Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...?

Featured Replies

அண்மையில் ஒரு வலைப்பூ பார்த்தேன் . எமது சாத்திரங்களும் , சம்பிரதாயங்களும் எவ்வளவு தூரத்திற்கு ஆக்கசக்தியான பெண்களைக் கேவலப்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது . இதில் சொல்லியிருக்கின்ற பல விடயங்களில் எனக்கு உடன்பாடில்லை . உங்கள்கருத்துக்களையும் எழுதுங்கள் .

எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி

விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...

வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....

வஞ்சக நோக்கம் உடையவள்...

அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்

வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்

தூது செல்பவள்

தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்

குலப் பெருமையை அறிந்திராதவள்

மலடி

கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்

செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்

வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...

கட்டுப்பாடு இல்லாதவள்

அசாதாரணக் குணம் உள்ளவள்

தகுதியற்றவனை மணந்தவள்

வயதான கணவனைக் கொண்டிருப்பவள்

இளம் வயதில் கணவனை இழந்தவள்

அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்

காம இச்சை அதிகம் கொண்டவள்

ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்

கணவனை வெறுப்பவள்....

இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....*

ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.

http://tamilnadpu.blogspot.com/2011/08/blog-post_9939.html

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு. அந்தக் குணம் பெண்களிடமும் எல்லா வடிவங்களிலும் இருக்கும். இதில் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற ஆராய்தலே தேவையற்ற ஒன்று. விலங்கு விலங்கை பல வழிகளிலும் நாடவே செய்யும். மனிதத்தை நேசிக்கும் எவனும்.. விலங்குகளை அவ்வளவு இலகுவாக நெருங்க அனுமதிக்கமாட்டான். நாங்கள் ஆண்கள் அனுமதிக்காதவரை பெண்களால் ஒன்றும் பண்ண முடியாது. அதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப்படுகினம்.. சில ஆண்கள்..??! கற்பு என்பது ஒவ்வொரு தனிமனிதன் சார்ந்த ஒழுக்கமே அன்றி.. அதைப் பெண்களிடத்தில் மட்டும் எதிர்பார்ப்பதனால் ஆகும் விளைவுகளில் இதுவும் ஒன்று.

பெண் விலங்கு ஆண் விலங்கை பல வழிகளிலும் கவரத்துடிப்பது ஒன்றும்.. இந்தப் பூமிப்பந்தில் புதிதல்ல..! ஆனால் சில அடிப்படை மனித நாகரிங்களில் அது புதிதாக.. அல்லது கட்டுப்பாட்டுக்குரியதாக இருக்கலாம். அதன் விளைவுகளின் தாக்கமாகவும் இது இருக்கலாம். அவ்வளவே. :):icon_idea:

Edited by nedukkalapoovan

மிகவும் பிற்போக்கான கட்டுரை கோமகன்.

ஆண்களில்கூட பலர் ஆண்மைத்தனம் இல்லாதவர்களே.தங்களால் சுயமாக எதுவும் செய்யமுடியாது..யாரையும் பற்றி அப்படி இப்படி என்று கேள்விப்பட்டால் அப்ப நாங்களும் ஒருக்கா முயர்சிப்பமோ? என்றுதான் பலர்.பொன்ஸ் கோஷ்டிகள் தான் அநேகம் பேர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எலாரும் (ஒழுக்கமே வாழ்க்கை என்று நினைப்பவர்களை தவிர) கற்பு என்றால் என்ன? எந்த கடையில் விற்க்கின்றது என கேட்கிற காலமிது

கற்பு என்றால் என்ன? விவகாரமான பதிவு(18+)

into2.jpg

Uploaded with ImageShack.us

உயர் ஜாதி வர்க்கத்தினரிடையே காணப்படும், மிக உயர்வான பழக்கம் என்று ஒன்று இருக்கிறது. தன் மனைவியை மற்றொருவன் அனுபவிக்க அனுமதிப்பது என்பது தான் அது. தன்னால் இயலாத போது, காசு கொடுத்து ஆண் மாடல்களை அழைத்து வந்து தன் மனைவியை புணர வைப்பது என்பது இன்றைய மேட்டுக்குடி கலாச்சார வாழ்க்கையின், மிக உச்சமான கலாச்சாரம்.

