Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் யாரோ என்றால்.....

Featured Replies

பதின்மூன்றாம் நூற்றாண்டில் முடிந்து போன சோழ ராச்சியத்தின் கதை போல 2009ம் ஆண்டில் முடிந்துபோன எங்களது இராச்சியமும் இன்று வெறும் பேச்சாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பொன்னியின் செல்வனை வாசித்தது போல எங்களது வீரர்களது கதைகளும் கதைகளாக மட்டும் உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புலத்தில் பிறந்து வளர்ந்த இளையவர்க்கும் இனி வரும் தலைமுறைகளிற்கும் தியாகங்கள் கதைகளாக முன்வைக்கப்படினும் அத்தியாகங்களை உணர்ந்துகொள்ளும் நேரடி அனுபவம் அற்றவர்களாகவே இச்சந்ததிகள் இருக்கும். தியாகங்களை நேரில் கண்ட எங்கள் தலை முறைக்கும், அத்தியாகங்களின் பெறுபேறாக, சாட்சியாகக் காட்டுவதற்குக் கையில் என்னத்தை வைத்துள்ளோம் என்ற ரீதியில் எழுகின்ற சலிப்புணர்வுகள் ஒரு புறம், இன்னென்ன பிழைகள் விட்டார்கள் என வந்து கொண்டிருக்கும் விமர்சனப் பட்டியல் இன்னுமொருபுறம் என தியாகங்களை அவை நடாத்தப்பட்ட சந்தர்ப்பங்களோடு நினைவு கொள்ளும் சாத்தியங்கள் சிதைக்கப்பட்டபடிய காலம் நீழ்கிறது. மாவீரர் நாளென்று வந்து போகும் கார்த்திகைளகளிற்குள்ளும் முன்னர் இருந்த உணர்வு வீச்சு தொலைந்து போனமையினை அறிவதற்குப் பூதக்கண்ணாடிகள் அவசியமில்லை. குடுமிச் சண்டைகளும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் இன்னுமொரு கார்த்திகை வருகிறது. தியாகங்களின் பலன் பெறப்பட்டவையாகக் காட்டுவதற்கு உண்மையில் எங்களிடம் சாட்சிகள் ஏதுமில்லையா?

இன்றைய நிலையில் தமிழினத்தை இணைக்கின்ற பொதுப் பெறுமதிகளுள் பலமானது எது என்று ஒரு புள்ளிவிபரம் எடுத்தால், தென்னிந்திய திரைப்படங்கள் நிச்சயம் உச்சத்தில் இருக்கும். அந்தவைகயில், முதற் பந்தியில் எழுப்பப்பட்ட கேள்வியினை தென்னிந்தியத் திரைப்படம் ஒன்றின் உதவி பெற்று அணுகுகிறது இப்பதிவு.

வாகை சூடவா என்று ஒரு அண்மைய திரைப்படம். ஒய்விற்காகவும் மன அமைதிக்காகவும் பார்க்கப்படக் கூடிய படம் என்று கூறிவிட முடியாது. மனதைக் கனக்கச் செய்கின்ற ஒரு படம் தான். படிப்பறிவற்ற ஏழைகள் அடிமைகளாக செங்கல் சூளையில் உழல்பமையும், அந்தத் தளத்தில் அம்மக்களின் வாழ்வு சார்ந்தும் அமைவது படம். இந்தப்படத்தின் கதைக்கான கரு எப்போது உருவானது என்று தெரியவில்லை, எனினும் இன்றைய இந்தியாவிலும் இவ்வாறான ஒரு வாழ்வையும் மக்களையும் காண முடியும் என்றே தோன்றுகின்றது. அந்த எண்ணத்தில் தான் இப்படத்தைக் கொண்டு எமது மாவீரரை நினைவு கூரும் எண்ணமும் பிறந்தது. (குறிப்பு: படத்தைக் காட்டி மாவீரார் பற்றிக் கதைப்பது புனிதக் குறைவாக ஆரும் கருதின், ஒரு மாவீரரையேனும் நேரில் அறியாத சந்தததிக்கும் இன்று கதை சொல்ல வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்)

