Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சமூகம் தொடர்பில் தமிழ் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன

Featured Replies

தமிழ் சமூகம் தொடர்பில் தமிழ் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன - சுதந்திர ஊடக்குரல் அமைப்பு

யாழ்ப்பாணத் தமிழ் சமூகம் தொடர்பில் தழிம் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா போன்ற இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன: இவை தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஊடகவியலாளர்களின் அமைப்பான சுதந்திர ஊடகக் குரல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு :

புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழர்களால் இயக்கப்படும் சில தமிழ் இணையத்தளங்களில் தமிழ் சமூகம் தொடர்பாகவும், தமிழர் கலாசாரம், வாழ்வியல், விழுமியங்கள் தொடர்பாகவும் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுவரும் பிறழ்வான செய்திகள் தொடர்பாக மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சுதந்திர ஊடகக் குரல் கருதுகிறது.

குறிப்பாக, tamilcnn.com, newjaffna.com உள்ளிட்ட சில இணையத்தளங்கள், யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், கல்வியலாளர்கள், சமூகப் பெரியோர் மற்றும் அதிகாரிகள் தொடர்பாக பல பிறழ்வான செய்திகளை வெளியிட்டு, தமிழ்ச் சமூகம் பற்றிய தவறான விம்பத்தை புலம்பெயர் தமிழர்களுக்கும், வெளியுலகுக்கும் காட்ட முனைகின்றன.

செய்திகளை வெளியிடுவது என்ற பெயரில் தனிநபர்களுக்கு எதிரான கீழ்த்தரமான, வக்கிர எண்ணம் கொண்ட தாக்குதல்களை இந்த இணையத்தளங்கள் மேற்கொண்டு வருகின்றன. இப்படியான செய்திகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றன, சம்பந்தப்பட்டவர்களுடைய தனிநபர் உரிமையைப் பாதிப்பனவாக, அவர்களுடைய சுயமரியாதைக்கு இழிவேற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டவையாக அமைந்துள்ளன. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகளை மேலாக மதிக்கும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து நடத்தப்படும் இந்த இணையத்தளங்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கவலை தரும் விடயமாக இருக்கிறது. இவ்வாறான செய்தியறிக்கையிடல்களில், கூடுதலாகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஊடக வன்முறைப் போக்கையும் அவதானிக்க முடிகிறது.

இத்தகைய இணையத்தளங்களில் வரும் செய்திகள் தரவு மூலங்கள் அற்ற, ஊடக விழுமியமற்ற அறிக்கையிடல் முறையைப் பின்பற்றுகின்றன. இது விடயமாக தமிழ் ஊடகங்களும், தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர் மக்களும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியம் என்று சுதந்திர ஊடகக் குரல் கருதுகிறது.

இந்த பிறழ்வான ஊடகப் போக்குத் தொடர்பாக, காத்திரமான, முன்னெச்சரிக்கை மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது, ஊடகவியலாளர்களதும், ஊடக நிறுவனங்களினதும், ஒட்டு மொத்த சமூகத்தினதும் முக்கிய பொறுப்பாக இருக்கிறது. எனவே, இத்தகைய பிறழ்வுமிக்க ஊடகச் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மேற்படி தமிழ் இணைய ஊடகங்களை சுதந்திர ஊடகக் குரல் விநயமாகக் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், ஏற்கனவே தரவேற்றம் செய்யப்பட்டுள்ள இவ்வாறான பிறழ்வு மிக்க, ஊடக விழுமியங்களுக்கு முரணான செய்திகள் மற்றும் உள்ளீடுகளை நீக்கி, ஊடகங்கள் சார்பாகவும், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகம் சார்பாகவும் விடுக்கப்படும் இந்தக் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

சில தமிழ் இணைய ஊடகங்களின் இத்தகைய ஊடகச் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் ஊடகக் குரல் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்பதையும், இவ்வாறான போக்கை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என்பதையும் இத்தால் அறியத்தருகிறோம் என்றுள்ளது.

http://184.107.230.170/News_More.php?id=75835600012691687

குப்பைகளை மட்டும் வாரி வழங்கும் இரண்டு ஊடகங்கள் அவை.