எனக்குத் தெரிந்த வகையில் சில ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வருவார்கள். உணவோடு, தன் அழகான மனைவியையும் விருந்தாக்கி அதன் விளைவாக கோடிகளில் வருமானம் கொட்டும் ஏற்றுமதி ஆர்டர்களை பெற்றிருக்கிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்மணிகளின் அழகு குறையக் குறைய தங்கள் தங்கையையோ அல்லது தன் உறவினர் பெண்களையோ இறக்குமதியாளர்களுக்கு விருந்தாய் படைத்து, தங்கள் தொழிலை வளம் பெறச் செய்து வருவதையும் நான் அறிந்திருக்கிறேன். இது பிசினஸ்ஸில் லாபம் குவிக்க உதவும் ஒரு வகை உத்தி.

அடுத்து, மிகப் பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள், தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த ஆபாசமாய் பெண்களை காட்டி, வாடிக்கையாளர்களை கவர்வார்கள். இதற்கும் மேற்கண்ட சம்பவத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த வகை விளம்பரங்களில் தன் உடலை பலர் பார்க்க வேண்டுமென்ற நோய் பிடித்தவர்களான பெண்களை, மேற்படி நிறுவனங்கள் காசைக் கொடுத்து கூட்டி வந்து பார்வையாளர்களுக்கு பந்தி வைப்பார்கள். இதற்கு ஏதுவாய் அழகிப் போட்டிகளை நடத்தி, பெண்களின் தலையில் கிரீடம் வைத்து, அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி விடுவார்கள். உன் உடல் அழகானது, நீ பலருக்கு விருந்தாக மாறக்கூடிய தன்மை கொண்டவள் என்று அவர்களுக்கு அதீத நம்பிக்கையை ஊட்டுவார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும்.

into1e.jpg

Uploaded with ImageShack.us

மேட்டுக்குடி கற்பு என்பதற்கான ஒரு உதாரணம் இருக்கிறது. உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. முதலில் சல்மான்கானுடன் சுற்றிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, பின்னர் பலரும் அறியும் வண்ணம் விவேக் ஓபராயுடன் காதல் கொண்டிருந்தார். அதன் பின்னர் அமிதாப்பச்சனின் மகனைத் திருமணம் செய்து கொண்டார். இதே போல, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி, அடிக்கடி ஆண் நண்பர்களை மாற்றியதால்,வெகுண்டெழுந்த தந்தை விஷ ஊசி போட்டுக் கொன்றதை நாம் அறிவோம். சாதாரண குடும்பங்களில் பேணப்படும் கற்பு, மேட்டுக்குடியினரிடையே இல்லாமல் போய் விடுகிறது. இன்றைக்கும் ஐஸ்வர்யா ராயை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றார்கள். ஏன் இந்த வித்தியாசம் என்று யோசித்துப் பார்த்தால் பணம் என்ற ஒற்றைச் சொல் நம் முன்னே நின்று நகைக்கும்.

பணமிருந்தால் போதும் – அது எந்த வித சமூகக்கட்டுப்பாட்டுக்கும் கட்டுப்படாத தன்மையை அளித்து விடும் என்ற நிலைக்கு இன்றைய சமூகம் வந்து விட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இது எந்த விதமான வாழ்வியல் சிக்கலைத் தோற்றுவிக்கும் என்பதற்கு, இன்றைய் அமெரிக்காவின் நிலையே உதாரணம்.