முதலில் படக்கதையின் சுருக்கம். கதையின் கதாநாயகன் வாத்தியாராக அரச உத்தியோகம் பெறவேண்டும் என்ற கனவில் வாழ்பவர். இந்தக் கனவு அவரின் பரம்பரைக் கனவு என்று கூடக் கூறலாம். அரச உத்தியோகத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் கிராமங்களை முன்னேற்றும் வேலைத் திட்டம் ஒன்றில் இணைந்து மிகவும் பின்தங்கிய ஒரு கிராமத்திற்குக் கதாநாயகன் தற்காலிக வேலைக்காக வருகின்றார். இதை அவர் ஒரு சேவை மனப்பான்மையில் செய்யவில்லை. மாறாக தனது அரச உத்தியோகக் கனவிற்கு இந்த தற்காலிக வேலை அனுபவம் உதவும் என்ற ஒரே காரணத்த்திற்காகவே வருகிறார். மாதங்களின் நகர்வில் அவர் எதிர்பார்த்த அரச வேலை அவரிற்குக் கிடைக்pறது. ஆனால், அந்த வேலை கிடைப்பதற்கு முன்னான சில மாதங்களில் அவரது கிராமத்து வேலைத் தளத்தில் நிகழ்ந்த அனுபவங்கள் சார்ந்து அந்த மக்களோடு அவர் ஆன்மா கலந்து விடுகிறது. கனவாக இருந்து கிடைத்த வேலையினை உதறி விட்டு அந்த மக்களோடு இருந்து அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் முடிவெடுக்கிறார். ஆனால் வாழ்வதற்குப் பணம் தேவவை என்ற நிலையில் அம்மக்களோடு சேர்ந்து தானும் செங்கல்லுச் சூழையில் கல்லரிந்து தன் வயிற்றுப் பாட்டைப் பார்த்தபடி எஞ்சிய நேரத்தில் குழந்தைகளிற்குக் கல்வி போதிப்பதாக முடிவெடுத்து மண்குழைக்கச் சேற்றிற்குள் இறங்குகிறார். அப்போது அக்கிராமத்தின் குரலாக ஒரு முதியவர் பின்வருமாறு கூறுகிறார். 'எந்தப் பெரிய வேலையைச் செஞ்சுபுட்டு; சோத்துக்குக் கல்லரியிறனுண்டு சேத்துக்க நிக்கிறீங்க. கல்வியை நீங்க போதியுங்க. உங்களிற்கு என்ன செய்யணும்னு எங்களிற்குத் தெரியும்'

கேட்ட மாத்திரத்தில், ப்பூ இவ்வளவு தானா... சென்ரிமென்ற்று. எத்தினை படத்திலை பாத்திருப்பம் என்று எவரிற்கேனும் சொல்லத் தோன்றலாம். ஆனால் சென்ரிமென்றைத் தாண்டி இக்கார்த்திகைக்கான சம்பந்தம் இக்காட்சியில் இருப்பதாகவே படுகின்றது.

ஒரு கனவினைக் கொண்டிருந்து அந்தக் கனவு கைகூடும் நேரத்தில் மற்றையவர்க்காக அதனை உதறுவது என்பது எத்தனை படமெடுத்தாலும் சரியாகப் படமாக்கப்படமுடியாத பரிமாணங்களைக் கொண்டது. கல்வியினை வெறித்தனமாகப் பெறுமதியாகக் கருதும் ஈழத்துச் சமூகத்தில் இளைஞர்கள் புத்தகத்தைப் போட்டுச் சைனைட் குப்பி கட்டி மக்களிற்காக ஆயுதம் ஏந்தினார்கள். சீதனச் சந்தையில் உயர் நிலையில் இருந்த மருத்து பீடத்தை உதறி இயக்கத்தில் இணைந்த திலீபன் அண்ணையைத் தெரியும். தெரியாத பெயர்கள் எத்தனை. மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டின் இறுதிப் பரிட்சைக்கு இருவாரங்கள் முன்னர் ஒரு இயக்கத்தில் இணைந்தவர் கனடாவில் உள்ளார். பல்கலைக்கழக அனுமதியினை வெறித்தனமான இலக்காக முனைந்து கொண்டு பள்ளிக்கும் ரியூசனிற்கும் ஆலாய்ப்பறந்துகொண்டிருக்கும் தன் வயது மாணவர்களைப் பார்த்தபடி பாசறையினை கூட்டிக்கொண்டிருக்கும் நன்றாகப் படித்த பையனின் மனநிலை எத்தகையது.

