Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவாவில் எத்தகைய மோதலுக்கும் தயார் – சிறிலங்கா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ulakaunavuth%20thiddam.jpgஜெனிவாவில் செப்ரெம்பர் 12ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான பிரச்சினை எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கும் அரசாங்கம் அதனை முறியடிப்பதற்கான முழுவீச்சில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காவின் இராஜதந்திரக் குழுக்கள் உசார்படுத்தப்பட்டுள்ளன.

மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குழுவை தனிப்படக் கவனித்துக் கொள்ளுமாறு ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் தாமரா குணநாயகம் கேட்கப்பட்டுள்ளார்.

இவர் ஸ்பானிய மொழியை நன்று பேசக் கூடியவராவார்.

அதேவேளை சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கௌதமாலா, மெக்சிக்கோ, உருகுவே மற்றும் பெரு ஆகிய இந்த நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் ஆதரவுப் பரப்புரைகளை முறியடிக்க சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் பரப்புரைகளை முறியடிக்க போருக்குப் பிந்திய அபிவிருத்தி மற்றும் மீள்குடியமர்வுத் திட்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட அனைத்துலக சக்திகள் போர்க்குற்றச்சாட்டுகள், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி இந்த அமர்வில் சிறிலங்காவைக் குறிவைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் 12ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா குழுவுக்கு மகிந்த சமரசிங்கவே தலைமையேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்க இம்முறை அமைச்சர்கள் மட்டத்திலான வலுவானதொரு குழுவை சிறிலங்கா அனுப்பவுள்ளது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான இந்தக் குழுவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

http://www.eeladhesam.com/index.php?option

அன்று 'பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்' என்ற புயலில் எமது உண்மையான விடுதலைப்போராட்டம் அகப்பட்டுக்கொண்டது.

இன்று துனிசியா, எகிப்து, லிபியா, சிரியா.. நாடுகள் மூலம் ஏற்பட்ட 'மக்களை கொல்லுதலுக்கு' எதிரான போராட்டத்தில் சிங்களம் மாட்டுப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குழுவை தனிப்படக் கவனித்துக் கொள்ளுமாறு ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் தாமரா குணநாயகம் கேட்கப்பட்டுள்ளார்.

மாமா வேலை பார்ப்பது என்று முடிவாகி போச்சி.. அதெலென்ன ஒளிவு மறைவு.. சிங்கள ஆக்டரஸ் அவ்வளவு கவர்ச்சிகரமா ஒத்துழைத்து இருப்பங்களா? :rolleyes: :rolleyes:

மாமா வேலை பார்ப்பது என்று முடிவாகி போச்சி.. அதெலென்ன ஒளிவு மறைவு.. சிங்கள ஆக்டரஸ் அவ்வளவு கவர்ச்சிகரமா ஒத்துழைத்து இருப்பங்களா? :rolleyes: :rolleyes:

சிங்களப் பயங்கரவாதிகளின் வெற்றிகரமான இனவழிப்புக்கு உதவும் ஒரு உண்மையான பின்னணியை, பிரதான காரணியை தற்போது அறிந்துள்ளீர்கள்.

சிங்கள விலைமாதர்களில் கவனிப்பில் கவிழ்ந்தவர்களே பலர். அதைவிட அன்பளிப்புகளும், சுற்றுலாக்களும் தாராளம். வருபவர்கள் மேலதிக விபரங்களை அறியாமல் இவற்றில் கூடிய நேரத்தை செலவிட வைத்து அனுப்புவதில் சிங்கள அரச பயங்கரவாதிகள் கில்லாடிகள்.

கடலில் போர்நிறுத்தக் கண்காணிப்பு செய்தவர்கள் முதல், இந்து ராம், இந்திய ராஜதந்திரிகள் வரை சிங்களப் பயங்கரவாதிகளுடன் ஒட்டி உறவாடுவதற்கு ஒரு காரணம் இதுவே.

உள்ளூரில் லக்ஸ்மன் கதிர்காமர், கருணா, டக்லஸ், ஆனந்தசங்கரி போன்றவர்களும் சிங்கள பயங்கரவாத அரசின் இந்தக் கவனிப்புகளில் மதி மயங்கியவர்கள் தான். இவர்கள் சிங்களப் பயங்கரவாதிகளைப் பிரிய முடியாமல் "மிரட்டி" வைத்திருக்கும் காரணிகளில் இதுவும் ஒன்று.

உங்கள் நாட்டில் ரொமேஷ் பண்டாரி முதல் சிவசங்கர் மேனன் வரை (தீட்சித், நாராயணன் உட்பட) 50 க்கு மேற்பட்டவர்கள் சிங்கள பயங்கரவாத அரசின் இந்தக் கவனிப்புகளில் மதி மயங்கியவர்கள் தான்.

இந்த மனித உரிமைகள் தொடரில் இல்லாமல் அடுத்த தொடரிலேயே சிங்களம் சந்திக்கும் தனது குற்றங்களை. காரணம் மேற்குலகம் இந்த ஆண்டு இறுதிவரை கொடுத்துள்ள கால எல்லை .

ஆனால், நாம் எம்மால் முடிந்த அழுத்தங்களை, எமக்கு ஆதரவு நாடுகளை (ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க ) பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்பிலிருந்து ஆணித்தரமான கருத்துக்களை முன் வைக்கக் கூடியவர்கள் தங்கள் அமைப்பின் மூலம் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கு பற்றி சிங்களத்தின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். இது நீண்ட காலத்துக்கு முன்பே... திட்ட மிட்ட கூட்டம் என்பதால்... இந்தச் சந்தர்ப்பத்தை தவற விடக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.