Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய தமிழ் அரசியல் தலைமை தாயகத்தில் தேவை

Featured Replies

புதிய தமிழ் அரசியல் தலைமை தாயகத்தில் தேவை

ஈழத் தமிழினத்தின் மீது பற்றுக்கொண்ட புலம்பெயர் சகோதரங்களுக்கு அன்பு வணக்கம். நீண்டகாலமாக கடிதம் எழுதும் அவா. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் நம் விருப்புக்கு தடை விதித்தன. இருந்தும் தற்போதைய சூழ்நிலையில் இக் கடிதத்தை எழுதாமல் விடுவது வரலாற்றுத் தவறாகிவிடும் என்ற அடிப்படையில் கடிதம் எழுதத் துணிந்தோம்.

தமிழினத்தின் இழப்புகள், தோல்விகள், துன்பங்கள் என்ற நெடுந்துயரின் வெறுப்புத் தனங்கள் தமிழ் மக்களின் வாழ்வுக்கே பங்கம் விளைவிப்பதாக இருக்கின்ற இவ்வேளையில், தங்கள் முயற்சிகள் சர்வதேச சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகள், தென் சூடான் எங்கள் மீது காட்டும் கரிசனை என்பன மன ஆறுதலைத் தருவதாக இருக்கின்றது.

நீங்கள் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றீர்கள் என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இருந்தும் உங்கள் முயற்சிகளுக்கு மெளனமாக உரிமை கோரும் தமிழ் அரசியல் தலைமைகளும் இங்கு இருக்கின்றன என்ற செய்தியை நீங்கள் அறியாதிருக்க முடியாது. என்ன செய்வது! திருமண வீட்டில் சமையலில் ஈடுபடுவோர் விழித்து நெருப்புக் காய்ந்து சமைத்து வைக்க, பட்டு வேட்டியோடு வருகின்றவர் சபை வைக்கும் பண்பாட்டை எப்படி இல்லாது செய்ய முடியாதோ? அது போலத்தான் உங்கள் கடும் முயற்சிகளின் விளைவுகளுக்கு இங்கிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோருவதை தடுக்க முடியவில்லை.

பரவாயில்லை. தமிழினத்தின் துயர் அறுக்கும் பணியில், இந்தப் பச்சோந்திகள் மகிழ மரத்திலா, அரச மரத்திலா சீவியம் நடத்துகின்றன என்பதை ஆராய்வது நேர விரயம் என்பதால் அதனை அப்படியே விட்டு விடலாம். ஆனால் ஒரு விடயத்தில் நீங்கள் விடும் மகா தவறு பற்றி பிரஸ்தாபிக்கவே இக்கடிதத்தை வரைய முற்பட்டோம். சர்வதேச ரீதியில் நீங்கள் குறித்த இலக்குடன் செயற்படும் நிலையில், இலங்கையில் தமிழ்த் தாயகத்தில் பலமான அரசியல் தலைமை இருக்க வேண்டும் என்ற நினைப்பை கொண்டிராமை அல்லது அத்தகையதொரு பலமான அரசியல் தலைமையை உருவாக்க நினைக்காமை மிகப் பெரும் தவறு எனலாம். நம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் படுமோசம். அவை வேறோர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இயங்குகின்றன.

தேர்தல் வெற்றி என்பது, மாற்றுத் தெரிவு இல்லாத நிலையில் ஏற்பட்டதொன்றாகும். ஆனால் தமிழ் மக்களின் இன்றைய பரிதாப நிலை பொருத்தமற்ற அரசியல் தலைமை என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அந்த அமைப்பில் இருக்கக்கூடிய ஒரு சிலர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள் ஆயினும், தனித் தவில் எடுபடாதல்லவா? எனவே மிக விரைவில் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக விசு வாசமுள்ள தமிழ் அரசியல் தலைமையை உருவாக்க வேண்டும். இந்த முக்கியமான பணியில் உங்களுக்கும் காத்திரமான பங்குண்டு. நீங்களும் இங்குள்ள தமிழ் அரசியல் தலைமையும் ஒரு கோட்டில் பயணிக்க வேண்டும். அதுவே தமிழினத்தின் அமைதியான வாழ்வுக்கு வழிசமைக்கும்.

http://www.valampuri...ws.php?ID=22643

Edited by akootha

என்ன வலம்புரி மாமாவின்ரை மலை வயிறு நொந்து சுன்டெலியை பெத்தால் பரவாயில்லை, இது கொடுக்கன் குட்டியாய் எல்லோ பெத்து போட்டார். வயிறு நோ மாறக்குமுதலிலை கலைச்சு கலைச்சு கொட்ட போகுது.

Edited by மல்லையூரான்

கையெழுத்தில்லாத கடிதம். மொட்டைக் கடிதம் மாதிரியல்லே கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்தில்லாத கடிதம். மொட்டைக் கடிதம் மாதிரியல்லே கிடக்கு.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=22643

  • தொடங்கியவர்

கையெழுத்தில்லாத கடிதம். மொட்டைக் கடிதம் மாதிரியல்லே கிடக்கு.

இது ஆசிரியர் தலையங்கம். அத்துடன் தாயகத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் தலையங்கம்.

அங்கிருந்தே புலம்பெயர் மக்களை கேட்கிறார்கள் வேறு ஒரு அரசியல் தலைமையை!

புலம் பெயர் மக்களால் வேறெரு அரசியல் தலைமையை தாயகத்தில் உருவாக்க முடியுமா? அப்படி உருவாகும் தலைமைகளால் எவ்வளவு காலத்திற்குத் தாக்குப்பிடிக்கமுடியும் என்று என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.