இதோ அடுத்த ஒரு மேட்டுக்குடி கலாச்சாரத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

மிகப் பெரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமான சந்தோஷம் தேவைப்படுகிறது. ஆண்களுக்கு அழகிய பெண்களும், பெண்களுக்கு அழகிய ஆண்களின் மீது ஆசை ஏற்படுகிறது. டிஸ்கொதே என்ற பெயரில் அவரவர்களுக்குப் பிடித்தவர்களுடன் ஆடுகின்றார்கள். இன்றைய பணக்கலாச்சாரத்தில் தன் மனைவியை திருப்திப்படுத்தாத கணவன்மார்கள், தன் மனைவி தன்னை விட்டு அகன்று விடாமல் இருக்க சில விஷயங்களை விட்டுக் கொடுக்கின்றார்கள். அதுதான் இளவயது ஆண்களை தங்கள் மனைவிகளை அனுபவிக்க தங்கள் வீடுகளுக்கே அனுமதிப்பது என்பது. இதுபற்றிய விரிவான கட்டுரை ஒன்று பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்திருக்கிறது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? இதே சென்னையில் இருக்கும் மிக உயர்ந்த நட்சத்திர ஹோட்டலுக்கு ரெகுலராக தண்ணி அடிக்க வரும் பிரபலத்தின் வேலை என்ன தெரியுமா? இளம் பெண்களை தனது பத்திரிக்கை மூலமாக மடக்கி கொண்டு வந்து ஒரே ஒரு முறை மட்டும் அனுபவிப்பது மட்டுமே. அந்தப் பெண் மறுமுறை ஆசைப்பட்டால், அவர் உதாசீனப்படுத்தி விடுவார்.ஆனால் வெளியாரிடத்தில் தான் ஒரு பெண்களை ஆதரிக்கும் ஆபத்பாந்தவன் என்பதாய்க் காட்டிக் கொள்வார். ஒரு முறை ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து, அவளுக்கு நிரம்ப ஊற்றி விட்டு காரில் அழைத்துச் சென்றார் இந்தப் பிரபலம். இதைப் பார்த்த நான்,அங்கிருக்கும் ஒருவரிடம் ரகசியமாய் விசாரித்தேன். இதுபற்றிய கணக்கு வழக்குகளை அவர் விலாவரியாகச் சொன்னார். கேட்ட எனக்கு கதி கலங்கி விட்டது. சரி போகட்டும் இந்தக் கதை. நம் கதைக்கு வருவோம்.

இளம் வயது ஆண்களை அனுப்பி வைக்க, ஏஜென்சிகளும் நடத்தப்படுகின்றனவாம். அந்தப் பையன்கள், சற்றே வயதான் பெண்களுக்கு உகந்த நண்பர்களாகவும், அவர்களின் குழந்தைகளுக்கு தோழனாகவும், படுக்கையில் பட்டையக் கிளப்பும் வாலிபனாகவும் இருக்கின்றார்களாம். இவர்களின் பைகளில் என்றைக்கும் வயாகரா மாத்திரைகள் இருந்து கொண்டே இருக்குமாம். இது போன்ற ஏஜென்சிகளின் வருமானம் கோடிகளில் கொட்டுகிறதாம். கணவன்கள் பல்வேறு இளம் பெண்களின் கவட்டிகளுக்குள் கிடப்பதை மனைவிமார்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். இப்படி ஒரு ஒப்பந்தம் இன்றைக்கும் நடைமுறையில் இருந்து வருகிறதாம். இதைத் தான் மேட்டுக்குடிக் கலாச்சாரம் என்கிறார்கள். இந்த மேட்டுக்குடி வர்க்கத்தினருக்குத்தான் இந்திய அரசு பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

