Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு கவிதை அழுகின்றது.... :(

Featured Replies

  • தொடங்கியவர்

கவிதை...காதல் வலி பொல்லாதது...நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்..உங்கள் வயதில்தான் நான் இருக்கிறேன்...உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன்..அந்த இழப்பிலும் அருமையான கவிதை பிறந்திருக்குப்பாருங்கள்.....சோகமும் சுகமானது பின்னாற்களிள் இருந்து நினைத்துப்பார்க்கும்போது...வாழ்க்கை அதன் எல்லாக்கட்டங்களிலும் அழகானது...இப்பொழுது புரிவதில்லை..பின்னாற்களில் தனிமையில் நினைத்துப்பார்க்கும்போதுதான் புரியும்...

சுபேஸ்! நீங்கள் எனக்கு ஒரு முக்கியமான விசயத்தினை ஞாபகப்படுத்தி இருக்கின்றீர்கள்!

வாழ்க்கை அதன் எல்லாக்கட்டங்களிலும் அழகானது...இப்பொழுது புரிவதில்லை..பின்னாற்களில் தனிமையில் நினைத்துப்பார்க்கும்போதுதான் புரியும்...!!

உண்மை... நூற்றுக்கு நூறு உண்மை!

தங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி தோழா! :)

  • தொடங்கியவர்

கவிதை முதல் பச்சைப்புள்ளியைப்போட்டு விட்டு இன்னும் போடுவதற்கு இடமில்லாமல் நகர்ந்து விட்டேன்...... கவிதையின் கவிதையை மௌனமாய் ரசிக்கிறேன் என்பதை மட்டுந்தான் சொல்ல முடியும்...... வேறு வார்த்தைகளைக் கொட்டி என் ரசிப்பின் மானசீகத்தை கெடுக்க விரும்பவில்லை .... :):wub:

சஹாரா அக்கா! ஒரு கவிதையை எழுதுபவருக்கும் இன்னொரு கவிதையையும் நிச்சயமாக .......ரசிக்கவோ இல்லை விமர்சிக்கவோ தெரிந்திருக்க வேண்டும்! தங்களின் ரசனைகளை தொட்டதில் கவிதைக்கு மகிழ்ச்சியே! :)

சில சமயங்களில் உண்மையான மனநிலைகள் யாதார்த்தமான

வரிகளாய் கற்பனைகளுடன் புணர்ந்து கவிதையாய் வரும்போது .... இரசிக்கக் கூடியதாய் அமைகின்றது! தங்களின் கவிதைகளிலும் அதைப் பார்க்கின்றேன்!

மெளனங்கள்... இங்கு வேண்டாமே! :)

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தோல்வியா? :(

இதுக்குத்தான் வலையை பரவலா வீச வேணும்னு சொல்றது..! :lol:

கவிதை முதல் பச்சைப்புள்ளியைப்போட்டு விட்டு இன்னும் போடுவதற்கு இடமில்லாமல் நகர்ந்து விட்டேன்...... கவிதையின் கவிதையை மௌனமாய் ரசிக்கிறேன் என்பதை மட்டுந்தான் சொல்ல முடியும்...... வேறு வார்த்தைகளைக் கொட்டி என் ரசிப்பின் மானசீகத்தை கெடுக்க விரும்பவில்லை .... :):wub:

ஒழுங்கா வாசிக்கேல்லை எண்டு சொல்லுங்கோ.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சஹாரா அக்கா! ஒரு கவிதையை எழுதுபவருக்கும் இன்னொரு கவிதையையும் நிச்சயமாக .......ரசிக்கவோ இல்லை விமர்சிக்கவோ தெரிந்திருக்க வேண்டும்! தங்களின் ரசனைகளை தொட்டதில் கவிதைக்கு மகிழ்ச்சியே! :)

சில சமயங்களில் உண்மையான மனநிலைகள் யாதார்த்தமான

வரிகளாய் கற்பனைகளுடன் புணர்ந்து கவிதையாய் வரும்போது .... இரசிக்கக் கூடியதாய் அமைகின்றது! தங்களின் கவிதைகளிலும் அதைப் பார்க்கின்றேன்!

மெளனங்கள்... இங்கு வேண்டாமே! :)

சரி கவிதை உங்களுடைய மனநிலையை இக்கவிதையின் வடிவில் என்னால் காணமுடிகிறது.

