Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருண்ட வீட்டுக்குள் கறுப்பு பூனையை தேட முடியாது என்பதை சம்பந்தன் உணர வேண்டும்

Featured Replies

இருண்ட வீட்டுக்குள் கறுப்பு பூனையை தேட முடியாது என்பதை சம்பந்தன் உணர வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

தமிழ் மக்கள் சார்பாக உண்மையை பேசவேண்டும் என்பதற்காக தமது பக்கம் வருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் என்னையும் அழைத்திருப்பது வேடிக்கையானதொரு கூற்றாகும்.

இது இருண்ட வீட்டிற்குள் இருந்து கொண்டு கறுப்பு பூனையை தேடிக் கண்டுபிடிக்க என்னையும் வருமாறு கேட்பது போல் இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எது உண்மை?... சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போகின்றார்கள் என்று நீங்கள் கூறியது உண்மையா? அல்லது, இடிந்து சிதைந்து போன சங்கிலியன் சிலையை நாம் சொன்னது போலவே இன்று புதிதாக கட்டி நிமிர்த்தியிருக்கும் நாங்கள் சொல்வது உண்மையா? எனவும் தெரிவித்ததாக ஈ.பி.டி.பி.யின் ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, உண்மையை பேசுவது யார்? நாங்களா? அல்லது நீங்களா? நீங்கள் அரசாங்கத்தின் பின்கதவு தட்டி அரச உயர் மட்ட பிரதிநிதிகளோடு கனிவாகவும், குழைவாகவும் பேசி உங்கள் சொந்த சலுகைகளை மட்டும் பெறுவதற்காக கூறிவரும் கருத்துக்களை உண்மை என்று ஏற்பதா? அல்லது தேர்தல் காலங்களில் வாக்குகளை மட்டும் அபகரிப்பதற்காக எமது மக்கள் மத்தியில் அரச எதிர்ப்புக் காட்டும் உங்களது சுயலாப வீரப்பேச்சுக்களை உண்மை என்று ஏற்பதா? இதில் எது உண்மை?.

எம்மைப் பொறுத்தவரையில் அங்கொரு பேச்சும், இங்கொரு பேச்சும் ஒரு போதும் இருந்ததில்லை. எமது மக்கள் மத்தியில் எதை நான் பேசுகின்றேனோ அதையே அரசாங்கத்திடமும் பேசி வருகின்றேன்.

எமது மக்களின் அன்றாட அவலங்களுக்கான தீர்வு முதற்கொண்டு அபிவிருத்திப்பணிகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்த விடயங்களையே நான் அரசாங்கத்துடன் இணக்கமாகப் பேசி அதில் எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் முடிந்தளவு வெற்றிகளையும் ஈட்டி வந்திருக்கின்றேன். இது தவிர உங்களைப் போல் எமது சொந்த சலுகைகளுக்காக அரச உயர் மட்டப் பிரதிநிதிகளின் முன்பாக கை கட்டி குனிந்து வளைந்து நின்று ஒரு போதும் எதையும் நாம் கேட்டதில்லை.

அர்த்தமற்ற அரச எதிர்ப்பு அறிக்கைகளை அடிக்கடி வெளியிட்டாலும், அதே அரசுடன் பேசித்தான் எமது மக்களுக்கான சகல பிர்ச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இதை உணர்ந்துதான் நாம் அரசாங்கத்தோடு வெளிப்படையாகவே கை குலுக்கி இணக்கமாகப் பேசி எமது மக்களுக்காக வாதாடியும், உண்மைகளை எடுத்துரைத்தும் வருகின்றோம்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு மாறாக அதை வைத்து எமது இன சமூகத்தின் இரத்தங்களை சூடேற்றி வாக்குகளை மட்டும் அபகரித்து வருவதும், தேர்தல் காலங்களில் பொய்களும், புரட்டுக்களுமாக பரப்புரை செய்து  எமது மக்களை தவறாக வழி நடத்தி அவர்களின் வாக்குகளை பெற்று தமிழ் மக்களின் ஆணையை பெற்று விட்டதாக பெருமிதம் கொள்ளவதுமே உங்களது அரசியலாக இருந்து வருகின்றது.