இந்தியாவில் 35 சதவீத மக்கள் படிப்பறிவற்றவர்களாகவும், இருபது கோடி மக்கள் வாரம் நூறு ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்களாகவும், 10 கோடி மக்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கிடைப்பதாகவும் பத்திரிக்கைகள் சொல்கின்றன.இந்திய ஆட்சியாளர்களுக்கு இதுபற்றிய ஒரு சிந்தனை கூட இல்லை. ஏனென்றால் இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் மேட்டுக்குடித்தனக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏழைகளின் பிரச்சினை பற்றி தெரியவே தெரியாது. பதவியும், பணமும் தான் அவர்களின் குறியாய் இருக்கிறது. ஏழைகள் ஏழைகளாக இருந்தால் தான் தாங்கள் என்றைக்கும் வளமோடு வாழ முடியும் என்று அவர்கள் முடிவு கட்டிக்க்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் தான் ஒரு ரூபாய் அரிசியும், ஆயிரம் ரூபாய் காசும் கொடுத்து தங்கள் வெற்றிகளை உறுதி செய்து கொள்கின்றார்கள். அதுவுமின்றி ஏழைகளுக்கு மட்டும் தான் கற்பு வேண்டுமென்று பேசுவார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்று வரும் விபச்சாரத்தைக் கண்டு கொள்ளாதவர்கள், ஏழைகள் வசிக்குமிடங்களில் நடக்கும் விபச்சாரத்தை சட்டதை வைத்து ஒடுக்குவார்கள். மேட்டுக்குடித்தனக்காரர்கள் செய்யும் விபச்சாரம் என்பது வெளியில் வரவே வராது. ஏழைகள் தான் பத்திரிக்கைகளில் சந்தி சிரிக்க வைக்கப்படுகின்றார்கள்.

மேட்டுக்குடி கலாச்சாரத்தில் கற்பு என்பது வெறும் பேச்சாய் தான் இருக்கிறது. அதே சாதாரண குடும்பங்களில் கற்பு என்பது அவர்கள் வாழ்வியலின் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வாசகர்களே, உங்களுக்கு தேவை மேட்டுக்குடி கலாச்சாரமா இல்லை சாதாரண குடும்பக் கலாச்சாரமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

http://velichathil.wordpress.com

  • கருத்துக்கள உறவுகள்

- இளங்கோ

கற்பு என்பது தமிழ்ப் பாண்பாட்டோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றும், அத்தகமையானது தமிழ் பெண்களுக்கு உயிரைக் காட்டிலும் மேலானது என்ற கருத்தியலும் நமது சமூகத்தில் ஆண்டாண்டு காலம் கூறப்பட்டு வருகிறது. பண்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கச் சிந்தனையை உரம் போட்டு வளர்க்கவே இக் கருத்து பயன்படுகிறது.

கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் பதம் வன்புணர்ச்சியே (பாலியல் வல்லுறவு) தவிர கற்பழித்தல் அல்ல. கற்பழித்தல் என்ற சொல்லாடல் முழுக்க முழுக்கத் தவறானது. கற்பை எது வரைக்கும் அழிக்கமுடியும் என்று கேட்டால் யாரிடமும் தெளிவான பதில் இல்லை. பெண்ணின் கன்னித்தன்மையை பலவந்தமாகப் பறிப்பதற்குப் பெயர்தான் கற்பழித்தல் என்றால் ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்த பெண்ணைப் பலவந்தப் படுத்துவதை என்ன பெயர் சொல்லி அழைப்பது? அல்லது பெண்ணின் உடலியல் ஒழுக்கம்தான் கற்பு என்றால் ஒரு பெண் அவளது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால் அப்பெண்ணை கற்பிழந்த பெண் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? எனவே ஒரு பெண்ணை, அவள் மனைவியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் அவளது விருப்பத்திற்கு மீறி பலாத்காரப் படுத்தி உடலுறவு கொண்டால் சட்டப்படி குற்றமாகும் என்பதுடன் சம்பந்தப்பட்ட ஆணுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப் படவேண்டும் என்பதே சரியானதும் நியாயமானதுமாகும். ஒரு பெண் பாலியல் வல்லுறவு என்ற மிருகத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டால் அதற்காக வாழ்வை முடித்துக் கொள்வது மிகப் பெரிய அறிவீனம் ஆகும்.