'எல்லாம் சரி அப்பு, கடைசியில என்னத்தைச் சாதிச்சம்? இத்தனை விலை குடுத்து நாங்கள் வாங்கியதாய்க் காட்டுறதுக்கு என்னத்தைக் கையில வைச்சிருக்கிறம்?' என்பது இன்றைய நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஒரு கேள்வி. உண்மையிலையே எங்களிடம் காட்டுறதுக்குக் கையில ஒண்டுமே இல்லையா? எனக்குத் தெரிந்தவற்றைப் பட்டியலிட்டு மாவீரரை நினைவு கூர்ந்து இப்பதிவினை முடிக்கிறேன்.

1) படிப்போ பணமோ எவ்வளவு சம்பாதித்தாலும் திருப்த்தி கிடைக்காதது. ஐந்து மில்லியன் சொத்துள்ளவன் அதைப் பத்து மில்லியன் ஆக்கமுடியுமா என்ற சிந்தனையில் இருக்கின்ற ஐந்து மில்லியனையும் உணரமுடியாத படி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மாவீரர் என்பது ஒரு உச்சமாக, அவ்வுச்சியை மீறிய தேடல் தேவை அற்றதாக ஒரு உச்சியினைக் காட்டியது. தன்னைச் சார்ந்து முனையும் முனைதல்கள் வழி அடைய முடியாத உச்சி பிறரிற்காக வாழ்வதால் அடையப்படக்கூடியது என்று செய்து காட்டப்பட்டது. ஒவ்வொருவரும் பிறரிற்காக முனைந்தால் தாம் தமக்காக முனைவதற்கான தேவையே அற்றுப் போகின்றது.

2) பள்ளியில் சோதனைகளைக் கோட்டை விட்டுக்கொண்டிருந்து மக்குப் பிள்ளை என்று பழிக்கப்பட்டவர்கள், களத்தில் கண்டுபிடிப்புக்களையும் நிகழ்த்திச் சாதனை படைத்தாhர்கள். வேறு எந்தக் காரணியும் மாறாதிருக்க, ஒருவரின் பார்வை அல்லது மனநிலை மாற்றம் மட்டும் எத்தனை உயர்வுகளைப் பெறக்கூடியது என்பதற்கான உதாரணங்கள் நிறைந்தன.

3) வேலிச்சண்டை கிணத்துச் சண்டை என்று கிடந்த சமூகம் ஈழத்தின் வேலிகள் பற்றிய பொதுமை பற்றி நம்பிக்கையோடு சிந்திக்க முடிந்தது மட்டுமன்றி அச்சிந்தனையின் இனிமையினை ருசித்து உணர்ந்தது.

4) அப்பப்போ எங்கேனும் ஒரு தமிழன் எதையேனும் உலக அரங்கில் அரிதாகச் செய்கையில் அவனது குடும்பப் பெயர் மட்டும் உயர்ந்து , அறியப்படாத இனமாகக் கிடந்த தழிழ் இனம் உலகால் அறியப்பட்டது.

5) நம்பிக்கை, தெளிந்த பார்வை முதலானவற்றின் உளவியல் பெறுபேறுகள் மாற்றுவலுவுடையோர் விடயம் தொட்டுப் பல இடங்களில் உதாரணங்களாக நிறைந்தது.

6) "மைதானம் பிறந்தது" என்ற கதையினை மூன்றாம் வகுப்புச் சமூகக்கல்விப் புதத்தகத்தில் படிததுவிட்டு மட்டும் திரிந்து கொண்டிருந்த சமூகம், கோவிற் திருவிழாக்களிற் கூட போட்டியும் பொறாமையும் காட்டி முனைந்த சமூகம், சமூகம் என்றால் என்ன என்ற பொதுமையினை முதற்தரம் உணர்ந்தது.