இது வரை நீங்கள் தமிழ் மக்களை ஏமாற்றி பெற்று வந்த அரசியல் அதிகாரங்களை வைத்து எதை சாதித்தீர்கள்?... உரிமையை பெற்று கொடுத்தீர்களா?... அல்லது உரிமை கிடைக்கவில்லை என்று உங்களால் ஏமாந்த மக்களுக்கு ஒரு வேளை உணவாவது கொடுத்தீர்களா?

1977ஆம் ஆண்டில் தனி நாடு பெற்றுத்தருவோம் என்று ஆணை கேட்ட நீங்கள், 18 ஆசனங்களை பெற்றீர்கள். தமிழ் மக்களை இரத்த வெள்ளத்தில் தவிக்க விட்டு நீங்கள் மட்டும் இந்தியாவிற்கு ஓடிச்சென்று தமிழ் நாட்டில் தனிவீடு பெற்று உங்கள் குடும்பங்களோடு குதூகலித்து வாழ்ந்தீர்கள்.

தமிழர்களில் ஒற்றுமையை உலகுக்கு காட்டுமாறு கோரி 2004 இல் 22 நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றீர்கள். இதனால் எமது மக்களுக்கு நீங்கள் பெற்றுத்தந்தது என்ன?... முள்ளிவாய்க்கால் படுகுழி வரை எமது மக்கள் இழுபட்டு செல்வதற்கு துணை போய், அதை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தீர்கள்.

ஆகவே, உண்மையை பேசவும், உரிமையை பெறவும் நீங்கள்தான் சரியான திசை வழிக்கு வந்து சேரவேண்டியவர்களே அன்றி நாமல்ல. எமது மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கு நாம் சொல்வதை விடவும்  நடைமுறைச் சாத்தியமானதொரு பாதையை நீங்கள் காட்டுவீர்களேயானால் அதை நோக்கி நாம் வருவதுபற்றிப் பரீசீலிப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

ஆனால் நீங்கள் காட்டும் திசை வழி என்பது தமிழ் மக்களை இன்னொரு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவே வழி வகுக்கின்றது. எமது அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக இன்னமும் நீடித்து செல்லும் இருண்ட திசையினையே உங்கள் வழிமுறை காட்டி நிற்கிறது.

புழுக்கள் நெளியும் சாக்கடைக்குள் இருந்து நீங்கள் ஒருபோதும் விடுபட்டு வரத்தயாரில்லை என்பதே உங்கள் வரலாறு. வாக்குகளை மட்டும் அபகரிப்பதற்கான வெறும் தேர்தல் கூட்டு முயற்சிகளை நாம் அடியோடு வெறுக்கின்றோம்.

ஆனாலும், தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து பொது உடன்பாட்டு தளத்தில் இருந்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் அடைவதற்கான உண்மையான வழிமுறை எது என்பதை வரலாறு நிரூபித்து வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25916-2011-08-06-10-39-49.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தருக்கு இதுவும் தேவை இன்னும் தேவை? <_<

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டிலை வச்சாலும் அது*******எதையோ தான் தேடி போகுமாம். இது சம்பந்தருக்கு புரியாமல் போட்டுதே?

தமிழ்மக்களால் ஒதுக்கப்பட்ட,எமது இனத்தின் கோடரிக்காம்புகளான இவர்களை ஒன்று சேர வருமாறு சம்பந்தர் அழைப்பதன் ஊடாக இவர்களுக்கு எல்லாம் அரசியல் அந்தஸ்துகொடுக்க முனைகிறாரா?????