இது அந்த நிறுவன பொறுப்பாளர்கள், ஊடகவியலாளர்களின் கீழ்த்தர மனநிலையைக் காட்டுகிறது.

சுதந்திர ஊடக்குரல் அமைப்பு கண்டித்து அறிக்கை

யாழ்ப்பாணத் தமிழ் சமூகம் தொடர்பில் தழிம் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா போன்ற இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன: இவை தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஊடகவியலாளர்களின் அமைப்பான சுதந்திர ஊடகக் குரல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு :

புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழர்களால் இயக்கப்படும் சில தமிழ் இணையத்தளங்களில் தமிழ் சமூகம் தொடர்பாகவும், தமிழர் கலாசாரம், வாழ்வியல், விழுமியங்கள் தொடர்பாகவும் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுவரும் பிறழ்வான செய்திகள் தொடர்பாக மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சுதந்திர ஊடகக் குரல் கருதுகிறது.

குறிப்பாக, tamilcnn.com, newjaffna.com உள்ளிட்ட சில இணையத்தளங்கள், யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், கல்வியலாளர்கள், சமூகப் பெரியோர் மற்றும் அதிகாரிகள் தொடர்பாக பல பிறழ்வான செய்திகளை வெளியிட்டு, தமிழ்ச் சமூகம் பற்றிய தவறான விம்பத்தை புலம்பெயர் தமிழர்களுக்கும், வெளியுலகுக்கும் காட்ட முனைகின்றன.

செய்திகளை வெளியிடுவது என்ற பெயரில் தனிநபர்களுக்கு எதிரான கீழ்த்தரமான, வக்கிர எண்ணம் கொண்ட தாக்குதல்களை இந்த இணையத்தளங்கள் மேற்கொண்டு வருகின்றன. இப்படியான செய்திகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றன, சம்பந்தப்பட்டவர்களுடைய தனிநபர் உரிமையைப் பாதிப்பனவாக, அவர்களுடைய சுயமரியாதைக்கு இழிவேற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டவையாக அமைந்துள்ளன. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகளை மேலாக மதிக்கும் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து நடத்தப்படும் இந்த இணையத்தளங்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கவலை தரும் விடயமாக இருக்கிறது. இவ்வாறான செய்தியறிக்கையிடல்களில், கூடுதலாகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஊடக வன்முறைப் போக்கையும் அவதானிக்க முடிகிறது.

இத்தகைய இணையத்தளங்களில் வரும் செய்திகள் தரவு மூலங்கள் அற்ற, ஊடக விழுமியமற்ற அறிக்கையிடல் முறையைப் பின்பற்றுகின்றன. இது விடயமாக தமிழ் ஊடகங்களும், தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர் மக்களும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியம் என்று சுதந்திர ஊடகக் குரல் கருதுகிறது.

இந்த பிறழ்வான ஊடகப் போக்குத் தொடர்பாக, காத்திரமான, முன்னெச்சரிக்கை மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது, ஊடகவியலாளர்களதும், ஊடக நிறுவனங்களினதும், ஒட்டு மொத்த சமூகத்தினதும் முக்கிய பொறுப்பாக இருக்கிறது. எனவே, இத்தகைய பிறழ்வுமிக்க ஊடகச் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மேற்படி தமிழ் இணைய ஊடகங்களை சுதந்திர ஊடகக் குரல் விநயமாகக் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், ஏற்கனவே தரவேற்றம் செய்யப்பட்டுள்ள இவ்வாறான பிறழ்வு மிக்க, ஊடக விழுமியங்களுக்கு முரணான செய்திகள் மற்றும் உள்ளீடுகளை நீக்கி, ஊடகங்கள் சார்பாகவும், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகம் சார்பாகவும் விடுக்கப்படும் இந்தக் கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

சில தமிழ் இணைய ஊடகங்களின் இத்தகைய ஊடகச் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் ஊடகக் குரல் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்பதையும், இவ்வாறான போக்கை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என்பதையும் இத்தால் அறியத்தருகிறோம் என்றுள்ளது.

uthayan

  • 5 months later...