7) கூலிக்காரரிற்கு வீட்டிற்கு வெளியில் வைத்துச் சம்பளமும் சோறும் கொடுத்த அனுபவம் மட்டும் இருந்த ஒரு சமூகம், தமக்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருக்கும் பிள்ளைகள் இரவில் நாய் குலைக்க ஒளிவாக கொல்லைக்கால் வந்தபோது நித்திரை இருந்த இடம் தெரியாது பறந்துபோக எழுந்து உணவு கொடுத்து அவர்கள் உண்பதைப் பார்த்த திருப்த்தியினைப் பெற்றார்கள். பணம் கொடுத்துப் பெற முடியாத திருப்த்தி அது என உணர்ந்து கொண்டார்கள். சிவனடியார் கதைகளில் மட்டும் கேள்விப்பட்ட உணர்வுகளை கோயிலிற்கு வெளியே உண்மையில் உணர்ந்து திழைத்தார்கள்.

ஆயுத போராட்டம் என்பது நம் எதிரிக்கு எதிராக எழுந்தது என்பதால் அதன் பெறுபேறுகளை எதிரியின் இழப்பு சார்ந்து மட்டும் நாங்கள் கணக்கிட்டுப் பழக்க்கப்பட்டுப்போனோம். ஆனால், போராட்டம் வேண்டிய சமூக மாற்றம் என்பது எங்களிற்குள்ளானதும் தான். போராட்டம் சாதித்ததாய் காட்டுவதற்கு என்னத்தை வைத்திருக்கின்றோம் என்ற கேள்விக்கான பதிலைச் சிங்களவரிற்குள் தேடுவதோடு மட்டுமன்றி எங்களிற்குள்ளும் தேடின், ஒட்டுமொத்த 30 வருடமும் தடயமின்றித் தொலைந்ததாக நினைக்கும் தேவை எழாது என்றே தோன்றுகின்றது.

மாவீரர் என்றால் யாரென்ற கேள்வியினை உணரமுடியாதோர், ஒரு மாவீரரைத் தன்னும் நேரில் அறிந்திராதோர், வாகை சூடவா படத்தில் கதாநாயகன் விமல் இறக்கநேரின் அந்தச் செங்கற்சூளை மக்கள் அதனை எவ்வாறு உணர்வார்கள் என்று எண்ணிப்பார்ப்பது பொருத்தமான ஆரம்பம்.. எங்களிற்காக இறந்த ஒவ்வொருவரும் இறக்கும்போது எங்கள் உணர்வுகள் ஏறத்தாள அப்படித்தான் இருந்தன.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இன்னுமொருவன் பகிர்வுக்கு, இந்த படத்தை உதாரணம் காட்டியதைவிட மாவீரர்களுக்கு, எமது வீரர்கள் படைத்த பல படைப்புகள் உயிர் உள்ளவை அதில் ஒன்றை காட்டியிருக்கலாம், அவற்றில் ஒன்றை எக் காலத்திலும் எமது தலைமுறைக்கு காட்டினாலும் அவர்களுக்கு விளங்கும் எமது மாவீரர்களின் தியாகம், ஒவ்வொரு படமும் நாம் படும் துன்பங்கள் & விடிவை நோக்கி படைக்கப்பட்டவை, இப்படத்தை மாவீரர்களின் அளப்பரிய தியகத்திற்கு உதாரணம் காட்டி பார்ப்பதற்கு அவர்களின் பாத தூசிக்குக்கூட ஈடாக வராது,