நமது தமிழ் சமுதாயத்தில் கற்பு என்பதே மனைவியானவள் தன் கணவன் மீது கொண்டிருக்கும் அதீத பற்றை வெளிப் படுத்தும் ஒன்றாகவே கருதப்படுகிறது. இங்கு தமிழ் பண்பாட்டையும் வடஆரியப் பார்ப்பனப் படை எடுப்பால் தமிழர்களுக்குள் ஏற்பட்ட ஆரியத் தாக்கங்களையும் ஒப்பிடும் போது இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துருவாக்கங்களையே கொண்டுள்ளன. தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்தில் தாய்வழிச் சமூகமாகவே வாழ்ந்து வந்திருக்கின்றது. ஆரியப் படை எடுப்பால் தாய் வழிச் சமூகம் தந்தைவழிச் சமூகமாக மாற்றப்பட்டு பிறவிப் பெண்ணடிமைத் தனமும் ஆணதிக்கமும் புகுத்தப்பட்டன. சாதிகளற்ற தமிழ் சமுதாயத்தில் சாதியம் புகுத்தப்பட்டதைப்போல் பிறவிப் பெண்ணடிமைத்தனமும் புகுத்தப்பட்டது. அதிலும் குஷ்டம் பிடித்த கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சென்ற நளாயினி, கட்டிய கணவனின் சுடு சொல் கேட்டு தீக்குள் குதித்த சீதை, இந்திரனோடு கட்டிலில் கூடி கன்னித்தன்மையை இழந்த அகலிகை, பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் பொது மனைவியாக இருந்த பாஞ்சாலி, கணவனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்ட காந்தாரி போன்றவர்களை பத்தினிகள் என்றும் கற்புக்கரசிகள் என்றும், அதே சமயம், தாருகா வனத்தில் முனி பத்தினிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிவன், பிருந்தாவனத்தில் கோபியர்களைக் கூட்டி வைத்து சல்லாப லீலை நடத்திய கண்ணன் போன்ற ஒழுக்கக் கேடுடைய புராணக் கதாபாத்திரங்களைக் கடவுள்களாகவும் புண்ணிய புருசர்களாகவும் காட்டியிருப்பதை எண்ணும் போது தனிப்பட்ட ஒழுக்க நலன்களைவிட ஆணாதிக்கமும் அதில் புரையோடிக் கிடக்கும் பிறவிப் பெண்ணடிமைத்தனங்களுமே மேலோங்கி நிற்கின்றன.

இராமாயணத்தில் அயோத்தியாக் காண்டம் எட்டாவது அத்தியாயம், இராமன் தனது காம இன்பத்திற்காக, அரச பழக்க வழக்கங்களுக்கு இணங்க பலதார மணம் புரிந்தான் என்று கூறுகிறது. இது இராமனின் ஒழுக்கக் கேட்டைப் பறை சாற்றுவதுடன் இராமன் ஏகபத்தினி விரதன் என்பதை நகைப்புக்குரியதாக்குகிறது. ஆரிய தர்மத்தில் கற்பு என்பது ஆண்களின் ஒழுக்கக் கேட்டையும் பெண்கள் மீதான பாலியல் வக்கிரத் தன்மைகளையுமே நியாயப் படுத்தி நிற்கின்றன.

தமிழுலகத்தை எடுத்துக்கொண்டால் பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஆரிய நூல்களில் கூறப்பட்டதைப்போல் பெண்களை விறகுக் கட்டைக்கு ஒப்பாக வர்ணிக்கவில்லை. அதே நேரம் ஆண்களை ஒழுக்கக் கேடர்களாகவும் வர்ணிக்கவில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றன. காதல் சுதந்திரமும் காதலுக்கு அடுத்த களவியலும் மிக அழகாக விளக்கப் பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் மனத்தைப் பறிகொடுத்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்க முன் உறவு கொள்வதை, (Pre-marital sex) இக் காதலும் களவொழுக்கமும் நியாயப் படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் உள்ள களவியலில் திருமணத்திற்கு முந்திய உடலுறவுச் சுதந்திரம் விளக்கப் பட்டிருக்கிறது. திருக்குறளில் உள்ள காமத்துப் பாலில்