ஆபாச‌ காணொளிகள், ஆபாச விளம்பர இணைப்புக்கள் தமிழ் ஈ என் என் நெட்டில் உள்ளது. ஒன்றுடன் ஒன்று நன்றாக பின்னப்பட்ட வலையமைப்பாக இந்த வலைத்தளங்கள் தோன்றுகின்றன. தமது யூடியூப் சனலிலும் ஆபாச காணொளியை தரவேற்றம் செய்துள்ளார்கள். ஊடக சுதந்திரம் எனும்வகையில் பார்க்கும்போது இவைபற்றி கருத்துக்கூற முடியவில்லை. இணைய உலகில் ஒவ்வொருவரும் தமது அறிவு, வாய்ப்புக்கள், வலையமைப்புக்கள், வசதிகளை பொறுத்து பணம் சம்பாதிக்கவும் அல்லது தம்மை நிலைநிறுத்திக்கொள்ளவும் பார்க்கின்றார்கள். தவிர, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆதரவு அல்லது பின்னணியும் காணப்படலாம். நியூஜவ்னாவை மேலோட்டமாக பார்க்கும்போது உடனடியாக யாழ்பாணத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளை வெளிஉலகிற்கு தெரியும்வகையில் யூடியூப்பில் தரவேற்றம்செய்து காண்பிக்கின்றார்கள். இளங்கன்று பயமறியாது. காலஓட்டத்தில் பிரச்சனைகள், விபரீதங்கள் வரலாம், வராமலும் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வணக்கம் கலைஞன். நன்றி மீள் வருகைக்கும் நேரத்திற்கும் கருத்துக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆபாச‌ காணொளிகள், ஆபாச விளம்பர இணைப்புக்கள் தமிழ் ஈ என் என் நெட்டில் உள்ளது. ஒன்றுடன் ஒன்று நன்றாக பின்னப்பட்ட வலையமைப்பாக இந்த வலைத்தளங்கள் தோன்றுகின்றன. தமது யூடியூப் சனலிலும் ஆபாச காணொளியை தரவேற்றம் செய்துள்ளார்கள். ஊடக சுதந்திரம் எனும்வகையில் பார்க்கும்போது இவைபற்றி கருத்துக்கூற முடியவில்லை. இணைய உலகில் ஒவ்வொருவரும் தமது அறிவு, வாய்ப்புக்கள், வலையமைப்புக்கள், வசதிகளை பொறுத்து பணம் சம்பாதிக்கவும் அல்லது தம்மை நிலைநிறுத்திக்கொள்ளவும் பார்க்கின்றார்கள். தவிர, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆதரவு அல்லது பின்னணியும் காணப்படலாம். நியூஜவ்னாவை மேலோட்டமாக பார்க்கும்போது உடனடியாக யாழ்பாணத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளை வெளிஉலகிற்கு தெரியும்வகையில் யூடியூப்பில் தரவேற்றம்செய்து காண்பிக்கின்றார்கள். இளங்கன்று பயமறியாது. காலஓட்டத்தில் பிரச்சனைகள், விபரீதங்கள் வரலாம், வராமலும் போகலாம்.

என்ரை ஈமெயிலுக்கு... இப்பிடி டெய்லி நியூஸ்வரும் என்னெண்டு என்ரை ஈமெயிலை களவெடுத்தாங்கள் எண்டு தெரியேல்லை...நான் அதுக்கை போறதுமில்லை...பாக்கிறதுமில்லை

என்ரை ஈமெயிலுக்கு... இப்பிடி டெய்லி நியூஸ்வரும் என்னெண்டு என்ரை ஈமெயிலை களவெடுத்தாங்கள் எண்டு தெரியேல்லை...நான் அதுக்கை போறதுமில்லை...பாக்கிறதுமில்லை

நம்புறம்.

என்ரை ஈமெயிலுக்கு... இப்பிடி டெய்லி நியூஸ்வரும் என்னெண்டு என்ரை ஈமெயிலை களவெடுத்தாங்கள் எண்டு தெரியேல்லை...நான் அதுக்கை போறதுமில்லை...பாக்கிறதுமில்லை

யாழ்நாற்சந்தியில் அதை கொத்தி இருக்கலாம். யாழ்கருத்துக்களத்திலும் இவர்கள் இருக்கின்றார்கள்தானே, எனவே அதை அங்கு கண்டிருப்பார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.