இந்த பாடம் வித்தியாசமாக எடுக்கப்பட்டது &

வாகை சூடவா படம் பார்க்க http://www.yarl.com/forum3/index.php?showtopic=92852

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் முடிந்து போன சோழ ராச்சியத்தின் கதை போல 2009ம் ஆண்டில் முடிந்துபோன எங்களது இராச்சியமும் இன்று வெறும் பேச்சாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பொன்னியின் செல்வனை வாசித்தது போல எங்களது வீரர்களது கதைகளும் கதைகளாக மட்டும் உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புலத்தில் பிறந்து வளர்ந்த இளையவர்க்கும் இனி வரும் தலைமுறைகளிற்கும் தியாகங்கள் கதைகளாக முன்வைக்கப்படினும் அத்தியாகங்களை உணர்ந்துகொள்ளும் நேரடி அனுபவம் அற்றவர்களாகவே இச்சந்ததிகள் இருக்கும். தியாகங்களை நேரில் கண்ட எங்கள் தலை முறைக்கும், அத்தியாகங்களின் பெறுபேறாக, சாட்சியாகக் காட்டுவதற்குக் கையில் என்னத்தை வைத்துள்ளோம் என்ற ரீதியில் எழுகின்ற சலிப்புணர்வுகள் ஒரு புறம், இன்னென்ன பிழைகள் விட்டார்கள் என வந்து கொண்டிருக்கும் விமர்சனப் பட்டியல் இன்னுமொருபுறம் என தியாகங்களை அவை நடாத்தப்பட்ட சந்தர்ப்பங்களோடு நினைவு கொள்ளும் சாத்தியங்கள் சிதைக்கப்பட்டபடிய காலம் நீழ்கிறது. மாவீரர் நாளென்று வந்து போகும் கார்த்திகைளகளிற்குள்ளும் முன்னர் இருந்த உணர்வு வீச்சு தொலைந்து போனமையினை அறிவதற்குப் பூதக்கண்ணாடிகள் அவசியமில்லை. குடுமிச் சண்டைகளும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் இன்னுமொரு கார்த்திகை வருகிறது. தியாகங்களின் பலன் பெறப்பட்டவையாகக் காட்டுவதற்கு உண்மையில் எங்களிடம் சாட்சிகள் ஏதுமில்லையா?

'எல்லாம் சரி அப்பு, கடைசியில என்னத்தைச் சாதிச்சம்? இத்தனை விலை குடுத்து நாங்கள் வாங்கியதாய்க் காட்டுறதுக்கு என்னத்தைக் கையில வைச்சிருக்கிறம்?' என்பது இன்றைய நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஒரு கேள்வி. உண்மையிலையே எங்களிடம் காட்டுறதுக்குக் கையில ஒண்டுமே இல்லையா? எனக்குத் தெரிந்தவற்றைப் பட்டியலிட்டு மாவீரரை நினைவு கூர்ந்து இப்பதிவினை முடிக்கிறேன்.

1) படிப்போ பணமோ எவ்வளவு சம்பாதித்தாலும் திருப்த்தி கிடைக்காதது. ஐந்து மில்லியன் சொத்துள்ளவன் அதைப் பத்து மில்லியன் ஆக்கமுடியுமா என்ற சிந்தனையில் இருக்கின்ற ஐந்து மில்லியனையும் உணரமுடியாத படி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மாவீரர் என்பது ஒரு உச்சமாக, அவ்வுச்சியை மீறிய தேடல் தேவை அற்றதாக ஒரு உச்சியினைக் காட்டியது. தன்னைச் சார்ந்து முனையும் முனைதல்கள் வழி அடைய முடியாத உச்சி பிறரிற்காக வாழ்வதால் அடையப்படக்கூடியது என்று செய்து காட்டப்பட்டது. ஒவ்வொருவரும் பிறரிற்காக முனைந்தால் தாம் தமக்காக முனைவதற்கான தேவையே அற்றுப் போகின்றது.

2) பள்ளியில் சோதனைகளைக் கோட்டை விட்டுக்கொண்டிருந்து மக்குப் பிள்ளை என்று பழிக்கப்பட்டவர்கள், களத்தில் கண்டுபிடிப்புக்களையும் நிகழ்த்திச் சாதனை படைத்தாhர்கள். வேறு எந்தக் காரணியும் மாறாதிருக்க, ஒருவரின் பார்வை அல்லது மனநிலை மாற்றம் மட்டும் எத்தனை உயர்வுகளைப் பெறக்கூடியது என்பதற்கான உதாரணங்கள் நிறைந்தன.

3) வேலிச்சண்டை கிணத்துச் சண்டை என்று கிடந்த சமூகம் ஈழத்தின் வேலிகள் பற்றிய பொதுமை பற்றி நம்பிக்கையோடு சிந்திக்க முடிந்தது மட்டுமன்றி அச்சிந்தனையின் இனிமையினை ருசித்து உணர்ந்தது.

