Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்த, சவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்குகள்

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த, சவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்குகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராகவும் இரண்டு வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை தொடங்குவதற்கு முன்னர்,; மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்திலுள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முதலாவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவி சார்பிலும், சுதந்திரபுரத்தில் படையினரின் ஆட்டிலறித் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மகனான சீதாராம் சிவம் என்பவரின் சார்பிலும் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது வழக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எதிராக, அமெரிக்கப் பல்கலைக்கழக வோசிங்டன் சட்டக் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மனுதாரராகவும் வத்சலாதேவி ரமேஸ் தான் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இரண்டு வழக்குகளுமே போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை அடிப்படையாகக் கொண்டவை தான்.

அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால், குடியியல் வழக்குகளாக- நட்டஈடு கோரி இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்குகளின் அடிப்படை நோக்கம் நட்டஈட்டைப் பெறுவதல்ல, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதே என்று கருதப்படுகிறது.

இந்த வழக்குகளின் அடிப்படை நோக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், தனக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதே என்று மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார் .

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தலைவலியை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே இது அமைந்திருக்கும். .

ஏற்கனவே, கடந்த ஆண்டு ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றிருந்த போதும், போர்க்குற்ற வழக்கு பதிவாகும் நிலை உருவானதால் அவசரமாக நாடு திரும்பும் நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனால் பிரித்தானியாவில் அவரது நிலைக்கும் அமெரிக்காவில் அவரது நிலைக்கும் வேறுபாடுகள் இருந்தன. பிரித்தானியாவுக்கு அவர் சென்றது தனிப்பட்ட பயணமாகவே.

அங்கு அரசுமுறைப் பாதுகாப்பையோ, இராஜதந்திர சிறப்புரிமையையோ அங்கு எதிர்பார்க்க முடியாத நிலை இருந்தது. அதைவிட அங்கு, வெளிநாட்டில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யும் வசதியும் இருந்தது.

ஆனால் அமெரிக்காவில் இவ்வாறான போர்க்குற்ற வழக்கை தாக்கல் செய்யும் வாய்ப்பு இல்லை. அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளாது போனாலும், நியூயோர்க் நகரில் மட்டும் ஐ.நாவின் இராஜதந்திரப் பாதுகாப்பு இருந்தது.

ஐ.நா தலைமையகம் அங்கிருப்பதால், அங்கு வரும் தலைவர்களுக்கும், அங்குள்ள தூதுவர்களுக்கும் அத்தகைய இராஜதந்திரப் பாதுகாப்பு உள்ளது. நியுயோர்க் நகரிலுள்ள ஒரு வெளிநாட்டு இராஜதந்திரி மீது குற்றவியல் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது. அவரைக் கைது செய்யவோ தடுத்து வைத்து விசாரிக்கவோ முடியாது.அப்படிப்பட்ட நிலையில் ஒரு நாட்டின் அரசுத் தலைவரை அவ்வளவு இலகுவாக பிடித்து உள்ளே போட்டு விட முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியுயோர்க்கில் இராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதால் அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவோ அல்லது பயந்து ஓடவோ வேண்டிய நிலை இருக்கவில்லை. ஆனால் இந்த வழக்கு அவருக்கு ஒருவித தலையிடியைக் கொடுக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இலங்கை அரசு பல்வேறு தூதுக்குழுக்களை அனுப்பியும்- ஓடி ஓடி அலைந்தும் செய்த பிரசாரங்கள் அனைத்தையும், இந்த ஒரு வழக்கு சர்வதேச தலைவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த வழக்குகளின் முக்கியமான அடிப்படை நோக்கங்களில் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கடியைக் கொடுப்பது தான்.

ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தமது உறவினர்களைப் பறிகொடுத்த மூவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அதன் அழைப்பாணை ஏற்கனவே அலரி மாளிகைக்குப் போய் அங்குமிங்கும் அலைக்கப்பட்டு கடைசியில் நீதி அமைச்சின் செயலரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் இன்னமும் பதில் அளிக்கப்படவில்லை. பதில் அளிக்கின்ற திட்டமும் அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தநிலையில் இரண்டாவது நீதிமன்ற அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்கொண்டுள்ளார். இதற்கும் அவர் பதில் அளிக்கும் சாத்தியங்கள் குறித்து சந்தேகமாகவே உள்ளது.

இதற்கிடையே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிரான இதுபோன்ற வழக்கும் அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்த வழக்கைத் தான் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பையும் தேவையான உதவிகளையும் வழங்கும் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் கூறியுள்ளார். ஆனால் இன்னமும் இந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து அரசாங்கம் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை- கலந்துரையாடல்கள் சட்டஆலோசனைகள் தொடர்கின்றன.

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஐ.நாவுக்கான தூதரகத்தில் பணியாற்ற வேண்டியுள்ளது. அவருக்கு நியுயோர்க்கில் இராஜதந்திரப் பாதுகாப்பு உள்ளது. அதனால் அழைப்பாணை அவரது தனிப்பட்ட வசிப்பிடத்துக்கே அனுப்பப்பட்டுள்ளது. அவர செயலகத்துக்கு அழைப்பாணை அனுப்ப முடியாது. அப்படி அனுப்பினாலும் அது செல்லுபடியாகமாட்டாது. இந்தச் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்தே அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க்கில் உள்ள ஐ.நா இராஜதந்திரி ஒருவருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தான் தாக்கல் செய்ய முடியாதே தவிர, அவருக்கு எதிராக குடியியல் வழக்கை தாக்கல் செய்யலாம். மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா 21 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

இதற்கு அவர் பதிலளிக்கப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வியன்னா உடன்படிக்கையின் படி அவருக்கு இராஜதந்திரப் பாதுகாப்பு உள்ளதாகவும், அது அவரைக் பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இதுகுறித்து ஜனாதிபதி பான் கீ மூனுடன் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பார்க்கும் போது, இராஜதந்திரச் சலுகையைப் பயன்படுத்தி சவீந்திர சில்வாவைப் பாதுகாக்கவே அரசாங்கம் முனைவதாகத் தெரிகிறது.

http://tamilmirror.lk/2010-08-31-14-50-37/28728-2011-10-01-14-53-28.html

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாவது இவங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்க்கும் படி வைக்க வேண்டும் அதுவரைக்கு தமிழர்கள் தொடர்ந்தும் ஜனநாயகவழியில் போராடவேண்டும்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வாவின் வழக்கு விடயம் தொடர்பில் கருத்து கூற அமெரிக்கா மறுப்பு _ வீரகேசரி இணையம் 10/1/2011 11:11:32 AM Share u.s.flag300_121.jpg

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர விதிவிடப் பிரதி நிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கருத்துத் தெரிவிக்க அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மறுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சவேந்திர சில்வா மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இவ்விடயத்தில் சட்ட சிக்கல் காணப்படுவதால் அது குறித்து கருத்துக் கூற முடியாது என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நியூயோர்க்கில் கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான ரமேஷின் மனைவி புலி உறுப்பினர் எனவும் தீவிரவாத இயக்க உறுப்பினர் ஒருவரே தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வழக்குத் தாக்கல் செய்த ரமேஷின் மனைவி 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று தற்போது தென்னாபிரிக்காவில் மறைந்துள்ளதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டார். இலங்கையின் கீர்த்தியை பாதுகாக்கவும் இராணுவத்தினரின் புகழை தக்க வைக்கவும் உலகில் எந்த ஒரு நீதிமன்றிற்கும் செல்லத் தயார் என்றார். _

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.