Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ப்பெண் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியநுக்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ப்பெண் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியநுக்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது.

Saturday, 01 October 2011 08:54

அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் சட்ட வல்லுனர்கள் அமைப்பும் பெண் சட்ட வல்லுநர்கள் சங்கமும் இணைந்து வழங்கும் வருடத்தின் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியன் என்ற தமிழர்க்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இவர் 2009 ஆம் ஆண்டில் சிறந்த சட்ட சேவைக்கான ஜஸ்டிஸ் விருது வென்ற முதல் தமிழ் பெண் எனும் பெருமையையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும் இலங்கையிலும் பத்திரிகையாளராகவும் ஊடகத்துறையில் ஆய்வாளராகவும் சென்னை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர் சந்திரிகா சுப்ரமணியன், தற்போது சிட்னியின் பிளக்டவுன் சில்வெஸ்ட் பல்லின பல் கலாசார நிலையத்தில் இலவச சட்ட ஆலோசனை சேவையை வழங்குகிறார்.

இதுவரை பத்துக்கு மேற்பட்ட நூல்களையும் அவர் எழுதியுள்ளர். 1989 ஆம் ஆண்டு இவர் எழுதிய மக்கள் தொடர்பு சாதனமும் மகளிர் என்ற நூலுக்கு தமிழக அரசின் விருதுவழங்கப்பட்டது. 1997 இல் சிட்னிக்குப் புலம்பெயர்ந்த பின் சமூகத்தில் பெண் வழக்குரைஞர் தேவையை உணர்ந்து சட்டம் பயின்றார்.

தற்போது மரமற்றாவில் சரக்ஸஸ் லோயர்ஸ் அன்ட் பாரிஸ்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரிகளில் சட்ட ஆரியராகவும் பணிபுரியும் இவர், தனது சோமா இலவச சட்ட சேவை மூலம் மேற்கு சிட்னிவாழ் புலம்பெயர்ந்த மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

பெண்களுக்கு சட்டத்துறையின் மூலம் சிறந்த சேவை, பயிற்சி மற்றும் உதவிகளை வழங்கும் தனித்திறமைக்காக மேற்படி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

http://www.varudal.com/index.php?option=com_content&view=article&id=2247:2011-10-01-09-00-00&catid=13:2009-12-24-18-21-58

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ்ப்பெண் சட்டத்தரணி சந்திரிகா சுப்ரமணியத்தின் சேவை தொடர வாழ்த்துகள். . . :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி இணைப்பிற்கு, வாழ்த்துகள் சந்திரிகா சுப்ரமணியத்தின் சேவை தொடர

  • கருத்துக்கள உறவுகள்

இவரையும் இவரது கணவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும்......

வாழ்த்துக்ள் Aunty

இலங்கை வீரகேசரி பத்திரிகையில் இவர் கடமையாற்றியவர்............

  • கருத்துக்கள உறவுகள்

இவரையும் இவரது கணவரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும்......

வாழ்த்துக்ள் Aunty

இலங்கை வீரகேசரி பத்திரிகையில் இவர் கடமையாற்றியவர்............

அப்ப இவ எங்கன்ட ஆளு...வாழ்த்துக்கள் ....இந்தியா உப கண்டம் என்று போட்டிருக்கு...சரி சரி ..

  • கருத்துக்கள உறவுகள்

விருது பெற்ற சந்திரிகா சுப்ரமணியநுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

வாழ்த்துக்கள். உங்களது பணி சட்டப்பசியினால் தவிக்கும் தமிழினத்திற்கு சேரவேண்டும் என்பதே எமது ஆவல் தாயே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.