4) அப்பப்போ எங்கேனும் ஒரு தமிழன் எதையேனும் உலக அரங்கில் அரிதாகச் செய்கையில் அவனது குடும்பப் பெயர் மட்டும் உயர்ந்து , அறியப்படாத இனமாகக் கிடந்த தழிழ் இனம் உலகால் அறியப்பட்டது.

5) நம்பிக்கை, தெளிந்த பார்வை முதலானவற்றின் உளவியல் பெறுபேறுகள் மாற்றுவலுவுடையோர் விடயம் தொட்டுப் பல இடங்களில் உதாரணங்களாக நிறைந்தது.

6) "மைதானம் பிறந்தது" என்ற கதையினை மூன்றாம் வகுப்புச் சமூகக்கல்விப் புதத்தகத்தில் படிததுவிட்டு மட்டும் திரிந்து கொண்டிருந்த சமூகம், கோவிற் திருவிழாக்களிற் கூட போட்டியும் பொறாமையும் காட்டி முனைந்த சமூகம், சமூகம் என்றால் என்ன என்ற பொதுமையினை முதற்தரம் உணர்ந்தது.

7) கூலிக்காரரிற்கு வீட்டிற்கு வெளியில் வைத்துச் சம்பளமும் சோறும் கொடுத்த அனுபவம் மட்டும் இருந்த ஒரு சமூகம், தமக்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருக்கும் பிள்ளைகள் இரவில் நாய் குலைக்க ஒளிவாக கொல்லைக்கால் வந்தபோது நித்திரை இருந்த இடம் தெரியாது பறந்துபோக எழுந்து உணவு கொடுத்து அவர்கள் உண்பதைப் பார்த்த திருப்த்தியினைப் பெற்றார்கள். பணம் கொடுத்துப் பெற முடியாத திருப்த்தி அது என உணர்ந்து கொண்டார்கள். சிவனடியார் கதைகளில் மட்டும் கேள்விப்பட்ட உணர்வுகளை கோயிலிற்கு வெளியே உண்மையில் உணர்ந்து திழைத்தார்கள்.

ஆயுத போராட்டம் என்பது நம் எதிரிக்கு எதிராக எழுந்தது என்பதால் அதன் பெறுபேறுகளை எதிரியின் இழப்பு சார்ந்து மட்டும் நாங்கள் கணக்கிட்டுப் பழக்க்கப்பட்டுப்போனோம். ஆனால், போராட்டம் வேண்டிய சமூக மாற்றம் என்பது எங்களிற்குள்ளானதும் தான். போராட்டம் சாதித்ததாய் காட்டுவதற்கு என்னத்தை வைத்திருக்கின்றோம் என்ற கேள்விக்கான பதிலைச் சிங்களவரிற்குள் தேடுவதோடு மட்டுமன்றி எங்களிற்குள்ளும் தேடின்,

ஒட்டுமொத்த 30 வருடமும் தடயமின்றித் தொலைந்ததாக நினைக்கும் தேவை எழாது என்றே தோன்றுகின்றது.

மாவீரர் என்றால் யாரென்ற கேள்வியினை உணரமுடியாதோர், ஒரு மாவீரரைத் தன்னும் நேரில் அறிந்திராதோர்,

வாகை சூடவா படத்தில் கதாநாயகன் விமல் இறக்கநேரின் அந்தச் செங்கற்சூளை மக்கள் அதனை எவ்வாறு உணர்வார்கள் என்று எண்ணிப்பார்ப்பது பொருத்தமான ஆரம்பம்.. எங்களிற்காக இறந்த ஒவ்வொருவரும் இறக்கும்போது எங்கள் உணர்வுகள் ஏறத்தாள அப்படித்தான் இருந்தன.

நன்றிஇன்னுமொருவன்

  • கருத்துக்கள உறவுகள்

சோழ ராச்சியத்தின் கதை போல 2009ம் ஆண்டில் முடிந்துபோன எங்களது இராச்சியமும் இன்று வெறும் பேச்சாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது

இதுதான் இன்றைய யதார்த்தம். எத்தனையாயிரம் மாவீரர்களின் ஒப்பற்ற தலைவர்களின், செயல்வீரர்களின் கதைகள் வெறும் பேச்சாகப் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சோழ ராச்சியத்தின் கதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.