  • கருத்துக்கள உறவுகள்

இருண்ட வீட்டுக்குள் கறுப்பு பூனையை தேட முடியாது என்பதை சம்பந்தன் உணர வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எது உண்மை?... சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போகின்றார்கள் என்று நீங்கள் கூறியது உண்மையா? அல்லது, இடிந்து சிதைந்து போன சங்கிலியன் சிலையை நாம் சொன்னது போலவே இன்று புதிதாக கட்டி நிமிர்த்தியிருக்கும் நாங்கள் சொல்வது உண்மையா? எனவும் தெரிவித்ததாக ஈ.பி.டி.பி.யின் ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி சங்கிலியன் என்ன பாடு படப்போகிறாரோ......?

பாவம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி சங்கிலியன் என்ன பாடு படப்போகிறாரோ......?

பாவம் :(

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியனின் எழுந்த பாசமல்ல இது

அவரது சிலையிலிருந்து எனது மாமியார்வீடு சில மீற்றர்களே.

அவரை உருட்டும்போது எனது மாமியாருக்கு ஏதும் வந்துவிடக்கூடாதே என்ற அவதிதான் காரணம். :lol::D:D

Edited by விசுகு

  • தொடங்கியவர்

மகிந்தவின் வியூகத்தில் உள்ளாக்கப்பட்டு இருக்கும் மூவரில் ( வடக்கில் டக்கி, கிழக்கில் கருணா - தாயக மக்கள், புலம்பெயர் மக்களை - கே.பி.) இவரும் ஒருவர்.

இவர்களின் பெரிய எதிர்பார்ப்பு அண்மைய தேர்தல், அதில் தோற்றத்தில் இருந்து டக்கி பெரிய அவமானத்திற்கு உள்ளாகி உள்ளார். இதானால் உள்ள கோபத்தை மக்கள் மேல் காட்ட முடியாது, அதை கூட்டமைப்பு மீது அள்ளி இறைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தாடி மாமாவையும் சம்பந்தரையும் ஒப்பிட முடியாவிட்டாலும் இருவரும் தமிழ் மக்களை பொறுத்தளவில் கையாலாகாதவர்கள் தான்.

யாழ். இராணுவ கட்டளைத்தளபதி ஹத்துருசிங்காவின் உத்தரவின் பேரில் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா வாள் ஏந்தும் சங்கிலி மன்னனின் சிலையை இடிக்குமாறு உத்தரவிட்டார். ஹத்துருசிங்கா, அரச மரியாதைகளுடன் வந்த ஜநாதிபதி சிலையை பார்வையிடால் தனது கடமையை செய்யும் திறமை நகையாடுவார் என நினைத்தான். இலங்கை முழுவதையும் ஒருகுடைக்கு கீழ் ஆழும் அரசனென்றும், துட்டகைமுனு போன்ற மாபெரிய வீரனென்றும் ஜநாதிபதி தன்னைத்தான் தம்பட்டமடிப்பதால் வீரத்தமிழ் மன்னனின் சிலையை கண்டு கோபப்பட்டு தன்னை தண்டிக்கல்லாம் என்று நினைத்து, அதற்குமுதல் சிலைமறைத்து இராணுவவீரர்களை காவல் போட்டான். இதேவேளை யாழ் நகரில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் உள்ள மந்திரி மனை என அழைக்கப்படும் வரலாற்று நினைவுச்சின்னத்தையும் இடிப்பதற்கு ஹத்துருசிங்கா உத்தரவிட்டான். இங்கே தான் ஹத்துருசிங்கா பிடித்த பிள்ளையார் குரங்குபோல் மாறினார். நல்ல காரியத்தை தொடக்கிவைக்க பிடித்த பி்ள்ளையார் குரங்காய்மாறி மகிந்தாவின் தேர்தலை குழப்பத்தொடங்கிவிட்டார். தேர்தலை காப்பாற்ற தீவத்திலிருந்து, சிறுகைத்தொழில் அமைச்சர், சிற்பத்தொழிலிற்கு மாற்றபட்டு யாழ்பாணம் கொண்டுவரப்பட்டார். ஜநாதிபதி கொடுத்த இலவச தேர்தல் சோற்று பாசல்களுடன் அமைச்சர் புனருத்தான வேலைகளையும் தேர்தலுக்கு வாங்கிகொண்டார். புதுச்சிலை வந்தபோது சங்கிலியன் வாள் இன்றி உளங்கையை உயர்த்திக் காட்டி சரணடையும் நிலையில் இருந்தான். பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் தவறை பற்றி கூறியதை ஊதயன் வெளிவிட்டது. அதன் பின் டக்கிலஸ், யோகேஸ்வரி, புஸ்பரத்தினம் மூவரும் ஒன்றுகூடி சிலையை பார்வையிட்டு சிலை திருத்த பட்டது. புஸ்பரத்தினத்தால் அமைச்சர் சங்கிலியனுக்கு ஒப்பிடப்பட்டார். ஆனல் தேர்தலைக் காப்பாற்ற காலம் கடந்து போய்விட்டது. இதனால் இன்னமும் ராணுவ அதிகாரிகளும் மற்றவர்களும் இடம்மாற்று பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த புயல் ஒயமுன்னரே அமைச்சர் இந்த பொய்யையை கூறுகிறார்.