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்

என்ற குறள் காதல் சுதந்திரத்தை நியாயப் படுத்துகிறது. அதே காமத்துப் பாலில் உள்ள கற்பியல் தொடர்பான குறட்பாக்கள்; காதல் துணையின் பிரிவால் ஏற்படும் உளம், உடல் சார்ந்த விரகதாபத்தையும் தலைவன் தலைவிக்கிடையே இருக்கும் ஆழமான அன்பையும் விளக்கும் விதமாகவே அமைந்திருக்கின்றனவே தவிர பிறவிப் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தவில்லை. பெண்ணியவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப் படும்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யனப் பெய்யும் மழை

என்ற குறளுக்கு, பரிமேலழகர் போன்றவர்கள் “தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்” என்ற கருத்துப்படி பிற்போக்குத் தன்மையுடன் உரை தீட்டியுள்ளனர். ஆனால் அதன் உண்மைப் பொருள் பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் உரை எழுதியதைப்போல் “தொழு என்ற சொல் பின்பற்றுதல்” என்றும் “பெய்யனப் பெய்யும் மழை என்றால் பெய்த இடத்தில்” என்றும் பொருள்படும் எனவே பெண்ணானவள் மழையைப் போன்றவள். மழை எவ்வாறு பூமியை வளப்படுத்துகிறதோ அவ்வாறு தன் வாழ்க்கைத் துணைவனை வளப்படுத்துபவள் பெண் என்பதே அக்குறளின் பொருள். இங்கே வள்ளுவரும் ஒரு பெண்ணியவாதியாகவே தென்படுகிறார். அடுத்து வள்ளுவர் கூறும் அடக்கம் என்பது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைக்கனம் கொள்வது தவறு என்று சொல்கிறதே தவிர பெண்மீதான சமூக ஒடுக்குமுறையை நியாயப் படுத்திக் கூறவில்லை. வள்ளுவர் ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டும் வலியுறுத்தவில்லை. ‘பிறனில் விழையாமை’ என்ற அதிகாரத்தில் ஆண்களுக்கும் வலியுறுத்துகிறார்.

சங்க இலக்கியங்களில் உள்ள குறுந்தொகை, அகநாநூறு போன்றவற்றிலும் திருமணத்திற்கு முந்திய உறவு பல இடங்களில் கூறப் பட்டுள்ளன. மனத்தால் இணைந்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழும் முறையை (Concubinage) தமிழிலக்கியங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கின்றன. இவற்றை எல்லாம் எண்ணும்போது பண்டைய தமிழ் இனம் எந்தளவிற்கு காதல் சுதந்திரத்துடன் வாழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆண் புலவர்கள் மட்டுமல்ல சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களான ஒளவையார், வெள்ளி வீதியார் போன்றவர்களும் ஆண்களுக்கு நிகராக அரசியல் சமூகக் கருத்துக்களுடன் காதல், களவியல் செய்திகளை எல்லாம் தங்கள் பாடல்களில் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பெண்ணடிமைத்தனமும், கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடைபெற்ற திருமணமுறையும் ஆரியக் கலாச்சாரத்தை ஒட்டியே இருக்கின்றன. சிலப்பதிகாரம் என்னதான் தமிழ்த் தேசியக் காப்பியமாக இருந்தாலும் அது எழுதப்பட்ட காலம் ஆரியப் படையெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த காலமாகையால் ஆரியக் கறை சிலப்பதிகாரத்திலும் ஒட்டிக் கொண்டுவிட்டது. இருந்த போதிலும் தமிழ் இனத்துக்கு உரிய காதலும் வீரமும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. கணவன் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அதற்கு உடந்தையாக இருக்கும் கண்ணகி, புராணப் பெண் கதாபாத்திரங்களான நளாயினி, சீதை போன்றவர்களைப் பிரதிபலித்தாலும், கொற்றவனே ஆனாலும் குற்றமிழைத்தவனை விடேன் என்று கட்டறுத்துக்கொண்டு ஓடிய பெண்மையின் சீற்றமாக மாறும்போது அங்கே தமிழ் இனத்தின் வீரம் அப்பெண்ணின் ஊடக வெளிப்படுகிறது.

