Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் புதிய விதிகள் நேற்றிரவு முதல் அமுல்

Featured Replies

அவசரகால சட்டம் நீங்கியது பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் புதிய விதிகள் நேற்றிரவு முதல் அமுல்

அவசரகாலச் சட்டம் நேற்று இரவு முதல் நீங்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை நீடிக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த அங்கத்தவர்களை தடுத்துவைத்திருக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விடுத்த அறிவிப்புக்கிணங்க நேற்று நள்ளிரவுடன் அவசரகால விதிகள் நீக்கப்பட்டுள்ளன.

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதால் அச்சட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட ஏனைய ஒழுங்கு விதிகளும் நீக்கப்பட வேண்டும். இதனால், அச்சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ. அமைப்பை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக கருத முடியாது. அதேபோல் உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட வேண்டும்.

ஆனால், உயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருக்கவும் எல்.ரி.ரி.ஈ. மீதான தடையை நீடிக்கவும்; பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிகளை நேற்றிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

இதனால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட போதிலும் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் எவரும் விடுதலை செய்யப்பட முடியாது என அவர் கூறினார்.

அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான இவ்விதிகள் ஒரு தற்காலிக ஏற்பாடு எனவும் அவசரகால விளைவு விதிகள் எனும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்படும்வரை இவ்விதிகள் நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

http://tamilmirror.lk/2009-08-26-06-32-39/27158-2011-08-30-19-51-13.html

அமெரிக்கர்களின் பாராட்டுக்கு கிடைத்த பரிசு.

ஏமாந்த சோணங்கிகள் .

அவசரகால சட்டத்தை நீக்கியது போல இதுவும் அமெரிக்கர்களின் அழுத்தத்தால் கொண்டுவரப்பட்டதோ?

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலச் சட்டம் நேற்று இரவு முதல் நீங்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை நீடிக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த அங்கத்தவர்களை தடுத்துவைத்திருக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டது என்றால் என்ன நீக்கப்பட்டது என்று புரியவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் புலி சந்தேக நபர்கள் அல்லது அவர்கள் புலி சந்தேக நபர் ஆக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மேற்கு நாடுகளுக்கு ஒரு கண் துடைப்புக்காக இச்சட்டம் நீக்கப்பட்டதாக மகிந்த அரசு ஒரு நாடகமாடியுள்ளது.

  • தொடங்கியவர்

"குட்டக்குட்ட குனிபவனும் மடையன். குனிய குனிய குட்டுபவனும் மடையன்"

வரும் ஐ.நா. தொடரிலும் மற்றும் பிளேக்கின் வர இருக்கும் பிரயாணத்தின் போதும் சிங்களம் எதையாவது சாட்டை சொல்லி நியாயம் கற்பிக்கும். ஆனால் இந்த நாடகம் தனது இறுதிக்கட்டத்தை மெல்ல மெல்ல நகருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடரும் :

31 ஆகஸ்ட் 2011

LTTE%20logo%20good_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீங்கிய போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தத் தடையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதற்கு சமாந்திரமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளது.

இதன்படி உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை ஆகியன தொடர்ந்தம் அமுலில் இருக்கும்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்ட நீக்கத்துடன் விடுதலைப் புலிகள் மீதான தடை, உயர்பாதுகாப்பு வலயங்கள் போன்றனவும் வலுவிழப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கும், உயர்பாதுகாப்பு வலயங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை உள்ளடக்கியுள்ளதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதற்கோ அல்லது உயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாமல் ஒழிப்பதற்கோ சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்ட மூலமொன்று அறிமுகப்படுத்தப்படும் வரையில் தற்காலிகமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சரத்துக்கள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவிப்புச் செய்வதற்குச் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதாவது ஆகஸ்ட் மாதம் 06 திகதி இரவோடிரவாக புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பான தகவல் தற்போது வெளிவந்துள்ளன.

இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தலில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

.

1. சிறிலங்காவின் 25 மாவட்டங்களிலும் எந்த நேரத்திலும் முப்படையினரின் பிரசன்னத்தை ஏற்படுத்த முடியும்.