ஒன்று சொல்லட்டுமா..... சோகங்கள் வருவது புடம்போடுவதற்கே... உங்கள் நேசிப்பின் நிலாவரையை உ;ஙகள் துணைக்கு எடுத்தியம்புவதற்குக்கூட கவிதை பயன்படும். இந்தக்கவிதையை வாசிக்கும்போது யார் அந்த முட்டாள் இந்தக்கவிஞனின் மென்மையைப் புரிந்து கொள்ளமுடியாமல் அல்லது முயற்சிக்காமல் இருக்கிறார் என்றுதான்தோன்றுகிறது. முன்னர் நான் மௌனமாக ரசிக்கிறேன் என்று பதிவிட்டேன் உங்களை கவிஞனாகப்பார்த்தே உங்கள் புனைவின் தன்மையை ரசித்தேன். இப்போதுதான் கவனித்தேன் நீங்கள் கவிதைக்குமேலே குறிப்பிட்ட சில வரிகளை.... மன்னிக்கவும் உங்கள் சோகத்தை ரசிக்கிறேன் என்று பதிவிட்டதற்கு.

  • தொடங்கியவர்

காதல் தோல்வியா? :(

இதுக்குத்தான் வலையை பரவலா வீச வேணும்னு சொல்றது..! :lol:

காதலுக்கு ஏது தோல்வி!?

என்றைக்கு நம் அன்பு இல்லாமல் போகுதோ.... அன்றுதான் அது தோற்றுப்போகும்! :unsure:

அண்ணை........ ஒற்றைத் தூண்டிலில் மாட்டின மீனல்லோ நான்...........!!! :lol:

  • தொடங்கியவர்

சரி கவிதை உங்களுடைய மனநிலையை இக்கவிதையின் வடிவில் என்னால் காணமுடிகிறது.

ஒன்று சொல்லட்டுமா..... சோகங்கள் வருவது புடம்போடுவதற்கே... உங்கள் நேசிப்பின் நிலாவரையை உ;ஙகள் துணைக்கு எடுத்தியம்புவதற்குக்கூட கவிதை பயன்படும். இந்தக்கவிதையை வாசிக்கும்போது யார் அந்த முட்டாள் இந்தக்கவிஞனின் மென்மையைப் புரிந்து கொள்ளமுடியாமல் அல்லது முயற்சிக்காமல் இருக்கிறார் என்றுதான்தோன்றுகிறது. முன்னர் நான் மௌனமாக ரசிக்கிறேன் என்று பதிவிட்டேன் உங்களை கவிஞனாகப்பார்த்தே உங்கள் புனைவின் தன்மையை ரசித்தேன். இப்போதுதான் கவனித்தேன் நீங்கள் கவிதைக்குமேலே குறிப்பிட்ட சில வரிகளை.... மன்னிக்கவும் உங்கள் சோகத்தை ரசிக்கிறேன் என்று பதிவிட்டதற்கு.

பரவாயில்லை அக்கா! :)

நாம் ரொம்பவும் நேசிக்கும் ஒருவரின் சில சின்ன விடயங்கள் கூட மனதளவில் பெரும் பாதிப்பினை உண்டு பண்ணிவிடும்! விட்டுக்கொடுப்புக்கள்... புரிந்துணர்வுகள் இருந்தால் மீளலாம்! அந்த வகையில்.... நான் மீண்டு வந்திருக்கின்றேன்!

"நாங்களும் காதலும்" நலமாக உள்ளதில் மகிழ்ச்சி! :)

பெரும்பாலும் நான் என் மனநிலைகளையே கவிதையாகக் கொண்டு வருபவன்.

விரைவில் சந்தோசமான கவிதையோடு வருகின்றேன்! :):wub:

Edited by கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை

உங்கள் காதல் வலியால் கிறுக்கப்பட்ட வரிகள் என் இதயத்தையும் கீறி என் கண்களையும் ஈரமாக்கிவிட்டது. காதல் பெரும்பாலானவர்களின் வாழ்வில் இளமைக்காலத்தில் வரும் ஓர் உணர்வு, அது தென்றலாய் வந்து வருடிச் செல்லுமோ அல்லது புயலாய் வந்து அடித்துச் செல்லுமோ என்று ஒருவருமே சொல்லமுடியாது.

ஆனால் ஒன்றுமட்டும் உங்களுக்கு சொல்கிறேன், இந்தப் புயலில் அடிபட்டுச்சென்றவராய் வாழ்க்கையில் தோல்விகண்டவருக்கான உதாரணமாக இராமல் இந்தப் புயலில் எதிர் நீச்சல் போட்டு வென்ற ஒருவராயாய் இருங்கள், உங்களின் அந்த வீரமே உங்களை விரும்பும் இன்னுமொரு காதல் தேவதையை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கலாம்.

இந்த முதற்காதல் எனும் அணுசக்தி உங்கள் இதயத்தின் ஓர் மூலையில் இருந்துகொண்டு உங்கள் பல இயக்கங்களுக்கு..... உதாரணம் உங்களின் கவிதை வரிகளைத் தந்தது போல.... உந்துசக்தியாக இருக்கும் என்பதே உண்மை.

எமது தாய் நாட்டில் நிகழ்ந்த தற்கொடைகளை நினையுங்கள்... தற்கொலையை மட்டும் நினைக்காதீர்கள்....