காமம் என்பது வள்ளுவரின் காமத்துப்பாலில் சொல்லப் பட்டதைப்போல் உடல் ஒழுக்கத்துடன் கூடிய உயிரியல் தன்மையுடன் பேணப்பட வேண்டுமே தவிர வத்சயானரின் காம சாஸ்திரத்தில் கூறப்பட்டதைப்போல் தறி கெட்ட தன்மையுடன் அல்ல. பெண்களை ஆண்களின் காம இச்சையை தீர்க்கப் பயன்படும் பாலியல் நுகர்வுப் பொருட்களாகச் சித்தரிக்கும் ஆரிய நூல்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். எனவே, கற்பு என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்தும் முறை, வேத கால ஆரிய மரபேயன்றித் தமிழர்களுடையது அல்ல. எந்த ஆரியக் கலாச்சாரம் தமிழர்கள் மத்தியில் பெண்ணடிமைத்தனத்தைப் புகுத்தியதோ அதை தமிழ் ஆண்கள் பிடித்து வைத்துக் கொண்டு பெண்களின் கற்பை எடை போடுகின்றார்கள். ஆண்களின் தொடர்பு இல்லாமல் தவறு நடக்குமா? அப்படி நடந்தால் அதில் தங்களுக்கும் பங்கு உள்ளது என்ற நியாயமான குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பெண்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஆண்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? படுக்கை அறையில் இரத்தக் கறையைத்தேடும் ஆண்களுக்கு, பெண்கள் உடற்பயிற்சி, நீச்சல், கராத்தே போன்றவற்றில் ஈடுபடுவது ஏமாற்றத்தையே தருகிறது. கற்பு உடல் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் அல்லது உள்ளம் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் கற்பு என்பது பாரதி எழுதியைப் போல்

“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”

என்ற நிலைப்பாடே சரியானது,”

பெண்மீதான ஒடுக்குமுறை சமூகத்தின் அனைத்துத் தளங்களில் இருந்தும் அகற்றப்பட்டு, ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும். அதே சமயம் பாலியல் கல்வியும், பாதுகாப்பான உறவுக்கான கருத்தடை முறைகளும் சனத்தொகைக் கட்டுப் பாட்டிற்கும் பாலியல் நோய்களைத் தடுப்பதற்கும் இன்றியமையாதவை. பத்தாம் பசலித்தனமான பல்லவிகளைப் பாடி பிற்போக்குத் தனங்களை விதைத்தால், விதைப்பவர்கள் தங்களைக் கலாச்சாரக் காவலர்கள் என்று தம்பட்டம் அடிக்க உதவுமே தவிர, அதிகரித்து வரும் பால்வினை நோய்களைத் தடுக்க நிச்சயம் உதவப் போவதில்லை.

தமிழ் பண்பாட்டைக் காட்டிப் பெண்கள் மீது மதவாத ஆதிக்கத்தையும் மரபு வழி மடமையையும் திணிப்பதற்கு நமது தமிழ்தாயானவள், பிரம்மா உருவாக்கிய சரஸ்வதியோ, சிவனார் கொண்டையில் செருகிக் கொண்ட கங்கா தேவியோ, ஆதாமின் விலா எலும்பில் இருந்து உருவான ஏவாளோ அல்ல. அவள் எத்தனையோ பண்பாட்டுப் படை எடுப்புக்களைத் தாண்டி மொழி ஆதிக்கங்களை எதிர் கொண்டு நமக்கு முகத்தையும் முகவரியையும் தந்து நாளை முடிசூடும் நன்னாளை எதிர்பார்த்து நிற்பவள்

http://www.webeelam.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.