.

2. சுவரொட்டிகள் ஒட்டுதல், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துதல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள்,மாணவர் ஆர்ப்பாட்டங்கள் போன்றனவற்றைக் கட்டுப்படுத்துதல் அவற்றில் ஈடுபடுவோரைக கைது செய்தல் போன்ற அதிகாரங்கள் முப்படையினருக்கு வழங்கப்படுகிறது.

.

3. தேவைப்படும் பட்சத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவும் சந்தேகத்தின் பேரில் நபர்களைக் கைது செய்யவும் முப்படையினரால் முடியும்.

.

குறிப்பிட்ட இந்த மூன்று விடயங்களும் அவசரகாலச் சட்டவிதிகளுக்குள் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அந்தச் சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை மூன்றும் வேறொரு சட்டத்தின் கீழ் மீண்டும் சேர்க்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளமையானது பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

New%20laws.jpg

New emergency law in Srilanka

  • தொடங்கியவர்

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற ஓர் அறிவிப்பு – திஸ்ஸ

சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற ஒரு அறிவிப்பே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான காரணமாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்படி, சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களை ஜனாதிபதி தம்வசம் வைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது, அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவித்துள்ள போதிலும், உண்மையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகாலச் சட்டத்தின் முக்கியமான அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் அமுலிலேயே இருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தின் சரத்துக்கள் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத் துக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதால் இது மேலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. இவையனைத்திற்கும் அரசாங்கம் நிச்சயம் பதில் கூறவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=80896

  • தொடங்கியவர்

அவசரகாலச் சட்டம் பெயரளவில் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டுத் தூதர்களிடம் தெரிவித்தார்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் காவல்துறையினரும், படையினரும் அந்த சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் செயற்படுவதாக அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்தார்.

அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை தீக்குவதாக அறிவித்தமை ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு செய்தி அறிக்கையெனவும், நடைமுறையில் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைகள் தொடருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க தூதுவரை நேற்றிரவும் பிரித்தானிய தூதுவரை இன்று முற்பகலும் சந்தித்து நீண்ட விளக்கமளித்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எமது கொழும்பு செய்தியாளரிடம் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது தமிழ் அரசியல் கைதிகள் மீதான விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீளக்குடியமாத்தப்படவில்லையெனவும், வன்னி பெருநிலப்பரப்பில் மக்களின் விவசாய காணிகள் படைத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் தமிழர்கள் ஓமந்தை சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனை மற்றும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தூதுவர்களிடம் கூறியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9142

1948லிருந்து அவசரகால சட்டம் இருக்கும் போதும் இல்லாத போதும் தமிழர்கள் கொடுமைப்படுத்த பட்டார்கள். இது ஜே வி பிக்கு எதிராகவாக இருக்கலாம், அல்லது புலிகளுக்கெதிராக விருக்கலாம். ஆனால் தமிழர் பக்கம் நிலமை ஒரே மாதிரி. இந்தியா கேட்டு கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தத்தினால் 25 ஆண்டுகளாக எதுவும் நடைபேறவில்லை. தெரிந்து கொண்டுதான் இந்தியாவும் அமெரிக்கவும் அவசரகால சட்டத்தை நீக்க கேட்டார்கள்.

இலங்கையில் அரசியல் வாதிகள் எதையாவது தமிழருகெதிராய் செய்ய விரும்பினால் அதை செய்ய சட்டம் அவர்கள ஒரு போதும் தடுக்கவில்லை. உண்மையில் சட்டம் எதாவது இடக்கு ஏற்படுத்த முயன்றால் அவர்கள் சட்டங்களைத்திருத்தி, தாம் செய்ய விரும்பியதை விட பல பங்கு மோசமாகத்தான் செய்திருக்கிறார்கள். சோல்பரி அரசியல் அமைப்பும் கோடீஸ்வரன் வழக்கும் இதற்கு நல்ல உதாரணம். அதேபோல் அவசர கால சட்ட விலக்குக்கு பின் தமிழர்கள் புதிய சோதனைகளை எதிர்நோக்க தயாராக வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.