இளங்கவி

ரொம்ப அழாதீங்க கவிதையே

பிராணவாயு தீர்ந்துபோன வளிமண்டலத்தில்

ஒட்சிசன் கொடுக்கப் பலர்

  • தொடங்கியவர்

கவிதை

உங்கள் காதல் வலியால் கிறுக்கப்பட்ட வரிகள் என் இதயத்தையும் கீறி என் கண்களையும் ஈரமாக்கிவிட்டது. காதல் பெரும்பாலானவர்களின் வாழ்வில் இளமைக்காலத்தில் வரும் ஓர் உணர்வு, அது தென்றலாய் வந்து வருடிச் செல்லுமோ அல்லது புயலாய் வந்து அடித்துச் செல்லுமோ என்று ஒருவருமே சொல்லமுடியாது.

ஆனால் ஒன்றுமட்டும் உங்களுக்கு சொல்கிறேன், இந்தப் புயலில் அடிபட்டுச்சென்றவராய் வாழ்க்கையில் தோல்விகண்டவருக்கான உதாரணமாக இராமல் இந்தப் புயலில் எதிர் நீச்சல் போட்டு வென்ற ஒருவராயாய் இருங்கள், உங்களின் அந்த வீரமே உங்களை விரும்பும் இன்னுமொரு காதல் தேவதையை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கலாம்.

இந்த முதற்காதல் எனும் அணுசக்தி உங்கள் இதயத்தின் ஓர் மூலையில் இருந்துகொண்டு உங்கள் பல இயக்கங்களுக்கு..... உதாரணம் உங்களின் கவிதை வரிகளைத் தந்தது போல.... உந்துசக்தியாக இருக்கும் என்பதே உண்மை.

எமது தாய் நாட்டில் நிகழ்ந்த தற்கொடைகளை நினையுங்கள்... தற்கொலையை மட்டும் நினைக்காதீர்கள்....

இளங்கவி

ஒரு காதல் ஒரு மனிதனை எப்படி எல்லாமோ மாற்றிவிடுகின்றது. என்னில் அது நல்ல மாற்றங்களையே ஏற்படுத்தியது... இனிமேலும் ஏற்படுத்தும்!

காதல் தோல்வி/ஏமாற்றங்கள் எனும் விடயத்தில் எனக்கு உள்ள கருத்து என்னவென்றால்,

"வாழ்ந்து காட்டுவதை மாதிரி வேறு பழிவாங்கல் இல்லை"

அதாவது தவறான முடிவால், இவரை நாம் இழந்து விட்டோமே... இவருடன் வாழ்ந்திருந்தால் ரொம்பவும் சந்தோசமாக வாழ்க்கை இருந்திருக்கும்.... என தூக்கியெறிந்து விட்டுச் சென்றவர் நினைக்கும் அளவுக்கு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும்!

தங்களின் தன்னம்பிக்கையூட்டும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி இளங்கவி! :)

  • தொடங்கியவர்

ரொம்ப அழாதீங்க கவிதையே

பிராணவாயு தீர்ந்துபோன வளிமண்டலத்தில்

ஒட்சிசன் கொடுக்கப் பலர்

அழவில்லை தப்ஸ்!

காதலின் கண்கள் ஒன்றை மட்டுமே தேடும்!

இதயம் அந்த ஒரு இதயத்துக்காகவே ஏங்கும்!

காதல் கொடுக்கும் காயங்கள் மிகவிம் ஆழமானது. வலியும் அதிகம்!

காலத்துக்கு மட்டுமே அதை மாற்றும் வல்லமையுண்டு!

நன்றி தப்ஸ்! :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தானாப்பா முதல் காதல்???? :rolleyes:

இப்ப அப்படி தான் இருக்கும் போகப் போக(2,3 என்று) சரியாகிடும். :lol::icon_mrgreen::icon_idea:

சொல்ல மறந்திடேன். கவிதை அருமை. :)

  • தொடங்கியவர்

இது தானாப்பா முதல் காதல்???? :rolleyes:

இப்ப அப்படி தான் இருக்கும் போகப் போக(2,3 என்று) சரியாகிடும். :lol::icon_mrgreen::icon_idea:

சொல்ல மறந்திடேன். கவிதை அருமை. :)

ஜீவா! சிரிச்சுக்கொண்டே உங்களுக்கு நன்றி சொல்லுறன்! :)

காதல் எப்பவும் கொடுமையான இனிமைதான்! :) அது 2 3 4 என போனாலும் 2ஆம் நிலை, 3ஆம் நிலை என தொடரும்போதுதான் பிரச்சனை ஆரம்பம் ஆகும்.

காதல்... முழுசா புரிந்து கொள்ளப்படுவது இயலாத காரியம்! ஏனெனில், இன்னும் பெண்களின் உளநிலையை முழுதாக அறிந்துகொள்ளவில்லையே யாரும்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!!! கொஞ்சம் வாழ்ந்துதான் பார்ப்போமே!!! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.