.. அல்லது செயலாளர் பதவிகளே கிட்டும். மக்களிடம் சுரண்டவும் கொள்ளை அடிக்கவும் கடினமாகிவிடும். சிங்களத்திடன் வாலாட்டிப் பெற்றதை.. குலைத்துப் பெற வேண்டிய நிலை ஏற்படும் என்ற பயமே இந்த அழைப்பு ஆகும்..!

கிழக்கில் வடக்கில் யாழ்ப்பாணம் தவிர இழக்கப்பட்ட அல்லது சிங்களத்துக்கு தாரைவார்க்கப்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு எந்த வித கவலையும் படாமல் ஆண்டாண்டுகளாக.. புலி அழிப்பில் சிங்களத்திற்கு உதவி நின்றவர்கள்.. இன்று நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் வேடிக்கையும்.. வேதனையும் ஆகும். அவர்கள் ஒற்றுமை பற்றிப் பேசுவது கேவலம். முதலில் தேடப்படும் குற்றவாளியான டக்கிளஸ் இந்திய நீதிமன்றில் சரணடைந்து செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கட்டும். மிச்சம் ஒருங்கிணைவது.. ஒற்றுமை பற்றி பிறகு பேசலாம்.

Edited by nedukkalapoovan

தமிழ் கட்சிகளுக்கு ஈ.பி.டி.பி. அழைப்பு

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்காக அக்கட்சிகளுக்கான அழைப்பொன்றை ஈ.பி.டி.பி. விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுமானால் யாழ். மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், பல்கலைக்கழகத்துக்கான மாணவர் அனுமதி, அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன குறைக்கப்படும். இவை தவிர பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அவ்வாறானதொரு நிலையில் போரினால் அழிந்த பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதும், இழப்புக்களைச் சந்தித்த எமது மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்ற முயற்சிகளும் பாதிப்பதாகவே அமையும். எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் பேதங்களுக்கப்பால் இவ்விவகாரத்துக்கு தீர்வொன்றைக் காண முன்வரவேண்டும். அனைவரும் ஒருமித்த கருத்தில் பதிலளித்தால் நிச்சயம் சாதகமான தீர்வொன்றைப் பெறமுடியுமென்று ஈ.பி.டி.பி நம்புகின்றது.

இவ்விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்து நாடாளுமன்ற ஆசனக்குறைப்பு விடயத்தில் போருக்குப் பின்னரான நிலையைக் கருத்தில் கொண்டு விஷேடமான ஏற்பாட்டின் அடிப்படையில் நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு கடந்த காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொள்ள கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையும், அழிவு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய வாய்ப்பையும் தவறவிட்டதுபோல் ஒற்றுமையீனத்தால் மீண்டுமொரு தவறு நடந்துவிடக்கூடாது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/25886-2011-08-05-16-49-23.html

வடக்கில் வசந்தமும் கிழக்கில் விடிவெள்ளியும் தோன்றும் வேளையில் இது என்ன உளறல். :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.