கறிகாறிக்கு பூ நாறுமென்பார்கள். அமைச்சருக்கு தமிழர்பக்கம் சாக்கடையாய் இருக்கிறது. அமைச்சர் இருட்டிலே பூனைபிடிக்க பயபடுகிரார். ஆனால் தைரியமாக பட்டபகலில் கள்ளகோழி பிடித்து பொக்கெட் நிறைக்கிறார். போர்குற்றவிசாரணை வரக்கூடிய சாத்தியங்கள் கூடிக்கொண்டு போகிறது. அமைச்சர் இலங்கையில் அரசியல் அநாதையாகபோகிறார். இது அவர் சென்னை போகவும் ஒரு ஃப்ரி டிகெட் உழைத்து கொடுக்கலாம்.

தன்னை காப்பாற்ற முடியாமல் தவிக்க போகும் அமைச்சர் சம்பந்தருக்கு எப்படி தமிழருக்கு விடுதலை பெறலாம் என்று உபதேசிப்பது அநாவசியம்.

இதைத்தான் சம்பந்தர் உண்மைகளைக் கூறி தமிழர்களுடன் இணந்து தன்னை தான் காப்பாற்றும்படி கூறியிருக்கிறர்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இருண்ட வீட்டுக்குள் கறுப்பு பூனையை தேட முடியாது என்பதை சம்பந்தன் உணர வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்

என்னா தத்துவம்.. இதுக்குமுன்னாடி யாராவது கேட்டிருக்கீங்களா... எக்ஸ்பிரியன்ஸ் கிரண்டு பேசுது..

dep_3617792-Silhouette-of-man-with-bulb---idea-in-hand.-illustration.jpg

எங்க.. எந்த.... இடத்துல யார் யாருக்கெல்லாம்..... விளக்கு பிடிச்சாரோ ... தெரியல.. :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சரி சரி... டக்ளஸு அண்ணாச்சி பாவம் இல்லியா?

அவர விட்டுடுங்க!!

ஆனா.......ஒண்ணே ஒண்ணு கேக்கணும்........

புலிகள் ஜனாநாயகவழிக்கு திரும்பினால், நான் அரசியலை விட்டே விலகத் தயார்ன்னு...அண்ணாச்சி ஒருவாட்டி சொல்லி இருந்தாரு..........இதே யாழ்களத்துள அந்த நியூஸும் வந்துதாக்கும்!!

புலிகள்தான் இப்போ இல்லியே ...எப்போ நீங்க அரசியலை விட்டு விலகுவதாய் உத்தேசம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.